Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தையிட்டி விகாரை விவகாரம் : அத்துமீறல்கள் இடம்பெற்றிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை விவகாரம் : அத்துமீறல்கள் இடம்பெற்றிருந்தால் ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ்

Published By: Digital Desk 5

05 May, 2023 | 10:44 AM
image

தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பான ஆவணங்களை ஆராயவுள்ளதுடன் அதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அத்துமீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை (04) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த காலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த பகுதிகளில் சிறிய விகாரைகள் அமைக்கப்பட்டிருந்ததும் பின்னர் அந்தப் பகுதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டபோது அவை அகற்றப்பட்டிருப்பதையும் சில இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையிலேயே, தையிட்டி விகாரை தொடர்பாக சில தரப்புக்களினால் தற்போது பேசப்படுகிறது.

இதற்கான அடிக்கல் 2018 ஆம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநரினால் நாட்டப்பட்டிருக்கிறது.

விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரிடம் கோரியிருக்கின்றேன் .

அவற்றை ஆராய்வதுடன், விரைவில் ஜனாதிபதிக்கு வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பிலும் பிரஸ்தாபிக்க எதிர்பார்க்கின்றேன்.

வெடுக்குநாறி விவகாரத்தினை சுமுகமான முறையில் தீர்த்து வைத்தது போன்று இந்த விடயங்களும் ஜனாதிபதி சரியான முறையில் தீர்த்து வைப்பார்.” என்று தெரிவித்தார்.

அதேவேளை, மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவது தொடர்பாகவும் அரசாங்க திட்டங்களை வினைத் திறனாக யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கும் வகையிலும் பல்வேறு விடயங்கள் இன்றைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டன.

இதன்போது, நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகள் வெற்றியடைந்து வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகள் தொடர்பில் மக்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் மக்களுக்கு ஆர்வத்தினை ஏற்படுத்தும் வகையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், உள்ளூர் உற்பத்திகள் அறுவடை செய்யப்படுகின்ற காலப் பகுதிகளில், குறித்த பொருட்களுக்கான இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டு, தாராளமான சந்தை வாய்ப்பினையும் சிறந்த விலையையும் பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கை அமைச்சரவை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/154542

  • கருத்துக்கள உறவுகள்

முழு தமிழர் பகுதியான, தையிட்டியில்... விகாரை கட்டியது,  
இன்னும் அத்துமீறலாக...   டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெரியவில்லையா?

அது என்ன.... //அத்துமீறல்கள் இடம் பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது// 
என்று சிங்களவனுக்கு முட்டுக் கொடுக்கும் தொனியில் பேச்சு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

விகாரை அமைக்கப்பட்டுள்ள காணி தொடர்பான விபரங்களை சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரிடம் கோரியிருக்கின்றேன் .

இதுதான் கூத்தாடிகளின் வேலை. விகாரை கட்ட  புத்தருக்கு அங்கு எங்கிருந்து காணி வந்தது என்று யோசிக்கத்தெரியவில்லையோ, மக்கள் இடம்பெயர்ந்து அலைவதும், தமது நிலங்களுக்கு போராடுவதும் தெரியவில்லையோ, அல்லது தன்னை முதன்மைப்படுத்துகிறேன் என நினைத்து தனது அறியாமையை வெளிப்படுத்துகிறாரோ?  பதவியை தக்க வைக்க எதற்கெடுத்தாலும் காரணம் இல்லாமல் ரணில் புகழ் பாடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் 1990 ம் ஆண்டு புலிகளுடன் போர் ஏற்பட முன்னர் எங்கு நிலைகொண்டார்களோ அங்கு மீண்டும் பின் நகர்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். படையினரின் தளங்கள் அங்கு உள்ளவரை இயல்பு வாழ்க்கை திரும்புவது கடினம். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

அது என்ன.... //அத்துமீறல்கள் இடம் பெற்றிருக்குமாயின் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது// 

எதிர்த்துக்கேள்வி கேட்க திராணியில்லை, பதவி சொகுசு பறி போய்விடும், இவர் செய்த குற்றங்கள் அவர்கள் கையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது. எல்லாம் இழந்து களி தின்ன வேண்டும், அதை மறைக்க அப்பப்போ தேவையற்ற புகழ் மாலை, ஏவல் வேலை. அதை மறைக்க இப்படியான பொருத்தமற்ற வசன நடை. நாட்டில் என்ன இருக்கிறது, என்ன நடக்கிறது என்று தெரியாதவர் அமைச்சர்?

