Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் ; ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2023 | 04:12 PM
image
 

(எம்.நியூட்டன்)

தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் என யாழ்ப்பாணம் ஏழாலை மக்கள்  சுற்றுச் சூழல்  அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தொலைத் தொடர்பு கோபுரம் இவ்விடத்தில் அமைக்க வேண்டாம். ஏழாலை தெற்கு  புளியங் கிணற்றடி  வீதியில் சனநெருக்கம் அதிகமாக உள்ள இடத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதை நாம் விரும்பவில்லை. இந்தச் செயற்பாடானது எமது பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்பட்டு வருகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது அவை சமூக நலன்களை பாதிக்காதவாறு மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு சமூகத்தில் இருப்பானது ஆரோக்கியமான சுகாதார வசதிகளிலேயே தங்கியுள்ளது. அப்படி இருக்கும்போது எமது பகுதி மக்களின் சுகாதார நலன்களை பாதிக்கும் வகையில் தூர நோக்கம் இன்றி தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுகின்றமை எமது மக்கள் மீது பாதிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மிகுந்த மன வேதனை ஏற்படுத்துகின்றது.

இது மட்டுமின்றி பின்வரும் காரணங்களால் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதால் பல தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை அறிய தருகிறோம்.  இப்பகுதி சன நெருக்கடி கூடிய பகுதியாகும். இங்குள்ள பெரும்பாலானவர்கள் தொற்று நோய்களுக்கான சிகிச்சைகளை பெற்று வருகிறார்கள், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். 100 மீட்டர் தூரத்துக்கு 2 ஆலயங்களும் மக்கள் கூடுகின்ற வர்த்தகநிலையங்களும் காணப்படுகின்றன. இரண்டு பால் பண்ணைகளும் இறைச்சி விற்பனை  கடைகளும் அமைந்துள்ளன. எனவே எமது கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை முன்வைக்கின்றோம் என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/158169

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம் !

01 JUL, 2023 | 11:54 AM
image
 

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.   

 

PHOTO-2023-07-01-09-40-52.jpg 

அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் சனிக்கிழமை (01) காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்பட்டது. 

அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்கள், குழந்தைகள் உட்படப் பெருமளவானோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.      

 

PHOTO-2023-07-01-09-40-56.jpg

போராட்டம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

“மக்களுக்கு மனநோய் வேண்டாம்”, “மின்காந்த அலை, காற்றுக்கு நஞ்சு”, “மக்களை உடல், உள ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள்”, “எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்”, “நகர்த்து நகர்த்து தொடர்பாடல் கோபுரத்தை நகர்த்து” போன்ற சுலோகங்கள்  அடங்கிய பாதாதைகளைத் தாங்கியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

PHOTO-2023-07-01-09-41-01.jpg 

குறித்த பகுதியில் நெருக்கமாகக் குடிமனைகளில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நோயாளர்களும் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனாலேயே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.  

தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம் ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அப்பகுதியிலுள்ள குடியிருப்பாளர்களால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டுவரும் காணியின் வாயிலில் மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் நெருக்கமாகக் குடிமனைகள் காணப்படுவதனால், பொது மக்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் தொலைத் தொடர்புக் கோபுரத்தை இடமாற்றுமாறு அதனை அமைத்து வரும் நிறுவனத்திடம் கோரியுள்ளனர்.

அப்பணிகளை நிறுத்துமாறு சுன்னாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனாலேயே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

0-3-1-600x338.jpg

https://athavannews.com/2023/1337053

  • இணையவன் changed the title to தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வேண்டாம் ; ஏழாலை மக்கள் சுற்றுச் சூழல் அதிகார சபை பணிப்பாளருக்கு கடித மூலம் கோரிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.