Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

566 கி.மீ. தூரத்தை 3 நாட்களில் நடந்து சென்று சாதனை படைக்கவுள்ள பொகவந்தலாவை இரட்டையர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

14 JUN, 2023 | 04:52 PM
image
 

யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்தே சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் இன்று வவுனியாவை வந்தடைந்தனர்.

பொகவந்தலாவை, கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த இரட்டையர் இன்று (14) அதிகாலை 4 மணியளவில் தமது சாதனை பயணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து, 9 மணித்தியாலங்களில், பிற்பகல் 1 மணியளவில் வவுனியா நகரை வந்தடைந்தோடு, மீண்டும் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.

IMG-20230614-WA0011.jpg

இரட்டையரான ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை படைக்கவுள்ளனர்.

இதேவேளை, இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோ மீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தனர். 

மேலும், இந்த இரட்டையரில் தயாபரன் ஒரு நடனக்கலைஞர் என்பதும், அவர் தமிழகத்தின் பிரபல நடிகரான ராகவா லோரன்ஸிடம் நடனம் கற்றவர் என்பதும், அவர் முன்னதாக இலங்கையில் தொடர்ச்சியாக 10 நாட்கள் இடைவிடாமல் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20230614-WA0012.jpg

https://www.virakesari.lk/article/157716

சாதாரண வேக நடை மணித்தியாலத்துக்கு 8 கிமீ

குறுகிய தூர வேக நடை உலக சாதனை 5 கிமீ - சுமார் மணித்தியாலத்துக்கு 16 கிமீ வேகம்.

8 கிமீ வேகத்தில் நித்திரை ஓய்வு இன்றி நடந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான 140 கிமீ தூரத்தை 9 மணித்தியாலத்தில் கடந்துள்ளனர். மணிக்கு 15.5 கிமீ வேகம். 😳

ஏதோ சுற்றுகிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, இணையவன் said:

சாதாரண வேக நடை மணித்தியாலத்துக்கு 8 கிமீ

குறுகிய தூர வேக நடை உலக சாதனை 5 கிமீ - சுமார் மணித்தியாலத்துக்கு 16 கிமீ வேகம்.

8 கிமீ வேகத்தில் நித்திரை ஓய்வு இன்றி நடந்தால்தான் இலக்கை அடைய முடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வரையான 140 கிமீ தூரத்தை 9 மணித்தியாலத்தில் கடந்துள்ளனர். மணிக்கு 15.5 கிமீ வேகம். 😳

ஏதோ சுற்றுகிறார்கள். 🤣

நானும் அதையே தான் நினைத்தேன்.  அங்கத்தையே வெயில், பாதை நிலவரத்துக்கு 5km /hour நடக்கிறதே கடினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். முதல் காலி வரையிலான பொகவந்தலாவை இரட்டையரின் சாதனை நடைப்பயணம் : பொலிஸாரின் இடையூறுகளை கடந்து கொழும்பை அடைந்தனர்!

Published By: NANTHINI

15 JUN, 2023 | 03:35 PM
image
 

யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை 566 கிலோ மீற்றர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து சென்று, சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர், தங்களது சாதனை நடைப்பயணத்தை நேற்று (14) புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பித்ததை தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்றைய தினம் (15) தற்போது கொழும்பு காலி முகத்திடலை அடைந்துள்ளனர்.  

இந்நிலையில், அவர்கள் இதுவரை 350 கிலோ மீற்றரை 32 மணிநேரங்களில் கடந்து வந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இந்த சாதனைக்கான சான்றிதழ்களும் இரட்டையருக்கு வழங்கப்பட்டுள்ளது.   

wo.jpg

அதேவேளை, இந்த இரட்டையர் நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்தில் தங்களது நடைபயணத்தை ஆரம்பிக்கவிருந்த வேளையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரால் தகாத முறையில் நடத்தப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பலர் இவ்விளம் இரட்டையருக்கு ஆதரவும், இவர்களது சாதனை முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்திய பொலிஸாருக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

23.jpg

பொகவந்தலாவை, கொட்டியாக்கலை பகுதியை  சேர்ந்த இரட்டையரான ஆர்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் ஆர்.ஏ. தயாபரன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரையான 566 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து சென்று, உலக சாதனை படைப்பதற்காக நேற்று யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக பயணத்தை ஆரம்பிக்க தயாராயிருந்தனர். 

இவ்விரு இரட்டையரின் உலக சாதனைக்கான நடைப்பயணத்துக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம்  அனுமதி கடிதம் வழங்கியிருந்தது. அத்தோடு, இவர்களது நடைப்பயண முயற்சிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னதாக தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடைபயணம் மேற்கொள்ளவிருந்த இரட்டையரோடு, அவர்களை ஊக்கப்படுத்தச் சென்ற பொகவந்தலாவை, நுவரெலியாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் சிலரும் அங்கே நிற்க, அப்போது பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் குறித்த இளைஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சட்டையை பிடித்து இழுத்து, அங்கிருந்து துரத்த எத்தனித்துள்ளனர். 

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் மதுபானம் அருந்தியிருந்ததாகவும், இளைஞர்களிடம்  பொலிஸார் ஜாதி, இனம் குறித்தும் வீண் வாக்குவாதம் செய்ததாகவும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். 

பொலிஸார் இருவருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, நீண்ட நேரத்துக்குப் பின்னர், பெரும் போராட்டத்தை கடந்து, சரியாக அதிகாலை 4 மணிக்கு இரட்டையரின் நடைபயணம் ஆரம்பமானது. 

இவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்துக்கு சென்று, அங்கிருந்து கொழும்பை அடைந்துள்ள இவர்கள், காலி நோக்கிய தங்களது நடைபயணத்தை தொடர்ந்து, நாளை 16ஆம் திகதி காலியில் தங்களது பயணத்தை நிறைவு செய்யவுள்ளனர். 

கடந்த காலத்தில் இவ்விருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து காலி வரையிலான 566 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் நடந்தும், புத்தளத்தில் இருந்து சீதுவை வரையிலான 147 கிலோ மீட்டர் தூரத்தினை வெறுமனே 6 மணித்தியாலங்களில் நடந்து பயணித்தும், கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோ மீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சென்றடைந்தும் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/157768

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.