Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்ற 25 பேர் யார் ? நாட்டை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ள முயற்சியா ? - எதிர்க்கட்சி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

24 AUG, 2023 | 10:16 AM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்டுக்குள் உள்ளார்கள் என ஜனாதிபதிக்கு நெருக்கமானவரான வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். இது சாதாரணமானதொரு கருத்தல்ல, யார் அந்த 25 பேர் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பினார்கள். இவ்விடயம் குறித்து ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் பொறுப்பான தரப்பினர் எவரும் பதிலளிக்கவில்லை.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஒழுங்குகள் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.

விசேட கேள்வியை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஐ.எஸ்.ஐ.எஸ்.குண்டுத்தாக்குதல்தாரிகள் நாட்டில் உள்ளார்கள் என ஆளும் தரப்பின் உறுப்பினர் குறிப்பிடுகிறார். நாட்டை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளி ஆட்சியை கைப்பற்றும் திட்டமா இது என்றார்.

விவாதத்தில் உரையாற்றிய  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண ஊழல் மோசடியால் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை முழு உலகமும் நன்கு அறியும். ஊழலை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் இன்றும் அரச நிர்வாகத்தில் ஊழல் மிதமிஞ்சியுள்ளது.

இனவாத கருத்துக்கள் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது. இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெற்றால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலா பிரயாணிகள் எவ்வாறு நாட்டுக்கு வருவார்கள். ஜனாதிபதிக்கு நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவின் கருத்து பாரதூரமானது. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் பயிற்சிப் பெற்ற 25 பேர் நாட்டில் உள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அலட்சியப்படுத்த முடியாது. இந்த கருத்து குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன பயிற்சிப் பெற்றுள்ள அந்த 25 பேர் யார் என கேள்வி எழுப்பினார்.

விவாதத்தில்  உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வேலுகுமார் , ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் பயிற்சிப் பெற்றவர்கள் நாட்டில் உள்ளார்கள் என அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். குருந்தூர் மலை விவகாரத்தால் இலங்கையில் மீண்டும் இனவாத கலவரம் தோற்றம் பெறும் சூழல் காணப்படுவதாக இந்திய புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற மக்களை பலியாக்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/163062

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இங்கு தடை செய்யப்படட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களின் தடைகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஐசிஸ் அமைப்புக்கள் சுதந்திரமாக செயல்படலாம். முஸ்லீம் அரசியல்வாதிகளையும், அரபு நாடுகளையும் சந்தோஷப்படுத்த இந்த முடிவு எடுக்கபடாது. தேர்தலும் அடுத்த வருடம் நறைபெற இருப்பதால் இப்படியான பயங்கர வாத தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை; சஜித் அவசர அறிவிப்பு

நாட்டில் குருந்தூர் மலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இன மற்றும் மத கலவரங்கள் ஏற்படலாம் என்றும் மற்றும் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல்கள் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் தொடர்பில் உடனடியாக சர்வ கட்சி கூட்டத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் குறித்து அண்மைக் கலமாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த தினங்களில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் பல்வேறு புலனாய்வு அமைப்புகள்
தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு
இடையே பெரும் மோதல்கள் ஏற்பட்டு மேலும் கலவரமான நிலைமை மற்றும் மேலும் வெடிப்பு
சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்களிலும், உள்நாட்டு ஊடகங்களிலும் செய்திகள்
வெளியாகின்றன.

இது மிகவும் அச்சமிக்க விடயமாகும். இது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான விடயமாகும்.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்திடம் விசேட கோரிக்கையொன்றை விடுகின்றோம்.
உடனடியாக அனைத்து கட்சிகளையும் அழைத்து இவ்வாறான விடயம் உண்மையா? பொய்யா?
என்று கூற வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. இதனால்
இந்த விடயம் தொடர்பில் இந்த சபையின் அவதானத்தை செலுத்தி அனைத்து அரசியல்
தரப்பினரையும் தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார். R

Tamilmirror Online || புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை; சஜித் அவசர அறிவிப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அனால் ஈஸ்டர் குண்டு தாக்குதல் போலவே அரசு இதனையும் அலட்சியம் செய்திருக்கிறது. அப்படி ஒன்றும் இல்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். குண்டு வெடித்த பின்னர்தான் விசாரணையை தொடங்குவார்கள் போல. 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலை கைப்பற்ற எதுவேண்டுமானாலும் செய்வார்கள். முஸ் லீம் தமிழர் கலவரம், சிங்கள தமிழர் இனக்கலவரம், மதக்கலவரம் எதுவேண்டுமானாலும் நிகழலாம். மக்கள் எச்சரிக்கையாய் இருப்பதுபோலவே தோன்றுகிறது. அப்படியானால்; இனிமேல் இணைக்கலவரம் மதக்கலவரம் ஏற்படுத்துவோர் வீட்டுக்கு அனுப்பப்படுவர். அதையும் மீறி முயற்சிப்பார்களானால், தாங்கள் தூக்கிய ஆயுதத்தாலேயே மடிவர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.