Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நால்வர் போட்டி

adminJune 3, 2023
jaffna-municipal-council.jpg?fit=648%2C3

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என பல்கலை தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவி வழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

அதற்கான இறுதித் தினம் நேற்று முன்தினம்  வெள்ளிக்கிழமையாகும். அன்றைய தினம் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்த வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் நடாத்தப்படவுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் முன்னிலையில்  தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில்  முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.
 

https://globaltamilnews.net/2023/191516/

  • கருத்துக்கள உறவுகள்

"பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ளஅதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவுசெய்து துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்."

 

யாழ் பல்கலைக்கழக மூதவையின் உறுப்பினர்கள் யார் யார்? அவர்கள் பின்ணனி என்ன? 

யாழ் சைவ, வேளாளர் தவிர்ந்த வேறு யாரையேனும், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்க முடியுமா? அது சாத்தியமா? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

துணை வேந்தர்.. யாழ் மாநகர சபைக்கா.. பல்கலைக்கழகத்துக்கா..??!

செய்து யாப்பவர்கள்.. குடு அடிச்சிட்டா.. யாக்கிறார்கள்..??!

  • கருத்துக்கள உறவுகள்

முற்போக்குடன் சிந்திப்பவர்கள்கூட சாதி, சமயம் என வந்தவுடன் கோபமடைகிறார்கள். 

"தமிழ்ப் பெளத்தர் ஒருவர், அல்லது தமிழ்க் கிறீத்துவர் ஒருவர், அல்லது முஸ்லிம் கல்விமான் ஒருவர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா ? "

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

முற்போக்குடன் சிந்திப்பவர்கள்கூட சாதி, சமயம் என வந்தவுடன் கோபமடைகிறார்கள். 

"தமிழ்ப் பெளத்தர் ஒருவர், அல்லது தமிழ்க் கிறீத்துவர் ஒருவர், அல்லது முஸ்லிம் கல்விமான் ஒருவர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா ? "

 

இதற்குள் சாதி.. மத.. இன.. வகுப்புவாதங்களுக்கு அப்பால்.. சொறீலங்கா சனாதிபதி தான் எல்லாமே. முதலில் இந்தச் சர்வாதிகாரத்தை ஒழிக்கனும்.

அப்புறம் கல்வித் தகுதி அடிப்படையில்.. தனிமனித ஒழுக்கம் உட்பட பல விடயங்களை கருத்தில் கொண்டு.. யாழ் பல்கலைக்கழக.. மற்றும் அந்த பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் சூழல்.. சமூகத்தை நன்கு அறிந்த ஒருவர் துணை வேந்தராவதே பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு சிறப்பாகும். அவரை கல்விச் சமூகம் தேர்வு செய்ய வேண்டுமே.. தவிர.. நாட்டின் சனாதிபதி.. அரசியல்வாதி.. மத இன..சாதி அடையாளங்கள்.. தெரிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. 

தமக்கான தமது எதிர்கால மாணவ சமூகத்தின்.. தம் பிராந்திய சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள ஒருவரை துணைவேந்தராக்குவதில் மாணவர்களின் உரிமையும் பாதுகாக்கப்படனும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

யாழ் பல்கலைக்கழக.. மற்றும் அந்த பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் சூழல்.. சமூகத்தை நன்கு அறிந்த ஒருவர் துணை வேந்தராவதே பல்கலைக்கழக நடவடிக்கைகளுக்கு சிறப்பாகும். அவரை கல்விச் சமூகம் தேர்வு செய்ய வேண்டுமே.. தவிர.. நாட்டின் சனாதிபதி.. அரசியல்வாதி.. மத இன..சாதி அடையாளங்கள்.. தெரிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. 

தமக்கான தமது எதிர்கால மாணவ சமூகத்தின்.. தம் பிராந்திய சமூகத்தின் நலனில் அக்கறையுள்ள ஒருவரை துணைவேந்தராக்குவதில் மாணவர்களின் உரிமையும் பாதுகாக்கப்படனும். 

வெளிநாடுவாழ் தாங்கள் இப்படிக் கூறுவது வியப்பாக இருக்கிறது. 

துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர். 

அவர், தான் வழும் சமூகம்+சூழலுக்கு(இதற்குள் சாதியும் சமூகம் மதமும்  உள்ளடங்கும்) மட்டும் உரித்துடையவர் அல்ல.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

வெளிநாடுவாழ் தாங்கள் இப்படிக் கூறுவது வியப்பாக இருக்கிறது. 

துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர். 

அவர், தான் வழும் சமூகம்+சூழலுக்கு(இதற்குள் சாதியும் சமூகம் மதமும்  உள்ளடங்கும்) மட்டும் உரித்துடையவர் அல்ல.

