Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

 

(நா.தனுஜா)

'பசுமைப்புரட்சியில்' இணைந்துகொள்ளுமாறு நோர்வேயின் முன்னாள் இராஜதந்திரியும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்புவிடுத்துள்ளார். 

கொழும்பில் அமைந்துள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற 'இலங்கையின் தூய சக்திவலு மாநாடு - 2023' இல் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.

மேலும் உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்துவரும் இருபெரும் நாடுகளான சீனாவும் இந்தியாவுமே பசுமைப்புரட்சிக்குத் தலைமைதாங்குவதாகத் தெரிவித்துள்ள எரிக் சொல்ஹெய்ம், இலங்கை பசுமைப்பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

'நாட்டின் சமாதானப்பேச்சுவார்த்தை செயன்முறையில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அழைப்புவிடுத்ததைத்தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டிலிருந்து நான் இலங்கையுடன் நெருக்கமாகப் பணியாற்றிவருகின்றேன். 

அதேபோன்று யுத்தத்தின் விளைவாகப் பலவருடகாலத் துன்பத்துக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் இலங்கை முகங்கொடுத்திருந்தமையினை நான் நன்கு அறிவேன். இருப்பினும் இந்நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுவதற்கான இயலுமையையே இலங்கை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்' என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது உரையில் தெரிவித்துள்ளார். 

அதேவேளை புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தியில் இலங்கை மிகச்சிறப்பான இயலுமையைக் கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், காற்றாலை மற்றும் சோலார் முறைகளிலான சக்திவலு உற்பத்தியின் மூலம் 'பசுமை உற்பத்தியை' நோக்கி நகரமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று 'சீனாவும் இந்தியாவும் இம்முறைகளிலான உற்பத்தியில் ஏன் ஈடுபடுகின்றது? ஏனெனில் அது சூழலுக்கும், மக்களின் சுகாதாரநலனுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் சிறந்ததாகும். அவர்களால் சந்தைகளைக் கைப்பற்றமுடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். 

எனவே சீனாவுடன் சிறந்த நல்லுறவைப் பேணுகின்ற, அதேவேளை இந்தியாவுடனும் மிகநெருக்கமாக இருக்கின்ற இலங்கைக்கு இதில் பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுகின்றன' எனவும் நோர்வே இராஜதந்திரி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பசுமைப்புரட்சியில் இணையுமாறு எரிக் சொல்ஹெய்ம் இலங்கைக்கு அழைப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நரி பொத்திக்கொண்டு இருப்பது நல்லது என்று மெயில் போட்டு உள்ளேன் சுரணை கெட்ட தனமா நாளைக்கும் இலங்கையை பற்றி ஏதாவது உளறுவான் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

அதேபோன்று 'சீனாவும் இந்தியாவும் இம்முறைகளிலான உற்பத்தியில் ஏன் ஈடுபடுகின்றது? ஏனெனில் அது சூழலுக்கும், மக்களின் சுகாதாரநலனுக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கும் சிறந்ததாகும். அவர்களால் சந்தைகளைக் கைப்பற்றமுடியும் என்று அவர்கள் நம்புகின்றார்கள். 

டெல்லியில் மனிதனிருக்க முடியாத அளவுக்கு வளி மாசு. இவர் என்ன சொல்கிறார்.

6 hours ago, பிழம்பு said:

இருப்பினும் இந்நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுவதற்கான இயலுமையையே இலங்கை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்' என்றும் எரிக் சொல்ஹெய்ம் அவரது உரையில் தெரிவித்துள்ளார். 

இதனை தானே சொல்ல வருகிறார் எரிக்.

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சோல்ஹேம் மன்னாருக்கு விஜயம்

Published By: DIGITAL DESK 5

31 MAR, 2023 | 10:40 AM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச கால நிலை ஆலோசகர் எரிக்சோல்ஹேம் வியாழக்கிழமை (30)  மன்னார் மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தலைமன்னார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட எரிக்சோல்ஹேம் தலைமன்னார் விஜயத்தின் பின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுடன் மன்னார் ஆயர் இல்லத்தில் சிநோக பூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அதனை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் மன்னார் செபஸ்ரியார் பேராலயத்தில்  அமைந்துள்ள மறைந்த முன்னால் மன்னார் மறைமாவட்ட ஆஜர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவிடத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மன்னார் மறை மாவட்ட ஆயர் இல்லத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த மன்னார் மறை மாவட்ட முன்னால் ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்களின் நினைவு நாள் பேருரை நிகழ்விலும் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

