Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் – ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தை கூறுபோடும் திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் – ஒரு தேசமாக பொங்கியெழ அழைப்பு

5.jpg

‘திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் எங்கள் நிலங்கள் பறிபோய்க்கொண்டே இருக்கும்’ என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அப்பகுதி மக்களின் அழைப்பின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செ. கஜேந்திரன் ஆகியோர் நேற்று(30) நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தவை வருமாறு,

“தையிட்டி விகாரை அமைக்கப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது. சட்ட விரோதமான இந்தக் கட்டட வேலைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட போது, மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்களிலும் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் இந்த சட்ட விரோத செயற்பாடுகளை வெளிப்படுத்தி இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

ஆனால் இந்த விடயம் தொடர்பாக இன்னும் ஒரு விசேட கூட்டம் கூட்டப்படும் என வாக்குறுதி அளித்தும் இந்த கூட்டமும் இல்லாமல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இராணுவத்தினரின் முழுமையான பங்களிப்போடு விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

தையிட்டியில் மட்டுமல்ல, இன்று தமிழர் தாயக நிலப்பகுதி முழுவதிலும் சிங்களமயமாக்கல் வேலைத் திட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த விடயத்தை ஐ.நா மாநாட்டிலும் பதிவு செய்திருக்கின்றோம்.

ஆகவே மக்கள் மட்டத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இன்று இந்தப் பகுதியில் உள்ள மக்களின் தொண்டைகளில் கைவைத்த நிலையில் தான், மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறான நிலைமைக்குள்ளும் மக்கள் எங்களை அழைத்து இந்த விகாரை சம்பந்தமான பிரச்சினைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள்.

எங்களைப் பொறுத்தவரையில் இந்த மாதிரியான சட்டவிரோத, இனவாதப் போக்குக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும், எங்களுடைய நிலங்கள் பறிபோய் கொண்டே இருக்கும்.

நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எங்களுடைய முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம். எங்களுடைய எதிர்ப்புக்களை தாண்டியே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை நாம் தான் உருவாக்க வேண்டும்” – என்றார்.
 

 

https://akkinikkunchu.com/?p=244623

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு முப்படை வெளியேற்றம் குறித்து மூச்சும் இல்லை. 

அது நடக்காமல்.. சிங்கள பெளத்த மயமாக்கல் நில்லாது.. அல்லது குறையாது. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அணமையில் மதவாச்சி , மன்னரார் , பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அந்த பாதையில் எண்ணிமுடியாத ராணுவ முகாம்களும், பவுத்த சிலைகளையும் அவதானித்தேன். எனவே இனி சிங்கள மயம், பவுத்த மயம் என்று பெரிதாக புலம்புவதில் எந்த பயனும் இல்லை.

அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்காக எதாவது கூறலாம். சிங்களம் எதையும் காதில் போட்டுக்கொள்ள போவதுமில்லை வேறு எந்த நாடும் உதவி செய்யப்போவதுமில்லை. இதுதான் யதார்த்தம். பத்தோடு , பதினொன்றாக இதையும்  கணக்கில் சேர்த்துக்கொள்ள  வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Cruso said:

நான் அணமையில் மதவாச்சி , மன்னரார் , பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அந்த பாதையில் எண்ணிமுடியாத ராணுவ முகாம்களும், பவுத்த சிலைகளையும் அவதானித்தேன். எனவே இனி சிங்கள மயம், பவுத்த மயம் என்று பெரிதாக புலம்புவதில் எந்த பயனும் இல்லை.

அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்காக எதாவது கூறலாம். சிங்களம் எதையும் காதில் போட்டுக்கொள்ள போவதுமில்லை வேறு எந்த நாடும் உதவி செய்யப்போவதுமில்லை. இதுதான் யதார்த்தம். பத்தோடு , பதினொன்றாக இதையும்  கணக்கில் சேர்த்துக்கொள்ள  வேண்டியதுதான்.

இரு வருடங்களுக்கு முன் என நினைக்கிறன், றொபின்சன் குருசோ எனும் பெயரில் ஒரு உறவு, இதுதான் நாட்டில் நடக்கப்போகிறது என எதிர்வு கூறியிருந்தார். என்ன அதிசயம்! இன்று நீங்கள் அதை உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். முன்பு பலர் சிங்களத்தின் செயற்பாடுகளை நிஞாயப்படுத்தியும், நம் போன்ற கருத்தாளர்களை ஏளனப்படுத்தியும் எழுதிய கருத்துக்கள் இன்று அவர்களை மனம்மாற வைத்துள்ளது. சிலர் இன்னும் பிடிவாதமாக காரணம் கற்பிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, Cruso said:

நான் அணமையில் மதவாச்சி , மன்னரார் , பூநகரி ஊடாக யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அந்த பாதையில் எண்ணிமுடியாத ராணுவ முகாம்களும், பவுத்த சிலைகளையும் அவதானித்தேன். எனவே இனி சிங்கள மயம், பவுத்த மயம் என்று பெரிதாக புலம்புவதில் எந்த பயனும் இல்லை.

அரசியல்வாதிகள் தங்கள் இருப்புக்காக எதாவது கூறலாம். சிங்களம் எதையும் காதில் போட்டுக்கொள்ள போவதுமில்லை வேறு எந்த நாடும் உதவி செய்யப்போவதுமில்லை. இதுதான் யதார்த்தம். பத்தோடு , பதினொன்றாக இதையும்  கணக்கில் சேர்த்துக்கொள்ள  வேண்டியதுதான்.

கொஞ்சப் படங்கள், நிகழ்படங்கள் எடுத்து வந்திருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, நன்னிச் சோழன் said:

கொஞ்சப் படங்கள், நிகழ்படங்கள் எடுத்து வந்திருக்கலாம்

நான் வாகனம் ஓட்டுவதால் எடுக்கமுடியவில்லை. மனைவிக்கு படம் எடுக்க பயம். படம் எடுத்து பிடிபடடாள் என்ன நடக்குமென்று தெரியும்தானே. அடுத்த முறை பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்+
On 2/5/2023 at 21:09, Cruso said:

நான் வாகனம் ஓட்டுவதால் எடுக்கமுடியவில்லை. மனைவிக்கு படம் எடுக்க பயம். படம் எடுத்து பிடிபடடாள் என்ன நடக்குமென்று தெரியும்தானே. அடுத்த முறை பார்க்கலாம்.

வயர் கமரா கொண்டு போங்கோ... அவன்ர கண்ணுக்குத் தெரியாது. எடுத்து கூகிளிலை பதிவேற்றிப்போட்டு சேமிப்பத்தில் இருப்பதை அழிச்சு விடுங்கோ.

சின்னப் பரிந்துரை.

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

வயர் கமரா கொண்டு போங்கோ... அவன்ர கண்ணுக்குத் தெரியாது. எடுத்து கூகிளிலை பதிவேற்றிப்போட்டு சேமிப்பத்தில் இருப்பதை அழிச்சு விடுங்கோ.

சின்னப் பரிந்துரை.

 

கவனத்தில் கொள்ளப்படும். நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.