Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலையக மக்களுக்கு எதிரான பாரபட்சங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - ஐ.நா. அறிக்கையாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

11 AUG, 2023 | 10:59 AM
image
 

இலங்கையின் மலைய தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் தற்கால அடிமைத்தனம் குறித்த விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மலையகமக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபயணமொன்று ஜூலை மாதம் முதல் இடம்பெறுகின்றது என தெரிவித்துள்ள அவர் மலையக தமிழ் மக்களிற்கு எதிரான திட்டமிடப்பட்ட பாரபட்சத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் எனவும்தெரிவித்துள்ளார்.

மலையகமக்கள் கல்வி கௌவரமான தொழில் போதுமான வீட்டுவசதி நிலம் மற்றும் பொதுவசதிகளை  பெறுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கின்றேன். தற்காலிக அடிமைத்தனத்தில் அவர்கள் சிக்குப்படுவதை தடுப்பதற்காக பொதுவிவகாரங்களில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உள்ள உரிமையை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/162099

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட இந்த கையாலாகாத ஐக்கிய நாடுகளினால் என்னா செய்ய முடியும்? 200 வருடங்களாக செய்யாததை இப்போது செய்யபயோகிறார்களா? 7 பேர்ச் காணி கொடுப்பதட்கே ஐம்பது வருடமாக இழுபறியாக இருக்கின்றது. அந்த மக்களுக்கென்று சொந்த விலாசத்தில் ஒரு கடிதம் அனுப்ப முடியாது. இவர்கள் எல்லாம் கொழுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு அறிக்கை விடுவார்களே தவிர ஒன்றுமே செய்யமாடடார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை, ஆலோசனை, கண்டனம், கவலை, கோரிக்கை,  பாராட்டு பெறுவதற்கு நாட வேண்டிய இடம் இது! செயற்பாடு, நடவடிக்கை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது இங்கே!

43 minutes ago, Cruso said:

இவர்கள் எல்லாம் கொழுத்த சம்பளத்தை எடுத்துக்கொண்டு அறிக்கை விடுவார்களே தவிர ஒன்றுமே செய்யமாடடார்கள். 

இத்தகைய செயற்பாடுகளை இவர்கள் மறைமுகமாக ஊக்குவிப்பார்கள், தாங்கள் சம்பளம் பெறுவதற்காக! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அறிக்கை, ஆலோசனை, கண்டனம், கவலை, கோரிக்கை,  பாராட்டு பெறுவதற்கு நாட வேண்டிய இடம் இது! செயற்பாடு, நடவடிக்கை எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது இங்கே!

இத்தகைய செயற்பாடுகளை இவர்கள் மறைமுகமாக ஊக்குவிப்பார்கள், தாங்கள் சம்பளம் பெறுவதற்காக! 

இல்லை சாத்தான்   நீங்கள் இந்த பதவியில் இருந்தாலும் இதை தான் செய்வீங்கள்.   வேறு எதுவும் செய்ய முடியாது   அந்த பதவிக்கு உள்ள அதிகாரம் அவ்வளவு தான்   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இல்லை சாத்தான்   நீங்கள் இந்த பதவியில் இருந்தாலும் இதை தான் செய்வீங்கள்.   வேறு எதுவும் செய்ய முடியாது   அந்த பதவிக்கு உள்ள அதிகாரம் அவ்வளவு தான்   

ஒன்றுமாற்ற வலுவற்ற இந்த பதவியை வைத்து சிறுபான்மை இனங்களை  நசுக்கவும் அவர்களது விடுதலையை தடுக்கவுமே முடிந்தது. அந்த இனத்தின் அழிவை தடுக்கவோ அவர்களின் பாதுகாப்பை இத்தனை ஆண்டுகளாய் உறுதிப்படுத்தவோ முடியவில்லை என்றால், இந்தச்சபை எதற்க்கு? எதற்காக இதன்மேல் இத்தனை எதிர்பார்ப்பு? ஆரவாரம்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஒன்றுமாற்ற வலுவற்ற இந்த பதவியை வைத்து சிறுபான்மை இனங்களை  நசுக்கவும் அவர்களது விடுதலையை தடுக்கவுமே முடிந்தது. அந்த இனத்தின் அழிவை தடுக்கவோ அவர்களின் பாதுகாப்பை இத்தனை ஆண்டுகளாய் உறுதிப்படுத்தவோ முடியவில்லை என்றால், இந்தச்சபை எதற்க்கு? எதற்காக இதன்மேல் இத்தனை எதிர்பார்ப்பு? ஆரவாரம்?

இன்று பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கவும் அடிக்கவும். முடியாத நிலைமை   ....நிற்க இலங்கை  ஐக்கிய நாணய சபை அதிகாரிகளுக்கு  தொடர்ந்தும். வாக்குறுதிகளை அளித்து வருவதுடன். .நாங்கள் திருந்தி வருகிறோம்   என்று பட்டியலும் இட்டு காட்டுவதுமில்லைலாமல்.   நிதியுதவியும் பெற்று வருகிறார்கள்   நாங்கள் என்ன செய்கிறோம்??? இந்த இலங்கையை தண்டிக்கப முடியவில்லை   ஒரு பாடசாலை ஆசிரியர் நிலையில் ஐக்கிய நாணய சபை அதிகாரிகள் 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

இலங்கை  ஐக்கிய நாணய சபை அதிகாரிகளுக்கு  தொடர்ந்தும். வாக்குறுதிகளை அளித்து வருவதுடன். .நாங்கள் திருந்தி வருகிறோம்   என்று பட்டியலும் இட்டு காட்டுவதுமில்லைலாமல்.   நிதியுதவியும் பெற்று வருகிறார்கள்  

எத்தனை ஆண்டுகள்? வீட்டுப்பாடம் கொடுத்தால், அதை திருத்தாமல் மீண்டும் பாராட்டி பரிசளிக்கும் சோம்பேறி ஆசிரியரை ஏமாற்றி பரிசு பெறுவது மாணவருக்கு ரொம்ப எளிது. ஒன்று மாணவரைபற்றி ஆசிரியருக்கு எந்த தெளிவுமில்லை, அல்லது ஆசிரியருக்கு திறமையில்லை, கேள்வி கேட்க தைரியமில்லை. பரிசுகளை நிறுத்தி செயலை காட்டும்படி கேட்டாலே போதும், மாற்றம் ஏற்படும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.