Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆகஸ்ட் மாதம் முதல் மீற்றர் பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடமுடியாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவ பாலசுந்தரன் தெரிவித்துள்ளார்,

யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன

இதன் காரணமாகவும் முச்சக்கரவாடகை வண்டி செலுத்துவோர் தொடர்பில் கிடைத்த பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பிலும் தீர்மானம் எடுப்பதற்காக நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் முச்சக்கர வாடகை வண்டி சங்கத்தினர் மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதிகள், யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதிநிதி ,மற்றும் அதனுடன் இணைந்ததாக வட மாகாண போக்குவரத்து அதிகார சபை தலைவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை போன்ற முக்கியமானதுறை சார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்

குறித்த கலந்துரையாடலில் வாடகை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சம்பந்தமான பலவிடயங்கள் ஆராயப்பட்டன. அதிலே பொருத்தமற்ற அளவுக்கதிகமான ஒலிகளை எழுப்பி செல்லுவது அநாவசியமான கண்ணாடிகள் பொருத்தி இருப்பது போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன

குறிப்பாக வீதிகளில் பயணிப்போர் அச்சப்படும் அளவிற்கு உயர்ந்த ஒலிகளை எழுப்புகின்ற கருவிகளை முச்சக்கர வண்டிகளிலே பொருத்துவது தடுக்கப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்தோடு பதிவு செய்யப்படாத வாடகை முச்சக்கர வண்டிகளும் யாழ்ப்பாண நகர பகுதிகளில் பல தொல்லையாக இருப்பதாக மாநகர சபையினால் குறிப்பிடப்பட்டுள்ளது எனவே பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகோரப்பட்டது
எனவே ஜூலை மாதம் 30 ம் திகதிக்கு முன்னதாக வாடகைக்கு அமர்த்தப்படுகின்ற சகல முச்சக்கர வண்டிகளும் கட்டண மானி பொருத்தப்பட வேண்டும் பொருத்தப்பட்டால் மாத்திரமே சேவையில் ஈடுபட அனுமதிக்க முடியும் . இதன்படி மாநகர சபையும் அதற்குரிய ஒழுங்குகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/251981

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் நடைமுறைப்படுத்தினால் நல்லது. அங்கு மிக அதிகமாக மக்களிடம் பணம் அறவிடுகிறார்கள். கொழும்பில் அரவிடப்படுவதட்கும், அங்கு அரவிடப்படுவதட்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கின்றது. எனவே இந்த திடத்தை அமுல்படுத்துவதில் அக்கறை செலுத்தினால் மிக நல்லது. வடகிழக்கு மாகாணம் முழுவதிலும்  இந்த திடத்தை நடைமுறை படுத்த வேண்டும்.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பூட்டினால் மாத்திரமே அனுமதி :யாழ். மாவட்ட செயலகத்தில் தீர்மானம் 

Published By: VISHNU

31 MAY, 2023 | 08:37 PM
image
 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக கட்டண மீற்றர் பொருத்துவதற்கான கட்டணத்தினை கட்டண மீற்றர் பொருத்தும் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதனைப் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறும், கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/156633

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

three-wheel-meter.jpg

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் மீற்றர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (30) அரசாங்க அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16, 17, மற்றும் 18ஆம் திகதிகளில் கட்டண மீற்றர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளது.

எனவே யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீற்றர்களை பொருத்தி, பொலிஸாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டே சேவையில் ஈடுபட முடியும்.

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது.

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்படையாமல் இருக்கவும் வெவ்வேறு விதமான கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/260928

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் மீற்றரில் 100 ரூபா என்றால் யாழில் மீற்றர் இல்லாமல் 500 ரூபா🥹

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிப்பு !

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் அவசியம் !!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று அரச அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16ஆம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகள் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டண மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

எனவே யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீட்டர்களை பொருத்தி, பொலிஸாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டே சேவையில் ஈடுபட முடியும்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது.

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்படையாமல் இருக்கவும் வெவ்வேறு விதமான கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1337065

6 minutes ago, Nathamuni said:

கொழும்பில் மீற்றரில் 100 ரூபா என்றால் யாழில் மீற்றர் இல்லாமல் 500 ரூபா🥹

மீற்றர் இல்லாமல்... இவ்வளவு பெரும் தொகை பணம் சம்பாதித்த ஆட்டோ சாரதிகள்,
இனி.. எப்படி இதனை கையாளப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நிச்சயம் பயணிகளுடன்... பெரும் வாக்குவாதப் பட்டு, காசை கறந்துவிடுவார்கள் என நினைக்கின்றேன்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முச்சக்கர வண்டிக் கட்டணமும் அதிகரிப்பு !

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் அவசியம் !!!

யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாடகை சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீட்டர் பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று அரச அதிபர், முச்சக்கர வண்டி சங்கத்தினர், மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோருக்கு இடையில இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள், சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக கட்டண மீட்டர்களை பொருத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 16ஆம் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகள் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டண மீட்டர்கள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸாரினால் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

எனவே யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகள் சங்கத்தில் பதிவினை மேற்கொண்டு கட்டண மீட்டர்களை பொருத்தி, பொலிஸாரின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டே சேவையில் ஈடுபட முடியும்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திதியில் இருந்து குறித்த நடவடிக்கைகளை பின்பற்றாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட முடியாது.

முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்துவோர் பாதிப்படையாமல் இருக்கவும் வெவ்வேறு விதமான கட்டணத்தினை அறவீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1337065

மீற்றர் இல்லாமல்... இவ்வளவு பெரும் தொகை பணம் சம்பாதித்த ஆட்டோ சாரதிகள்,
இனி.. எப்படி இதனை கையாளப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
நிச்சயம் பயணிகளுடன்... பெரும் வாக்குவாதப் பட்டு, காசை கறந்துவிடுவார்கள் என நினைக்கின்றேன்.  

அங்கை ஒரு வாக்குவாதமும் கிடையாது. ஏறிக் குந்தியிருந்து,இவ்விடத்த போகவேணும் எண்டால், போனபிறகு அவை கேட்கிறது சாக் அடிக்கும்.

பேசி ஏறினால்.... பஞ்சக்கதை சொல்லி பாவமா கேட்பார்கள். எங்கை கனடாவோ எண்டுவினம். போகத்தான் டிரை பண்ணுரன்.. இப்ப துபாய் எண்டால், கருணை கிடைக்கும்.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முச்சக்கர வண்டித் தரிப்பிடங்களில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கை

Published By: VISHNU

03 AUG, 2023 | 05:20 PM
image
 

யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்தனர்.

யாழ் நகர் பகுதியில் இன்று வியாழக்கிழமை (3) காலை முதல் பொலிஸார் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ் மாவட்டத்தில் வாடகைக்கு செலுத்தும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டணமானி பொருத்தாமையினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் அதிகளவில் வசூலிக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்த திலையில் அதனை செயற்படுத்தும் வகையில் பொலிசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

https://www.virakesari.lk/article/161569

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.