Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''சனல்- ஐ " யை அரசாங்கம் இரகசியமாக லைக்கா மொபைலிற்கு விற்பனை செய்துள்ளது - தேசிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

15 AUG, 2023 | 10:00 AM
image
 

அரசாங்கம் ''சனல் - ஐ" யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான ''சனல் - ஐ" ஜூன் 30 திகதி முதல் ஆறு மாதங்களிற்கு விஐஎஸ் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

''சனல் - ஐ" யின் ஒளிபரப்பு நேரம் எந்த வெளிப்படை தன்மையுமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரூபவாஹினி ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஊடக அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார் என நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.

எனினும் அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விஐஎஸ் ஒளிபரப்பு நிறுவனத்தின் எஸ்பிடி சனலின் நிகழ்ச்சிகளை ''சனல் - ஐ" யில் ஒளிபரப்பு செய்யும் திட்டம் காணப்படுகின்றது, இந்த சனல் லைக்கா மொபைலிற்கு சொந்தமானது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் பந்துல குணவர்த்தனவும் ''சனல் - ஐ" யின் உரிமையை முதலில் ஆறு மாதங்களிற்கும் பின்னர் இரண்டுவருடங்களிற்கும் வழங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/162377

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு தொலைக்காட்சி சேனலை வாங்கியதா லைகா நிறுவனம்?

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனுடன் ரணில் விக்ரமசிங்க இருப்பது போன்ற புகைப்படம் இலங்கை ஊடகங்களில் வெளியானது

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

 
படக்குறிப்பு,

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனுடன் ரணில் விக்ரமசிங்க இருப்பது போன்ற புகைப்படம் இலங்கை ஊடகங்களில் வெளியானது

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ‘ஐ’சேனலை லைகா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல் போலியானது என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சேனல் ஐ தொலைக்காட்சி சேவையை லைகா நிறுவனத்திற்கு வழங்கும் யோசனை அமைச்சரவையில் நிராகரிக்கப்பட்டதாக இன்றைய தினம் வெளியான பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், இந்த செய்தி போலியானது என அமைச்சர் தெரிவித்தார்.

''இலங்கை ரூபவாஹினி சேவைக்கு சொந்தமான சேனல் ஐ தொலைக்காட்சியை குத்தகை அடிப்படையில் லைகா நிறுவனத்திற்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை அமைச்சரவை கூடியது" என்ற வகையில் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெறவில்லை எனவும், அமைச்சரவை கூட்டம் நேற்று முற்பகலே கூடியது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாத்திரம் குத்தகைக்கு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்

பட மூலாதாரம்,BANDULA GUNAWARDANA FB

 
படக்குறிப்பு,

சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாத்திரம் குத்தகைக்கு விட்டதாக அமைச்சர் தெரிவித்தார்

 

''சேனல் ஐ தொலைக்காட்சியை விற்பனை செய்யவோ அல்லது குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கோ யோசனை முன்வைக்கப்படவில்லை. இலங்கை ரூபவாஹினி கூட்டுத் ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் சேனல் ஐ தொலைக்காட்சி சேவையை வருமானம் இல்லாமையினால் நடத்தி செல்ல முடியவில்லை.

மின்சார கட்டணத்தை செலுத்துவதில் கூட சிரமமான நிலைமை காணப்படுகின்றது. மிகவும் நட்டத்தில் இயங்குகின்ற சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை மாத்திரம் குறுகிய கால குத்தகை அடிப்படையில் ரூபவாஹினி நிறுவனத்தின் பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, எனது அனுமதியுடன் அதனை குத்தகைக்கு வழங்கியுள்ளனர். பாரிய குத்தகை தொகை கிடைக்கின்றது. மாதமொன்றிற்கு 25 மில்லியன் ரூபா கிடைக்கின்றது." என பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

ரூபவாஹினி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு வணிக ரீதியிலான தீர்மானங்களை எடுக்கும் உரிமமானது, நிறுவனத்தின் சட்டத்திலேயே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், நட்டத்தில் இயங்கும் நிறுவனத்தை லாபம் ஈட்டும் வகையில், சேனல் ஐ தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நேரத்தை லைகா நிறுவனத்திற்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஏனைய விளையாட்டுக்களுக்காக மாத்திரமே இந்த ஒளிபரப்பு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் லைகா நிறுவனம்

லைகா நிறுவனமானது, இலங்கையில் பல ஊடக நிறுவனங்களை நடத்தி வருகின்றது.

