Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் 700 ஏக்கர் சீனாவுக்கு..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 700 ஏக்கர் சீனாவுக்கு..!

8-13.jpg

கிளிநொச்சி இரணைமடு குளத்துக்கு தெற்குப் புறமாக 500 ஏக்கர் மற்றும் இயக்கச்சியை அண்மித்த பகுதியில் 200 ஏக்கர் காணியும் சீனாவுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கிட்டத்தட்ட 500 ஏக்கர் காணிகளை தனது கடன்களை சீர்செய்வதற்கு இரணைமடுவிற்கு தெற்குப் புறமாக சீனாவிற்கு வழங்குவதற்கான முழு முயற்சியையும் இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகின்றேன்.

இரணைமடுவின் தெற்கு புறமாகவும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையாக உள்ள இயக்கச்சி பகுதியில் மண்டலாய் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கின்ற கிட்டத்தட்ட 200 ஏக்கருக்கு அதிக காணியையும் சீன நாட்டுக்கு வழங்குவதற்காக அவர்கள் சில திட்டங்களை முன்னெடுத்திருப்பது அவர்களின் செயற்பாடுகளிலும், நடவடிக்கைகளிலும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பல நிலப்பகுதிகள் இவ்வாறு நாடுகளிற்கு விற்கப்படுகின்றன. அதில் கூடுதலாக கடலை தரையாக்கி சீனாவிற்கு விற்றல், கடலோரங்கள் மற்றம் தரைகளை சீனாவிற்கு விற்கும் செயற்பாடுகளில் அரசு இறங்கியுள்ளது

இந்தியாவிற்கு தான் நல்லபிள்ளை போன்று நடித்துக்கொண்டாலும், தன்னுடைய வேலைத்திட்டங்களை சீனாவை வைத்தே கையாளுகின்ற பெரும் யுத்திகளை இலங்கை அரசு கையாளுகின்றது.

இது பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையிலும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஈழத்தமிழர்களின் இருப்பு என்பதும் பெரிய அளவிலே பாதிப்புக்குள்ளாகும் நிலை இருக்கின்றது.

இரணைமடுகுளத்தின் தெற்கு பகுதியில் 500 எக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்குவதும், இயக்கச்சி பகுதியை அண்மித்து 200 ஏக்கர் காணியை சீன அரசுக்கு வழங்கு வதற்கு இலங்கை அரசு எடுத்திருக் கின்ற முயற்சி மிகவும் அபாயகரமானது.

கிடைத்திருக்கின்ற தகவலின் அடிப்படையில் இரணைமடுவின் தெற்கு பகுதிக்கு மகாவலி திட்டத்தை கொண்டு வருதல், சிங்கள குடியேற்றங்களை கொண்டுவருதல் என்ற போர்வையில் பாரிய வேலைத்திட்டங்களிற்காகவும், நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களுடைய இனத் தனித்துவத்தை இல்லாது செய்து ஓர் சிங்கள மயப்படுத்துலாது செயற்பாடுகளில் அவர்கள் முன்னின்று உழைக்கின்றார்கள் எனத் தெரிவித்தார்..
 

 

https://akkinikkunchu.com/?p=243386

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்குக் கொடுக்கலாம் காரணம், அமெரிக்காவுக்குக் கொடுக்கலாம் காரணம் ஆனால் சீனாவுக்குக் கொடுக்கக்கூடாத? 

சீனன்ர சாப்பாடு வேணம், அவன் போடுற றோட் வேணும், அவன்ர காசு வேணும் ஆனால் அவனுக்கு நிலம் மட்டும் கொடுக்கக் கூடாது? 

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிக்கத் தண்ணீரையே நான் கொடுக்கவில்லை, அதெப்படி சீனனுக்கு காணி குடுக்கிறது என்கிறார் இவர். 

😏

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் டீலோடு தான் வருகிறார்கள். ஒன்றை கொடுத்து இன்னொன்றை எடுக்கிறார்கள். சிங்களவர்கள் நாசுக்காக தமிழர் பகுதிகளை கொடுக்கிறார்கள். உ+ம்: புல்மோட்டை, சம்பூர், நெடுந்தீவு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா மீண்டும் ஒரு கிளர்ச்சியை தமிழர் பகுதியில் உருவாக்கும் வாய்ப்புக்களைத் தடுக்க சீனாவுக்கு கொடுக்கப்படவது போல் தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்ட வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதிலும், நிலங்களை சுவீகரிப்பதிலுமே அரசு குறியாக இருக்கிறது - சிறிதரன்

Published By: NANTHINI

15 APR, 2023 | 03:42 PM
image

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் தெற்கு பகுதியில் யுத்தத்துக்கு பின்னரான 2009ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்புகள்  நடைபெற்று வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி அலுவலகமான அறிவகத்தில் இன்று (15) மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்கள், வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பொதுமக்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், 

கிளிநொச்சி மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பதிலும், நிலங்களை சுவீகரிப்பதிலுமே இந்த அரசாங்கம் குறியாக இருந்து வருகின்றது.

குறிப்பாக, பூநகரி  பிரதேசத்தில் அட்டை பண்ணைகள், இறால் பண்ணைகள் என்கிற பெயரில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்றார்.

இதன்போது, கிளிநொச்சியின் மண்டலாய், புல்லாவெளி ஆகிய பகுதிகளிலும், இரணைமடுக் குளத்தின் தெற்கு பகுதியிலும் சீன அரசாங்கத்துக்கு காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது அவர் பதிலளிக்கையில்,

2009ஆம் ஆண்டு யுத்தத்துக்கு பின்னர் இரணைமடுவின் தெற்கு பகுதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருப்பதுடன், காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அந்த பகுதியில் இருக்கின்ற காணிகளை ஆக்கிரமித்து, சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்படுகின்றன அல்லது மறைமுகமாக காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

குறித்த பிரதேசங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் சென்று உண்மைகளை அறிவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த முடியுமா என வினா தொடுத்துள்ளார். 

இந்த கலந்துரையாடலில் வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன்,  பூநகரி பிரதேச சபை தவிசாளர் சிறிறஞ்சன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர்  சுப்ரமணியம் சுரேன்  மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/152901

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.