Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விஐபி முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் ஆய்வு இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி பணிப்புரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை.

சுங்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இது நிறுவப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/255655

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை.

சுங்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இது நிறுவப்படவுள்ளது.

https://thinakkural.lk/article/255655

நல்ல ஒரு தீர்மானம். அதனை வரவேற்கலாம். ஆனால் இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளுவார்களோ தெரியவில்லை. சில வேளைகளில் இதட்கு எதிராகவும் அங்கு தீர்மானத்தை நிறைவேற்றலாம். இதனால் அவர்களது கடத்தல், கஞ்சா , குடு வியாபாரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் பயங்கர கடத்தல்காரர் யார் என்பதை ஏற்று அடையாளப்படுத்த இதைவிட வேறென்ன சான்று வேண்டும் காவல் இருக்கும்போது கள்வன் வருவானா திருட அதற்கு வேறு ஒருவழி கண்டுபிடிக்காமலா இருப்பார்கள் இந்தத் திருடர் அதியுயர் பாதுகாப்பில் இருந்த பணமே திருட்டுப்போய்விட்டதாக  செய்தி வந்ததே அது எப்படி அதற்கு என்னவாயிற்று திருடனே காவலன் ஆகிற நாடு இலங்கை இதில மற்றவைக்கு பாடம் பயிற்சி கொடுப்பினம்

18 hours ago, ஏராளன் said:

இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை

 

18 hours ago, ஏராளன் said:

விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை.

நாட்டின் பயங்கர கடத்தல்காரர் யார் என்பதை ஏற்று,அடையாளப்படுத்த இதைவிட வேறென்ன சான்று வேண்டும்? காவல் இருக்கும்போது கள்வன் வருவானா திருட? அதற்கு வேறு ஒருவழி கண்டுபிடிக்காமலா இருப்பார்கள் இந்தத் திருடர்? அதியுயர் பாதுகாப்பில் இருந்த பணமே திருட்டுப்போய்விட்டதாக  செய்தி வந்ததே, அது எப்படி? அதற்கு என்னவாயிற்று? திருடனே தலைவன், காவலன் ஆகிற நாடு இலங்கை. இதில மற்றவைக்கு பாடம், பயிற்சி கொடுப்பினம்!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகள் வரும், போகும்போது மட்டும் வேலை செய்யாது. 😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் நீக்கப்பட வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தின் பிரமுகர் முனையங்களில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்ட சலுகைகள் நீக்கப்பட வேண்டும் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இது களவு மற்றும் மோசடிக்கு சமமானதாகும். அலி சப்ரி ரஹீமின்பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குவதற்கான பிரேரணை கொண்டு வரப்பட்டால் அதற்கு நான் ஆதரவளிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள் நீக்கப்பட வேண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சாதாரண பயணிகள் முனையம் வழியாக வந்து சாதாரண பயணிகளைப் போல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வாறான சலுகைகள் தேவையில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/255922

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.