Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய விமானப்படை தளபதி இலங்கை வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

27 APR, 2023 | 09:12 PM
image

(எம்.மனோசித்ரா)

விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்பிற்கமைய இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உள்ளிட்ட நால்வரடங்கிய தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் மே முதலாம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

1982இல் போர் விமானத்தின் விமானியாக இந்திய விமானப்படையில் இணைந்த தற்போதைய விமானப்படை தளபதி அந்நாட்டின் பல்வேறு போர் விமானங்களில் விமானியாக செயற்பட்டுள்ளார். 

அதனைத் தொடர்ந்து பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி இந்திய விமானப்படையின் 30ஆவது தளபதியாகப் பதவியேற்றார்.

இந்த விஜயத்தின் போது பிரதானமாக பிராந்திய விமானப்படைகளுக்கிடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்தல் , கூட்டு பயிற்சிகள் மற்றும் தொழிநுட்ப அனுபவப் பகிர்வுகள், சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்தோடு இந்திய விமானப்படைத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார். மே மாதம் 6ஆம் திகதி அவர் நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/153945

  • கருத்துக்கள உறவுகள்

எந்த கோட்டலில்..முட்டைஅப்பத்தொடை தங்கவிடுகினம்...ஏதோ ஒரு விசயம் சீனன் செய்யப்போறான்...இப்பவே அத்திவாரம் போட்டு..குடுக்கிறதை குடுத்து சரிக்கட்டிப் போடுவினம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

எந்த கோட்டலில்..முட்டைஅப்பத்தொடை தங்கவிடுகினம்...ஏதோ ஒரு விசயம் சீனன் செய்யப்போறான்...இப்பவே அத்திவாரம் போட்டு..குடுக்கிறதை குடுத்து சரிக்கட்டிப் போடுவினம்..

இப்படியான அதி உயர் பதவிகளில் உள்ளவர்கள் வந்து போனால்,
உடனே… சீனனும் தனது பங்கிற்கு தனது ஆட்களையோ அல்லது
கண்காணிப்பு கப்பலையோ அனுப்பி வைப்பது வழமை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்தார் இந்திய விமானப்படை தளபதி

Published By: T. SARANYA

01 MAY, 2023 | 04:42 PM
image

பிராந்தியங்களுக்கிடையிலான சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள், கூட்டுப்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக திங்கட்கிழமை (1) நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

IMG-20230501-WA0042.jpg

விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்புக்கமைய, இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உள்ளிட்ட நால்வர் அடங்கிய தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/154255

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விமானப்படையின் தலைமை தளபதி, கடற்படை தளபதி சந்திப்பு

Chief.of_.the_.Air_.Staff_.of_.Indian.Ai

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதரி, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்துள்ளார்.

https://thinakkural.lk/article/251738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார் இந்திய விமானப்படை தளபதி

Published By: DIGITAL DESK 5

03 MAY, 2023 | 10:13 AM
image

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் திங்கட்கிழமை (மே 02) இடம்பெற்றது. 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

342195441_204028169086919_79970164584612

இந்தியா, இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பரஸ்பர நன்மை மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்காக நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி, பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சரினால் வழங்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்றும், இந்த விடயத்தில் தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

342491813_1161244917878716_3706214589297

மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத் ஆகியோர் கலந்துகொண்டார்.

342375977_786219766048289_82085349703706

https://www.virakesari.lk/article/154352

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதி

Air-Chief-Marshal-V.R.jpg

தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை விமானப்படைத் தளத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு இந்தியா தொடர்ச்சியாக வழங்கும் ஒத்துழைப்பிற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இரு நாட்டு விமானப்படைகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை அடையாளப்படுத்தும் வகையில், நட்புறவு கேட்போர் கூடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய விமானப்படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில், இரு நாடுகளின் விமானப் படைகளும் இணைந்து இலங்கை கடற்பகுதியில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான உத்தேச விமான சேவைகளை அதிகரிப்பதும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கான படகு சேவைகளை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளமையும் இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார சுற்றுலாவை மேம்படுத்தும் என இந்திய விமானப்படைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்திய விமானப்படைத் தளபதி, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவையும் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

https://thinakkural.lk/article/252036

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.