Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், ஆர்.ஆர்.ஆர். படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது வென்றது எலிபென்ட் விஸ்பரர்ஸ்

பட மூலாதாரம்,KARTIKIGONSALVES/INSTAGRAM

13 மார்ச் 2023, 01:06 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு ஆகியன, திரையுலகில் மிக உயரிய விருதான ஆஸ்கரை வென்றுள்ளன.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு கோலாகலமாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் படமான 'தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது

தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட "எலிபென்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.

தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் கதை, இன்று உலகின் அத்தனை ஓரங்களிலும் பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

 

காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியலையும், அவர்களுக்கு யானைகளுடன் இருக்கும் உறவையும் `எலிபெண்ட் விஸ்பரரர்ஸ்` படத்தில் மிகவும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருந்தார் இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.

நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் இசைக்கான விருது

ஆஸ்கர் விருது வழங்கும் விழா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆஸ்கர் விருதுடன் இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ்.

கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விழா மேடையிலும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. சிறந்த ஒரிஜினல் இசைக்கான ஆஸ்கர் விருதை அந்த பாடல் வென்றுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

கீரவாணி இசையில் உருவான இந்த பாடலுக்கு சந்திரபோஸ் வரிகள் கொடுத்துள்ளார். இந்திய மொழித் திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்குத் தேர்வான முதல் முழு நீளப் படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. இதுகுறித்து உங்களுக்குத் தெரியாத ஒரு தகவல் உள்ளது.

நாட்டுக்கூத்து பாடலின் காணொளி யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முன்பாக இந்தப் பாடல் 2021ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

 
படக்குறிப்பு,

கீ ஹூ குவான்

முதல்முறையாக அகாடெமி விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற 64 வயதான ஜேமி லீ கர்டிஸ் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற திரைப்படத்தில் அவருடைய நடிப்புக்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். தனக்கு இந்த விருது கிடைத்ததன் பின்னணியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“இந்தத் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர்கள் குழுவில் அனைவருமே இந்த ஆஸ்கரை வென்றுள்ளோம்” என்று அவர் மகிழ்ச்சியுடன் சத்தமாகக் கூறினார்.

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK

 
படக்குறிப்பு,

ஜேமி லீ கர்டிஸ்

“இத்தனை ஆண்டுகளாக நான் உருவாக்கிய அனைத்து வகை திரைப்படங்களையும் ஆதரித்த அனைவருக்கும் ஆயிரக்கணக்கனா, நூற்றுக்கணக்கான மக்களுக்கு நன்றி,” என்று தெரிவித்தார்.

அதே திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை கீ ஹூ குவான் பெற்றார். அவருடைய உணர்ச்சிகரமான வெற்றி உரையில், “அம்மா, நான் ஆஸ்கரை வென்றுள்ளேன்,” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். “என்னுடைய பயணம் படகில் தொடங்கியது. அகதிகள் முகாமில் ஓர் ஆண்டைக் கழித்தேன். இதைப் போன்ற கதைகள் திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் என்கிறார்கள்.

அரங்கம் அதிர எழுந்த கரகோஷங்களைத் தொடர்ந்து பேசிய அவர், “இதுதான் அமெரிக்க கனவு,” என்றவர் தனது தாயாருக்கும் அவரது தியாகங்களுக்கும் தனது காதல் மனைவிக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

 

இதுவரை அறிவிக்கப்பட்ட ஆஸ்கர் விருதுகள்

தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் – ஒரு விருது (சிறந்த குறு ஆவணப்படம்)

ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (All Quiet on the Western Front) - சிறந்த இசை (ஒரிஜினல்)

எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் – 2 விருதுகள் (சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை)

ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரன்ட் – 2 விருதுகள் (ஒளிப்பதிவு, சர்வதேச முழுநீள திரைப்படம்)

தி வேல் – ஒரு விருது (சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்)

கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ – ஒரு விருது (சிறந்த அனிமேஷன் முழுநீள படம்)

ப்ளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவர் – 1 விருது (ஆடை வடிவமைப்பு)

நல்வனி – ஒரு விருது (சிறந்த ஆவணப்படம்)

https://www.bbc.com/tamil/articles/cy65xl00e60o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்கர் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி: மொழி எல்லைகளை கடந்த இசை சாதனையாளர்

