Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – ஜனக வக்கும்புர!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – ஜனக வக்கும்புர!

19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் – ஜனக வக்கும்புர!

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து அரச சொத்துக்களையும் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர், அவற்றின் நிர்வாகம், மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு மாற்றப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக புனரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1327443

  • கருத்துக்கள உறவுகள்

மாநகர ஆணையாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் வசமாகும் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம்

Published By: DIGITAL DESK 5

14 MAR, 2023 | 03:16 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவிக்காலம் தொடர்பில் அறிவிக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழு அறிவித்துள்ளது, ஆனால் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் எந்த திகதியில் இருந்து ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை.

ஏப்ரல் 25 தேர்தல் இடம்பெற்றால் 2024.01.01ஆம் திகதியில் இருந்து தான் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆரம்பமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர பாராளுமன்றத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற 'சர்வஜன வாக்குரிமை'தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் புதிய பதவி காலம் தொடர்பில் சகல தரப்பினருடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன தீர்மானித்துள்ளதாகவும்,தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆரம்பமாகும் திகதி தொடர்பில் சிறந்த அறிவிப்பை விடுக்குமாறு தேசிய தேர்தலகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக  மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக வகும்பர தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இழுபறி நிலையில் உள்ளதன் பின்னணியில் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் காலி மாவட்டம் எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத்தை தவிர ஏனைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவி காலம் நிறைவடையும்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய அரச சொத்துக்கள் மற்றும் அரச வாகனங்கள் அனைத்தும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் உரிய அரச நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு சகல உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

பதவி காலம் நிறைவடையும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் மற்றும் நிர்வாகம் மாநகர ஆணையாளர்கள் மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு பொறுப்பாக்கப்படும்.

https://www.virakesari.lk/article/150493

  • கருத்துக்கள உறவுகள்

பல உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது

 

341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி நிர்வாகம் இயங்கி வந்த போதிலும், கடந்த வருடத்தின் நிலைமை காரணமாக, அதன் உத்தியோகபூர்வ காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் உள்ளுராட்சி சட்டத்தின் பிரகாரம் இன்றைக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தி புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.

ஆனால் அன்றைய திகக்கு முன்னதாக வாக்குப்பதிவு நடத்த முடியாத காரணத்தால் இன்று நள்ளிரவுடன் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரம் முடிவடைகிறது.

இதன்படி, 29 மாநகர சபைகளின் அதிகாரம் மாநகர ஆணையாளர்களுக்கும், 36 மாநகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் அந்த நிறுவனங்களின் செயலாளர்களுக்கும் மாற்றப்படும்.
தாமதமாக ஸ்தாபிக்கப்பட்ட எல்பிட்டிய உள்ளுராட்சி சபை மாத்திரமே இன்னும் பதவியில் உள்ளது.

இதேவேளை, உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் வாகனங்கள் உள்ளிட்ட அரச சொத்துக்களை ஒப்படைக்குமாறு அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/245385

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் முடிவுக்கு இன்று வருகிறது: அடுத்து என்னவாகும்?

சம்மாந்துறை பிரதேச சபை
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. எனவே, சட்டப்படி இந்த சபைகள் கலையும் நிலைமை உருவாகியுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்ற போதிலும், இச்சபைகள் கலைக்கப்படாமல் இருந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி சபைகளுக்கான தேர்தல்கள் 2018 பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றன. அந்தத் தேர்தலில் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி எனும் கட்சி - எல்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிடும் பொருட்டு தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதற்கு எதிராக அந்தக் கட்சி - உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்ததையடுத்து, குறித்த சபையின் தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையினை விதித்தது. இதன் காரணமாக, அந்த சபை தவிர, ஏனைய 340 உள்ளூராட்சி சபைகளுக்கும் - அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல் நடந்தது.

மேற்குறிப்பிட்ட வழக்கில் - ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்ததது. அதனையடுத்து 2019 அக்டோபர் 11ஆம் தேதி - எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபையொன்றின் பதவிக் காலம் 4 வருடங்களாகும். அந்த வகையில் 2018 மார்ச் 05ஆம் தேதியிடப்பட்டு வெளியான விசேட வர்த்தமானியின்படி, 340 சபைகளின் பதவிக் காலங்களும் 20 மார்ச் 2018 இல் ஆரம்பித்து, 19 மார்ச் 2022இல் நிறைவுக்கு வந்தன.

