Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுநர் பதவி நீக்கப்பட்ட விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கின்றார் வடக்கு முன்னாள் ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ஆளுநர் இந்தியாவிற்கு விஜயம்!

ஆளுநர் பதவி நீக்கப்பட்ட விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கின்றார் வடக்கு முன்னாள் ஆளுநர்

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யும் உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு பலகாலமாக அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதால் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஆளுநர் ஜனாதிபதியை சந்திக்கும் வரை அது தொடர்பில் விளக்கமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்கிய சேவைகளுக்காக பல்வேறு தரப்பினருக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையொப்பமிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1332039

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண முன்னாள் தமிழ் ஆளுநர் ஜீவன் தியாகராஜா…
தமிழ் மக்களுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் தானே செயல் பட்டவர்.
அப்படி இருந்தும்… ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

வடக்கு மாகாண முன்னாள் தமிழ் ஆளுநர் ஜீவன் தியாகராஜா…
தமிழ் மக்களுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாகவும் தானே செயல் பட்டவர்.
அப்படி இருந்தும்… ஏன் மாற்றினார்கள் என்று தெரியவில்லை.

ஏனென்றால் மத்திய அரசு இவரின் அடாவடி செயல்பாடுகளால்   நீதிமன்றதில் மூக்குடைவது வளமையாகிவிட்டது. அதுவும் சுமந்திரன் வழக்காடும் அணியில் இருந்தால் இவர் மூக்குடைபடுவது திண்ணம் என்று மத்திக்கு  தெரியும். சில கிழமைகல்லு முன்னர் தான் நாவலர் மண்டபம் தொடர்பான வழக்கு இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதிலும் இவர்கள் தோற்கவேண்டும். வேறு விடயங்களும் இருக்கின்றன. ஆனால் அவை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் வரும் காலத்தில் வரக்கூடும் என்பதால் இங்கு எழுதுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

சரி இந்த வழக்குகள்/தீர்ப்புகளால் எங்களுக்கு என்ன பயன் எங்களுக்கு என நீங்கள் கேட்கக்கூடும்.

ஆளுநர் என்பவர் மத்திய அரசை பிரதிநிதிப்படுத்துபவர். அந்த அரசின் உத்தரவுகளை, அரைசியல் யாப்பின் விதிகளை நாங்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தி அவற்றை தட்காலிகமாக தடுப்பதுடன் எமக்கு சார்பான இறுதி தீர்ப்பையும் பெறுகின்றபோது  அந்த தீர்ப்பு வரும் காலத்தில் அதை ஒத்த மத்திய அரசின் எல்லா செயல்பாடுகளையும் முடக்குவதுடன், மத்திய அரசின் அதிகாரத்துக்கு ஒரு வரம்பை நிர்ணயிக்கிறது. மேலதிகமாக அரசியல் யாப்பில் உள்ள சரத்துகளுக்கு உண்மையான செயல் வடிவம் கொடுக்க அரசை நிர்பந்திக்கின்ற  ஒரு செயல்பாடு. ஏனென்றால் உங்களுக்கு தெரியும் இலங்கையை ஆளும் சக்திகள் சிறுபான்மையினர் என்று வரும் பொழுது அரசியல் யாப்புக்கு அப்பால் இயங்குகின்ற வளமையை கொண்டவை. 

உண்மையான ஜநாயகம் உள்ள நாடுகளில் நீதிமன்றங்களை நாடி, பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு அப்பால், அரசியல் வரம்புகளை நிர்ணயிக்க பாவிக்கிற ஒரு முறைமை. குறிப்பாக சிறுபான்மையினர், ஒடுக்கப்படட மக்கள் மற்றும் பாராளுமன்றில் பெரும்பான்மையினருக்கு எதிராக சரியான அளவு பிரதிநித்துவம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி. Judicial Activism என்று சொல்லுவார்கள்.

