Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமனம் !

பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்!

இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை மக்களிற்கே உரிய நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்காரணமாக இலங்கையால் அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கி செல்வது குறித்து சிந்திக்க முடிகின்றது எனவும் தற்போதைய சூழ்நிலையை உருவாகுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அற்புதமான தீவுக்கான மகத்தான வாய்ப்புகளை ஆராயும் தருணம் தற்போது வந்துள்ளது என்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன அதிக திறன் கொண்ட துறைகளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1338484

  • கருத்துக்கள உறவுகள்

பலர் எதிர்பார்த்தபடி பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்காதது ஏன் - சொல்ஹெய்ம் விளக்கம்

Published By: RAJEEBAN

10 JUL, 2023 | 12:29 PM
image
 

இலங்கை மக்களிற்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன்  காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர்  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 

இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த வருடம் அசாதாரண பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவேளை அது இலங்கை மக்களின் முதுகெலும்பை முறிக்கும் என பலர் நினைத்தனர் என  எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை மக்களிற்கே உரிய மிகவும்  நெருக்கடியிலிருந்து மீளும் திறன் காரணமாக இது சாத்தியமாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதன்காரணமாக இலங்கையால் அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கி செல்வது குறித்து சிந்திக்க முடிகின்றது எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலை உருவாகுவதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அற்புதமான தீவுக்கான மகத்தான வாய்ப்புகளை ஆராயும் தருணம் தற்போது வந்துள்ளது மீள்புதுப்பிக்கத்தக்க சக்திதுறைமற்றும் சுற்றுலாத்துறை ஆகியன அதிக திறன் கொண்ட துறைகளாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/159649

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மசாலாத்தோசையும் ..மசாலாவடையும் ...11..12 வயதுக்காராலை படச்சிருக்கினம் போலை கிடக்கு...என்சோய் எரிக்கு..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பச்சைப் பொய்யை அவிழ்த்து  ஏதோ சொகுசு காணப்போகிறார். உலகமே பாத்து வியந்ததை இவர் தவற விட்டிருப்பாரோ?

அப்போ, ஏன் கோத்தா நாட்டை விட்டு தப்பியோடினார்,ரணில் எவ்வாறு ஆட்சியேறினாரென நினைக்கிறார் இவர்? 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

 

பொருளாதார நெருக்கடி இலங்கை மக்களைப் பாதிக்கவில்லை : எரிக் சொல்ஹெய்ம்!

இலங்கை மக்களுக்கே உரிய மிக கடினமான நெருக்கடிகளில் இருந்து மீளும்திறன் காரணமாக கடந்த வருடத்தின் பொருளாதார நெருக்கடி இலங்கையின் முதுகெலும்பை முறிக்கவில்லை என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

 

எதோ LTTE இனருக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகராக இருந்ததால் இலங்கையின் எல்லா பிரச்சினைகளையும் தனக்கு அத்துப்படி என்று இவர் நினைக்கிறார்.

இங்கு நடப்பது அவருக்கு தெரியவில்லை. வாங்கின  கடன் கொடுப்பதை நிறுத்தி விடடார்கள். மேலும் கடன் வாங்குகிறார்கள். உணவுப்பொருட்களின் விலைகள் தாறுமாறாக இருக்கின்றது. ஜனநாயக போராட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் சேமிப்புக்கள் (EPF , ETF , Fixed டெபாசிட்) என்பன கொள்ளையடிக்கப்படுகின்றது.

இப்படி எல்லாம் நிறைய எழுதலாம். இப்படி இருக்கும்போது சொல்ஹெய்ம் பைத்திக்காரத்தனமாக பேசக்கூடாது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.