 

சொறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகச் சூழலை மேற்கு நாடுகளில் உள்ள சூழலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் சொறீலங்காவில்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே பல்கலைக்கழக துணை வேந்தர்கள்.. பல்கலைக்கழகங்களை இயக்க வேண்டிய சூழல்.. இருக்கிறது. சனாதிபதி நியமிக்கும் அரச பிரதிநிதி போலவே உபவேந்தர் செயற்படுகிறார். இந்தச் சூழலில்.. தமிழர் பகுதிகளில்.. சிங்களவர் ஒருவர் துணைவேந்தரானால்.. நிகழக்கூடிய சம்பவங்கள் அப்பிராந்திய மாணவர்களின்.. சமூக மக்களின் நலனில் எவ்வளவு அக்கறையோடிருக்கும் என்பதை போர்காலத்தில் தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுப் பெற்ற அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். எங்களின் பாதுகாப்பை நாமே தீர்மானிக்கும் வகையில்.. ஆபத்தான சூழல்களுக்குள் தள்ளிவிடப்பட்ட எத்தனையோ சம்பவங்களை தாண்டி வந்தவர்கள்.. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களால்.. தமிழ் மாணவர்கள் என்பதற்காகவே அனாதைகளாக விடப்பட்டவர்கள் என்ற வகையில்.. வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு இணையாக.. சொறீலங்கா பல்கலைக்கழக சூழல்களை எதிர்பார்க்க முடியாது.

அதுவும் சுதந்திர தாயக வேட்கை கொண்ட மக்களின் இயங்கு சக்தியாக இருந்த பல்கலைக்கழகங்களில்.. சுதந்திர கல்வி சமூகச் செயற்பாட்டை சிங்கள பெளத்த ஆளும் வர்க்கமும் ஆக்கிரமிப்பு இராணுவ இயந்திரமும் மனமுவந்து அங்கீகரிக்கும் என்று.

இதற்குள் நீங்கள்.. சாதிய.. மத.. இன வகுப்புவாதங்களை வேறு திணித்து சூழலை சிக்கலாக்குகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன்.. யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தரத்தில்.. பல வகுப்புவாத பின்னணி கொண்டவர்களும் இருந்தே உள்ளனர். நாங்கள் கல்விச் சூழலில் எந்த வகையான வகுப்புவாதங்களையும் அங்கீகரிப்பதில்லை என்பதால்.. எல்லாரும் மாணவர்களே.. கல்விச் சமூகத்தவர்களே என்ற சிந்தனையை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதாலும்.... சொறீலங்காவில் உள்ள சிங்கள பெளத்த தேசிய வாத ஆதிக்கத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரமான ஊடுருவல்களை பலகலைக்கழகச் சூழலுக்குள் கொண்டுள்ளது என்பதை உணர்ந்திருப்பதாலும்.. இதனை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

Edited by nedukkalapoovan

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு : விசேட பேரவை அமர்வு ஜூலை 12 ஆம் திகதி

Published By: Vishnu

26 Jun, 2023 | 08:32 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள நால்வரில், மூவரைத் திறமைப் புள்ளி ஒழுங்கில் தெரிவு செய்வதற்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்ற பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டபட்டுள்ளது.  

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பல்கலைக் கழகப் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூவரும், கிழக்குப் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தனர்.

எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ள விசேட பேரவைக் கூட்டத்தில் வைத்து பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் நிபுணர் ஒருவரின் கண்காணிப்புடன் விண்ணப்பித்திருக்கும் மூவரினதும் கல்வித் தகைமை, அனுபவம், மற்றும் ஆளுமைத் திறன்களை மையப்படுத்தி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின்  சுற்றறிக்கையில் வரையறுக்கப்பட்ட 7 வகைப் புள்ளித் திட்டத்தின் படி பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் புள்ளிகளையிடுவர்.

ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெறும் மொத்தப் புள்ளிகளின் படி - திறமை அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் தெரிவு செய்து அவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி பிரகடனம் செய்வார்.

தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசியர் செ. கண்ணதாசன் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் முன்னாள் பீடாதிபயும், சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி ஆகியோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருந்தும், விலங்கியல் துறைப் பேராசிரியர் பி. வினோபாபா கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/158647

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 19:09, Kapithan said:

முற்போக்குடன் சிந்திப்பவர்கள்கூட சாதி, சமயம் என வந்தவுடன் கோபமடைகிறார்கள். 

