Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்: நன்றி தெரிவித்து நாமல் டுவீட்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்: நன்றி தெரிவித்து நாமல் டுவீட்!

நாமலுக்கும் சமலுக்கும் புதிய பதவிகள்: நன்றி தெரிவித்து நாமல் டுவீட்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1327083

  • கருத்துக்கள உறவுகள்

காசு பில்லியன் கணக்கில் வரப்போகுதில்லெ...அப்ப நம்பிக்கையான ஆட்கள் பதவியில் வேணும்தானே😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

காசு பில்லியன் கணக்கில் வரப்போகுதில்லெ...அப்ப நம்பிக்கையான ஆட்கள் பதவியில் வேணும்தானே😄

May be a cartoon of text

2.9 பில்லியன் டொலர், உலக வங்கியிடம் இருந்து வரப் போகுது என்று 
மகிந்தவுக்கு,  மூக்கில் வேர்த்து விட்டது. 😂

ஆனால்... நரியும், பசியில்... வயிறு ஒட்டி காய்ஞ்சு போயிருக்கு...
யார்... அந்தக் காசை ஆட்டையை  போடுறது என்பதில்  தான்... போட்டியே இருக்கு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்... நரியும், பசியில்... வயிறு ஒட்டி காய்ஞ்சு போயிருக்கு...
யார்... அந்தக் காசை ஆட்டையை  போடுறது என்பதில்  தான்... போட்டியே இருக்கு.  🤣

நரி ..உதிலை வலு விண்ணன்..காசு விழுகிற இடத்துக்கே ஆட்களை நியமித்து லொட்டா தூக்கிபோய் பங்கு போடக்கூடிய திறமைசாலி...ப்தவிக்கு வந்தவுடன் மத்தியவங்கி ஆளுனராய் நம்ம ஆளைப்போட்டு அப்படியே சிஙப்பூருக்கு பணத்தஒ பார்சல் பண்ணின ஆளூ...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

காசு பில்லியன் கணக்கில் வரப்போகுதில்லெ...அப்ப நம்பிக்கையான ஆட்கள் பதவியில் வேணும்தானே😄

 வரப்போகும் பணத்தை பத்திரமாய் சுருட்டி பாதுகாக்கக் கூடிய ஆட்களை நியமிப்பது வழமை. வழமையாய் சுனாமி, கொரோனா பணம் முதலாக வந்தபோது ஆட்சியில் வீற்றிருந்தவர்கள் (பக்க்ஷாக்கள்) அதை எவ்வளவு கெட்டித்தனமாய் கையாண்டார்கள்  என்பதை  இந்த நரி பார்த்து ரசித்து  தன் மனதுக்குள் பாராட்டியிருந்திருப்பார், இப்போ ருசிக்கப்போகிறார். இந்த ராஜபக்க்ஷக்கள் வெளிநாடுகளில் பதுக்கிய பணத்தை அப்படி எதுவுமில்லை  என்று அறிக்கை விட்டிருக்கிறார் இந்த பக்க்ஷக்களின் முகவர். ஆனால் கனடா இவர்கள் அந்த நாட்டில் வைப்பு செய்திருக்கும்  பணத்தை முடக்கி வைத்திருக்கிறது. இதில் எது சரி? அப்போ.... நரியார் தான் விசாரணை நடத்தி அப்படி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொன்னார், ஏன் கனடாவிடம் கேள்வி ஆதாரம் கேட்கவில்லை? அப்படி செய்து  தன் கூற்றை நிரூபித்திருக்கலாமல்லவா? பக்க்ஷக்களும் கருவாட்டுதலையை சுற்றும் எதுவோ போல, இவரை அரியணை ஏற்றி இதுக்குத்தானே காத்திருந்தகவர்கள் விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கனடாவிடம் கேள்வி ஆதாரம் கேட்கவில்லை? அப்படி செய்து  தன் கூற்றை

எங்களைக் கேட்டால் ஒரு பெயராவது சொல்லியிருப்பமல்லே?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

ஏன் கனடாவிடம் கேள்வி ஆதாரம் கேட்கவில்லை? அப்படி செய்து  தன் கூற்றை

எங்களைக் கேட்டால் ஒரு பெயராவது சொல்லியிருப்பமல்லே?

