Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கைசாத்திடப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கைசாத்திடப்படும்

 

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் நாட்டிற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் இம்மாதம் கைச்சாத்திடவுள்ளது அதன் பின்னர் பன்னாட்டு நன்கொடையாளர்கள் மற்றும் சில நாடுகளிடமிருந்து உதவிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் நேற்று தெரிவித்தனர்.

IMF உடனான இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுடன் ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றிலிருந்து இலங்கைக்கு அதிக உதவிகள் கிடைக்கும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

“நாட்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பின்னர் , சமீப காலமாக இளைஞர்கள் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தை கைப்பற்றுமாறு எதிர்க்கட்சிகளை அழைத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பதில் அளித்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே . ஜனாதிபதியால் வரிசைகளை நிறுத்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. தேசத்தின் நலனுக்காக இளைஞர்கள் தங்கள் பங்கை ஆற்றி தேசத்திற்கு நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்” என சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் எரிபொருள் விலை மாற்றியமைக்கப்படும் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று இலங்கையும் இருக்க முடியும், 2040 ஆம் ஆண்டளவில் இலங்கை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/242581

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

2040 ஆம் ஆண்டளவில் இலங்கை ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

அதற்கான முன் முயற்சிகளை உங்களால் பட்டியலிட முடியுமா?
கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையில் கடனை அடைத்து நாட்டை முன்னேற்ற என்ன திட்டம் உள்ளது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இம் மாத இறுதியில் கைச்சாத்து - ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர்

Published By: VISHNU

01 MAR, 2023 | 02:26 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் ஒப்பந்தம் இந்த மாதம் இறுதியில் கைச்சாத்திடுவதற்கு எதிர்பார்க்கிறோம். இந்த கடன் உதவி மூலம் நாட்டுக்கு பணம் கிடைப்பதுடன் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கான வழிகளும் ஏற்படுகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி  இளைஞர் படையணி அங்குரார்ப்பண நிகழ்வு 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டும் என ரணில் விக்ரமசிங்க 2021இல் இருந்து தெரிவித்து வந்தார். ஆனால் அப்போது இருந்த அரசாங்கம் அதனை தாமதித்து வந்ததாலே நெருக்கடி நிலை அதிகரித்தது.

எங்களுக்கு கடன் வழங்க நாடுகள் முன்வரவில்லை. நாங்கள் பெற்ற கடனை திருப்பிச்செலுத்தும் வரை எந்த வங்கியும் எமக்கு கடன் வழங்கவில்லை.

என்றாலும் தாமதித்தாவது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல முடிந்தமையாலே பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வழிகள் ஏற்பட்டிருக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை பெற்றுக்கொள்ள தேவையான பேச்சுவார்த்தைகள் தற்போது நிறைவுக்கு வரும் நிலையில் இருக்கிறது. 

இந்த மாதம் இறுதியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கிறோம். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் பணம் மாத்திரம் எமக்கு முக்கியமில்லை. அதனுடன் வேறு பண உதவிகளும் கிடைக்க இருக்கின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் பல் தரப்பு நிறுவனங்களிடமிருந்து எமக்கு பணம் கிடைக்க இருக்கிறது. அதேபோன்று எமது நாடு அவிருத்தி நோக்கிச்செல்லும் வரைபு இந்த ஒப்பந்தத்தில் இருக்கிறது. அதனால் எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வரமுடியுமான சூழல் ஏற்படுகிறது.

மேலும் கடந்த 7மாதங்களுக்கு முன்னர் நாடு இருந்த நிலையை மக்கள் மறந்துள்ளனர். வரிசை யுகத்துக்கு எப்போது தீர்வுகிடைக்கும் என நினைத்துப்பார்க்க முடியாத நிலையே இருந்தது. 

வைத்தியசாலைகளில் மருந்து இல்லை. 6மணித்தியாலத்துக்கும் அதிக நேர மின் துண்டிப்பு, எரிபொருள், எரிவாயு பெற்றுக்கொள்ள பல நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையே இருந்தது. இந்நிலையில் நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார நெருக்கடிக்கு திர்வுகாணும் வேலைத்திட்டம் காரணமாக தற்போது ஓரளவு நிலைமை சீரடைந்துள்ளபோதும் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார கஷ்டம் தீரவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துக்கு உடனடியாக செல்ல தவறியமையே இதற்கு காரணமாகும். என்றாலும் தற்போது நாடு தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்ள தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றனர். ஆனால் பொரிளாதாரத்தை கட்டியெழுப்ப இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை என்றார்.

https://www.virakesari.lk/article/149447

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.