இலங்கையின் மிகவும் பழைய தனியார் தொலைக்காட்சி சேவையான சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பை லைகா நிறுவனம் வாங்கி நடத்தி வருகின்றது.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பான ஆதவன் தொலைக்காட்சியின் சேவையை இலங்கையில் தற்போது விரிவுப்படுத்தியுள்ளது.

அதேபோன்று, பாரிய நிதி ஒதுக்கீட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான இணைய ஊடக வலையமைப்பொன்றையும் லைகா நிறுவனம் இலங்கையில் அண்மையில் ஆரம்பித்து வருகின்றது.

இவ்வாறு பல ஊடக நிறுவனங்களை தன்வசப்படுத்திய லைகா நிறுவனம், தற்போது அரச தொலைக்காட்சி சேவையான சேனல் ஐ தொலைக்காட்சியின் வானலை நேரத்தையும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

பிரிட்டனுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லைகா நிறுவனத்தின் தலைவரை அங்கு சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா, ஐரோப்பிய நாடுகளை இலக்காக கொண்டு பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

குறிப்பாக லைகா தொலைபேசி நிறுவனத்தின் ஊடாக முன்னேற்றம் அடைந்த சுபாஷ்கரன் அல்லிராஜா, தென்னிந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒருவராக திகழ்கின்றார்;.

சேனல் ஐ

பட மூலாதாரம்,CHANNEL EYE FB PAGE

தென்னிந்தியாவில் தயாரிக்கப்படும் பல திரைப்படங்களை லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தநிலையில், இலங்கை ஊடகத்துறையின் பெரும் பகுதியை லைகா நிறுவனம் தற்போது தனதாக்கிக்கொண்டுள்ளது.

அது மாத்திரமன்றி, இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தை லைகா நிறுவனம் கொள்வனவு செய்ய தயாராகி வருவதாக பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அத்துடன், பல நிறுவனங்களை லைகா நிறுவனம் கொள்வனவு செய்ய உள்ளதாகவும் பலர் கூறி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c6pn2gev3d5o

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

அரசாங்கம் ''சனல் - ஐ" யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

அரச சொத்துக்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு விற்க வேண்டுமென்பதே ஐ எவ் எம் மின் ஒப்பந்தம்.

அப்புறம் எப்படி அரசை குறை சொல்வது.

கொஞ்சம் கண் அயர்ந்தால் உங்கள் கோவணத்தையும் உருவி விற்றுவிடுவார்கள்.

உசாராக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் பணம் என்றால் எதுவும் செய்ய தயாராக இருக்கின்றது. நாட்டில் எதை விற்க முடியுமோ அதை எல்லாவற்றையும் விக்கிறார்கள். ஆனாலும், சிங்களவனின் எண்ணம் எல்லாம் அவர்களை விட நாட்டு பற்று, தேச பற்று யாருக்குமே கிடையாது என்பார்கள். பிச்சை எடுத்தாலும் பெருமைப்படுவதில் குறைச்சல் இல்லை. குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர். இப்போது கூழும் கிடையாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

சிங்களவனின் எண்ணம் எல்லாம் அவர்களை விட நாட்டு பற்று, தேச பற்று யாருக்குமே கிடையாது என்பார்கள்

அதெல்லாம் சும்மா பம்மாத்து. ஏழை  மக்களை ஏமாற்றி ஏப்பமிடும் தந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.