எங்களை பொறுத்தவரை அரசியலுடன் சட்ட நடவடிக்கைகளும் மிக அவசியம். இந்த வகையான சட்ட விவகாரங்களில், (குறிப்பாக அரசியல் யாப்பின் பிரகாரம் உள்ள சட்ட நடைமுறைகள்/உரிமைகள்/தர நெறி - operationalising constitutional rights, norms and values ) சுமந்திரனின் குறை நிறைகளுக்கு அப்பால், அவர் சிறந்தவர் என்பது தான் எனது அனுபவம். வெட்டுக்குநாறி  விவாகரத்துக்கு பல ஆண்டுகளுக்கு  முன்னரே, அரசியலுக்கு வர முன்னர், அவர் கதிர்காமம்  பகுதியில் ஒரு இந்து கோவில் விவகாரத்தில் வழக்காடி வெற்றியை பெற்று தந்தவர். இதேபோல்  குமாரவடிவேல் குர்பரனும் மற்றும் மணிவண்ணனும் (நாவலர் மண்டபம் வழக்கு  அவர் தான்  செய்கிறார்) இதில் இறங்கினால் பல தளங்களில் சட்ட முறைமைகள் ஊடாக சில வரம்புகளை நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, saravanar said:

ஏனென்றால் மத்திய அரசு இவரின் அடாவடி செயல்பாடுகளால்   நீதிமன்றதில் மூக்குடைவது வளமையாகிவிட்டது. அதுவும் சுமந்திரன் வழக்காடும் அணியில் இருந்தால் இவர் மூக்குடைபடுவது திண்ணம் என்று மத்திக்கு  தெரியும். சில கிழமைகல்லு முன்னர் தான் நாவலர் மண்டபம் தொடர்பான வழக்கு இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதிலும் இவர்கள் தோற்கவேண்டும். வேறு விடயங்களும் இருக்கின்றன. ஆனால் அவை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் வரும் காலத்தில் வரக்கூடும் என்பதால் இங்கு எழுதுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

சரி இந்த வழக்குகள்/தீர்ப்புகளால் எங்களுக்கு என்ன பயன் எங்களுக்கு என நீங்கள் கேட்கக்கூடும்.

ஆளுநர் என்பவர் மத்திய அரசை பிரதிநிதிப்படுத்துபவர். அந்த அரசின் உத்தரவுகளை, அரைசியல் யாப்பின் விதிகளை நாங்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தி அவற்றை தட்காலிகமாக தடுப்பதுடன் எமக்கு சார்பான இறுதி தீர்ப்பையும் பெறுகின்றபோது  அந்த தீர்ப்பு வரும் காலத்தில் அதை ஒத்த மத்திய அரசின் எல்லா செயல்பாடுகளையும் முடக்குவதுடன், மத்திய அரசின் அதிகாரத்துக்கு ஒரு வரம்பை நிர்ணயிக்கிறது. மேலதிகமாக அரசியல் யாப்பில் உள்ள சரத்துகளுக்கு உண்மையான செயல் வடிவம் கொடுக்க அரசை நிர்பந்திக்கின்ற  ஒரு செயல்பாடு. ஏனென்றால் உங்களுக்கு தெரியும் இலங்கையை ஆளும் சக்திகள் சிறுபான்மையினர் என்று வரும் பொழுது அரசியல் யாப்புக்கு அப்பால் இயங்குகின்ற வளமையை கொண்டவை. 

உண்மையான ஜநாயகம் உள்ள நாடுகளில் நீதிமன்றங்களை நாடி, பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு அப்பால், அரசியல் வரம்புகளை நிர்ணயிக்க பாவிக்கிற ஒரு முறைமை. குறிப்பாக சிறுபான்மையினர், ஒடுக்கப்படட மக்கள் மற்றும் பாராளுமன்றில் பெரும்பான்மையினருக்கு எதிராக சரியான அளவு பிரதிநித்துவம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி. Judicial Activism என்று சொல்லுவார்கள்.