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆஸ்கர் விருதுடன் எம்.எம்.கீரவாணி

13 மார்ச் 2023, 07:10 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

"தச்சுத் தொழிலாளர்களின் இசை கேட்டு வளர்ந்தேன், இதே இப்போது ஆஸ்கர் விருதுடன் நிற்கிறேன்" என்று ஆஸ்கர் விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி உணர்ச்சி பொங்கக் கூறினார். அந்த படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோபைத் தொடர்ந்து ஆஸ்கர் விருதையும் அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது.

ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 1961-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பிறந்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் இயற்பெயர் கொடுரி மரகதமணி கீரவாணி என்பதாகும். அவரது தந்தையான சிவசக்தி தத்தா திரைப்பட பாடலாசிரியராக இருந்தவர்.

அறிமுகம் 1990, திருப்பம் தந்த 1991

கீரவாணி இசையின் மீதான காதலால் தனக்கு அந்த பெயரையே தந்தை சூட்டிவிட்டதாக எம்.எம்.கீரவாணி பல நேர்காணல்களில் கூறியுள்ளார். தந்தையால் இசை மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட அவர், 2 ஆண்டுகளில் வயலின் கற்றுக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்த சக்கரவர்த்தியிடம் உதவியாளராக சேர்ந்ததன் மூலம் சினிமா வாழ்க்கையை கீரவாணி தொடங்கினார். 1990-ல் 'கல்கி' என்ற படத்துக்கு இசையமைத்தார். அந்தப் படம் வெளியாகவில்லை. அதே ஆண்டு மெளலி இயக்கத்தில் வெளியான 'மனசு மகாத்மா' என்ற தெலுங்கு படமே மரகதமணி இசையமைப்பில் வெளியான முதல் படமானது.

 

எம்.எம். கீரவாணியின் திரையுலக பயணத்தில் 1991-ம் ஆண்டு முக்கியமான ஒன்றாக அமைந்தது. அந்த ஆணடு வெளியான 'சீதாராமையா காரி மனவராலு' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான 'ஷனா ஷனம்' என்ற திரைப்படத்தின் மூலம் எம்.எம்.கீரவாணி பெரும் புகழை அடைந்தார்.

அதன் பிறகு அவரது திரைப்பயணத்தில் தொடர்ந்து ஏறுமுகம்தான். தெலுங்கு திரைப்பட இசையுலகின் அசைக்க முடியாத மன்னராக அன்று முதல் அவரே திகழ்கிறார்.

மெலடி இசையே ரசிகர்களை கவரும், மெலடி பாடல்களே வெற்றிபெறும் சாத்தியங்கள் கொண்டவை என்று ஒரு நேர்காணலில் கீரவாணி குறிப்பிட்டார். துள்ளல் இசைப் பாடல்கள் நடனம், துடிப்பான இசை மூலம் வெற்றியடைகின்றன, ஆனால் மெலடிப் பாடல்களோ ரசிகர்களின் இதயத்தை வெல்கின்றன என்பது அவரது கருத்து.

தெலுங்கு, தமிழ், இந்தியில் அவரது இசையில் வெளியான பல பாடல்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவை.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,MMKEERAVANI/FACEBOOK

 
படக்குறிப்பு,

தெலுங்கு பின்னணி பாடகர்களுடன் எம்.எம்.கீரவாணி

தமிழில் மரகதமணி என்ற பெயரில்...

1990-ம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் தனது 'அழகன்' படத்தின் மூலம் தமிழில் கீரவாணியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா', 'சாதி மல்லி பூச்சரமே' போன்ற காதல் மெலடி பாடல்கள் ரசிகர்களிடையே இன்றும் முணுமுணுக்கப்படுகின்றன. 'துடிக்கிறதே நெஞ்சம்' என்ற துள்ளல் இசைப்பாடல், 'கோழி கூவும் நேரம் ஆச்சு' என்ற கிராமியப் பாடல் என அனைத்து வகைகளிலும் அழகான பாடல்களைக் கொடுத்து முத்திரை பதித்தார்.