"தமிழ்ப் பெளத்தர் ஒருவர், அல்லது தமிழ்க் கிறீத்துவர் ஒருவர், அல்லது முஸ்லிம் கல்விமான் ஒருவர் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டால் யாழ்ப்பாணச் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா ? "

 

தென் பகுதியில் அப்படி நடந்தால் நடக்கலாம். அங்கு அப்படி நடப்பதட்கு சந்தர்ப்பம் குறைவாகவே காணப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் துரைராஜா பொறியியல் பீட டீன் ஆக வருவதட்கு சிங்கள பேராசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினார்கள். அவர் அங்கு உப வேந்தராக போட்டியிடடாள் கூட தெரிவு செய்யப்பட்டிருப்பார்.

யாழில் பிற மாவட்த்தை சேர்ந்த ஒருவர் பேராசிரியராக இருக்கிறார். அப்படியான நிலைமைக்கு வர தான் சந்திக்க வேண்டிய போராட்டத்தை கூறும்போது கவலையாக இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2023 at 23:20, nedukkalapoovan said:

சொறீலங்காவில் உள்ள பல்கலைக்கழகச் சூழலை மேற்கு நாடுகளில் உள்ள சூழலோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் சொறீலங்காவில்.. சிங்கள பெளத்த பெரும்பான்மை பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே பல்கலைக்கழக துணை வேந்தர்கள்.. பல்கலைக்கழகங்களை இயக்க வேண்டிய சூழல்.. இருக்கிறது. சனாதிபதி நியமிக்கும் அரச பிரதிநிதி போலவே உபவேந்தர் செயற்படுகிறார். இந்தச் சூழலில்.. தமிழர் பகுதிகளில்.. சிங்களவர் ஒருவர் துணைவேந்தரானால்.. நிகழக்கூடிய சம்பவங்கள் அப்பிராந்திய மாணவர்களின்.. சமூக மக்களின் நலனில் எவ்வளவு அக்கறையோடிருக்கும் என்பதை போர்காலத்தில் தென்னிலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுப் பெற்ற அனுபவத்தில் இருந்து சொல்ல முடியும். எங்களின் பாதுகாப்பை நாமே தீர்மானிக்கும் வகையில்.. ஆபத்தான சூழல்களுக்குள் தள்ளிவிடப்பட்ட எத்தனையோ சம்பவங்களை தாண்டி வந்தவர்கள்.. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களால்.. தமிழ் மாணவர்கள் என்பதற்காகவே அனாதைகளாக விடப்பட்டவர்கள் என்ற வகையில்.. வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு இணையாக.. சொறீலங்கா பல்கலைக்கழக சூழல்களை எதிர்பார்க்க முடியாது.

அதுவும் சுதந்திர தாயக வேட்கை கொண்ட மக்களின் இயங்கு சக்தியாக இருந்த பல்கலைக்கழகங்களில்.. சுதந்திர கல்வி சமூகச் செயற்பாட்டை சிங்கள பெளத்த ஆளும் வர்க்கமும் ஆக்கிரமிப்பு இராணுவ இயந்திரமும் மனமுவந்து அங்கீகரிக்கும் என்று.

இதற்குள் நீங்கள்.. சாதிய.. மத.. இன வகுப்புவாதங்களை வேறு திணித்து சூழலை சிக்கலாக்குகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன்.. யாழ் பல்கலைக்கழக பீடாதிபதிகள் தரத்தில்.. பல வகுப்புவாத பின்னணி கொண்டவர்களும் இருந்தே உள்ளனர். நாங்கள் கல்விச் சூழலில் எந்த வகையான வகுப்புவாதங்களையும் அங்கீகரிப்பதில்லை என்பதால்.. எல்லாரும் மாணவர்களே.. கல்விச் சமூகத்தவர்களே என்ற சிந்தனையை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதாலும்.... சொறீலங்காவில் உள்ள சிங்கள பெளத்த தேசிய வாத ஆதிக்கத்தின் தாக்கம் எவ்வளவு தீவிரமான ஊடுருவல்களை பலகலைக்கழகச் சூழலுக்குள் கொண்டுள்ளது என்பதை உணர்ந்திருப்பதாலும்.. இதனை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். 

நெடுக்ஸ், 

இந்த வாயால வடை சுடும் கதைகள் எல்லாம் வேண்டாம். 

நான் எழுதியதற்கு நேரடியான பதிலைத் தரலாமே ? 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  பல்கலை பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு Inbox

adminJuly 6, 2023

 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, “நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ். ஐ. எஸ் ) அழைக்கிறோம். யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் கேக்கிறோம்” என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தெரிவுக்கான காலம் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என்றும் இதனால் பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.
 

https://globaltamilnews.net/2023/192732/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.