Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனாவா ? இந்தியாவா ? எனக்கேட்டால் இந்தியாவிற்கே முன்னுரிமை - அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

01 SEP, 2023 | 09:08 PM
image
 

சீனாவா இந்தியாவா எனக்கேட்டால் இந்தியாவிற்கே முன்னுரிமை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்ட நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி கேட்டபேதே அவர் இதனை தெரிவித்தார்.

சீனக் கப்பல்  இலங்கை வருகை தரவுள்ளமை தொடர்பில்  இந்த விடயம் ஒரு பேசு பொருளாகவுள்ளது, இந்த நிலையில் நீங்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் விஐயம் மேற்கொண்டு வந்துள்ளமையால் உங்களின் நிலைப்பாடு என்ன என  ஊடகவியலாளர்களால் கேட்ட போது

சீனா இந்தியா இருநாடுகளும் தேவைதான். ஆனால் எதற்கு முக்கியத்துவம் என்றால் இந்தியாவிற்கே முக்கியத்துவம் தருவேன் என்றார்.

இதேவேளை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை தரவுள்ள நிலையில் அவரிடம் தமிழ் கட்சிகள் கடற்தொழில்  பிரச்சினைகள் குறிப்பாக எல்லை தாண்டும் மீனவர்களால் போதைவஸ்து கடத்தல் இடம் பெறுகின்றமை தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என கடற்தொழிலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளமை கேட்டபோது

போதைவஸ்து கடத்தபடுகிறது தொடர்பில் அதனை கூறியவரிடம்தான் கடத்தல் தொடர்பில் கேட்கவேண்டும்.  அவர்களது ஊகங்களுக்கு பதில் கூற என்னால் முடியாது அவர்களிடம்தான் இதனை கேட்க வேண்டும். மேலும்   இந்திய பாதுகப்பபு அமைச்சர் இலங்கை வருகின்றபோது அவருடன் எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவேன் என்றார்.

இதேவேளை கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் சீமெந்து தொழிச்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால் அந்த முயற்சி கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோது சிமெந்து தொழிற்சாலை அமைவதாயின் அதற்கான விஞ்ஞான ரீதியாலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு அமைப்பதற்கு ஏற்ற இடம் அடையாளப்படுத்தப்பட்டால் மாத்திரமே அங்கு சிமெந்து தொழிற்சாலை அமைக்கப்படும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறுத்தப்படுகின்ற விடயம் அல்ல என்றார்.

https://www.virakesari.lk/article/163662

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடம் போய் எந்தக்கேள்வியை கேட்க்கிறது என்கிற விவஸ்தையே இல்லாமற் போய்விட்டது ஊடகவியலாளர்களுக்கு.

5 hours ago, ஏராளன் said:

எல்லை தாண்டும் மீனவர்களால் போதைவஸ்து கடத்தல் இடம் பெறுகின்றமை தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என கடற்தொழிலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளமை கேட்டபோது

போதைவஸ்து கடத்தபடுகிறது தொடர்பில் அதனை கூறியவரிடம்தான் கடத்தல் தொடர்பில் கேட்கவேண்டும்.  அவர்களது ஊகங்களுக்கு பதில் கூற என்னால் முடியாது அவர்களிடம்தான் இதனை கேட்க வேண்டும்

கடற்தொழில் அமைச்சர், அது சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை., பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதிக்குரிய கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார். நாட்டிலே மிக முக்கிய பிரச்சனை போதைப்பொருள் அதுவும் கடல் வழியாக கடத்தப்படுகிறது அதை ஊகம் என்று சொல்பவர் மேல் சந்தேகம் எழுகிறது, இவர்தான் இவற்றின் பின்னால் செயற்படுகிறார் என. புலிகளின் வீழ்ச்சிக்குப்பின்னால் நுழைந்தது போதைப்பொருள் வடக்கில். அரசின் ஒத்துழைப்பில்லாமல் அது சாத்தியமில்லை, அரசின் முகவர்களாக இவர் போன்றோர்  அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதை தவிர இவர்கள் வேறொன்றும் சாதிப்பதாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பங்கெடுக்கும் அரசோ, சீனாக்காரன் பெஸ்ட் எண்டுதே....

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு ஏதோ விளங்குது போலிருக்குது, வில்லங்கத்தை ஏன் வாங்குவான் என நினைக்கிறாரோ என்னவோ? பிரித்தாள நினைப்பவர்களுக்கு இப்படியான இனத்தை விற்று பிழைப்பு நடத்தும் இவர்கள் தேவை. அவர்கள் எப்பக்கம் பேசினாலும் எந்த அமைச்சரவையில் அமர்வார்கள் என்பதே முக்கியம். முதல்நாள் கோத்தாவுக்கு வக்காலத்து வாங்கியவர் மறுநாள் ரணிலின் அமைச்சரவையில் அமர்ந்தது எப்படி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.