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை சர்ச்சை !! கைவிட்டுப்போனதா எம் நிலம் ?இதுவரையும் - இனியும்... !! ARV LOSHAN NEWS

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை விவகாரம் : அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே பிரச்சினைக்கான தீர்வு - அரசாங்கம்

Published By: Digital Desk 5

06 May, 2023 | 10:26 AM
image

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை குறித்த சர்ச்சை தொடர்பில் முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே இந்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கேசரிக்கு தெரிவித்தார்.

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. 

அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கமும் , சகிப்புத் தன்மையும் ஏற்படும் வரை இவ்வாறான பிரச்சினைகள் மீள் நிகழாமையை எம்மால் உறுதிப்படுத்த முடியாது.

எனவே தையிட்டி விகாரை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் - தையிட்டு விகாரையை அகற்றக் கோரி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன. இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை.

 அரசியல்வாதிகள் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலய விவகாரத்திலும் இவ்வாறே இடம்பெற்றது.

அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர். இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருக்க வேண்டுமெனில் அரசியல்வாதிகள் அனைவரையும் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நீக்க வேண்டும்.

எம்மை இனவாதிகளெனக் கூறுபவர்கள் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இங்குள்ளது விகாரை என்று நாம் கூறினால் அவர்கள் அதனை கோவில் என்கின்றனர். பின் தொல்பொருளியல் திணைக்களத்தினூடாக ஆய்வு செய்து பார்க்கும் போது அங்குள்ளது விகாரை என்பது தெரியவருகிறது.

அதனை பின்னர் அது தவறென்றும் , எம்மை இனவாதிகளென்றும் விமர்சிக்கின்றனர். தொல்பொருளியல் ஆய்வு  என்பது உண்மையை கண்டறியும் விஞ்ஞானமாகும். அவ்வாறிருக்கையில் உண்மைகளையும் கோட்பாடுகளையும் எவ்வாறு மாற்ற முடியும்?

கிளிநொச்சி மாவட்டத்தில் உடைந்து விழுந்த கோவில்களை எமது முயற்சியில் மீளப் புனரமைத்தமை தொடர்பில் எவரும் பேசவில்லை.

எம்மால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான விடயங்கள் ஒருபோதும் ஊக்குவிக்கப்படுவதில்லை. நிதி நெருக்கடி காரணமாக அந்த வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கான நிதி திரட்டும் பணிகளையும் நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

குறித்த கிளிநொச்சி ஆலயங்களில் மிக தனித்துவமான கட்டடக்கலைகள் காணப்படுகின்றன. உலகில் வேறெங்கும் அவ்வாறான ஆலயங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அதே போன்று இலங்கையிலுள்ள 7 சிவன் ஆலயங்களை மீளப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. இவ்வாறான மத விவகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனில் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தலாம். ஆனால் அனைவரும் மூத்தோர் என்ற அடிப்படையில் எம்மால் ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியுமல்லவா?

இந்நாட்டில் ஒழுக்கம் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கம் இல்லை. அரசியல்வாதிகளிடம் ஒழுக்கமும் , சகிப்புத்தன்மையும் காணப்பட்டால், ஏனையோருக்கிடையிலும் சகிப்புத்தன்மையை உருவாக்க முடியும். இவை இந்து மற்றும் பௌத்தவாதங்களின் அடிப்படையாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் இடத்துக்குச் சென்றால் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் அங்கு செல்கின்றனர். 

அதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளும் அங்கு செல்கின்றன. வாக்குகளுக்காக அனைவரும் இவ்வாறு செயற்படுகின்றனர். மாறாக மக்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை.

இவை அரசியல் விளையாட்டுக்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே அம் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பதில்லை. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விளையாட்டுக்களை விளையாட வேண்டாமென அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் அறிக்கை கிடைக்கப்பெறும். அதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும். உண்மைகளை அறியாமல் என்னால் எதனையும் கூற முடியாது என்றார்.
 

https://www.virakesari.lk/article/154613

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

தையிட்டி விகாரை விவகாரம் : அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே பிரச்சினைக்கான தீர்வு - அரசாங்கம்

Published By: Digital Desk 5

06 May, 2023 | 10:26 AM
image

(எம்.மனோசித்ரா)

யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை குறித்த சர்ச்சை தொடர்பில் முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அடுத்த வாரம் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே இந்த பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கேசரிக்கு தெரிவித்தார்.

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. 

அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கமும் , சகிப்புத் தன்மையும் ஏற்படும் வரை இவ்வாறான பிரச்சினைகள் மீள் நிகழாமையை எம்மால் உறுதிப்படுத்த முடியாது.

எனவே தையிட்டி விகாரை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் - தையிட்டு விகாரையை அகற்றக் கோரி பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,

வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்தும் ஏற்படுகின்றன. இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பது எமக்குத் தெரியவில்லை.

 அரசியல்வாதிகள் தமக்கான வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர் ஆலய விவகாரத்திலும் இவ்வாறே இடம்பெற்றது.

அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர். இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருக்க வேண்டுமெனில் அரசியல்வாதிகள் அனைவரையும் இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து நீக்க வேண்டும்.

எம்மை இனவாதிகளெனக் கூறுபவர்கள் இறுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இங்குள்ளது விகாரை என்று நாம் கூறினால் அவர்கள் அதனை கோவில் என்கின்றனர். பின் தொல்பொருளியல் திணைக்களத்தினூடாக ஆய்வு செய்து பார்க்கும் போது அங்குள்ளது விகாரை என்பது தெரியவருகிறது.

அதனை பின்னர் அது தவறென்றும் , எம்மை இனவாதிகளென்றும் விமர்சிக்கின்றனர். தொல்பொருளியல் ஆய்வு  என்பது உண்மையை கண்டறியும் விஞ்ஞானமாகும். அவ்வாறிருக்கையில் உண்மைகளையும் கோட்பாடுகளையும் எவ்வாறு மாற்ற முடியும்?

கிளிநொச்சி மாவட்டத்தில் உடைந்து விழுந்த கோவில்களை எமது முயற்சியில் மீளப் புனரமைத்தமை தொடர்பில் எவரும் பேசவில்லை.

எம்மால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான விடயங்கள் ஒருபோதும் ஊக்குவிக்கப்படுவதில்லை. நிதி நெருக்கடி காரணமாக அந்த வேலைத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கான நிதி திரட்டும் பணிகளையும் நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

குறித்த கிளிநொச்சி ஆலயங்களில் மிக தனித்துவமான கட்டடக்கலைகள் காணப்படுகின்றன. உலகில் வேறெங்கும் அவ்வாறான ஆலயங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அதே போன்று இலங்கையிலுள்ள 7 சிவன் ஆலயங்களை மீளப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை. இவ்வாறான மத விவகாரங்கள் தொடர்பில் ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனில் அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தலாம். ஆனால் அனைவரும் மூத்தோர் என்ற அடிப்படையில் எம்மால் ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியுமல்லவா?