குறித்த நினைவுநாள் நிகழ்வில் எரிக்சோல்ஹேம், மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாடோ ஆண்டகை, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சால்ஸ்நிர்மலநாதன் உட்பட்ட அரச திணைக்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_3597.jpg

IMG_3595.jpg

IMG_3588.jpg

IMG_3608.jpg

IMG_3602.jpg

IMG_3620.jpg

IMG_3611.jpg

IMG_3639.jpg

IMG_3642.jpg

IMG_3630.jpg

https://www.virakesari.lk/article/151794

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கம் சரியான பயணத்தை ஆரம்பித்துள்ளது : எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு : மன்னார் காற்றாலைகள் குறித்தும் கரிசனை

Published By: DIGITAL DESK 5

01 APR, 2023 | 03:55 PM
image

ஆர்.ராம்

பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்சி பெறுவதற்காக இலங்கை அரசாங்கம் சரியான பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை தொடர்பான ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் வீரகேசரியிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள முதலீட்டாளர்களுடன் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், நாட்டின் சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையின் பொருளாதார மீட்சிக்காக உடனடியான தெரிவாக சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் எல்லையைப் பெறுவதற்காக உரிய அணுகுமுறையைச் செய்து அதனைப் பெற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை நான் பாராட்டுகின்றேன். 

அத்துடன், இந்தியா, சீனா,யப்பான் உள்ளிட்ட இலங்கையின் இருதரப்பு  பாரிய கடன்வழங்குநர்களின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொண்டமைக்காகவும் அவரது தலைமைத்துவத்தினை பாராட்டும் அதேநேரம் குறித்த நாடுகளும் இலங்கை விடத்தில் கொண்ட கரிசனைகளையும் தீர்மானங்களையும் வரவேற்கின்றேன். 

இதேவேளை, இலங்கையானது தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறுவதற்குரிய பாதையை தெரிவு செய்து சரியான பயணத்தினை ஆரம்பித்துள்ளது. இது முன்னோக்கிப் பயணிப்பதற்கும், நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன் என்றார்.

மன்னார் விஜயம்

இதேவேளை, தனது மன்னார் விஜயம் பற்றிக் குறிப்பிட்ட அவர், மன்னார் மாவட்டத்துக்குச் சென்ற நான் தலைமன்னார் பகுதிக்கு சென்ற  அப்பகுதிகளைப் பார்வையிட்டதோடு, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட வடக்கு, கிழக்கு ஆயர்களையும் சந்தித்து கலந்துரையாடினேன். 

அதனை தொடர்ந்து மன்னார் செபஸ்ரியார் பேராலயத்திற்குச்சென்று முன்னாள் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவருடைய நினைவு நாள் பேருரை நிகழ்விலும் கலந்து கொண்டேன்.

இதேவேளை, மன்னாரில் அமைந்துள்ள மற்றும் அமைக்கப்படவுள்ள காற்றாலைகள் தொடர்பில் உள்ளுர் மக்கள் கவலைகளை வெளிப்படுத்தினார்கள்.

அவர்களுடைய கவலைகள் தொடர்பில் உரிய பதில்கள் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. அவர்களுடனான கலந்துரையாடல்கள் சுமூகமாக முன்னெடுக்கப்பட்டு உரிய இடங்களில் காற்றாலைகள் அமைக்கப்படுவது சிறந்த செயற்படாகும். 

மேலும், இலங்கையைப் பொறுத்தவரையில் காற்றாலைகள் ஊடாக மின்சாரம் பெற்றுக்கொள்ளும் செயற்பாடானது சிறந்த வாய்ப்பாகும். அத்துடன் சிறந்த வேலைவாய்ப்புக்களையும் உருவாக்குவதாக அமையும்.

அதுமட்டுமன்றி, குறித்த செயற்றிட்டமானது, சூழலுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத பூச்சிய நிலையைக் கொண்டதாகும். ஆகவே காற்றாலைகளின் பலன்களை உள்ளுர் மக்களும் உணர்ந்து கொள்வது அவசியமாகின்றது என்றார். 

https://www.virakesari.lk/article/151918

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.