Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணையிலும் பார்க்க பணத்தைப் பெரிதாக மதிக்கும் சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணையிலும் பார்க்க பணத்தைப் பெரிதாக மதிக்கும் சீனா

[14 - September - 2007] [Font Size - A - A - A]

-அன்ரோனேற்றா பெஸ்லோவா-

பெய்ஜிங்,

2008 ஆம் வருட ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் சீனா, வருடாந்தம் தூக்கிலிடப்படுவோர் தொகையைக் குறைக்க வேண்டுமென்ற அழுத்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதன் மூலம் கொலைக் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை ஆயுட்கால சிறைத் தண்டனையாக குறைப்பதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், இந்த முயற்சி குறித்து எதிர் வாதங்கள் எழுந்துள்ளன.

தென் மாகாணமான குவாங்தோங்கில் கொலைச் சம்வங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பணம் வழங்கியதுடன் கொலைக் குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட பல சம்பவங்கள் இந்த வருடம் முற்பகுதியில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன. கரையோர மாகாணங்களான சாங்தோங், சேஜியாங் ஆகியவற்றிலும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிவிக்கப்படுகின்றது.

இந்த உண்மை, உலகின் ஏனைய சகல நாடுகளுடனும் ஒப்பிடுகையில் வருடாந்தம் அதிகமானோர் தூக்கிலிடப்படுவதாக குற்றம் சாட்டப்படும் சீனாவில், மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுவது குறித்து இணையத்தள அரங்குகளில் தீவிர விவாதங்களை எழுப்பியுள்ளது.

சீனாவின் மரண தண்டனை நடைமுறையை மறு பரிசீல னை செய்ய வேண்டுமென்ற உத்வேகம் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ள அதேவேளை, மரணதண்டனைக் குற்றச் செயல்களைத் தடுக்கக் கூடிய ஒரு முக்கிய சாதனம் என்ற எண்ணம் பல சீனர்கள் மத்தியில் தொடர்ந்தும் நிலவுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதனால் குற்றவாளிகளின் தலைவிதி அவர்களின் பணபலத்தில்தான் தங்கியுள்ளதாக தற்போது கருதப்படுகிறது என்று பொது விவாதத்தில் கலந்துகொண்ட தேசிய வாதிகளுக்கான தென்மேற்குப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியரான லேலான் கவலை தெரிவித்தார். நீதியைப் புரிந்து கொள்ளும் பொதுமக்களின் நிலைப்பாட்டை பாதிக்கச் செய்வதன் மூலம் சட்டத்தின் தார்ப்பரியம் அழிக்கப்படுகிறது.

இது சட்டத்தை அவமதிப்பதாகும் என்று சென்சென் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிற்சாலை ஊழியரான கூ ஷூ தெரிவித்தார். பணத்தினால் ஒரு உயிரை வாங்கிவிட முடியுமா? பணத்தினால் எதனை வாங்க முடியாது? என்று அவர் வினாவினார். ஆனால், சில சட்ட நிபுணர்கள் பொது மன்னிப்பு, விவகாரம், சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு அறிகுறி என்று கூறுகிறார்.

மிகக் குறைந்த அளவிலேயே மரணதண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவைகளும் புத்திசாலித்தனமாக வழங்கப்பட வேண்டும் என்றும் அதி உயர் மக்கள் மன்றம் மிக அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த நடைமுறைகள் உள்ளன என்று ஷங்காய் குணங்மாவோ சட்ட நிறுவன வழக்கறிஞர் `சைனா டெய்லி' பத்திரிகையின் இணையத்தளத்தில் அண்மையில் எழுதியிருந்தார். பச்சாத்தாபம் இருப்பின் குற்றவாளியின் நடத்தை அவர் தூக்கிலிட வேண்டியவர் அல்ல என்பதையும் எடுத்துரைத்தால் ஒரு உயிரைப் போக்கவேண்டிய அவசியம் என்ன? என்றும் ஜியாங் வினாவினார்.

சட்ட அதிகாரிகள் எதிர்நோக்கிய இக்கட்டான நிலைக்கு மார்ச் மாத வார இறுதிப் பத்திரிகை ஒன்றில் வெளியான குவாங்தோங் மாகாணத்தின் டொங்குவான் நகரைச் சேர்ந்த டெங் றோங்பென் என்ற வயோதிபப் பெண்ணின் வழக்கு ஒரு உதாரணமாகும்.

ஐந்துபேர் கொண்ட குடும்பத்தின் ஒரேயொரு உழைப்பாளி வயோதிபப் பெண் டெங்கின் ஒரேயொரு மகன் 2006 மே மாதத்தில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இவர் தனது குடும்பவீட்டில் மூன்று புலம்பெயர் தொழிலாளர்கள் கொள்ளையடிப்பதை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.குற்றவாளிகள் மூவருக்கும் மரணதன்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், ஆவணங்களைப் பொறுத்தவரையில் நீதி வழங்கப்பட்ட போதிலும் டெங்கின் குடும்பம் நிர்க்கதியானது. தனது பேரப்பிள்ளைகளை பாலர் வகுப்புக்கு அனுப்பவோ அல்லது தனது மகள் பிள்ளைகளை வளர்த்து பராமரிப்பதற்கு உதவவோ டெங்கினால் முடியவில்லை. டெங் குடும்பத்தின் பரிதாப நிலை காரணமாக அவருக்கும் குற்றவாளிகளுக்குமிடையே பேரப் பேச்சுக்களை நடத்துவதற்கும் குற்றவாளிகள் மீதான தண்டனையை குறைத்து அவர்களிடமிருந்து சிவில் இழப்புத் தொகை ஒன்றை டெங்கிற்கு பெற்றுக் கொடுப்பதற்கும் நீதிமன்றம் முன்வந்தது.