அதுமுதல் சில ஆண்டுகள் பாலச்சந்தர் தயாரிப்புகளுக்கும் அவர் இயக்கும் படங்களுக்கும் ஆஸ்தான இசையமைப்பாளராக மரகதமணி திகழ்ந்தார். 1992-ல் பாலச்சந்தர் இயக்கிய 'வானமே எல்லை' படத்திலும் இவர் கொடுத்த அனைத்து பாடல்களும் வெற்றிபெற்றன. பாலச்சந்தர் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் 'நீ பாதி நான் பாதி' படத்துக்கும், பாலச்சந்தர் இயக்கிய 'ஜாதி மல்லி' ஆகிய படங்களுக்கும் மரகதமணி இசையமைத்தார்.

அர்ஜுன் நடித்து இயக்கிய 'சேவகன்', 'பாட்டொன்று கேட்டேன்', 'கொண்டாட்டம்' ஆகிய மற்ற இயக்குநர்களின் படங்களுக்கும் அவர் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் அரவிந்த் ஸ்வாமி - ஸ்ரீதேவி நடித்த 'தேவராகம்' படத்துக்கு இசையமைத்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. படம் வெற்றிபெறவில்லை என்றாலும் பாடல்கள் கவனம் பெற்றன.

தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'மாவீரன்', 'நான் ஈ', 'பாகுபலி', 'பாகுபலி 2' ஆகிய படங்களின் மூலம் தமிழில் 2k கிட்ஸ்கள் மத்தியில் அவர் அதிக பிரபலமடைந்தார்.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,MMKEERAVNI/FACEBOOK

இந்தியில் க்ரீம் என்ற பெயரில்...

தெலுங்கில் எம்.எம்.கீரவாணி, தமிழில் மரகதமணி என்ற பெயரில் வெளிப்பட்ட இவர் பாலிவுட்டில் க்ரீம் என்ற பெயரில் இசையமைப்பாளராக பணியாற்றினார். 1994-ம் ஆண்டு கிரிமினல் என்ற படத்தின் மூலம் இந்தியில் அவர் அறிமுகமானார்.

2002-ம் ஆண்டில் வெளியான சர்: தி மெலடி ஆஃப் லைஃப் திரைப்படம் இவரை இந்தி ரசிகர்களிடையே வெகுவாக கொண்டு சேர்த்தது. அந்த படத்தில் இடம் பெற்ற அபிஜா... அபிஜா... என்ற பாடல் வட மாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

2003-ம் ஆண்டு ஜிஸ்ம் படத்தில் இடம் பெற்ற மெலடி பாடல்கள் இந்தி ரசிகர்களை உருகச் செய்தன. ஜாடு ஹாய் நஷா ஹாய். ச்சலோ டும்கோ லெகர், ஆவார பன் ஆகிய பாடல்கள் இந்தி சினிமா ரசிகர்களால் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டவையாக இருந்தன.

இந்தி பட ரசிகர்களின் உதடுகள், இவரது இசையில் உருவான டும் மைல் தில் கிலே, ஜாடு ஹாய் நஷா ஹாய் போன்ற பாடல்களை முணுமுணுக்காமல் இருந்திருக்கவே முடியாது.

2005-ம் ஆண்டு ஷாரூக் கான் நடிப்பில் வெளியான பஹெலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் படத்தின் இசை பேசப்படும் ஒன்றாக இருந்தது. அதில் இடம் பெற்ற தீரே ஜல்நா தீரே ஜல்நா பாடல் சூப்பர் ஹிட்டானது.

இந்தியில் 'கிரிமினல்', ஷாருக் கான் நடித்த 'பஹேலி', பிபாஷா பாசு நடித்த 'ஜிஸ்ம்' உள்பட 26 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார்.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,MMKEERAVANI/FACEBOOK

ராஜமௌலியுடன் இணைந்து சிகரம் தொட்ட கீரவாணி

இந்திய திரையுலகில் மாபெரும் இயக்குநராக உருவெடுத்துள்ள எஸ்.எஸ்.ராஜமௌலியின் அனைத்துப் படங்களுக்கும் எம்.எம்.கீரவாணியே இசையமைத்துள்ளார். இருவருமே நெருங்கிய உறவினர்கள் ஆவர். அதாவது, ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்தும், கீரவாணியின் தந்தை சிவசக்தி தத்தாவும் சகோதரர்கள்.

