Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரத்வீரசேகரஅமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு விசா மறுக்கப்படுகின்றதா? ஐலண்ட் செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதை அமெரிக்க தூதரகம்  தாமதிக்கின்றது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்தமாதம் அமெரிக்காசெல்லவுள்ள இலங்கை நாடாளுமன்ற குழுவில் இடம்பெற்றுள்ள சரத்வீரசேகரவிற்கு விசா வழங்க முடியாது  அவருக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமியுங்கள் என அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளதால் சர்ச்சை மூண்டுள்ளது என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவகம் யுஎஸ்எயிட்டின் நிதிஉதவியுடன் இலங்கையின் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர்களிற்கான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 20 நாடாளுமன்ற மேற்பார்வை குழுக்கள் உள்ளன அவற்றிற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிலையம் ஆதரவளிக்கின்றது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு  இன்று கடிதமொன்றை எழுதவுள்ளதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளார் என ஐலண்ட் செய்தி வெளியிட்;டுள்ளது.

இது குறித்து சபாநாயகர் அமெரிக்க தூதுவரிடம் விளக்கமொன்றை பெறுவார் என நம்புகின்றேன் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது விமர்சனங்களால் அமெரிக்கா அதிருப்தியடைந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

தனக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்கவேண்டும்  என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர  எனக்கு விசா வழங்கத்தவறியுள்ளமை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சரத்வீரசேகரஅமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு விசா மறுக்கப்படுகின்றதா? ஐலண்ட் செய்தி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

 

தனக்கு பதில் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்கவேண்டும்  என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என நாடாளுமன்றத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர  எனக்கு விசா வழங்கத்தவறியுள்ளமை குறித்து தெளிவான விளக்கம் வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சரத்வீரசேகரஅமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு விசா மறுக்கப்படுகின்றதா? ஐலண்ட் செய்தி | Virakesari.lk

அப்படி எல்லாம் விளக்கமளிக்க வேண்டிய தேவை இல்லை. கனேடிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு இலங்கை அரசாங்கம்  விசா வழங்க மறுக்கும்போது இவருக்கு விசா மறுக்கப்படுவது ஒன்றும் பிரச்சினை இல்லை.

மேலும், USAID என்பது அவர்களின் நிதி உதவியுடன் நடத்தப்படும் தொண்டு நிறுவனம். எனவே அவர்கள் யாரை அழைப்பது என்று தீர்மானிக்கலாம். இந்த இனவாதிக்கு விசா வழங்கவே கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியில் அமெரிக்காவின் பங்கு குறித்த தனது விமர்சனங்களால் அமெரிக்கா அதிருப்தியடைந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தவறிய, நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து காக்கத்தவறிய ஜனாதிபதியை தெரிந்தெடுத்த மக்களே துரத்தினார்கள். இதில், அமெரிக்கா எங்கே வந்தது? தவறான பொருளாதார ஆலோசனையினாலேயே கோத்தா பதவி விலக வேண்டி வந்தது என சம்பந்தப்பட்டவர்களும் ஏற்று விளக்கமளித்துள்ளனர். இவர் தன் தவறை மறைத்து அமெரிக்காமேல் பழி போட்டு, தான் சுத்தம் என நிறுவ முயற்சிக்கிறார். அதைவிட அமெரிக்கா விசா அளிக்காமைக்கான காரணத்தை விளக்கியுள்ளது. விளக்க குறைபாடு போலுள்ளது சரத் வீரசேகரவுக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆளை விட்டால், வெள்ளைமாளிகையில் புத்தர் புக்கை திண்டார். அங்கே விகாரை கட்ட வேணும் எண்டு அடம் பிடிப்பார் எண்டு அமேரிக்கன்ஸ் பயந்திட்டாங்கள் போல!

பார்தீங்களா, தலைட தில்ல!! 😎👍

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா ஓரவஞ்சனையாக செயற்படுகிறது - சரத் வீரசேகர விசனம்

26 SEP, 2023 | 07:54 PM
image

(எம்.மனோசித்ரா)

அமெரிக்க தூதரகத்தினால் தனக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளமையானது அமெரிக்காவின் ஓரவஞ்சனை செயற்பாடு என விசனம் வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இலங்கையில் ஒரு குறிப்பிட்ட குழுவினரை இலக்கு வைத்து அமெரிக்கா இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர அமெரிக்காவின் வாஷிங்டனில் அடுத்தமாத இறுதியில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வீசாவுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அவருக்கு விசா வழங்குவதை அமெரிக்கா தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாம் நாட்டைப்பற்றியும், நாட்டின் சுயாதீனத்தன்மை பற்றியும் பேசுகின்றமையால் அமெரிக்கா எமக்கெதிராக இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. 