இந்நாட்டில் ஒழுக்கம் இல்லை. குறிப்பாக அரசியல்வாதிகளிடத்தில் ஒழுக்கம் இல்லை. அரசியல்வாதிகளிடம் ஒழுக்கமும் , சகிப்புத்தன்மையும் காணப்பட்டால், ஏனையோருக்கிடையிலும் சகிப்புத்தன்மையை உருவாக்க முடியும். இவை இந்து மற்றும் பௌத்தவாதங்களின் அடிப்படையாகும்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் இடத்துக்குச் சென்றால் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் அங்கு செல்கின்றனர். 

அதனைத் தொடர்ந்து ஏனைய கட்சிகளும் அங்கு செல்கின்றன. வாக்குகளுக்காக அனைவரும் இவ்வாறு செயற்படுகின்றனர். மாறாக மக்கள் இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்துவதில்லை.

இவை அரசியல் விளையாட்டுக்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே அம் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பதில்லை. எனவே மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் விளையாட்டுக்களை விளையாட வேண்டாமென அரசியல்வாதிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் அறிக்கை கிடைக்கப்பெறும். அதனை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும். உண்மைகளை அறியாமல் என்னால் எதனையும் கூற முடியாது என்றார்.
 

https://www.virakesari.lk/article/154613

நிருபர்: அறிக்கை... எப்ப கிடைக்கும்?
அமைச்சர்:  விகாரை திறந்த பின் அறிக்கை கிடைக்கும்.  அதற்குப் பிறகு உடனடியாக  தீர்வு வழங்கப்படும். 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சட்டங்களினூடாக மதத்தைப் பின்பற்றுவதற்கு மக்களுக்குள்ள சுதந்திரத்தை மட்டுப்படுத்த நாம் விரும்பவில்லை.

இது தமிழர் பூர்வீகம், இங்கு யார் பவுத்தத்தை பின்பற்றுகின்றனர்? யாரை சட்டத்தை பயன்படுத்தி மதத்தை திணிக்கப்போகிறீர்கள்? இராணுவத்தினருக்கு பண்டிகைக்கால விடுமுறை அளித்து வீடுகளுக்கு அனுப்புங்கள். அவர்கள் தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து புத்தனை வணங்கி ஆசிபெறட்டும். இங்கு அவர்களுக்கு என்ன வேலை? எங்கள் இடங்களை, தொழில்வளங்களை, சுரண்டி அடிமைப்படுத்த வேண்டாம். ஒரு அமைச்சர் எப்படி பிரச்சனையை திசை திருப்புகிறார். கூத்தாடி இல்லையென்றால் நீங்கள் எப்படி வடக்கிற்கு வந்திருக்க முடியும்?

2 hours ago, கிருபன் said:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் இடத்துக்குச் சென்றால் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் அங்கு செல்கின்றனர். 

ஆமா..... இந்தக்கூத்தாடி தமிழ் மக்கள் போராடும் இடத்திற்கு ஏன் செல்கிறது? வாக்குசேகரிக்க! இது இதுவரையில் மக்களின் எந்தப்பிரச்சனையை தீர்த்து வைத்தது? அங்கு போய் தனக்கு வாக்குபோடவில்லை, இனிமேல் போடுங்கள் என்று பிரச்சாரம் செய்யுது. இதைவிட உங்களுக்கு ஏவல் செய்யுது. இதுதானே உங்களுக்கு வேண்டும்?நீங்கள் யுத்த குற்றவாளிகள் என்றால்; அவரும் அதற்குள் அடக்கம். வெளிநாடுகளில் அவரது பொறுக்கித்தனங்கள் வெளிப்படுவதோடு அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு படுத்தும் உங்களின் மரியாதையும் இருமடங்காகிறது.

2 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை குறித்த சர்ச்சை தொடர்பில் முழுமையான அறிக்கை கோரப்பட்டுள்ளது.

 வடக்கில் இந்து கிறிஸ்தவ ஆலயங்களை குண்டு போட்டு அழித்தவர்கள் யார் அமைச்சரே?

 

2 hours ago, கிருபன் said:

அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர்.

