Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாளை இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

இலங்கைக்கான இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சனிக்கிழமை (2) நாட்டை வந்தடைவார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து ஆராய்வதே அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்துக்கான நோக்கம் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (3) வரை தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார்.

அதுமாத்திரமன்றி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையுடன் தற்போது நிலவும் நட்புறவை மேலும் விரிவுபடுத்திக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் குறித்து மீளுறுதிப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டியுள்ள உயர்ஸ்தானிகராலயம், பாதுகாப்புத்துறை சார்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வலுவான நட்புறவை மேலும் ஆழப்படுத்திக்கொள்வதில் இவ்விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமையும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவின் 'ஷி யான் 6' என்ற ஆய்வுக்கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியதையடுத்து மூண்ட சர்ச்சைகளின் பின்னணியிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இவ்விஜயம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாளை இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியாக கிடைத்த தகவல்களின் படி இவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளது. சீனாவின் ஆடசேபனையோ தெரியவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து ஆராய்வதே அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயத்துக்கான நோக்கம் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

 

13 hours ago, பிழம்பு said:

அவர் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவிருப்பதுடன், இதன்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் தொடர்புகள் குறித்து விரிவாக ஆராயவுள்ளார்.

 

2 hours ago, Cruso said:

கடைசியாக கிடைத்த தகவல்களின் படி இவரது பயணம் பிற்போடப்பட்டுள்ளது. சீனாவின் ஆடசேபனையோ தெரியவில்லை.  

எனக்குக் கிடைத்த தகவலின்படி, தாடியரின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாமல் பயணத்தை தவிர்த்து விட்டாராம் என்று சொல்கிறார்கள்! ஹாஹா.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு !

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் செப்டெம்பர் 2-3 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவாரென அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பான மாற்றுத் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படுமென இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/163674

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

அதன்படி இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் தொடர்பான மாற்றுத் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படுமென இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கும் திடீரென என்ன அவசரமான வேலையோ குறித்த திகதியை மாற்றுமளவுக்கு? அல்லது அவர்களோடு கலந்துரையாடாமல் திகதியை குறித்தனரோ? நாம் அற்ப மகிழ்ச்சியில் கற்பனை பண்ணி ஏதோ கருத்தெழுதுகிறோம், ஏதோ இலங்கையோடு முரண்டுபண்ணிஇந்தியா நமக்கு நன்மை செய்துவிடும்போல். 

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைப்புக்கு உள்நாட்டுக் காரணங்கள் எதுவுமில்லை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த

02 SEP, 2023 | 05:55 PM
image
 

ஆர்.ராம்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் விரைவில் இருதரப்புக்கும் பொருத்தமான புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு  இலங்கை வருவதாக நிகழ்ச்சி நிரலிடப்பட்டிருந்தபோதும்,  வெள்ளிக்கிழமை (01) இரவு திடீரென அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக டெல்லியால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின்போது திருகோணமலைக்கு விஜயம் செய்து முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய்குழாய் திட்டத்தையும் பார்வையிடுவதாக இருந்தது. 

எனினும், குறித்த எண்ணெய்க்குழாய் திட்டத்திற்கு உள்நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, உட்பட பல தரப்புக்களாலும் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

விசேடமாக, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும எண்ணெய்குழாய் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சென்று வட மத்திய மாகாணத்தையும் இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாகவும் அதற்காக 624 சதுர மைல் பரப்பை வழங்கவுள்ளதாகவும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், 144 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்படி உள்நாட்டு எதிர்ப்புக்கள் காரணமாகவா இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பிற்போடப்பட்டதா, இல்லை வேறெந்த இராஜதந்திர காரணங்களும் உள்ளனவா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு உத்தியோகபூர்வான விஜயம் மேற்கொண்டு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டபோதும், இறுதி தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்கள் அவரது விஜயம் பிற்போடப்பட்டிருப்பதாக எமக்கு உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் கிடைத்துள்ளன. 

அவருடைய விஜயம் பிற்போடப்பட்டமைப்புக்கு உள்நாட்டு காரணங்கள் எவையும் காரணமாக இல்லை.

அத்துடன், சில தரப்புக்களின் தவறான கோசங்கள் இராஜதந்திர உறவுகளில் செல்வாக்குச் செலுத்தவில்லை.

