Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

spacer.png

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலத்தில் உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

 

https://athavannews.com/2023/1332436

 

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

Published By: NANTHINI

22 MAY, 2023 | 11:20 AM
image

டக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (22) காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

 

01__3_.jpg

01__1_.jpg

01__2_.jpg

https://www.virakesari.lk/article/155828

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயல்வேன் : யாழில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்தும் அவதானம் செலுத்துவேன் - வடக்கு ஆளுநர்

Published By: NANTHINI

22 MAY, 2023 | 02:09 PM
image

 

க்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத்தர முயல்வேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் (22) உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று என்னை வாழ்த்துவதற்கு வருகைதந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத் தருமாறு கூறியிருக்கின்றார்கள். எனவே, அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி, அதற்கு தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பேன்.

இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்குமான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில், அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிக்கின்றேன்.

அதேபோல அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம் அவர்களால் மாகாண மக்களின் குறிப்பாக, யாழ். மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.

ஏற்கனவே, பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும், அதை முன்னெடுத்து செல்லும்படியும் கூறியிருக்கிறார். அது தொடர்பாகவும் நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன். 

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கிறேன். 

நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியில் ஒரு பெரும் பிரச்சினையாக உணர்ந்திருக்கின்றேன். எனவே, அந்த பிரச்சினையை தீர்க்க நிச்சயமாக முக்கிய கவனம் எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/155856

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணி, மோசடி இல்லாமல் பார்த்து கொண்டால் போதும். மற்றப்படி மக்களொன்றும் எதிர்பார்க்கவில்லை.


தண்ணீர் திடடம் முடிவுறும் தருவாயில் இருக்கிறது. நீர் தாங்கிகள், குழாய் பாதிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து விட்ட்து. இப்போது தாளயாடியில் கடல் நீரை நன்னீராக்கும் (RO Water ) கட்டுமான வேலைகள் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.அடுத்த வருட ஆரம்பத்தில் விநியோகம் ஆரம்பிக்கப்படும்.

எனவே நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் பெயரை அந்த கல்வெட்டில் பதித்து திறப்பதுதான் உங்கள் வேலையாக இருக்குமென்று நினைக்கிறேன். நீங்களே அதை கட்டியதாகவும் பறை சாற்றிக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணிக்கு நிறைய குடைச்சல்கள் இருக்குமென்பதை அவர் பதவியேற்பதற்கு முன்னே கட்டியம் கூறியாயிற்று. முன்னாள் ஆளுநரின் ஆதரவாளர்கள், இவரினாலேயே சச்சியர் ஆட்டுவிக்கப்பட்டாரோ என எண்ணத்தோன்றுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியார் ஆர்ப்படடம்  செய்தாரோ , அல்லது அவரது ஆட்கள் யாராவது செய்தார்களோ தெரியவில்லை. இருந்தாலும் அவர்களது குற்றச்சாட்டுகளில் நியாயம் இல்லாமலுமில்லை.

இந்த பதவி பெறுவதட்காக தேர்தல் ஆணையத்தை காட்டிக்கொடுத்தவர் இவர். பதவிகளுக்காக எதுவும் செய்ய தயாரானவர்கள்.

எனவே ஊழல்கள் விடயத்தில் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருந்தால் நல்லது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக தான் உணர்ந்திருக்கிறேன் – வடக்கு ஆளுநர்

பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியாக தான் உணர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரச்சனையயை தீர்க்க நிச்சியமாக முக்கியமாக கவனம் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல மாகாண மக்கள் குறிப்பாக யாழ் மாவட்ட மக்களின் கொண்ட குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக வடக்கு மாகாண அவைத்தலைவர் எடுத்துக் கூறியிருந்த நிலையில் அது சம்பந்தமாகவும் நான் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அனைத்து மதங்களும் தங்களுடைய மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்றும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/யாழ்ப்பாண-மக்களின்-குடிந/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.