Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூரிகை நாயகன்.. மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஓவியர் மாருதி மறைவு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூரிகை நாயகன்.. மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஓவியர் மாருதி மறைவு..

IMG-20230728-105720.jpg 

சென்னை: பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவு காரணமாக புனேவில் மரணமடைந்தார். ஓவியர் மாருதி மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கோட்டையில் 1938, ஆகஸ்டு 28-ம் தேதி டி.வெங்கோப ராவ், பத்மாவதி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ஓவியர் மாருதி. இவரின் இயற்பெயர் ரங்கநாதன். வேலைச்சூழலின் காரணமாக, மாருதி என்ற புனைப்பெயரில் பத்திரிகைகளில் ஓவியங்கள் வரைந்து அதன் மூலம் பிரபலமானவர்.

1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். இவருக்கு சுபாஷிணி, சுஹாசினி என இரு மகள்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி விமலா கொரோனா காலத்தில் மறைந்தார். இவரின் ஓவியத்தைப் பாராட்டி தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி இருக்கிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓவியர் மாருதி புனே நகரில் மகள் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் காலமானார்.

ஓவியர் மாருதி மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ஓவியர் மாருதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ் வார இதழ்களில் தமது தூரிகையால் கோலோச்சி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர் மாருதி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். தனித்துவம் மிக்க தனது ஓவியங்களால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம்பெற்றிருப்பவர். முத்தமிழறிஞர் கலைஞரின் திரைப்படங்களில் பணியாற்றியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/artist-maruthi-passes-away-chief-minister-stalins-condolence-524687.html

டிஸ்கி 

IMG-20230728-110808.jpg

அந்த கால அரசர்களையும் இளவரசிகளையும் புதினங்களுக்கு இடையே கண்ணில் நிறுத்துபவர்..😢

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஓவியர். சினிமா நடிகைகளை மொடலாக வைத்து கதைகளுக்கு ஓவியங்கள் வரைவதில் வல்லவர்.   கோபுலு,ராமு, ஜெயராஜ், மணியம் செல்வன், வினு, சிற்பி…. போன்ற ஓவியர்கள் மத்தியில் தனக்கென ஒரு பாணி அமைத்துப் பயணித்தவர்.சமீபகாலமாக   முகநூல் பக்கத்தில்  அவர் தனது ஓவியங்களை பதிவிட்டுக் கொண்டிருந்தார். 😪

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத ஓவியர்.......அன்றைய சஞ்சிகைகளில் அவரது ஓவியங்கள் தனித்துவமாக மிளிரும்........!

ஆழ்ந்த இரங்கல்கள்.......!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.