இதனை அடிப்படையாகக் கொண்டு எமக்கு வீசா மறுக்கப்பட்டிருக்கலாம். நான் இதற்கு முன்னர் அமெரிக்காவில் பயிற்சிகளைப் பெற்றிருக்கின்றேன். அவ்வாறிருந்தும் தற்போது எனக்கு வீசா வழங்க மறுத்துள்ளனர். தமிழ் டயஸ்போராக்களின் வாக்குகளையே இவர்கள் இதன் மூலம் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும்.

வீசா வழங்குவதென்பது அமெரிக்காவின் உரிமையாகும். எனவே இவ்விடயத்தில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. எவ்வாறிருப்பினும் ஒரே நாட்டுக்குள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக பார்க்க முடியாது. ஆனால் இது போன்ற விடயங்களில் அமெரிக்கா ஓர வஞ்சனையாகவே செயற்படுகிறது. அதே போன்று யாரை அனுப்ப வேண்டும் என்றும் அவர்களால் கூற முடியாது. அது எமது உரிமையாகும்.

இவர்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் சுயாதீனத்தன்மையை மீது தாக்குதலை மேற்கொள்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அரசாங்கம் துணிச்சலுடன் செயற்பட வேண்டும். தனிப்பட்ட விவகாரங்களில் உங்களால் தலையிட முடியாது என்று அரசாங்கம், அமெரிக்காவுக்கு நேரடியாகக் கூற வேண்டும் என்றார்.

அமெரிக்காவின் விவசாய திணைக்களம் மற்றும் ஜனநாயகத்துக்கான தேசிய நிறுவனம் ஆகியவை தற்போதைய பாராளுமன்றத்தில் செயல்படும் ஒவ்வொரு துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்களையும் வாஷிங்டனுக்கு பயிற்சி பட்டறையொன்றுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளன. இதற்காக துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனைத்து தலைவர்களும் விசாவைப் பெற வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் தேசிய பாதுகாப்பு மேற்பார்வைக் குழுவின் தலைவருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் விசா வழங்கப்படவில்லை. அதற்கமைய வாஷிங்டன் விஜயத்துக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர்கள் பட்டியலில் இருந்து தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகரவின் பெயர் நீக்கப்பட வேண்டும் என்றும், வேறு ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் செயலமர்வு ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/165515

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்துக்கு முழுமையான ஆதரவு வழங்கியதன் காரணமாகவே அமெரிக்கா இவ்வாறு எமக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆமா.... ஒரு சில மாதங்களுக்கு முன் உங்கள் அமைச்சர் அலி சப்ரி, புலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் புலனாய்வுத்தகவல்களே உதவின, அவர்களின் ஒத்துழைப்புடனேயே புலிகளின் ஆயுத விநியோகத்தையும், நிதி திரட்டும் நடவடிக்கைகளையும் தடுக்க முடிந்தது, அவர்கள் எங்களுக்கு உதவியிருக்கா விட்டால் எங்களால் விடுதலை புலிகளை தோற்கடித்திருக்க முடியாது என்று புகழாரம் சூட்டினாரே!  அது எப்படி ஒரே விடயத்தில் ஆதரவாகவும் எதிராகவும் அமெரிக்காவால் செயற்பட முடியும்? இவருக்கு தடை விதித்ததன் காரணம், நாட்டில வன்முறையை தூண்டுவது போல

அமெரிக்காவிலும் தூண்டி விடுவாரோவென அமெரிக்கா பயத்திருக்குமோ?

41 minutes ago, ஏராளன் said:

இது போன்ற விடயங்களில் அமெரிக்கா ஓர வஞ்சனையாகவே செயற்படுகிறது.

இவர்கள் மட்டும் நடுவு நிலையாளர் என்கிற நினைப்பு!

42 minutes ago, ஏராளன் said:

அதே போன்று யாரை அனுப்ப வேண்டும் என்றும் அவர்களால் கூற முடியாது. அது எமது உரிமையாகும்.

அதே போன்று யாரை தங்கள் நாட்டுக்குள் அனுமதிப்பது என்று முடிவு செய்வது அவர்கள் உரிமை. நீங்கள் சர்வதேச விசாரணையை எதிர்க்கிறீர்கள், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு விசா மறுக்கிறீர்கள், அது மட்டும் என்ன நிஞாயம்?    

 

 

  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.