Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தூவானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-0611.jpg

இன்று தூவானம் திரையிடப்படுகிறது  என்பதாலேயோ தெரியவில்லை சிட்னியிலும் மழைபெய்து ஓய்ந்தாலும் மழைத் தூறல் இருந்து கொண்டிருந்தது. 

திரையரங்கு நிரம்பிருக்க படத்தின் முதல் காட்சி கூத்து நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அபிமன்யு சூழ்ச்சியால் இறப்பதை கூறியபடி படம் தொடங்குகிறது. 

காலை வேளையில் முருகண்டிப் பிள்ளையார் கோவிலையும் அதன் சுற்றுப்புறத்தையும்பார்க்கும் பொழுது 30 வருடங்களின் போனவருக்கு இருந்த உணர்வுதான் அடிக்கடி ஊருக்குப் போவோருக்கும் இருக்கும் என நம்புகிறேன். 

தனது பழைய நினைவுகளை பிள்ளைகளுடன் மீண்டுக்கொண்டு வருபவரை, தங்கையின்தொலைபேசி குழப்புகிறது.. காலை சாப்பாட்டிற்கு என்ன செய்யிறது என படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் தங்கை கேட்கும் பொழுது எனது சகோதரி நான் கிளிநொச்சிக்குக் கிட்ட வரும் பொழுது தொலைபேசி எடுத்து உமக்கு வழமையான புட்டும் முட்டைப்பொரியலும் செய்து வைத்திருக்கிறேன் எனக் கூறுவதே உடன் நினைவிற்குவந்தது. இப்படிப் பல நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்தது தூவானம். 

தனது மகன் வெளிநாடு போய்விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கும் typical தமிழ் அம்மா.. கள்ளடிக்கும் அப்பா.. தனது விருப்பங்களை வெளியே கூறினாலும் அது நிறைவேறாது என நினைத்து அதிகம்பேசாமல் ஒதுங்கும் மகன்.. கண்டிப்பு காட்டினாலும் அக்கறையுள்ள ஆசிரியர்.. பக்கத்து வீட்டு ஆச்சி.. ஒன்றாகப் படித்த நண்பர்கள் என சாதாரனமாக நாங்கள் ஊரில் சந்திக்கும் மனிதர்களை வைத்து அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட நிகழ்ச்சிகளை, எமது கலைகளில் சிலவற்றை, யாழ்ப்பாணத்தின் அழகை உணவை, பேச்சுவழக்கை அழகாக ஓளிப்பதிவு செய்துள்ளது. 

தனது சிறுவயதில் பாடசாலை அனுபவங்கள், ஊரை விட்டு போகும் பொழுதுள்ள மனநிலை, தற்போதுள்ள ஊரின் நிலை என பல்வேறு கோணங்களில் கதை நகர்கிறது.  படத்தில் 3 பாடல்கள் வருகிறது மூன்றுமே அர்த்தம் நிறைந்த பாடல்கள். 

போரினால் பாதிக்கப்பட்டாலும் தனது வாழ்க்கையில் முன்னேறியுள்ள நண்பர்புலம்பெயர்ந்த தமிழர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைத்தான் படத்தின் கதைகூறவருகிறது. அதனை இறுதியில் மிக அழகாக குறியீட்டு வடிவில் கூறியிருப்பார்இயக்குனர். 

ஆனால் அது எந்தளவிற்கு புலம்பெயர்ந்த தமிழர்களால் அதுவும் 3ம் தலைமுறையினரிடம்எந்தளவுக்கு எடுபடும் எனத் தெரியவில்லை. ஏனெனில் அதனைப் பற்றி கூறும் இடங்களில்அவை சரியாக அழமாக கூறப்படவில்லை என்றே தோன்றுகிறது. குறியீட்டைவிளங்கினாலும் ஏன் என்ற காரணம், ஏன் அவசியம், எங்களது அடையாளம் எது எனத்தெரியாமல் 3ந் தலைமுறை ஒன்றினையுமா தெரியவில்லை. படத்திற்கு கூட வந்திருந்த இளையோர்கள் மிகவும் குறைவு. 