2001-ம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான எஸ்.எஸ்.ராஜமௌலியின் தொடர் வெற்றிகளில் எம்.எம்.கீரவாணியும் இணைந்தே பயணப்பட்டார். மகாதீரா, நான் ஈ, பாகுபலி, பாகுபலி-2 என இருவரது கூட்டணியில் வெளியான படங்களுக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் எம்.எம்.கீரவாணி

பாகுபலி பெற்றுத் தந்த பெரும்புகழ்

2015-ம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு மட்டுமல்ல, இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கும் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. விமர்சகர்களின் பாராட்டிலும் வசூலிலும் உலக சாதனை படைத்த 'பாகுபலி' படங்கள் மூலம் தேசிய, சர்வதேச கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன.

அதன் பிறகு, இருவர் கூட்டணியில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படமும் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்த, அதில் இடம் பெற்ற பாடல்களும் பெருவெற்றி பெற்றன. குறிப்பாக, நாட்டு நாட்டு பாடல் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த மக்களையும் ஆட்டம் போட வைத்தன. இன்றும் கூட பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்ட வண்ணம் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,MMKEERAVANI/FACEBOOK

 
படக்குறிப்பு,

தெலுங்கு திரை பிரபலங்களுடன் எம்.எம்.கீரவாணி

பாடலாசிரியர், பாடகர், எழுத்தாளர் என பன்முகம்

நாடு போற்றும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ள எம்.எம்.கீரவாணி பாடலாசிரியர், பின்னணி பாடகர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர். அவர் இசையமைத்த பல பாடல்களை அவரே பாடியும் இருக்கிறார். தெலுங்கு, சமஸ்கிரும் ஆகிய மொழிகளில் தேர்ந்த அவர், 15 தெலுங்கு படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தெலுங்கில் பிரபல பாடலாசிரியரான வெட்டூரி சுந்தர ராமமூர்த்தியே தனது குரு என்றும், அவரிடம் இருந்தே இலக்கியத்தைக் கற்றுக் கொண்டதாகவும் கீரவாணி கூறுகிறார்.

பாகுபலி படத்தில் இடம்பெற்றுள்ள ஒகா ப்ராணம், கன்னா நிடுரிஞ்சாரா, தன்டலய்யா ஆகிய 3 பாடல்களும் எம்.எம்.கீரவாணியின் கைவண்ணத்தில் உருவானவையே. ஆஸ்கரை வென்று பெருமை சேர்த்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் ஜனனி என்று தொடங்கும் பாடலையும் அவர் எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என்பதைக் காட்டிலும் பாடலாசிரியர் என்று குறிப்பிடுவதையே பெருமையாக கருதுவதாக நேர்காணல் ஒன்றில் எம்.எம்.கீரவாணி கூறியுள்ளார். சிறந்த எழுத்தாளர் என்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்பதே அதற்குக் காரணம் என்கிறார் அவர்.

பல சிறுகதைகளையும் எழுதியுள்ள கீரவாணி, அவற்றைத் தொகுத்து புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.

எம்.எம்.கீரவாணி வென்றுள்ள விருதுகள்

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோல்டன் குளோப் விருதுடன் எம்.எம்.கீரவாணி

தெலுங்கு திரைப்பட இசையுலகில் இன்று முடிசூடா மன்னனாக திகழும் எம்.எம்.கீரவாணிக்கு சிறப்பான இசைத் திறமைக்காக விருது கொடுத்து முதலில் கௌரவித்தது தமிழ்நாடுதான். 1991-ம் ஆண்டு அழகன் திரைப்படத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த இசையமைப்பாளர் விருது அளிக்கப்பட்டது.

1997-ம் ஆணடு அன்னமய்யா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சிறந்த இசைக்காக, ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுகளை 11 முறையும், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை 13 முறையும் அவர் வென்றிருக்கிறார்.

பாகுபலி-2 திரைப்படத்திற்காக சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றிருக்கிறார்.

