Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ட்விட்டர் லோகோவை மாற்றினார் எலான் மஸ்க்!

 

972184.jpg

டுவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மீண்டும் பழைய படி நீலக் குருவியாக மாற்றி உள்ளார் அதன் உரிமையாளர் எலான் மஸ்க்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிரிப்டோகரன்சிகளில் ஒன்றான ‘Dogecoin’ லோகோவை டுவிட்டரின் லோகோவாக அவர் மாற்றி இருந்தார். மஸ்கின் இந்த செயலுக்கு பின்னர் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. Dogecoin நிறுவன முதலீட்டாளர்கள் அவர் மீது தொடுத்துள்ள வழக்கை திசை திருப்பும் நோக்கில் இதை செய்திருக்கலாம் என்பது அதில் முதன்மையானதாக இருந்தது.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கி இருந்தார். அது முதல் அந்தத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். ஊழியர்களை பணி நீக்கம் செய்வது, டுவிட்டர் அலுவலக பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்டவர்களை மீண்டும் டுவிட்டர் தளத்தில் இயங்க அனுமதித்தது, அங்கீகரிக்கப்பட்ட பயனர்களிடத்தில் சந்தா கட்டணம் என அது நீள்கிறது.

அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் ட்ரேட்மார்க் அடையாளமாக இருந்த நீலக் குருவி லோகோவை மஸ்க் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாற்றி இருந்தார். அது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த மாற்றம் டுவிட்டர் வலைதள பக்கத்தில் மட்டுமே பிரதிபலித்தது. டுவிட்டர் மொபைல்போன் செயலியில் வழக்கமான அதே நீலக் குருவி லோகோவை தான் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நாய் பட லோகோவை மாற்றிவிட்டு மீண்டும் குருவியை வைத்துள்ளார் மஸ்க்.

டுவிட்டர் தளம் தொடங்கப்பட்ட 2006 முதல் இதுவரை சில தருணங்களில் லோகோ மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் முதல் முறையாக அண்மையில்தான் நீலக் குருவிக்கு பதிலாக நாய் படம் வைக்கப்பட்டது. மற்ற அனைத்து தருணங்களிலும் நீலக் குருவியில் சிறுசிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அதே நீலக் குருவி லோகோவாக டுவிட்டருக்கு திரும்பி உள்ளது. ‘எங்கள் தளத்தின் லோகோ எங்களது அடையாளம் மட்டுமல்ல அது எங்கள் சொத்து’ என டுவிட்டர் தளத்தின் பிராண்ட் டூல்கிட்டில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் மீண்டும் தன் அடையாளத்தை மீட்டெடுத்துள்ளது டுவிட்டர்.

https://thinakkural.lk/article/248325

  • கருத்துக்கள உறவுகள்

எலான் கையில் பூமாலை .😀

  • கருத்துக்கள உறவுகள்

ஈலோன் மஸ்க் சிறப்புப் பேட்டி: "டிவிட்டரை நடத்துவது வலி நிறைந்த பணி”

elon interview
கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஜேம்ஸ் க்ளேடன்
  • பதவி,வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டிவிட்டரை நடத்துவது “வலி மிகுந்த பணி” அது “ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வை போன்றது” என பிபிசிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஈலோன் மஸ்க்.

பெரும் பணம் படைத்த தொழிலதிபரான எலான் மஸ்க் தகுந்த நபர் கிடைத்தால் டிவிட்டரை தான் விற்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணல் டிவிட்டரின் தலைமையகத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதிகப்படியான நபர்களை பணியிலிருந்து நீக்கியது, போலி செய்திகள், ஈலோன் மஸ்கின் பணி வழக்கங்கள் குறித்து இந்த நேர்காணலில் பேசப்பட்டது.

அக்டோபர் மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய ஈலோன் மஸ்க், கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவற்றையும் நிர்வகித்து வருகிறார்.

 

டிவிட்டரை வாங்கியது குறித்து வருந்துகிறீர்களா என எலான் மஸ்கிடம் கேட்டதற்கு, “இது ஏதோ ஒரு பார்ட்டிக்கு செல்வது போல அல்ல. அந்த வலி மிக அதிகம்.” என தெரிவித்தார்.

டிவிட்டரை நிர்வகிப்பது குறித்து கேட்டதற்கு, “அது சலிப்பாக இல்லை. அது ஒரு ரோலர் கோஸ்டர் உணர்வு” என தெரிவித்தார்.

“கடந்த பல மாதங்களாக அழுத்தம் நிறைந்துள்ளது” என்று தெரிவித்தாலும் நிறுவனத்தை வாங்கியது சரியான முடிவு என்றே தான் நினைப்பதாக மஸ்க் தெரிவித்தார்.

மேலும் டிவிட்டர் பயன்பாடு அதிகரித்துள்ளது என்று தெரிவித்த எலான் மஸ்க், அதிகப்படியான வேலை பளுவால் சில நேரங்களில் தான் அலுவலகத்தில் தூங்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக தெரிவித்தார். “நூலகத்தில் நான் தூங்குவதற்கு என்று ஒரு இடம் உண்டு அங்கு யாரும் செல்ல மாட்டார்கள்.” என்றார்.

