Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் - குற்றவாளிகளை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் - ஐ.நா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

30 AUG, 2023 | 06:11 PM
image
 

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது என ஐக்கியநாடுகளின் இலங்கைக்கான நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார்.

அறிக்கையொன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை குறிக்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை இந்த ஈவிரக்கமற்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் - தங்கள் அன்புக்குரியவர்கள் எப்படி உள்ளனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியமுடியாத வேதனையை அனுபவித்தவர்கள் குறித்து எங்கள் சிந்தனைகள் திரும்புகின்றன.

இந்த தினம் இலங்கையில் ஆழமான பிரதிபலிப்புகளை கொண்டுள்ளது, இங்கு பல வருடங்களாக பல குடும்பங்களும் சமூகங்களும் நிச்சயமற்ற தன்மை மற்றும் துயரத்தை எதிர்கொண்டுள்ளதுடன் பதில்கள் அற்ற கேள்விகளின் நிழல்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

வலிந்து காணாமலாக்கப்படல் என்பது நாட்டின் வரலாற்றின் துயர்படிந்த கறையை விட்டுச்சென்றுள்ளது, நிச்சயமற்ற நிலையில் வாழும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது. அவர்களின் அன்புக்குரியவர்கள் இல்லாத -நிச்சயமாக இல்லை என கருதமுடியாத நிலை காணப்படுகின்றது.

கடந்த தசாப்தத்தில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படாத நிலையில் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலையை  அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்பதை அறிவதற்கு இலங்கையின் குடும்பங்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

பதில்களுக்கான அவர்களின் தளர்ச்சியற்ற நீடித்த தேடல்கள்  அவர்கள் மேலும் பழிவாங்கப்படும், அச்சுறுத்தப்படும் களங்கப்படுத்தப்படும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.

சமீபவருடங்களில் இலங்கை பலவந்தமாக காணாமல்போதலின் பாரம்பரியத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2015 இல் ஐசிபிபிஈடி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது – காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்படுத்தியது - இவை மைல்கற்களாகும்.

காணாமல்போனவர்கள் குறித்து காணாமல்போனவர்கள் அலுவலகம் பெற்றுக்கொண்டுள்ள வெளியிட்டுள்ள முறைப்பாடுகள் நீதியை வழங்குவது தொடர்பில் எற்பட்டுள்ள முன்னேற்றங்களிற்கான எங்களின் அளவுகோல்களாக காணப்படுகின்றன.

எனினும் உண்மை நீதி மற்றும் இழப்பீடு போன்றவற்றிற்கான பாதிக்கப்பட்டோரின் உரிமை தொடர்பில் இன்னமும் அதிகளவு செயற்பாடுகள் அவசியமாக உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் நிலை அவர்கள் எங்கிருக்கின்றார்கள் போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் துரிதப்படுத்தவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம், துயரத்தை எதிர்கொண்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கவேண்டும் குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

உண்மையை நிலை நாட்டுவது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் குடும்பத்தவர்களுக்கு மிகவும் அவசியமான விடயம், இதன் மூலம் மாத்திரமே காயங்களை ஆற்றும் நடவடிக்கை ஆரம்பமாக முடியும், நல்லிணக்க செயற்பாடுகள் ஆரம்பமாக முடியும்.

ஐக்கியநாடுகள் வலிந்து காணாமலாக்கப்படுதலினால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தவர்களுக்கு தொடர்ந்தும் தனது ஆதரவை வெளியிடுவதுடன் உண்மை நீதி நல்லிணக்கத்திற்காக வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டுள்ள போராட்டங்களிற்கும் தனது ஆதரவை வெளியிடுகின்றது.

நாங்கள் இன்றைய நாளை குறிக்கும் அதேவேளை வலிந்து காணாமலாக்கப்படுதல் என்பது கடந்த காலத்தின் ஒரு விடயமாக மாறுவதை உறுதி செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை புதுப்பித்துக்கொள்வோம்.

நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளிற்காக குரல்கொடுப்போம், நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம், எந்த குடும்பம் நிச்சயமற்ற நிலையில் வாழாத எதிர்காலத்தை உருவாக்குவோம்.

வலிந்து காணாமலாக்கப்படுதல் குறித்த பாரம்பரியத்திற்கு தீர்வை காண்பது வெறுமனே நீதியுடன் தொடர்புபட்ட விடயம் மாத்திரமில்லை முன்னேற்றம் பேண்தகு அபிவிருத்தி போன்ற பாதையை இலங்கை உருவாக்குவதற்கும் மிகவும் அவசியமானது.

https://www.virakesari.lk/article/163531

  • கருத்துக்கள உறவுகள்

வருடா வருடம் நடக்கும் நல்லூர் கோவில் திருவிழா போல், மடு திருவிழா போல்  இதுவும் வருடா வருடம் விடப்படும் அறிக்கை. அறிக்கையுடன் எல்லாம் முடிந்து விடும். அடுத்த வருடமும் இதே அறிக்கை. பாவம் ஐக்கிய நாடுகள்சபை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறைக்குள்ளாக்கி ஜனநாயக விரோதப் போக்கினை அரசாங்கம் முன்னெடுக்கிறது - ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியிடம் அநுரகுமார தெரிவிப்பு

30 AUG, 2023 | 08:46 PM
image
 

(எம்.மனோசித்ரா)

தேர்தலை நடாத்துவதற்கு கட்டளையை பிறப்பித்த நீதிபதிகள் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டுதாகவும், மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குமுறைக்குட்படுத்தி  அரசாங்கம் ஜனநாயக விரோத போக்கினை முன்னெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் வதிவிடப்பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் என்ட்ரோ ஃபிரெஞ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பத்தரமுல்லையிலுள்ள  மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைமையகத்தில்  இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது மேலும் தெரிவிக்கையில், 

இச்சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின் அபிவிருத்தி ஆலோசகர் மற்றும் வதிவிட ஒருங்கிணைப்பாளர் எட்வட், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கலந்துரையாடலின்போது இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அரசாங்கத்தின் பொருளாதார இலக்குகள் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்கள் மேலும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய அநுர குமார திசாநாயக்க, தேர்தலை நடத்தாது அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்துள்ளமை தொடர்பிலும் ஐ.நா. பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

https://www.virakesari.lk/article/163517

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார் ஐ. நா. சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர்

Published By: DIGITAL DESK 3

31 AUG, 2023 | 10:34 AM
image
 

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய வதிவிட ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche)மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன்கிழமை (30) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் இந்நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமித்தமே இச்சந்திப்பு இடம் பெற்றது.

இந்நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் பல கருத்துக்கள் இங்கு பரிமாறப்பட்டன.

நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு தெரியப்படுத்தினார்.

அவ்வாறே, தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை  ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பிலும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளாக அசாம் பாகீர் மாகர், தாரக்க ஹெட்டியாராச்சி  ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/163549

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் அறிக்கையும் நீங்களும்.  இரட்டை முகம் கொண்ட சுயநலவாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

உங்களின் அறிக்கையும் நீங்களும்.  இரட்டை முகம் கொண்ட சுயநலவாதிகள்.

ஒரு பக்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் திரும்பி மறுபக்கம் அதை ஏற்படுத்தியவர்களுக்கு பாராட்டு ஊக்குவிப்பு தெரிவிப்பு.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.