Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

37 வருடங்களுக்கு பின் புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mannar.jpg

1800 மில்லியன் ரூபா செலவில் தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.

இலங்கை – இந்திய கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதற்காக தலைமன்னார் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது.

37 வருடங்களின் பின்னர் 1800 மில்லியன் ரூபா செலவில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் இறங்குதுறையை  அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று  சென்று பார்வையிட்டார்.

Image Image

Image Image

https://thinakkural.lk/article/266876

  • கருத்துக்கள உறவுகள்

தலை மன்னார் புகையிரத பாதை அமைக்கும் போது இதனை செய்திருந்தால் குறைந்த செலவில் செய்திருக்கலாம். அங்குள்ள MP (??) மாருக்கு அதேட்கெல்லாம் நேரமிருந்திருக்கவில்லை. தமிழர் பிரச்சினையை தீர்ப்பதட்காக மிக தீவிரமாக செயட்படடதால🤔 அவர்களால் அதனை செய்ய முடியாமல் போய் விட்ட்து. இதை முன்னரும் எழுதி இருந்தேன்.

இப்போதைக்கு இவ்வளவு பணம் செலவு செய்து இதனை செய்வார்களா என்பது கேள்விக்குறியே. இந்த வேலை நடந்து முடியும் வரைக்கும் அமைச்சரின் கூற்றை நம்ப முடியாது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் - அமைச்சர் நேரடி பார்வை

05 AUG, 2023 | 09:30 AM
image
 

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா வெள்ளிக்கிழமை (04) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விஜயத்தின் போது,  வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன், சம்பந்தப்பட்ட  திணைக்களங்களின் செயலாளர்கள் கடற்படை அதிகாரிகள் இந்திய நலன்புரியாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

2.JPG

குறித்த விஜயத்தின் போது  அமைச்சருடன் கலந்து கொண்டோர்  தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் தலைமன்னார் பியர் கடற்படையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இங்கு அவர் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக இரு பகுதிகளை அவர் இங்கு சுட்டிக்காட்டினார். ஒன்று உடனடி அபிவிருத்தித் திட்டம் அடுத்து நீண்ட காலத்திற்கு செய்யும் திட்டங்களை அவர் வலியுறுத்தினார்.

அதாவது மூன்று மாதங்களுக்குள் குறுகிய திட்டத்தை நிறைவு செய்து தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்து மக்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரயாணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தியுள்ளார். 

7.JPG

https://www.virakesari.lk/article/161660

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா செல்ல இலங்கையில் புதிய துறைமுகம்!

இந்தியா செல்ல இலங்கையில் புதிய துறைமுகம்!

 

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா நேற்று (04) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்தார்.

அவரின்  வருகையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் , வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர்  அ.ஸ்ரான்லி டீமெல் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன், சம்பந்தப்பட்ட  திணைக்களங்களின் செயலாளர்கள் கடற்படை அதிகாரிகள் இந்திய நலன்புரி யாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இவ் வருகையில் அமைச்சருடன் கலந்து கொண்டோர்  தலை மன்னார் பியர் மற்றும் தலை மன்னார் பழைய பாலம் ஆகியவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் தலை மன்னார் பியர் கடற்படையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இங்கு அவர் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாக இரு பகுதிகளை அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

ஒன்று உடனடி அபிவிருத்தித் திட்டம் அடுத்து நீண்ட காலத்திற்கு செய்யும் திட்டங்களை அவர் வலியுறுத்தினார்.

அதாவது மூன்று மாதங்களுக்குள் குறுகிய திட்டத்தை நிறைவு செய்து தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்து மக்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரயாணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தியுள்ளார். 

 

  • கருத்துக்கள உறவுகள்

2009 போர் முடிந்த கையோடு கதைக்க தொடங்கின திட்டம் இது. இன்னும் அமைச்சர் போய் பார்வையிடும் நிலையில்தான் நிற்கிறது.

இலங்கை அரசு, வடக்கு-தமிழ்நாடு கப்பல் சேவையை நடத்த விரும்பவில்லை. கப்பல் சேவையில் அதிக செலவில்லாமல் வர்தக, கலாச்சார, மொழி, முக்கியமாக திருமண, குடியேற்ற தொடர்புகள் கீழ்-மத்திய, அடிதட்டு மக்களிடையே ஏற்படும்.

இது சிங்கள மயமாதலுக்கு எதிர் திசையிலானாது.

ஆனால் இந்தியாவுக்கு இப்படி போக்கு காட்டுகிறார்கள்.

மேல்-மத்திய, மேல்தட்டு மக்கள் பாவிக்கும் விமான நிலையத்தை இதை விட பல மடங்கு செலவில் விரைவில் செய்து முடித்ததும் இதனால்தான். அவர்களினால் ஒரு அளவுக்கு மேல் தொடர்புகளை வலுப்படுத்த முடியாது.

ஆனால் கப்பல் மூலம் அலை அலையாக தமிழ் உழைக்கும் வர்க்கம் குறுகிய கால விசாவில் வந்தால் கூட - சிங்கள மயமாதல் கேள்வி குறியாகிவிடும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

37 வருடங்களின் பின்னர் புனரமைக்கப்படவுள்ள தலைமன்னார் துறைமுகம்

37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் படகுகள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் துறைமுகத்தை மீண்டும் அமைக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

வடக்கில் இடம்பெற்ற மோதல்களின் போது இந்த துறைமுகம் அழிக்கப்பட்டதுடன், கைவிடப்பட்டது. இதன்படி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பணிப்புரையின் கீழ், துறைமுகத்தை மீள நிர்மாணிக்கும் பொறுப்பு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதலீட்டின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 1,800 மில்லியன். துறைமுகத்தின் புனரமைப்புப் பணிகளுக்கு இணையாக, துறைமுகத்தின் எல்லையில் உள்ள அரசுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலம் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக கையகப்படுத்தப்படும்.

இந்த புதிய அபிவிருத்திகளின் கீழ், நவீன பயணிகள் முனையம் மற்றும் கிடங்கு வசதிகள் கட்டப்படும்.

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் இலங்கை யாத்ரீகர்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கும் குறைந்த கட்டணத்தில் பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வசதியாக அமையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்குமிடையிலான சரக்கு பரிமாற்றத்தை எளிதாக்குவதுடன், வட இலங்கை மக்களின் உற்பத்திகளை இந்தியாவில் பிரபலப்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் அவர் கூறினார்.

https://thinakkural.lk/article/267038

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் தொடங்கும் முன்பதாக மன்னார் நகர் இரவு பகலாக அந்த நாட்களில் கள கலப்பாக இருக்கும். மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். ராமானுஜம் கப்பல் சேவை அந்த நாட்களில் நடைபெற்று வந்தது. மக்களும் இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டுவந்து வியாபாரம் செய்வார்கள்.

மீண்டும் அந்த நாள் வருமென்றால் நல்லதுதான். எல்லாம் சொல்வதின்படி செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.