எங்களை பொறுத்தவரை அரசியலுடன் சட்ட நடவடிக்கைகளும் மிக அவசியம். இந்த வகையான சட்ட விவகாரங்களில், (குறிப்பாக அரசியல் யாப்பின் பிரகாரம் உள்ள சட்ட நடைமுறைகள்/உரிமைகள்/தர நெறி - operationalising constitutional rights, norms and values ) சுமந்திரனின் குறை நிறைகளுக்கு அப்பால், அவர் சிறந்தவர் என்பது தான் எனது அனுபவம். வெட்டுக்குநாறி  விவாகரத்துக்கு பல ஆண்டுகளுக்கு  முன்னரே, அரசியலுக்கு வர முன்னர், அவர் கதிர்காமம்  பகுதியில் ஒரு இந்து கோவில் விவகாரத்தில் வழக்காடி வெற்றியை பெற்று தந்தவர். இதேபோல்  குமாரவடிவேல் குர்பரனும் மற்றும் மணிவண்ணனும் (நாவலர் மண்டபம் வழக்கு  அவர் தான்  செய்கிறார்) இதில் இறங்கினால் பல தளங்களில் சட்ட முறைமைகள் ஊடாக சில வரம்புகளை நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். 

சுமந்திரனே நேரில் வந்து விளக்கம் தந்ததுபோல் உள்ளது. கோரிக்கை!

12 hours ago, தமிழ் சிறி said:

வடக்கு மாகாணத்திற்கு பலகாலமாக அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதால் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹி .....ஹி..... இவரின் அளப்பரிய சேவையை பெற்ற மக்களல்லவா இவரை மாற்ற வேண்டாமென்று கோரிக்கை வைக்கவேண்டும்? தனக்குத்தானே சொல்லும் சாட்சியம், வழங்கும் சான்றிதழ் செல்லுபடியாகுமா? இவருக்கெதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதே. இவர் யாருக்கு சேவை  செய்ய வந்தார்? யாருக்கு சேவை செய்தார் என்பதையும் விளங்கப்படுத்தியிருக்கலாம், அப்போ மறுபரிசீலனை செய்ய உதவியாக இருந்திருக்கும். இவர் கோத்தபாயாவால் நியமிக்கப்பட்டவர், அவர் ஓடியதும், இவரின் காலடியில் விழத்தெரிந்திருக்க வேண்டும், தெரியாதவிடத்து; விழுந்தவர்களை பாத்தாவது புரிந்திருக்க வேண்டும். இது தெரியாத இவரெல்லாம் ஆளுநர்? என்ன.... கோத்தாவின் பினாமிதானே, ஆபத்தில்லை அவர் தனக்காக சிபாரிசு செய்திருப்பார் என்று நினைத்து ஆசுவாசமாய் இருந்திருப்பார் போலும்.  இப்போ  விஷயம் கையை விட்டுப்போச்சு, நடித்து மக்களை வசியம் பண்ணவும் முடியாது, அவர் காலடியில் விழவும் முடியாது. இவருக்கு கொடுக்கப்பட்ட காலம் முடிஞ்சுது, பெட்டியை கட்டிக்கொண்டு நடையை கட்ட வேண்டியதுதான். காற்றுள்ள போதே தூற்றியிருக்க வேண்டும், தவறி விட்டார். இப்போ தற்காலிக ஜனாதிபதிக்கு தமிழரின் வாக்கு முக்கியம் அதற்கு முதல், அவர் தமிழரின் மனதை வெல்லவேண்டும்! சுமந்திரனும் அவருக்காக காரணங்களை சுட்டிக்காட்டி, வாக்குபோடச்சொல்லி கைகாட்டவேண்டும், அதற்காக சில சலசலப்புகளையாவது செய்ய வேண்டும். மீண்டும் சவாரி செய்யத்தயார்! நல்லாட்சி மலரப்போகுது காத்திருங்கள் மக்களே!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, saravanar said:

