Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து சிறைக்கைதிகளை மிரட்டிய விவகாரம் - லொகான் ரத்வத்தைக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுகளையும் சுமத்தலாம் என பரிந்துரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

12 JUN, 2023 | 10:18 AM
image
 

இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை  பதவி வகித்தவேளை வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறிநுழைந்து  சிறைக்கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில்  அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை  சுமத்தவேண்டும் என இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டம் உட்பட பல சட்டவிதிகளிற்கு ஏற்ப கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஆயுதம் ஏந்திய நிலையில் இரு சிறைச்சாலைகளிற்குள் அமைச்சர் நுழைவதற்கு அனுமதித்த சிறைக்காவலர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.

சிறைச்சாலைக்குள் நுழைபவர்கள் வெளியேறுபவர்களை கண்காணிப்பதற்காக சிசிடிவி கமராக்களை பொருத்தவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரியவருகின்றது.

2021 செப்டம்பர் 21ம் திகதி முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன தலைமையிலான குழுவொன்று இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டது.

இந்த குழு தனது அறிக்கைகளை  60 நாட்களிற்குள் பரிந்துரை செய்யவேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்தகுழுவின் பரிந்துரைகளைபார்வையிட்டுள்ள தெரிவித்துள்ள த மோர்னிங் லொகான் ரத்வத்தை இழைத்த குற்றங்கள் குறித்து நம்பகதன்மை மிக்க ஆதாரங்கள் உள்ளன  என தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திவெளியிட்டுள்ளது.

 

சிறைச்சாலையில் ஆயுதங்களை பயன்படுத்தியமை ( சிறைச்சாலை சட்டம்)ஆயுதங்களை பயன்படுத்தி குற்றமொன்றை இழைத்தமை நாட்டிற்கு அவதூறு ஏற்படுத்த முயன்றமை மக்கள் மத்தியில் அரசாங்கம் குறித்த விருப்பமின்மையை ஏற்படுத்தியமை கொலை முயற்சி மரணத்தை ஏற்படுத்தப்போவதாக அச்சுறுத்தியதன் மூலம் குற்றவியல் அச்சுறுத்தலில் ஈடுபட்டமை ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தி காயங்களை ஏற்படுத்தியமை உட்பட பல குற்றச்சாட்டுகளை லொகான் ரத்வத்தை புரிந்துள்ளார் என  தனிநபர் குழு தெரிவித்துள்ளது.

அரசாங்க விஜயமொன்றிற்கு ஏற்றதல்லாத லொகான் ரத்வத்தையின் பல நடவடிக்கைகள் குறித்தும் தனிநபர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.அவற்றுள்: வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்குச் சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட நேரங்களுக்கு வெளியேயும்இ சட்டப்பூர்வமற்ற நோக்கங்களுக்காகவும் செல்வது சிறைச்சாலைக்குச் செல்ல அதிகாரமில்லாத நபர்களுடன் செல்வது வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று இரண்டு பொதுமக்களுக்கு தூக்கு மேடையைக் காண்பிப்பது ஷார்ட்ஸ் டி-ஷர்ட் ஜீன்ஸ் ஸ்வெட்டர் செருப்புகள் போன்ற உடைகள் அவரது வருகை உத்தியோகபூர்வமற்றது என்பதைக் குறிக்கும் வகை அநுராதபுரம் சிறைச்சாலையில் குடிபோதையில் நடந்துகொள்வது சட்டப்படி தனக்கு இல்லாத அதிகாரங்களைக் கூறி கைதிகளை தவறாக வழிநடத்துவது 'உங்களை என்னால் மன்னிக்க முடியும்' என்று கைதிகளிடம் அவர் கூறிய வார்த்தைகள் மற்றும் 'உண்மையைச் சொல்லுங்கள்' எனக் கூறி குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி கைதிகளை மிரட்டுவது போன்றவை.

https://www.virakesari.lk/article/157496

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

சிறைச்சாலையில் குடிபோதையில் நடந்துகொள்வது சட்டப்படி தனக்கு இல்லாத அதிகாரங்களைக் கூறி கைதிகளை தவறாக வழிநடத்துவது 'உங்களை என்னால் மன்னிக்க முடியும்' என்று கைதிகளிடம் அவர் கூறிய வார்த்தைகள் மற்றும் 'உண்மையைச் சொல்லுங்கள்' எனக் கூறி குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி கைதிகளை மிரட்டுவது போன்றவை.

சாதாரணமாக சிறைச்சாலையில் தமிழ் அரசியற் கைதிகளுக்கு இதுதானே நடக்கிறது, இது ஒன்றும் புதிதில்லையே. இவருக்கு மட்டுமல்ல கைதிகளை அச்சுறுத்தி பொய் வாக்குமூலம் பெறுவோரையும் தாக்குவோரையும் அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஏராளன் said:

Published By: RAJEEBAN

12 JUN, 2023 | 10:18 AM
 
 

இராஜாங்க அமைச்சராக லொகான் ரத்வத்தை  பதவி வகித்தவேளை வெலிக்கடை அனுராதபுரம் சிறைச்சாலைகளிற்குள் அத்துமீறிநுழைந்து  சிறைக்கைதிகளை அச்சுறுத்தியமை தொடர்பில்  அவருக்கு எதிராக கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை  சுமத்தவேண்டும் என இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் குழு பரிந்துரை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

