Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை அரசாங்கத்துள் குழப்பமா? ஜனாதிபதி VS SLPP!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்துள் குழப்பமா? ஜனாதிபதி VS SLPP!

written by adminJune 13, 2023
Ranil-SLPP.jpg?fit=720%2C480&ssl=1

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நேற்று (12.06.23) அழைப்பு விடுத்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பை மாவட்ட தலைவர்கள் புறக்கணித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகின்றன.

ஜனாதிபதி இன்று ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மாவட்ட தலைவர்களுடன் சந்திப்பொன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆறுமணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பமானதாகவும் எனினும் ஒருமணிநேரத்தின் பின்னர் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேறினர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பில் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ளவேண்டியதில்லை என பொதுஜனபெரமுன தீர்மானித்தாக தகவல்கள் வெளியாகின்றன.

ஜனாதிபதி கட்சியின் மாவட்ட தலைவர்களை அழைத்தமை குறித்து பொதுஜனபெரமுன வட்டாரங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் மூலம் கட்சியின் மாவட்ட தலைவர்களிற்கு அழைப்பு விடுப்பதை ஏற்கமுடியாது என கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியினால் மேற்படி கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

https://globaltamilnews.net/2023/191833/

 

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் – மஹிந்தவிற்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் இடம்பெறவில்லை – ஐ.தே.க.

ஜனாதிபதி – பொதுஜன பெரமுன சந்திப்பு : மஹிந்த புறக்கணிப்பு?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமிடையிலான சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் மேற்படி கலந்துரையாடலிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுடன் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

https://athavannews.com/2023/1334502

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பிரச்சினை என்னவென்றால், SLPP தங்களது ஊழல்வாதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்படி கெடுகிறது. ரணில் அதட்கு தயாராக இல்லை. இதுதான் முக்கிய பிரச்சினை.

மற்றப்படி ரணில் பாருளமன்றத்தை களைத்து விடுவாரோ என்ற பயமுமிருக்கிற படியால் அவர்கள் பிரச்சினையை ஏட்படுத்த வாய்ப்பில்லை. அப்படி கலைத்தால் அநேகமான உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

இங்கு பிரச்சினை என்னவென்றால், SLPP தங்களது ஊழல்வாதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும்படி கெடுகிறது. ரணில் அதட்கு தயாராக இல்லை. இதுதான் முக்கிய பிரச்சினை.

மற்றப்படி ரணில் பாருளமன்றத்தை களைத்து விடுவாரோ என்ற பயமுமிருக்கிற படியால் அவர்கள் பிரச்சினையை ஏட்படுத்த வாய்ப்பில்லை. அப்படி கலைத்தால் அநேகமான உறுப்பினர்கள் தங்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும். 

கோத்தா ராஜபக்ச தனது ஜனாதிபதி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத ஒருவர்.
சட்டப் படி… முழுமையான ஜனாதிபதி காலத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி
ஓருவருக்கே… ஓய்வூதியம், அரச இல்லம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும் என அறிந்தேன்.

அப்படி இருந்தும் கோத்தாவுக்காக சட்டத்தை வளைக்கத் தெரிந்த அரசியல் வாதிகளுக்கு,
பாராளுமன்றத்தை கலைத்து இடையில் பதவி போனாலும்… தங்கள் ஓய்வூதியத்தையும்
முழுமையாக எடுக்க அல்லது கொடுக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள் தானே.
 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

கோத்தா ராஜபக்ச தனது ஜனாதிபதி காலத்தை முழுமையாக நிறைவு செய்யாத ஒருவர்.
சட்டப் படி… முழுமையான ஜனாதிபதி காலத்தை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி
ஓருவருக்கே… ஓய்வூதியம், அரச இல்லம் எல்லாம் கொடுக்கப் பட வேண்டும் என அறிந்தேன்.

அப்படி இருந்தும் கோத்தாவுக்காக சட்டத்தை வளைக்கத் தெரிந்த அரசியல் வாதிகளுக்கு,
பாராளுமன்றத்தை கலைத்து இடையில் பதவி போனாலும்… தங்கள் ஓய்வூதியத்தையும்
முழுமையாக எடுக்க அல்லது கொடுக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள் தானே.
 

ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் முழுமையாக நிறைவு செய்யா விடடாலும் கோதாவுக்கு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ரணில் ஜனாதிபதியாக வருவதட்கு முன்னரே பேச்சு வார்த்தையில் இவைஉள்ளடக்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு காரணங்களாலும் இவருக்கு சலுகைகள் வழங்க வேண்டி உள்ளது. ரணசிங்க பிரேமதாச உயிரிழப்புக்கு பின்னர் அவரது மனைவிக்கும், பின்னர் வந்த ஜனாதிபதிக்கும் இந்த வசதிகள் வழங்கப்பட்ட்து. 

பாராளுமன்ற உறுப்பினர்களை பொறுத்த வரையில் இனிமேல் பத்து வருடங்கள் உறுப்புரிமை கொண்டிருந்தால் மட்டுமே ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஒரு யோசனை முன்மொழியப்பட்ட்து. எனவே அப்படி வழங்குவார்கள் என்று கூற முடியாது. அதனால்தான் நான்கரை வருடம் வரைக்கும் பாராளுமன்றத்தை கலைக்க கூடாது என்ற நிபந்தனையுடன் இவருக்கு ஜனாதிபதி பதவி வழங்கப்பட்ட்து.

இருந்தாலும், அரசியலில் எதுவும் நடக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் : பொதுஜன பெரமுன கோரிக்கை?

உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் : பொதுஜன பெரமுன கோரிக்கை?

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிட்டுள்ளது.

ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நாட்டினது நெருக்கடி நிலைமைகளின்போது கட்சிகளின் பங்களிப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உள்விவகாரங்களுடன் தொடர்புபட்ட விடயங்களில் தலையிடக்;கூடாது என பொதுஜனபெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மாதமொருமுறை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்திப்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

https://athavannews.com/2023/1334910

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.