சில நேரங்களில் சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை பதிவிடுவது குறித்து கேட்டதற்கு, “நான் அதிகாலை 3க்கு பிறகு டிவீட் செய்யக்கூடாது என நினைக்கிறேன்” என்றார்.

பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து கேட்டதற்கு, “பொதுவாக பிபிசி, அரசு ஊடகம் என சொல்வதை விரும்புவதில்லை என்பது எனக்கு தெரியும்” என்றார்

இந்த வாரத் தொடக்கத்தில், பிபிசியின் டிவிட்டர் பக்கத்தில் “அரசால் நிதி வழங்கப்படும் ஊடகம்” என மாற்றியது குறித்து “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதை சரி செய்ய வேண்டும்” என பிபிசி டிவிட்டரிடம் கேட்டுக் கொண்டது.

“பிபிசி எப்போதும் சுதந்திரமாக செயல்படும். பிரிட்டன் மக்கள் செலுத்தும் அனுமதி கட்டணத்திலிருந்தே பிபிசிக்கு நிதி வருகிறது.” என பிபிசி தெரிவித்திருந்தது.

பிபிசியின் அடையாளத்தில் “வெளிப்படையான நிதி” என டிவிட்டர் மாற்ற முயன்றதாக தெரிவித்த ஈலோன் மஸ்க் “நாங்கள் முடிந்தவரை துள்ளியமாக இருக்க விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.

“எனக்கு பிபிசியின் மீது மிகுந்த மரியாதை உள்ளது” என்று தெரிவித்த மஸ்க், இந்த நேர்காணல் சில கேள்விகளை கேட்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் வித்தியாசமாக செய்யும் சில விஷயங்கள் குறித்து கருத்துகளை பெறுவதற்கு இது உதவியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் டிவிட்டரில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையை 1500ஆக குறைத்தது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்று தெரிவித்த ஈலோன் மஸ்க், தான் தனிப்பட்ட முறையில் யாரையும் பணியைவிட்டு நீக்கவில்லை என்று தெரிவித்தார். “ஒவ்வொரு ஊழியரிடமும் சென்று பேசுவது என்பது இயலாத ஒன்று” என அவர் தெரிவித்தார்.

ஈலோன் மஸ்க் டிவிட்டரை வாங்கியதிலிருந்து அங்கு பணிபுரிந்த பொறியாளர்கள் பலர் பணியிலிருந்து சென்றதால் டிவிட்டரின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்தன.

டிவிட்டரில் உள்ள குறைபாடுகள் குறித்தும் இந்த நேர்காணலில் எலான் மஸ்க் பேசினார். சில நேரங்களில் ஏற்படும் செயலிழப்புகள் குறித்து கேட்டதற்கு, அது நீண்ட காலத்திற்கு இல்லை என்றும் தற்போது சரியாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

சான் ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து நேரடியாக டிவிட்டர் ஸ்பேசஸில் ஒளிபரப்பான இந்த நேர்காணலில் போலிச் செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகள் குறித்தும் பேசினார்.

தான் டிவிட்டரை வாங்கியதிலிருந்து போலிச் செய்திகள் குறைந்திருப்பதாகவும், பாட் என்று அழைக்கப்படும் தானியங்கு கணக்குகளை அழித்த தனது முயற்சியின் மூலம் போலிச் செய்திகள் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

elon musk

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால் இதனை பல நிபுணர்கள் மறுக்கின்றனர். ஈலோன் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பிறகு போலிச் செய்திகள் டிவிட்டரில் அதிகமாகியுள்ளன என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பத்திரிகையாளர்கள் நடுநிலையாக உண்மையை மட்டுமே பேசுபவர்களா என திரும்ப திரும்ப கேட்ட ஈலோன் மஸ்க், தனக்கு சாதாரண மக்கள் மீது அதிக நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

அடுத்த வாரத்திற்கு ப்ளூ டிக்குகள் முழுமையாக நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நேர்காணல் குறித்து பேசிய டிவிட்டரின் முன்னாள் நிர்வாகி ப்ரூஸ் டெய்ஸ்லி, இது எலான் மஸ்கின் வித்தியாசமான வாழ்க்கை குறித்த சில குறிப்புகளை தனக்கு தந்துள்ளதாக தெரிவித்தார். ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் எட்டு வருடங்களாக டிவிட்டரின் நிர்வாகத்தை கவனித்து கொண்டவர் ப்ரூஸ் டெய்ஸ்லி.

“பரிவர்த்தனைகளை சரிபார்க்க நீதிபதி கட்டாயப்படுத்துவார் என்பதற்காகதான் அவர் டிவிட்டரை வாங்கினார் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இதுவரை அந்த தகவலை அவர் ஒப்புக் கொண்டதில்லை. அது ஒரு விசித்திரமான நேர்காணல்.” என தெரிவித்த டெய்ஸ்லி, அவர் சொல்வதை எப்போதும் செய்பவர் அல்ல என்பது இந்த நேர்காணல் மூலம் தெரிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ஈலோன் மஸ்கின் சொத்து மதிப்பு சுமார் 190 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் அவர் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c28jln4mdygo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.