Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கச்சதீவைப் பெற்றதால் பல மடங்கு கடல் விளை நிலங்களை இழந்து விட்டோம் - அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 AUG, 2023 | 08:24 PM
image
 

1976 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற்பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நாம் 80 விதமான கடல் விளை நிலங்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடத்தொழில் அமைச்சருமான டக்ளஸ்  தேவானந்தா தெரிவித்தார். 

கடந்த  வெள்ளிக்கிழமை  (18) தமிழ்நாடு மீனவர்கள் மாநாட்டில் கச்சதீவை மீட்போம் என தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இந்தியாவில் தேர்தல் வரப்போகிற நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல்கள் வரும்போது கச்சதீவு தொடர்பில் கருத்துக்கள் எழுவது வழமையான செயல்பாடு.

1974 ஆம் ஆண்டு இருநாட்டு மீனவர்களும் இலங்கையிலும் இந்தியாவிலும் கடற் தொழிலில் ஈடுபடலாம் என ஒரு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ் உடன்படிக்கை மூலம் இலங்கை கப்பல் கூட்டு தாபனத்தின்  பெரிய ஆறு மீன்பிடி படகுகள் இந்தியா கடற்பரப்புகள் சென்று தொழிலில் ஈடுபட்டு வந்தன.

1974 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை 1976 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட நிலையில் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள்ளும் இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்பரப்பு கொள்ளும் நுழைய முடியாது என உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கை மூலம் கச்சதீவு கடற்பரப்பிலிருந்து இந்தியா வெளியேறிய நிலையில் இந்தியா மீனவர்களின் மீன்பிடி வலைகளை உலர்த்துவதற்கும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் பங்கு பெற்றுவதற்கும் தடை ஏற்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற் பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கச்சதீவைக் காட்டிலும் 80 மடங்கு கடல் விளை நிலங்களை நாம் இழக்க வேண்டிய சூழலை ஏற்பட்டது.

இந்தியா மீனவர்கள் எல்லை தாண்டிய மீன்படியினால் வடக்கு கடற் தொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆனால் இந்திய தரப்பில் கூறும் போது மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்களை சிங்கள இராணுவம் மற்றும் சிங்களக் கடற்படை கைது செய்வதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

நான் இவர்களுடைய பிரச்சாரத்தின் உண்மை நிலை தொடர்பில்  பலமுறை இந்திய மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் தெரிவித்துள்ளேன்.

ஆனால் வடபகுதியில் உள்ள  தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டில் இருந்து  இலங்கை கடற்பரப்புக்குள் ஆத்துமீறி தொழில் நடவடிக்கையையில் ஈடுபடும்  இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள் என்ற உண்மையை அழுத்தமாக தெரிவிக்க வேண்டும்.

ஆகவே கச்சதீவு விவகாரம்  தேர்தல்கள் வரும் போது பேசு பொருளாக மாறுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டுமென  அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/162758

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

ஆனால் வடபகுதியில் உள்ள  தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்திய பிரதமருக்கும் தமிழ்நாட்டில் இருந்து  இலங்கை கடற்பரப்புக்குள் ஆத்துமீறி தொழில் நடவடிக்கையையில் ஈடுபடும்  இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள் என்ற உண்மையை அழுத்தமாக தெரிவிக்க வேண்டும்.

 

6 hours ago, ஏராளன் said:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டுமென  அவர் மேலும் தெரிவித்தார்.

தேவையற்ற அமைச்சுகளுக்குள் மூக்கை நுழைத்து கருத்து சொல்வது அறிக்கை விடுவது. தன் அமைச்சு சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க மற்றவர்கள் வரவேண்டும். தன்னால் முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்து மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும். 

6 hours ago, ஏராளன் said:

கச்சதீவு விவகாரம்  தேர்தல்கள் வரும் போது பேசு பொருளாக மாறுவது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும்

ஹா..... ஹா... பாம்பின் காலை பாம்பறியுமாம்! 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:
20 Aபெற்றுவதற்கும் தடை ஏற்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டு  மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் கச்சதீவு எமக்குரிய கடற் பரப்பாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் கச்சதீவைக் காட்டிலும் 80 மடங்கு கடல் விளை நிலங்களை நாம் இழக்க வேண்டிய சூழலை ஏற்பட்டது.

 

அப்ப திருப்பி கொடுத்துவிடுவோம். அதனால் பாதிப்பு சிங்களவனுக்கா தமிழனுக்கா? பாதிப்பு தமிழனுக்கென்றால் நிச்சயம் திருப்பி கொடுக்க மாடடார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வேறு அப்பப்ப காமெடி பண்ணுவார்! இதல்லாம் இப்ப முக்கியம்? காலங்கள் எத்தனை கடந்துவிட்டது, இவருக்கு இப்போ இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும். நாம், நம் நிலங்களை இழந்து தெருவில நிக்கிறோம், கச்சதீவுதான் பிரச்சனை இப்போது. இந்திய அமைச்சர்களை சந்திக்கும்போது எடுத்துக்கூறியிருக்கலாமே? படம் காட்டுவதே அவரது முன்னுரிமை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. கச்சதீவை திருப்பிக் கொடுத்துவிட்டு.. உங்கட அலுவலைப் பார்க்க வேண்டியது தானே. கச்சதீவை மீட்கப் போறம் என்றவையிட அரசியலும் அடங்கும்.. உங்கட வெட்டி விலாசல்களும் ஓயும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.