ஒன்று கேட்டால் முழுவதும் வெளிவந்துவிடுமென பயந்திருப்பார்களோ என்னவோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

காசு பில்லியன் கணக்கில் வரப்போகுதில்லெ...அப்ப நம்பிக்கையான ஆட்கள் பதவியில் வேணும்தானே😄

 

9 hours ago, satan said:

 வரப்போகும் பணத்தை பத்திரமாய் சுருட்டி பாதுகாக்கக் கூடிய ஆட்களை நியமிப்பது வழமை. வழமையாய் சுனாமி, கொரோனா பணம் முதலாக வந்தபோது ஆட்சியில் வீற்றிருந்தவர்கள் (பக்க்ஷாக்கள்) அதை எவ்வளவு கெட்டித்தனமாய் கையாண்டார்கள்  என்பதை  இந்த நரி பார்த்து ரசித்து  தன் மனதுக்குள் பாராட்டியிருந்திருப்பார், இப்போ ருசிக்கப்போகிறார். இந்த ராஜபக்க்ஷக்கள் வெளிநாடுகளில் பதுக்கிய பணத்தை அப்படி எதுவுமில்லை  என்று அறிக்கை விட்டிருக்கிறார் இந்த பக்க்ஷக்களின் முகவர். ஆனால் கனடா இவர்கள் அந்த நாட்டில் வைப்பு செய்திருக்கும்  பணத்தை முடக்கி வைத்திருக்கிறது. இதில் எது சரி? அப்போ.... நரியார் தான் விசாரணை நடத்தி அப்படி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொன்னார், ஏன் கனடாவிடம் கேள்வி ஆதாரம் கேட்கவில்லை? அப்படி செய்து  தன் கூற்றை நிரூபித்திருக்கலாமல்லவா? பக்க்ஷக்களும் கருவாட்டுதலையை சுற்றும் எதுவோ போல, இவரை அரியணை ஏற்றி இதுக்குத்தானே காத்திருந்தகவர்கள் விடுவார்களா?

ரோகித ராஜபக்சவின் கடன் அட்டை மாயம்!

ரோகித ராஜபக்சவின் கடன் அட்டை மாயம்!

ரோகித ராஜபக்சவின் கடன் அட்டை காணாமல்போயுள்ளதாகவும் அதனை பயன்படுத்தி 400 அமெரிக்க டொலர் வரை மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாரஹன்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவர் ரோகித ராஜபக்சவின் கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மார்ச் 3ஆம் திகதி தான் தனது கடன் அட்டையை தொலைத்துவிட்டதாக ரோகித ராஜபக்ச முறைப்பாடு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

https://athavannews.com/2023/1327023

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

அதனை பயன்படுத்தி 400 அமெரிக்க டொலர் வரை மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வளவுதானா? நானும் ஏதோ கோடிக்கணக்கில் மோசடி எண்டு கணக்குப்போட்டுவிட்டேன். நாட்டுப்பணத்தை மோசடி செய்தவர்கள்தான் யாரோ மாறி கைவைத்துவிட்டார்கள் ரோஹிதவின் அட்டையில் என நான் நினைக்கிறன். எவ்வளவு பணத்தை யாருமறியாமல் மோசடி செய்து படுக்கையறையிலும் வெளிநாடுகளிலும்  பதுக்கியவர்கள் இதுக்கு நீதிமன்றம் போயிருக்கிறார்கள் என்றால்; இதற்குப்பின்னால் பெரியதொரு திட்டம் இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2023 at 04:56, alvayan said:

காசு பில்லியன் கணக்கில் வரப்போகுதில்லெ...அப்ப நம்பிக்கையான ஆட்கள் பதவியில் வேணும்தானே😄

கொஞ்சம் பொறுங்கள் பில்லியன் கணக்கில் காசு வரப்போகுதெண்டு கதையை அவிட்டுவிட்டு பதுக்கின டொலரையெல்லாம் வெளியில வரவைத்து ரூபாவின் மதிப்பு அதிகரிப்பு என்று புலுடா விட்டு சாதனை காட்டியவர்கள், இப்போ IMF விதித்த கட்டுப்பாட்டில் எல்லாம் புட்டுக்கொண்டு போகப்போகுது. வீறாப்பு காட்டினவையெல்லாம்பொத்திக்கொண்டு தலையை ஆட்டினா பணம்! கொட்டும் இல்லையென்றா பழைய கிழவி கதவை திறடி கதைதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

கொஞ்சம் பொறுங்கள் பில்லியன் கணக்கில் காசு வரப்போகுதெண்டு கதையை அவிட்டுவிட்டு பதுக்கின டொலரையெல்லாம் வெளியில வரவைத்து ரூபாவின் மதிப்பு அதிகரிப்பு என்று புலுடா விட்டு சாதனை காட்டியவர்கள், இப்போ IMF விதித்த கட்டுப்பாட்டில் எல்லாம் புட்டுக்கொண்டு போகப்போகுது. வீறாப்பு காட்டினவையெல்லாம்பொத்திக்கொண்டு தலையை ஆட்டினா பணம்! கொட்டும் இல்லையென்றா பழைய கிழவி கதவை திறடி கதைதான்.

May be an illustration

சாத்தான்... நானும், பதுக்கின டொலர்தான், இப்ப வெளியில் வருகிறது என்று சந்தேகிக்கின்றேன். 

இவர்கள்... பொய் சொல்லியே, உலகத்தை ஏமாற்றும் பயங்கர கேடிகள். 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.