IMG-0609.jpg

ஆனால் சில குறிப்புகளின் மூலம் போரின் காயங்களை உணர்த்தவே முற்படுகிறார். உதராணத்திற்கு போரில் காணாமலாக்கப்பட்ட தம்பியின் படத்திற்கு மாலை போடவில்லை .. ஏன் என சகோதரியிடம் கேட்கும் பொழுது அவர் மெளனமாக இருப்பார். இந்த விளக்கம் ஊரிலிருந்து வந்த என்னைப்போன்றவர்களுக்கு விளங்கும் 3ந் தலைமுறையினருக்கு விளங்குமா? 

அதே போல படத்தின் காட்சிகளை ஒழுங்கமைத்தல், வசனங்களும் படத்தின் கதாபாத்திரங்களின் வாயசைப்புக்களுடன் ஒத்து வரவில்லை. சில காட்சிகள் நீளமாக இருந்தது போன்ற சில குறைபாடுகள் இருந்தாலும் இயக்குனரின் முதல் படம் என்றரீதியில் இந்தப் படம் பாராட்டுக்குரிய ஒன்று. 

இப்படியான படைப்புகள் தொடர்ந்து வரவேண்டும் ஏனெனில் எங்களிலும் திறமையான நடிகர்கள் கதாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அதே போல இளையோர் திசைமாறிப் போகாமல் இருக்க இப்படியான படைப்புகளும் உதவக்கூடும். இந்த காரணம் ஒன்றிற்காகவே இந்தப் படத்தைப் பற்றி இங்கே பதிவிடுகிறேன். படத்திற்கான கருத்தும் எனது தனிப்பட்ட கருத்து. இந்தக் கருத்து எல்லோருக்கும் இருக்கும்  என்றும் இல்லை. 

 

நன்றி.

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ தென்னிந்திய சினிமா பற்றி எழுதுகிறீர்கள் என்று எண்ணினேன்.

ஓரிரு வரிகளைப் படித்த பின்னர் தான் எமது படம் என்பது விளங்கியது.

பதிவுக்கு நன்றி பிரபா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தப் படத்தில் வரும் இன்னொரு விடயத்தையும் கூற வேண்டும். 

இயக்குனர்/கதாசிரியர் ஏன் அபிமன்யுவின் கதையுடன் படத்தை ஆரம்பிக்கவேண்டும் என்பதுதான். எங்களது கலைகள் கதைகளை கூறவேண்டும் என்றால் எங்களிலுர் பண்டாரவன்னியன் முதல்  சூழ்ச்சியால் கொல்லப்பட்டவர்கள் ஏராளம்.  

தென்னிந்திய/ இந்திய கதைகளின் தாக்கமோ தெரியவில்லை. 

ஆனால் உள்ளூர் வளங்களை/ இளையோரின் திறமையை எப்படி ஊக்குவிக்கலாம் என்பதையும் கூறாமல் விடவில்லை. 

6 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் ஏதோ தென்னிந்திய சினிமா பற்றி எழுதுகிறீர்கள் என்று எண்ணினேன்.

ஓரிரு வரிகளைப் படித்த பின்னர் தான் எமது படம் என்பது விளங்கியது.

பதிவுக்கு நன்றி பிரபா.

இல்லை அங்கிள்.. இது முழுவதும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம்

இங்கே சிட்னியில் நேற்றுத் திரையிடப்பட்டது. மற்றைய நாடுகளிலும் திரையிடப்பட்டிருக்கலாம்

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை அங்கிள்.. இது முழுவதும் யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம்

தூவானம் பட விமர்சனத்திற்கு நன்றிகள் பிரபா.
ஆனாலும் ஈழப்பிரியன் அண்ணாவை அங்கிள் என்று விளித்தமைக்கு சிறிய கண்டனம். 

... Just for Fun. 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Sasi_varnam said:

தூவானம் பட விமர்சனத்திற்கு நன்றிகள் பிரபா.
ஆனாலும் ஈழப்பிரியன் அண்ணாவை அங்கிள் என்று விளித்தமைக்கு சிறிய கண்டனம். 

... Just for Fun. 🙂

எனக்கென்னவோ அவர் எனது தந்தையைவிட 5 அல்லது 6 வயதுதான் குறைவாக இருப்பார் என்றதால்தான் அப்படி கூப்பிடுகிறேன்..