 

ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக அண்மையில் கோல்டன் குளோப் விருதை வென்ற எம்.எம்.கீரவாணி, தற்போது அதே பாடலுக்காக சிறந்த ஒரிஜினல் இசை பிரிவில் ஆஸ்கரையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஆஸ்கர் விழா மேடையில் எம்.எம்.கீரவாணி

ஆஸ்கர் விழா மேடையில் பேசிய கீரவாணி, "தச்சு தொழிலாளர்களின் இசை கேட்டு வளர்ந்தேன், இன்று இதோ ஆஸ்கர் விருதுடன் நிற்கிறேன்" என்று உருக்கத்துடன் குறிப்பிட்டார். 1970-களில் வெளிவந்த சூப்பர் ஹிட் பாப் மெல்லிசைப் பாடலான 'Top Of The World' பாடலின் மெட்டிற்கு புதிய வரிகளை இட்டு நிரப்பி, அவர் பாடினார்.

அந்த வரிகள், "என் மனதில் ஒரே ஒரு ஆசை மட்டுமே இருந்தது. அது ஆர்.ஆர்.ஆர். படம் ஆஸ்கர் விருதை வெல்ல வேண்டும் என்பதே. இதனால், ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை" எனும் வகையில் அமைந்திருந்தன.

https://www.bbc.com/tamil/articles/c2xel266y7vo

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

திண்ணையில் பார்க்கவும்.😜
 

https://www.bilibili.tv/en/video/2043366168

  • கருத்துக்கள உறவுகள்

  நாட்டு நாட்டு நாட்டு  

இந்த பாடலுக்கும் ஒஸ்கார் அவார்ட் கிடைத்துள்ளது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு வனத்துறையினர் வாழ்த்து

Published By: RAJEEBAN

14 MAR, 2023 | 11:24 AM
image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில் யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர் காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும்.

கடந்த 2017-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகத்தில் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் யானைக்குட்டி ஒன்று காயத்துடன் சுற்றித் திரிந்தது. வனத்துறையினர் இந்த குட்டியை மீட்டு, தங்கள் பராமரிப்பில் வைத்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்தின் பாகன் பொம்மன், கிருஷ்ணகிரி சென்று குட்டி யானையை பராமரித்து வந்தார்.

elephant_wishepersss.jpg

இந்நிலையில், இந்த குட்டி யானையை முதுமலை கொண்டு சென்று பராமரிக்க கிருஷ்ணகிரி வனத்துறையினர் ஆலோசித்தனர். இதற்கு முதன்மை வனப்பாதுகாவலர் அனுமதி அளிக்கவே, இந்த குட்டி யானை கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகம் கொண்டு வரப்பட்டது. இந்த குட்டி யானையின் பராமரிப்பாளர்கள்தான் பொம்மனும், பெள்ளியும். குட்டி யானைக்கு ‘ரகு’ என்ற பெயர் வைத்து பராமரித்து வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு, தாயை பிரிந்த மற்றொரு யானை பொம்மியையும் இவர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தாயைப் பிரிந்து தவித்த 2 யானைக் குட்டிகளை பராமரிக்கும் பழங்குடி தம்பதியின் கதையை ஆவணப் படமாக்கி இருந்தார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கான்சால்வ்ஸ். நெட்பிளிக்ஸில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. குனீத்மோங்கா தயாரித்திருக்கிறார்.

தாயைப் பிரிந்த குட்டி யானைகளை இந்தத் தம்பதி பராமரித்து வருகின்றனர். யானைகளுக்கும் இவர்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையைக் கொண்டது ‘தி எலிஃபன்ட் விஸ்பரரஸ்’ ஆவணப்படம்.

இப்போது இப்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. எவ்வித பரபரப்பும் இல்லாமல் முதுமலையில் பெள்ளி அன்றாட வேலையைப் பார்த்து வருகிறார். பொம்மன் தருமபுரி மாவட்டத்தில் வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார், தருமபுரி கோட்ட சரகர் நடராஜன் மற்றும் வனத்துறையினர் பரிசு வழங்கி பாராட்டினர்.

https://www.virakesari.lk/article/150464

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Oscars: Tamil Nadu Couple பெள்ளியும் பொம்மனும் என்ன சொல்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people standing and indoor

ஆஸ்கார் விருது, உண்மை நாயகர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.