Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்கிறார் காமினி லொக்குகே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார்.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது.ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார். அந்த உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக்  கொள்ளவில்லை.

அரசியலமைப்பின்  13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை காட்டிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். 69 இலட்ச மக்களின் கோரிக்கை புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது.ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்றதாக்கப்படும்.

தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதும் தவறாகும்,நான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்கிறார் காமினி லொக்குகே | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார்.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது.ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார். அந்த உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக்  கொள்ளவில்லை.

அரசியலமைப்பின்  13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை காட்டிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். 69 இலட்ச மக்களின் கோரிக்கை புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது.ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்றதாக்கப்படும்.

தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதும் தவறாகும்,நான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு என்கிறார் காமினி லொக்குகே | Virakesari.lk

தமிழில் தேசிய கீதத்தைப் பாடவேண்டாம் என சிறீலங்காவின் அரச அதிகாரவர்க்கம் கூறினால் பாடுவதைத் தவிர்ப்பதைத்தவிர எதற்கு நாம் அவர்களுடன் இழுபறிப்படவேண்டும்!

சிங்களத்திலேயே பாடட்டும் நாம், ஒரு நாட்டுக்கு இன்னுமொரு நாட்டின் தலைவர் வந்திருக்கும்போது தேசிய கீதம் இசைக்கப்படும்போது சம்பிரதாயத்துக்கு எழும்பி நிண்டு முகட்டுவளையைப்பார்ப்பார்களே அதுபோல் எழுந்து நிற்கவேண்டியதுதானே. அந்தநேரத்தில் சிங்களம் இந்தத் தேசியகீதத்துக்காகவே பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிர்களைக் காவு வாங்கியது என மனதில் நினைத்தால் சாலச்சிறந்தது. 

சிங்களத்தில தேசியகீதம் பாடும்போது எல்லாச்சிங்களவரும் ஏதோ தேச அபிமானிகளாக நமோ நமோ தாயே என மனம் உருகி நிற்கிறார்களா என்ன!

இருக்கிற பிரச்சனைக்கு இதுவேற என நினைத்து எழுந்து நிற்பவர்கள் இல்லாமலா இருப்பார்கள்! 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் படித்த பாடசாலையில் திருவாசகப் பாடலை மேலதிகமாக காலைப் பிரார்த்தனை மண்டபத்தில் எல்லோரும் சேர்து படிப்போம் அதை ஒரு நிமிடமாவது தவமுறையில் தியானம் செய்து பாடியிருந்தோமா!

அந்த வேளையில் எங்களுக்கு நினைவுகளை மீட்டெடுத்துக்கொள்ளவா கடந்தகாலத்தில் எந்த சம்பவமும் இல்லாமல் சிங்களம் செய்துவிட்டுப்போய்விட்டது.
எண்பதுகளில் தென்பகுதிப் பல்கலக்கழகத்தின் தமிழ் மாணவன் ஒருவனை நிர்வானமாக்கிவிட்டு அவனைச்சுற்றி பைலா நடனம் ஆடினார்களே அதை நினைவில் வையுங்கோ எவ்வளவு கொடூரம் பிடித்தவர்கள் அந்த மாணவன் கைகளால் தனது உடலின் எந்தப்பகுதியை மறைப்பதெனத் தெரியாது விக்கித்திருந்த அந்தக்கணம் அந்தக்கறுப்பு வெள்ளைப் படத்தில் தெரியுதே அதை நினைவில் வைத்துக்கொளுங்கள் 

இப்ப்போதுதான் நான் அந்தப்படத்தை வலைத்தளத்தில் தேடிப்பார்த்தேன் அவங்கள் எடுத்திட்டாங்களோ இல்லை நான் தேடிய சொற்பிரயோகம் பிழையோ தெரியாது கண்டுபிடிக்கமிடியவில்லை. யாராவது முயற்சி செய்து இணைப்பை இணைக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:


எண்பதுகளில் தென்பகுதிப் பல்கலக்கழகத்தின் தமிழ் மாணவன் ஒருவனை நிர்வானமாக்கிவிட்டு அவனைச்சுற்றி பைலா நடனம் ஆடினார்களே அதை நினைவில் வையுங்கோ எவ்வளவு கொடூரம் பிடித்தவர்கள் அந்த மாணவன் கைகளால் தனது உடலின் எந்தப்பகுதியை மறைப்பதெனத் தெரியாது விக்கித்திருந்த அந்தக்கணம் அந்தக்கறுப்பு வெள்ளைப் படத்தில் தெரியுதே அதை நினைவில் வைத்துக்கொளுங்கள் 

இப்ப்போதுதான் நான் அந்தப்படத்தை வலைத்தளத்தில் தேடிப்பார்த்தேன் அவங்கள் எடுத்திட்டாங்களோ இல்லை நான் தேடிய சொற்பிரயோகம் பிழையோ தெரியாது கண்டுபிடிக்கமிடியவில்லை. யாராவது முயற்சி செய்து இணைப்பை இணைக்கவும்

83-pic-by-chandraguptha-amarasingha-a-ta

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாசி அவர்களே

இந்த ஒருபடம் போதும் சிங்கள இனத்தின் ஈனப்புத்தைய வெளிப்படுத்த.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிழம்பு said:

(இராஜதுரை ஹஷான்)

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது.

என்னை  பொறுத்த வரைக்கும் இப்படியான ஒரு தேசிய கீதத்தை தமிழன் பாட வேண்டுமா என்பதே?

இவர் சிங்களவர்களுக்கும் பிரச்சினை இருக்குதென்று கூறுகின்றார். அமைச்சராக இருந்தும் தமிழர் பிரச்சினைக்கும் சிங்களவர்களின் நாளாந்த பிரச்சினைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார். இதைத்தான் இங்கு மோட்டு சிங்களவன் என்று கூறுவது. பாவம். 

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழிலை பாடுறதாலை என்னென்ன நன்மைகள் தமிழருக்கு சேரப்போகுது... ஆரேனும் பட்டியலிடுங்கோவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.