எனது ஊகம் பிழையாக இருந்தால் திருத்தித்கொள்ளலாம்😔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:
2 hours ago, Sasi_varnam said:

தூவானம் பட விமர்சனத்திற்கு நன்றிகள் பிரபா.
ஆனாலும் ஈழப்பிரியன் அண்ணாவை அங்கிள் என்று விளித்தமைக்கு சிறிய கண்டனம். 

... Just for Fun. 🙂

எனக்கென்னவோ அவர் எனது தந்தையைவிட 5 அல்லது 6 வயதுதான் குறைவாக இருப்பார் என்றதால்தான் அப்படி கூப்பிடுகிறேன்..

எனது ஊகம் பிழையாக இருந்தால் திருத்தித்கொள்ளலாம்

கடந்த ஆனிமாதம் தான் 67 முடிந்தது.

எனது புறோபைலில் முழுமையாக போட்டுள்ளேனே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

கடந்த ஆனிமாதம் தான் 67 முடிந்தது.

எனது புறோபைலில் முழுமையாக போட்டுள்ளேனே.

பிறந்த நாள் வாழ்த்துக்களும் 
அப்பாடா  சந்தேகம் தீர்ந்தது 😉

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பிறந்த நாள் வாழ்த்துக்களும் 
அப்பாடா  சந்தேகம் தீர்ந்தது 😉

அட பாவிகளா எப்பவும் சந்தேகமா?

முகப்புத்தகத்தில் வாழ்த்தியதெல்லாம் பொய்யா கோபாலு?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா தான் ஒரு பகிடிதான்🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 
அப்பாடா  சந்தேகம் தீர்ந்தது 😉

உண்மைதான்

21 hours ago, ஈழப்பிரியன் said:

கடந்த ஆனிமாதம் தான் 67 முடிந்தது.

எனது புறோபைலில் முழுமையாக போட்டுள்ளேனே.

எனது தந்தைக்கு இந்த வருடம் 78 தொடங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது தந்தைக்கு இந்த வருடம் 78 தொடங்குகிறது.

அப்ப உங்கள் அப்பாவுக்கு நான் தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்
On 13/8/2023 at 15:50, பிரபா சிதம்பரநாதன் said:

இப்படியான படைப்புகள் தொடர்ந்து வரவேண்டும் ஏனெனில் எங்களிலும் திறமையான நடிகர்கள் கதாசிரியர்கள் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அதே போல இளையோர் திசைமாறிப் போகாமல் இருக்க இப்படியான படைப்புகளும் உதவக்கூடும். இந்த காரணம் ஒன்றிற்காகவே இந்தப் படத்தைப் பற்றி இங்கே பதிவிடுகிறேன். படத்திற்கான கருத்தும் எனது தனிப்பட்ட கருத்து. இந்தக் கருத்து எல்லோருக்கும் இருக்கும்  என்றும் இல்லை. 

எனது கருத்தும் இதுதான்.👍

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் பார்த்தேன்......பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2023 at 10:34, ஈழப்பிரியன் said:

அப்ப உங்கள் அப்பாவுக்கு நான் தம்பி.

அப்பாடா!! ஒரு மாதிரி இதைத் தெளிவுபடுத்தியாச்சு😀..

On 15/8/2023 at 18:38, Kavi arunasalam said:

எனது கருத்தும் இதுதான்.👍

என்னுடைய சிநேகிதியும் இந்தப் படம் பார்க்க வந்திருந்தா.. பல்வேறு காரணங்களுக்காக தனக்கு எங்கட படங்கள் பிடிப்பதில்லை ஆனால் இந்தப் படத்தை நன்றாக எடுத்துள்ளார்கள் எனக் கூறினார்.. 

எங்களுடைய கலைஞர்களுக்கு சரியான வாய்ப்பும் ஆதரவும் கிடைத்தால் அவர்களாலும் நல்ல படைப்புகளைக் கொடுக்க முடியும் என்பதை பலர் உணர்வதில்லை. 

9 hours ago, suvy said:

இப்பதான் பார்த்தேன்......பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!   👍

மிக்க நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.