பொது தேர்தல் ஒன்றின்போது கண்டியில் 12 இட்கும் மேட்படட இளைஞர்கள் கொல்லப்பட்ட்து எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதை செய்தவர்களுக்கு ஆயுதத்தை காட்டி கொலை அச்சுறுத்தல் விடுவது ஒன்றும் பெரிய  விடயமே இல்லை. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதட்கு பரிந்துரை வழங்கி இருந்தாலும், நடைமுறையில் அப்படி நடக்குமா, இருக்குமா என்பதை சொல்ல முடியாது . 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் தமிழரை யாரும் எதுவும் செய்யலாம், கேட்டுகேள்வியில்லை என்பதே யதார்த்தம். அதனாலேயே ஒவ்வொரு சிங்களவரும் தங்களுக்கென்றொரு சட்டத்தை கையிலெடுத்திக்கொண்டு எம்மை தண்டிப்பதும், அதை மற்றவர்கள் நிஞாயப்படுத்துவதும் தொடர்கிறது. தட்டிக்கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லொகான் ரத்வத்தைக்கு எதிராக பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுக்குமா? சாகர தெரிவிப்பது என்ன?

Published By: RAJEEBAN

13 JUN, 2023 | 11:48 AM
image
 

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை  எடுக்கப்போவதில்லைஎன  ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் இராஜாங்க அமைச்சர் 2021ம் ஆண்டு பலவந்தமாக நுழைந்த விதம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆணைக்குழு  கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டு;;ம் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே  நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றச்சாட்டுகள் நிருபி;க்கப்படும்வரை  இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுஜனபெரமுன இராஜாங்கஅமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என மோர்னிங் கட்சியின் பொதுச்செயலாளர் சாகரகாரியவசத்திடம் வினவியவேளை பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால் கட்சி அவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் நிலையில்இல்லை என சாகரகாரியவசம்தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனரா என்பது பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தாவிட்டால் அல்லது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள்  பதியப்படாவிட்டால் கட்சியால் எதனையும் செய்ய முடியாது என சாகரகாரியவசம் தெரிவித்துள்ளார்.

விசாரணை அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்துமாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக எவராலும்  நடவடிக்கை எடுக்க முடியாது கட்சி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த உறுப்பினர் கட்சிக்கு எதிராக  சட்டநடவடிக்கை எடுக்கலாம் எனவும் பொதுஜனபெரமுனவின்  செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையிருக்கவேண்டும்,இராஜாங்கஅமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்  நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள்நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157595

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள்நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றமே தண்டனையையும் வழங்கும், பின் நீங்கள் எதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்? நீதிமன்றம் கொடுத்த தண்டனையையே மாற்றியமைத்தவர்கள் இவர்கள், நடவடிக்கை எடுத்த மாதிரித்தான். பாதிக்கப்பட்டது தமிழர்தானே,  பாராட்டுவார்களேயொழிய தண்டனையெல்லாம் கிடையாது. அப்படி ஓர் நிலை இருந்திருந்தால் இந்த அமைச்சர் அவ்வாறு நடந்திருப்பாரா? இதுவரையில் தமிழரை தாக்கிய குற்றத்திற்காக யாராவது தண்டிக்கப்படுள்ளார்களா? அவ்வாறானதொரு  வரலாறு இலங்கையில் உண்டா? கஜேந்திர குமார் பொன்னம்பலம் விடயத்தில் சரத் வீரசேகரவின் கருத்துக்களை அவதானித்தீர்களா? இந்த நாடு அழிய எது காரணமாயிருந்ததோ, எவர் அதை வளர்த்தார்களோ, அவர்களோடு அவையும் அழிந்தாலே நாடு உருப்படும்.  

  • கருத்துக்கள உறவுகள்

பொதுஜன பெரமுனவவின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை!

லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன!

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு அனுராதபுரம் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்குள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை பலவந்தமாக நுழைந்த விதம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட தனிநபர் ஆணைக்குழு, அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் குற்றச்சாட்டுகள் நிருபி;க்கப்படும்வரை இராஜாங்க அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுஜன பெரமுன இராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திடம் வினவிய போது, பல நடைமுறை பிரச்சினைகள் உள்ளதால் கட்சி அவ்வாறான நடவடிக்கையை எடுக்கும் நிலையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் ஏதாவது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனரா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தாவிட்டால் அல்லது உத்தியோகபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதியப்படாவிட்டால் கட்சியால் எதனையும் செய்ய முடியாது எனவும் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விசாரணை அறிக்கையொன்றை அடிப்படையாக வைத்து மாத்திரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக எவராலும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பதோடு கட்சி அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அந்த உறுப்பினர் கட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இராஜாங்க அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சட்டரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் அவை நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்பட்டால் நாங்கள் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1334628

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், தமிழரை நினைத்த நேரத்தில் காரணமெதுவுமில்லாமல் சந்தேகத்தின் பேரில்  நினைத்த நேரத்தில் கைது செய்து வருடக்கணக்கில் சிறையில் அடைப்பீர்கள். "மெலியாரை வலியார் வருத்தினால் வலியாரை தெய்வம் தண்டிக்கும்." அதற்கான காலம் நெருங்கி விட்டது. எங்களுக்கு எதிராக எதை ஏவி வேடிக்கை பார்த்து ரசித்தார்களோ அது இப்போது அவர்களுக்கெதிராக திரும்ப ஆரம்பித்துள்ளது, அதை தெரிந்து கொள்ளாமல் இன்னும் சிலர் கொக்கரிப்பதும், அடாவடியை தொடர்வதுமாக இருக்கிறார்கள். புத்தர் வசனத்தில் சொல்வதானால்; கரும வினை நாட்டை சுற்றிப்பிடிக்க ஆரம்பிக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.