 

 

ஆயினும், உள்ளூராட்சி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், 2022 ஜனவரி 10ஆம் தேதியன்று, அப்போதைய அரசாங்க சேவைகள், மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் - மேற்படி சபைகள் அனைத்தினதும் பதவிக் காலத்தை ஒரு வருடத்துக்கு நீட்டித்து, விசேட வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிட்டார். அதற்கிணங்கவே, இவ்வருடம் மார்ச் 19ஆம் தேதியுடன் இந்த சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவுக்கு வருகின்றன.

”உள்ளூராட்சி சபையொன்றின் காலம் நிறைவடைந்த பின்னர், அதன் பதவிக் காலத்தை ஒரு வருடம் அல்லது அதற்கு உட்பட்ட காலத்துக்கு நீட்டிப்பதற்கு - மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், நகர சபைகள் கட்டளைச் சட்டம் மற்றும் பிரதேச சபைகள் சட்டம் ஆகியவற்றின் கீழ் - உள்ளூராட்சி அமைச்சருக்கு அதிகாரம் உள்ளது" என்கிறார் சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட். இதன் அடிப்படையிலேயே, மேற்படி 340 சபைகளின் பதவிக் காலங்களும் 2023 மார்ச் 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டன.

இதற்கிணங்கவே - இன்று நள்ளிரவுடன் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மள்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலங்கள் நிறைவுக்கு வருகின்றன.

சபைகள் கலைந்தால் என்ன நடக்கும்?

அக்கறைப்பற்று

உள்ளூராட்சி சபையொன்று கலையுமாயின் அல்லது அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இல்லாத போது, குறித்த சபையின் அதிகாரம் - அச்சபையின் ஆணையாளர் அல்லது செயலாளர் வசமாகும்.

 

பிரதேச சபைகள் சட்டம் பிரிவு 09, நகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 27 மற்றும் மாநகர சபை கட்டளைச் சட்டம் பிரிவு 286 (அ) ஆகியவற்றின் கீழ், உள்ளூராட்சி சபைகளின் ஆணையாளர்கள் அல்லது செயலாளர்களுக்கு மேற்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என வை.எல்.எஸ். ஹமீட் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டாக, 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 09ஆவது பிரிவை இங்கு குறிப்பிட முடியும். 'தவிசாளரும் துணைத் தவிசாளரும் பதவி வகிக்காத காரணத்தினால், பிரதேச சபையொன்று அதன் பணிகளை நிறைவேற்ற முடியாமலிருக்குமாயின், மேற்படி பதவிகளின் வெற்றிடங்கள் நிலவும் காலப்பகுதிக்கு, தவிசாளர் மற்றும் துணைத் தவிசாளர் ஆகியோரின் அதிகாரங்களை அச்சபையின் செயலாளர் செயற்படுத்த முடியும்' என அந்தப் பிரிவு கூறுகின்றது.

ஆனால், 2018ஆம் ஆண்டுக்கு முன்னர், உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டிருந்த அல்லது அச்சபைகளுக்கு தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் பதவி வகிக்காத காலப்பகுதியில், அவற்றின் நிர்வாகங்கள் - அவசர கால நிலைமையின் கீழ், விசேட ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன எனவும், சட்ட முதுமாணி ஹமீட் குறிப்பிடுகின்றார்.

குறித்த உள்ளூராட்சி சபைகள் அமையப் பெற்றுள்ள பகுதிகளின் பிரதேச செயலாளர்கள் - அப்போது உள்ளூராட்சி சபைகளின் விசேட ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

தேர்தல் நடைபெறாவிட்டால் நிலைமை என்னாகும்?

வை.எல்.எஸ்.ஹமீட்
 
படக்குறிப்பு,

வை.எல்.எஸ்.ஹமீட்

இலங்கையில் தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி நடத்தப்படும் மூன்று வகையான உயர் சபைகள் உள்ளன. அவை நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளாகும்.

இவற்றில் மாகாண சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்ட நிலையிலேயே தற்போது உள்ளன. சுமார் 05 வருடங்களுக்கு முன்னர் நாட்டிலுள்ள மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் முடிவுற்ற போதிலும், இதுவரை அவற்றுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, மாகாண சபைகளின் அதிகாரங்கள் அந்தந்த மாகாணங்களின் ஆளுநர்கள் வசமாகியுள்ளன.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் முடிவுக்கு வந்த பிறகும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் நடைபெறாமல் போகுமாயின், அவையும் மக்கள் பிரதிநிதிகளற்ற சபைகளாக மாறிவிடும்.

இந்த நிலைமை ஆபத்தானது என்று பரவலாகக் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகளிடமிருக்கும் அதிகாரம், தனி நபரொருவரின் கைகளில் நீண்டகாலம் அகப்படுகின்றமை - ஜனநாயக விரோதமானது என்பதோடு, அந்நிலைமையானது அதிகார துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/150905

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.