ஏனென்றால் மத்திய அரசு இவரின் அடாவடி செயல்பாடுகளால்   நீதிமன்றதில் மூக்குடைவது வளமையாகிவிட்டது. அதுவும் சுமந்திரன் வழக்காடும் அணியில் இருந்தால் இவர் மூக்குடைபடுவது திண்ணம் என்று மத்திக்கு  தெரியும். சில கிழமைகல்லு முன்னர் தான் நாவலர் மண்டபம் தொடர்பான வழக்கு இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதிலும் இவர்கள் தோற்கவேண்டும். வேறு விடயங்களும் இருக்கின்றன. ஆனால் அவை தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் வரும் காலத்தில் வரக்கூடும் என்பதால் இங்கு எழுதுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

சரி இந்த வழக்குகள்/தீர்ப்புகளால் எங்களுக்கு என்ன பயன் எங்களுக்கு என நீங்கள் கேட்கக்கூடும்.

ஆளுநர் என்பவர் மத்திய அரசை பிரதிநிதிப்படுத்துபவர். அந்த அரசின் உத்தரவுகளை, அரைசியல் யாப்பின் விதிகளை நாங்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்தி அவற்றை தட்காலிகமாக தடுப்பதுடன் எமக்கு சார்பான இறுதி தீர்ப்பையும் பெறுகின்றபோது  அந்த தீர்ப்பு வரும் காலத்தில் அதை ஒத்த மத்திய அரசின் எல்லா செயல்பாடுகளையும் முடக்குவதுடன், மத்திய அரசின் அதிகாரத்துக்கு ஒரு வரம்பை நிர்ணயிக்கிறது. மேலதிகமாக அரசியல் யாப்பில் உள்ள சரத்துகளுக்கு உண்மையான செயல் வடிவம் கொடுக்க அரசை நிர்பந்திக்கின்ற  ஒரு செயல்பாடு. ஏனென்றால் உங்களுக்கு தெரியும் இலங்கையை ஆளும் சக்திகள் சிறுபான்மையினர் என்று வரும் பொழுது அரசியல் யாப்புக்கு அப்பால் இயங்குகின்ற வளமையை கொண்டவை. 

உண்மையான ஜநாயகம் உள்ள நாடுகளில் நீதிமன்றங்களை நாடி, பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு அப்பால், அரசியல் வரம்புகளை நிர்ணயிக்க பாவிக்கிற ஒரு முறைமை. குறிப்பாக சிறுபான்மையினர், ஒடுக்கப்படட மக்கள் மற்றும் பாராளுமன்றில் பெரும்பான்மையினருக்கு எதிராக சரியான அளவு பிரதிநித்துவம் இல்லாதவர்கள் பயன்படுத்தும் ஒரு யுக்தி. Judicial Activism என்று சொல்லுவார்கள்.

எங்களை பொறுத்தவரை அரசியலுடன் சட்ட நடவடிக்கைகளும் மிக அவசியம். இந்த வகையான சட்ட விவகாரங்களில், (குறிப்பாக அரசியல் யாப்பின் பிரகாரம் உள்ள சட்ட நடைமுறைகள்/உரிமைகள்/தர நெறி - operationalising constitutional rights, norms and values ) சுமந்திரனின் குறை நிறைகளுக்கு அப்பால், அவர் சிறந்தவர் என்பது தான் எனது அனுபவம். வெட்டுக்குநாறி  விவாகரத்துக்கு பல ஆண்டுகளுக்கு  முன்னரே, அரசியலுக்கு வர முன்னர், அவர் கதிர்காமம்  பகுதியில் ஒரு இந்து கோவில் விவகாரத்தில் வழக்காடி வெற்றியை பெற்று தந்தவர். இதேபோல்  குமாரவடிவேல் குர்பரனும் மற்றும் மணிவண்ணனும் (நாவலர் மண்டபம் வழக்கு  அவர் தான்  செய்கிறார்) இதில் இறங்கினால் பல தளங்களில் சட்ட முறைமைகள் ஊடாக சில வரம்புகளை நாங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். 

சுமந்திரனைப் பற்றிய மிகச் சரியான கணிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வடக்கு ஆளுநருக்கெதிராக வடக்கிலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.