Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்குமா நெஞ்சம்' - ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மறக்குமா நெஞ்சம்' - ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள்

 

 

ar rahman about marakuma nenjam concert issue

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த மாதம் 12ஆம் தேதி சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொடர்ந்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அன்று அரங்கில் மழை காரணமாக நீர் தேங்கியதால் ஒத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்காக பல்வேறு ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். பின்பு ஏ.ஆர் ரஹ்மான் ரசிகர்களின் பதிவுகளுக்கு பதிலளித்து சமாதானப்படுத்தினார். 

 

இதையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (10.09.2023) 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். இதில் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூட கடும் போக்குவரத்து பாதிப்பு அப்பகுதியில் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலே வீடு திரும்பியதாகவும் கூறியிருந்தனர். மேலும் பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அதோடு கூட்ட நெரிசலில் பலருக்கும் மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

 

இந்த நிகழ்ச்சி குறித்து பலரும் மோசமான நிகழ்ச்சி ஏற்பாடு என குற்றம் சாட்டினர். இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், "அபரிமிதமான கூட்டம் எங்கள் நிகழ்ச்சியை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறது. கூட்ட நெரிசலால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் எங்களை மன்னிக்கவும். அதற்கான பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என எக்ஸ் தள பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தது. 

 

இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கி துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நிகழ்ச்சிக்குள் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை பகிரவும்" எனக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அந்த மின்னஞ்சலில் ரசிகர்களின் குறைகளை குறிப்பிடுமாறும், அது குறித்து அவர்கள் குழு விரைவில் பதிலளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். 

 

https://www.nakkheeran.in/cinema/cinema-news/ar-rahman-about-marakuma-nenjam-concert-issue

இன்றைய தமிழக மீடியாக்கள், சமூக வலைத்தளங்கக் பரபரப்பாக்கிய செய்தி இது.

செந்தில் பாலாஜியின் விடயத்தை மேவ, சீமான் + விஜயலட்சுமி விடயம் தூக்கி பிடிக்கப்பட்டது. பின் சனாதன தர்மம் பற்றி உதயநதி கூறியது விவாதம் ஆனது. அதை மேவ, சீமான் கைது செய்யப்பட போகிறார் என்று பரபரப்பை கிளப்பினார்கள்.  அது முடிய முன் ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து சொதப்பிய இந்த இசை நிகழ்ச்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதி தீர்கின்றார்கள்.

நாங்களும், நான் உட்பட பொழுது போகாமல் இவற்றை வாசித்து தள்ளுகின்றோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த செய்தி வீடியோவில் தமிழ்நாட்டு மக்கள் கொதித்து தங்களுக்கு அநீதி நடந்துவிட்டது என்று சொல்வதை பார்த்து நான் முதலில் சீனா குண்டு போட்டுவிட்டதோ, சுனாமி தான் வந்துவிட்டதோ என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/9/2023 at 23:23, நிழலி said:

இன்றைய தமிழக மீடியாக்கள், சமூக வலைத்தளங்கக் பரபரப்பாக்கிய செய்தி இது.

செந்தில் பாலாஜியின் விடயத்தை மேவ, சீமான் + விஜயலட்சுமி விடயம் தூக்கி பிடிக்கப்பட்டது. பின் சனாதன தர்மம் பற்றி உதயநதி கூறியது விவாதம் ஆனது. அதை மேவ, சீமான் கைது செய்யப்பட போகிறார் என்று பரபரப்பை கிளப்பினார்கள்.  அது முடிய முன் ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்து சொதப்பிய இந்த இசை நிகழ்ச்சி பற்றி பக்கம் பக்கமாக எழுதி தீர்கின்றார்கள்.

நாங்களும், நான் உட்பட பொழுது போகாமல் இவற்றை வாசித்து தள்ளுகின்றோம்.

 

உண்மை தான். முன்பு பத்திரிகை ஒன்றின் சிறிய பிரதேச நிருபருக்கு இருந்த பொறுப்புணர்வு கூட தற்போது பத்திரிகை ஆசிரிய பீடத்துக்கு இல்லை.  டிகிட்டல் யுகத்தை துஷ்பிரயோகம் செய்வதில் இந்திய பத்திரிகைகள்  முன்னிலை வகிக்கிறன. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.