Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்குரல் எழுப்ப வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக சக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்குரல் எழுப்ப வேண்டும்

adminJuly 10, 2023
doug.jpg?fit=720%2C450&ssl=1

இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின்  சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் – தமிழக மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சின் ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே ஒரு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி,  இலங்கை கடற்படையினர் அல்ல ,நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி எல்லை தாண்டி சட்ட விரோத தொழில் முறையான இழுவைமடித் தொழிலை மேற்கொண்டிருந்த நிலையில், 15 தமிழக கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழக ஊடகங்களில் வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற் படையினர் அத்துமீறல்களில் ஈடுபடுவதாக தமிழக ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் தவறானவை எனவும், இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்களின்  வற்புறுத்தல்கள் காரணமாகவே எல்லை தாண்டி வருகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்ப்படுவதாகவும் தெரிவித்துள்ளதுள்ளார்.

மேலும், குறித்த கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய தார்மீக கடமையை வடக்கு கிழக்கின்  சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும், தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இந்திய மத்திய – மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2023/192861/

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இழுவைப் படகுகளை தடைசெய்ய தமிழ் கட்சிகள் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் - மீனவ அமைப்புக்கள் கோரிக்கை

Published By: VISHNU

10 JUL, 2023 | 04:50 PM
image
 

இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எல்லை தாண்டிய  இந்திய இழுவைப் படகுகளை தடை செய்யுமாறு தமிழ் கட்சிகள்  ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என யாழ். மாவட்ட கடற்தொழில் சங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்தன.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்களை இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றபோது அதில் பேசப்பட்ட விடயங்களை ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டோம்.

அதில் குறிப்பிடும் போது 13 வது திருத்தச் சட்டம் தமிழரின் இனப் பிரச்சனை மற்றும் முல்லத்தீவு  புதைகுழி விவகாரம் தொடர்பில் பேசப்பட்டது.

நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா செல்ல உள்ள நிலையில் பதின்மூன்று தொடர்பில் இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகள் கடிதம் ஒன்றை அனுப்ப உள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

மீனவ சங்கங்களாகிய நாம் ஒன்றை கேட்க விரும்புகிறோம் இந்திய எல்லை தாண்டிய மீன்பிடி தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் எமது மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் எமது மீனவர் பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய இந்தியா இழவைப் படகுகளை தடை செய்வது தொடர்பில் இந்திய பிரதமருக்கு விதமான கடிதங்களும் அனுப்புவதாகத் தெரியவில்லை.

தமிழ் கட்சிகளிடம் நாம் ஒன்றைக் கேட்க விரும்புகிறோம் எமது மீனவ சமூகம் தொடர்ச்சியாக இந்திய இழுவைப்படக்குகளால் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியா இழுவைப்டகுகளை கடற்படை கைது செய்துவரும்  நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ச்சியாக எல்லை தாண்டிய இந்திய ரோலர்களை கைது செய்ய வேண்டும்.

இன் நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சட்டவிரோத எல்லை தாண்டிய இந்தியா ரோலர்களை கைது செய்வதற்கான அழுத்தங்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படைக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் ஆவதற்கு போதிய கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தமிழ் கட்சிகள் ஓரணியில் நின்று எமது பிரச்சனை தொடர்பில் இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ். மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்க  சமாசங்களின் சம்மேளன உப தலைவர்  அந்தோணிப் பிள்ளை பிரான்சிஸ் ரட்ண குமார் மற்றும் வடமராட்சி வடக்கு கடை தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தின் தலைவர்  செல்லத்துரை நற்குணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/159674

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா தமிழக அரசுடன் பேசி  இரு சுமூகமான தீர்வை எடுக்கலாம் அல்லவா. தமிழக ஊடகங்களுக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்தலாம். (அவர்கள் வேண்டும் என்று பொய்யை சொன்னாலும்)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழதமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காக திட்டமிட்டே தமிழக அரசியல்வாதிகள் ஊடகங்கள் செயற்படுவதாகவே தெரிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.