Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தையிட்டி சட்டவிரோத விகாரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி சட்டவிரோத விகாரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை

adminJune 1, 2023
Thaiyiddi-Viharai.jpg?fit=840%2C560&ssl=

 

 

 

தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டபோதும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தையிட்டி விகாரை தொடர்பான விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்தனர்.

அதன் போது , விகாரைக்குரிய காணியிலேயே கட்டப்பட்டுள்ளதாக முதலில் கருதியதாகவும் பின்னரே அது தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததாகவும் அது தவறு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியபோதும் அவர் அதனைச் செவிமடுத்தாரே தவிர தீர்வை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது. அந்த மக்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டவிரோத கட்டடத்தை எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.இந்த விகாரைக்கான அடிக்கல் நடப்பட்ட மறுநாள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை நிறுத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 அதே தீர்மானம் பின்னர் யாழ். மாவட்டச் செயலகத்திலும் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரினர்.

யாழ். மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அத்தைகயதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆராய்ந்தே அவ்வாறானதொரு தீர்மானத்தை மீள நிறைவேற்றமுடியும். இப்போது, அந்த விகாரைக்கு ஆட்சேபம் தெரிவிப்பதாக கருத்தை பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

 

https://globaltamilnews.net/2023/191442/

 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

தையிட்டி சட்டவிரோத விகாரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை

adminJune 1, 2023
Thaiyiddi-Viharai.jpg?fit=840%2C560&ssl=

 

 

 

தையிட்டியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நேற்று ஆராயப்பட்டபோதும் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தையிட்டி விகாரை தொடர்பான விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்தனர்.

அதன் போது , விகாரைக்குரிய காணியிலேயே கட்டப்பட்டுள்ளதாக முதலில் கருதியதாகவும் பின்னரே அது தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததாகவும் அது தவறு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இ.அங்கஜன், இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியபோதும் அவர் அதனைச் செவிமடுத்தாரே தவிர தீர்வை வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது. அந்த மக்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டவிரோத கட்டடத்தை எப்படி அனுமதிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர்.இந்த விகாரைக்கான அடிக்கல் நடப்பட்ட மறுநாள் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சட்டவிரோத விகாரை கட்டுமானத்தை நிறுத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 அதே தீர்மானம் பின்னர் யாழ். மாவட்டச் செயலகத்திலும் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது என்று மீண்டும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரினர்.

யாழ். மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அத்தைகயதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆராய்ந்தே அவ்வாறானதொரு தீர்மானத்தை மீள நிறைவேற்றமுடியும். இப்போது, அந்த விகாரைக்கு ஆட்சேபம் தெரிவிப்பதாக கருத்தை பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

 

https://globaltamilnews.net/2023/191442/

 

நடைமுறைப்படுத்த முடியாத, நடைமுறை படுத்தப்படாத தீர்மானங்கள். அவர்கள் நினைத்தபடிதான் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தென்பகுதி பிக்கு கொடுத்த பேட்டியை கேட்டீர்களோ தெரியாது. அந்த மனிதர் சொன்னார் அதாவது, கட்டப்பட்ட மத நிலையங்களை இடிக்க கூடாதாம். அப்போ எதற்கு தனிமனிதருக்கு சொந்தமான காணியில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டினார்கள்? வடக்கில் மத வழிபாட்டு தலங்கள் பக்தர்களோடு குண்டு போட்டு அழிக்கும்போது இவர் எங்கே போயிருந்தார்? இன்னொரு சைவ ஆலயம் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டதாக சொல்லி இடித்தார்களாம் இடம் சரியாக தெரியவில்லை. பவுத்த விகாரைக்கு மட்டும் ஏன் இந்த சலுகை?

23 hours ago, கிருபன் said:

விகாரைக்குரிய காணியிலேயே கட்டப்பட்டுள்ளதாக முதலில் கருதியதாகவும் பின்னரே அது தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ளமை தெரியவந்ததாகவும் அது தவறு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதை உறுதிப்படுத்துவதற்க்கு ஒரு அமைச்சர். கருதி இருந்துவிட்டு தவறு என கருத்துச்சொல்வதற்கு இவர் தேவையா? இதைத்தானே நாங்கள் சொல்கிறோம்.  பிறகு அதை திருப்பிச்சொல்வதற்கு இவர் தேவைதானா? இவரை மக்கள் தெரிந்தால் மக்களுக்கு என்ன லாபம்  சிங்களம் சொல்வதை திருப்பி சொல்லி செய்வதை  நிஞாயப்படுத்தவா?

23 hours ago, கிருபன் said:

கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது. அந்த மக்களுக்கு வேறு காணிகளை வழங்கலாம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதே காரணத்தை சொல்லி  வடகிழக்கெங்கும் மக்களின் குடியிருப்பு, விவசாய காணிகள் பறிக்கப்பட்டு வேறெங்கோ சிறு துண்டுக்காணியில் குடியமர்த்துவார்கள். தாங்கள் இனாமாக கொடுப்பதுபோல் பிரச்சாரம் செய்வார்கள். யாரின் காணியை யார்  கொடுப்பார்கள்? ஏன் அவர்ளுக்கு கொடுக்க இருக்கும்  காணியில் விகாரையை கட்டியிருக்கலாமே? இவர் காட்டியிருக்கலாமே அவர்களுக்கு? பவுத்தர் இல்லாத இடத்தில விகாரைக்கு தேவை என்ன? அதை சிந்திக்க தெரியாத, கேட்க துணிவில்லாத, பிழையை நிஞாயப்படுத்தும் அமைச்சரால் கேடைத்தவிர நன்மையேதும் நிகழ வாய்ப்பில்லை. சிங்களத்தின் அடாவடியோடு இந்த  சிந்திக்க லாயக்கற்ற அறிவிலியின் நிஞாயப்படுத்தலையும் வெளிக்கொண்டு வரவேண்டும். வெளிநாட்டுத்தூதுவர்கள்  இவரை சந்திப்பதில்லை. அப்படி யாராவது வந்தால், தடுத்து நிறுத்த வேண்டும்.

 

23 hours ago, கிருபன் said:

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரினர்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்று சொல்வதற்கே தகுதியற்ற இவருக்கு இது ஒரு கேடு!

23 hours ago, கிருபன் said:

யாழ். மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அத்தைகயதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா என்பதை ஆராய்ந்தே அவ்வாறானதொரு தீர்மானத்தை மீள நிறைவேற்றமுடியும். இப்போது, அந்த விகாரைக்கு ஆட்சேபம் தெரிவிப்பதாக கருத்தை பதிவு செய்யலாம் என்று குறிப்பிட்டார்.

சிரிப்பா கிடக்கு. விகாரை எங்கே கடப்பட்டது என்று தெரியவில்லை, தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா தெரியவில்லை, இனிமேற்தான் ஆராய்வாம். இதில முந்திரிக்கொட்டைபோல எல்லாத்துக்கையும் மூக்கை நுழைத்து கருத்து சொல்வது. இப்படிப்பட்ட முட்டாளுகள்தான் சிங்களத்துக்கு தேவை முதுகு சொறிய. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.