மேலும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் விரைவில் இடம்பெறவுள்ளதோடு, இரு நாடுகளும் பொருத்தமான திகதியையும் உறுதி செய்யவுள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/163711

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அவருடைய விஜயம் பிற்போடப்பட்டமைப்புக்கு உள்நாட்டு காரணங்கள் எவையும் காரணமாக இல்லை.

அத்துடன், சில தரப்புக்களின் தவறான கோசங்கள் இராஜதந்திர உறவுகளில் செல்வாக்குச் செலுத்தவில்லை

உந்த சலசலப்புக்கெல்லாம் இந்தியா என்கிற பனங்காட்டு நரி அஞ்சாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைப்புக்கு உள்நாட்டுக் காரணங்கள் எதுவுமில்லை - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த

ஆர்.ராம்

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் விரைவில் இருதரப்புக்கும் பொருத்தமான புதிய திகதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு  இலங்கை வருவதாக நிகழ்ச்சி நிரலிடப்பட்டிருந்தபோதும்,  வெள்ளிக்கிழமை (01) இரவு திடீரென அவரது விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக டெல்லியால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையின்போது திருகோணமலைக்கு விஜயம் செய்து முன்னெடுக்கப்படவுள்ள எண்ணெய்குழாய் திட்டத்தையும் பார்வையிடுவதாக இருந்தது. 

எனினும், குறித்த எண்ணெய்க்குழாய் திட்டத்திற்கு உள்நாட்டில் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, உட்பட பல தரப்புக்களாலும் பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

விசேடமாக, திருகோணமலையில் முன்னெடுக்கப்படும எண்ணெய்குழாய் திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்திற்கு அப்பால் சென்று வட மத்திய மாகாணத்தையும் இந்தியாவுக்கு எழுதிக் கொடுக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறங்கியுள்ளதாகவும் அதற்காக 624 சதுர மைல் பரப்பை வழங்கவுள்ளதாகவும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன், 144 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேற்படி உள்நாட்டு எதிர்ப்புக்கள் காரணமாகவா இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விஜயம் பிற்போடப்பட்டதா, இல்லை வேறெந்த இராஜதந்திர காரணங்களும் உள்ளனவா என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இல ங்கைக்கு உத்தியோகபூர்வான விஜயம் மேற்கொண்டு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டபோதும், இறுதி தருணத்தில் தவிர்க்க முடியாத காரணங்கள் அவரது விஜயம் பிற்போடப்பட்டிருப்பதாக எமக்கு உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் கிடைத்துள்ளன. 

அவருடைய விஜயம் பிற்போடப்பட்டமைப்புக்கு உள்நாட்டு காரணங்கள் எவையும் காரணமாக இல்லை.

அத்துடன், சில தரப்புக்களின் தவறான கோசங்கள் இராஜதந்திர உறவுகளில் செல்வாக்குச் செலுத்தவில்லை.

மேலும், இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் விரைவில் இடம்பெறவுள்ளதோடு, இரு நாடுகளும் பொருத்தமான திகதியையும் உறுதி செய்யவுள்ளன என்றார்.v

https://www.virakesari.lk/article/163711

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தொடர்பாக இந்தியா சில கோரிக்கை வைத்ததாகவும் , அதனை ஸ்ரீ லங்கா மறுத்து விட்ட்தாகவும் அறிய கிடைக்கின்றது. இதுவும் ஒரு காரணமோ தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்தது ஏன்?: எழும் சர்ச்சை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயத்தை இறுதி நேரத்தில் இரத்து செய்தமை தொடர்பில் உலக அரசியல் தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் கடந்த வார இறுதியில் இந்த நாட்டிற்கு விஜயம் செய்யவிருந்தார், ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விஜயத்தை இரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது.

எனினும், அவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் திகதி தொடர்பில் எவ்வித அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படவில்லை.

சீன ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு அனுமதி கோரிய பின்னணியிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய விடயங்கள் உருவாகி வரும் நிலையில், உலகம் முழுவதும் பல அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் இது குறித்து பேசி வருகின்றனர்.

உலகின் நான்காவது பலம் வாய்ந்த இராணுவ சக்தியாக கருதப்படும் இந்திய பாதுகாப்பு படையின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் இரத்து செய்யப்பட்டமை பாரிய பிரச்சனை என அரசியல் மற்றும் பாதுகாப்பு துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் குறித்து பல சுற்று முக்கிய பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்க தலைவர்களை சந்திக்க இந்திய பாதுகாப்பு அமைச்சர் திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது
 

http://www.samakalam.com/இந்திய-பாதுகாப்பு-அமைச்-4/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.