அப்போ... அதை மீள அமைத்தவர்களை கைது செய்தவர்கள் யார்? ஏன் செய்தார்கள் என்று விளக்க முடியுமா? அவர்கள் உடைத்தார்கள் என்கிறீர்கள், உங்களை படையினரே காவல் காத்தனர், உடைத்தவர் யாரென தெரியவில்லை என்றனர். சரி ... உடைத்தவர்களே மீள வைக்கும்போது கைது செய்வதன் மர்மம் என்ன? கொஞ்சமாவது புத்திசாலித்தனம் இருக்கவேண்டும் அமைச்சராவதற்கு, கேள்விக்கு பதில் அளிப்பதற்கு.

2 hours ago, கிருபன் said:

தையிட்டி விகாரை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டார்.

விகாரை என்ன உங்கள் அப்பன் புலத்திலா அல்லது அரசியல் வாதியின் புலத்திலா அமைத்தீர்கள் அரசியலாக்காமலிருப்பதற்கு கொஞ்சமாவது விவேகம் வேண்டாம் பதில் சொல்ல.

2 hours ago, கிருபன் said:

தொல்பொருளியல் திணைக்களத்தினூடாக ஆய்வு செய்து பார்க்கும் போது அங்குள்ளது விகாரை என்பது தெரியவருகிறது.

அது ஏன் தொல்பொருள் திணைக்களம் தமிழர் பிரதேசத்தில் மட்டும் ஆய்வு செய்கிறது? தான்தோன்றித்தனமான முடிவுகளை அங்குள்ளவர்களோடு ஆலோசியாமல், அவர்களை இணைத்துக்கொள்ளாமல் செய்கிறது? குற்றச்சாட்டுக்கள் எழும்போது உண்மைத்தன்மையை நிரூபிக்க ஏன் அவர்களை, சர்வதேச கண்காணிப்பாளர்களை இணைக்கவில்லை? அதற்கு நம் மக்கள் வற்புறுத்தவேண்டும். அப்போ தெரியும் நிலைகள்ளரின் வண்டவாளம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறும் இடத்துக்குச் சென்றால் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினரும் அங்கு செல்கின்றனர். 

ஏன் ஒரு சிங்கள தரகர் போகலாம், மக்கள் பிரதிநிதிகள், மக்கள் பிரச்சனைக்காக போகக்கூடாதோ? இதுதான் உங்கள் ஒழுக்கமோ? அவர்கள் போனதால் தான் கள்ளவிகாரை வெளிச்சத்துக்கு வந்தது என கடுப்பாகுதோ? மண்டைதீவு வழியாக இராணுவத்தை உள்நுழைத்து தீவகத்தில் ஆட்சி நடத்திய மாதிரி விகாரையை வைத்து ஆட்சி பிடிக்கப்போனாரோ தரகர்? அதுக்குத்தான் சூறாவளி மாதிரி எல்லாவற்றுக்குள்ளும்  மூக்கை நுழைச்சுக்கொண்டு திரியிறார். நீங்களும் அவரை ஏவி விட்டு குளிர்காய காத்திருக்கிறீர்கள். இதை விட அவருக்கு என்ன தகுதியிருக்கிறது அமைச்சரவையில்? துப்பாக்கியும், வாளும், உங்கள் பாதுகாப்பும் எந்நாளும் காப்பாற்றப்போவதில்லை அவரை. மக்கள் நிராகரித்தால் நீங்களே அவரை சீண்டப்போவதில்லை. அதற்கு கனகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

அவர்களாகவே சென்று ஆலயத்தை உடைத்து அதனை நாம் உடைத்ததாகக் குறிப்பிட்டனர்.

தரகர்கள் அங்குமிங்கும் ஓடித்திரிவதையும், இவர் சொல்லும் கூற்றையும் வைத்துப்பாத்தால் அரச தரகர்களின் கைங்கரியம் போலுள்ளது.  பொங்கியெழுந்த சிங்கள மக்களின் பிரச்சனையை திசை திருப்ப ரணிலால் உடனடியாக தரகர் அழைக்கப்பட்டதற்கு இதுவே காரணம்.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.