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தின் இணக்கத்துடனேயே எதிரிகள் மீது தண்டனைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டது என்றும் இதனால் பணத்தைக்கொண்டு குற்றச் செயல்களை ஊக்கிவிப்பதெனக் கூறமுடியாதென்றும் தெரிவித்த போங்குவா நீதிசேவை அதிகாரிகள் பொது மன்னிப்புக்காக பணம் என்ற நடைமுறை ஏற்றுக்கொள்ளக் கூடியதே என்றும் வாதாடினார்கள். ஒரு சீரான இழப்பீட்டுத்திட்டம் ஒன்றில்லாத இவ்வேளையில் கொலைசெய்யப்படுவோரின் குடும்பங்களுக்கு கிடைக்கும் இழப்பீட்டுத் தொகை பாதகமான சமூக உணர்வுகளிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கும் பல மேன்முறையீடுகளை தவிர்ப்பதற்கும் மன நிம்மதியை ஏற்படுத்துவதற்கும் உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.

எமது குற்றவியல் வழக்குகளில் 90 சதவீதமானவற்றில் புலம்பெயர் தொழிலாளர்களே சம்பந்தப்பட்டுள்ளார்கள். மேலும், குற்றத்தை புரிவோர், குற்றத்தினால் பாதிக்கப்படுவோர் ஆகிய இரு சாராருமே மிகவும் வறியவர்களாவர் என்று டோங்குவாங் இடைத்தர மக்கள் மன்றத்தை சேர்ந்த நீதிச் சேவை அதிகாரி வோங் சுவான்கூயி `சதேண்' வாரப் பத்திரிகைக்கு தெரிவித்தார்.

எனினும், இம் நடைமுறையை வெளியிடுவதன் மூலம் விரும்பியதுக்கு மாறான பலனே கிடைக்கிறது. இதனால், சீனாவின் வருமான ஏற்றத் தாழ்வு காரணமாக சமுதாயத்தின் மத்தியில் ஆழ்ந்த பிளவுகள் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் சமூக வேற்றுமைகள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.

கடந்த 30 வருடகால பொருளாதார நவீனமயக் கொள்கையால் நகர்புறவாசிகள் பயனடைந்துள்ள அதேவேளை கிராமபுற மக்கள் சீன அபிவிருத்தியின் அனுகூலங்களை கிடைக்கப் பெறாதவர்களாகவும் நகரவாசிகள்போல் சம்பாதிக்க முடியாதவர்களாகவும் போதிய கல்வி, சுகாதார வசதிகளாற்றவர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கான இழப்பீட்டு பணத்தை பெற்றுக் கொள்வதைத் தவிர, மாற்று வழி எதுவுமில்லை என்று தம்மை சட்ட ஆட்சி என்று கூறிக் கொள்ளும் இணையத்தள எழுத்தாளர் ஒருவர், சீனாவின் மிகப் பிரபல்யம் வாய்ந்த செய்தி ஸ்தாபனமான www.sina.com என்ற இணையத்தளத்தில் எழுதியிருந்தார். இவர்கள் இணக்கப்பாட்டுக்கு வருமாறு ஓரளவுக்கு வலிந்திழுக்கப்பட்டவர்களே என்றும் அவர் கூறினார். மேலும் , மரணதண்டனைநிறைவேற்றங்களை நாடு தற்காலிகமாக குறைத்து வருகின்ற இவ்வேளையில் சட்ட நிபுணர்கள் மேலும் குழப்பங்களையே எதிர்நோக்குகின்றார்கள்.

சீன மக்கள் பாரம்பரியமாக கடும் தண்டனைகளுக்கு பழக்கப்பட்டவர்கள். பாரதூரமான குற்றச்செயல்களுக்கு மரணதண்டனையே உரிய தண்டனை, என்ற நம்பிக்கையை கொண்டவர்கள் என்று பெய்ஜிங் ஒய்ங்குவா பல்கலைகழக சட்ட பேராசிரியர் சூ.குவாங்குவான் தெரிவித்தார்.

மேலும் விசாரணை அதிகாரிகளால் வெளிக்காட்டப்படாத பல தவறான தண்டனைகள் அம்பலமானதை அடுத்து, மக்களின் எதிர்ப்புகளும் இந்த நடைமுறையை மறுபரிசீலனை செய்யுமாறு அழுத்தங்களும் எழுந்துள்ளன.

நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட மரணதண்டனைகளின் எண்ணிக்கையை, அரச இரகசியமாக சீன அதிகாரிகள் பேணுகின்றனர். ஆனால், இந்த தொகை வருடமொன்றில் 10,000 ஆக இருக்கலாம் என்று சில சட்ட நிபுணர்கள் நம்புகிறார்கள். ஊழல், வரி செலுத்தாமல் தப்புதல் போன்றவை உட்பட 60,000 குற்றச் செயல்களுக்கு தண்டனை மரணதண்டனையே ஆகும்.

ஐ.பி.எஸ்.

http://www.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.