Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈராக்கில் திருமண மண்டபத்தில் தீ -100 பேர் பலி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் திருமண மண்டபத்தில் தீ -100 பேர் பலி!

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
 

http://www.samakalam.com/ஈராக்கில்-திருமண-மண்டபத்/

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் திருமண நிகழ்வில் பாரிய தீ விபத்து – 100 பேர் பலி

Published By: RAJEEBAN

27 SEP, 2023 | 11:08 AM
image
 

ஈராக்கில் திருமண நிகழ்வொன்றின் போது  ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு ஈராக்கில் திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்தில் மணமக்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

அல்ஹம்டனியா மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

F7AgVtzXAAA3j6O.jpg

தீவிபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் வெளியாகதபோதிலும் பட்டாசுகள் கொழுத்தப்பட்ட பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்துவதற்காக போராடுவதையும் எரியுண்ட உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகின்றன.

மீட்புபணிகளில் தீயணைப்புவீரர்கள் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்களும் வெளியாகின்றன.

தீவிபத்து ஏற்பட்டவேளை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திருமண கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மண்டபத்திலிருந்து தீ வெளியே வருவதை நாங்கள் பார்த்தோம் உள்ளே சிக்குண்டிருந்த சிலர் தப்பினார்கள்  வெளியேற முடியாதவர்கள் உள்ளே சிக்குண்டனர் என தீவிபத்திலிருந்து உயிர் தப்பிய 34 வயது இமாட் யொகான தெரிவித்துள்ளார்.

மணமகனும் மணமகளும் நடனமாடிக்கொண்டிருந்தவேளை கூரையில் தீப்பற்றியது முழு கட்டிடமும் தீப்பிடித்தது என கையில் காயங்களுடன் உயிர்தப்பிய ரணியா வாட் தெரிவித்துள்ளார்.

zAtXFmx7.jpg

எங்களால் எதனையும் பார்க்கதுடியவில்லை மூச்சுதிணறியது எப்படி வெளியேறுவது என தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/165530

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இப்போதெல்லாம் எல்லா கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் புகை படர விடுவதும் புஷ்வாணங்கள் கொழுத்துவதும் சாதாரணமாக நடைபெறுகிறது.......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
28 minutes ago, suvy said:

இங்கும் இப்போதெல்லாம் எல்லா கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் புகை படர விடுவதும் புஷ்வாணங்கள் கொழுத்துவதும் சாதாரணமாக நடைபெறுகிறது.......!

இங்கு நான் இருக்கும் இடங்களில் விழாக்களுக்கு மண்டபங்கள் வாடகைக்கு எடுத்தால் நெருப்பு அறவே பற்ற வைக்கக்கூடாது என எழுத்தில் எழுதி கையொப்பம் வாங்கி விடுவார்கள். சாமத்திய வீடு எல்லாம் சரிவராது. கலியாண வீடும் சரிவராது.பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மெழுகுவர்த்தி கூட பற்ற வைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, suvy said:

இங்கும் இப்போதெல்லாம் எல்லா கொண்டாட்ட நிகழ்ச்சிகளிலும் புகை படர விடுவதும் புஷ்வாணங்கள் கொழுத்துவதும் சாதாரணமாக நடைபெறுகிறது.......!

ஆனால் இங்கே ஆங்காங்கே fire exit என்பது, சட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

இலங்கையில் ஒரு திருமண விழாவுக்கு போயிருந்தேன், போகும் வழியே, வெளியேறும் வழி. எப்படி அனுமதிக்கிறார்கள் என்று யோசித்தேன்.

யாழில், நண்பர் கட்டிய வீட்டில், சமையல் அறைக்கு பக்கத்தில் வெளியே போக இரண்டாவது கதவு போட ஆலோசனை சொன்னேன். 

அவரகள் கட்டும் இரண்டு அறை வீட்டுக்கு, முன்கதவு மட்டுமே. செலவு மற்றும் திருடர்கள் உள்ளே வரலாம் என்று யோசித்தாக சொன்னார்.

யன்னல் முழுவதும் கொசுவுக்கு நெட் அடித்து வைத்திருக்கிறீர்கள். முன்கதவு திறக்கவில்லை, அல்லது தீ... எப்படி வெளியேறுவீர்கள் என்று கேட்க, யோசித்து, சரிதான் என்றார். 

7 minutes ago, குமாரசாமி said:

இங்கு நான் இருக்கும் இடங்களில் விழாக்களுக்கு மண்டபங்கள் வாடகைக்கு எடுத்தால் நெருப்பு அறவே பற்ற வைக்கக்கூடாது என எழுத்தில் எழுதி கையொப்பம் வாங்கி விடுவார்கள். சாமத்திய வீடு எல்லாம் சரிவராது. கலியாண வீடும் சரிவராது.பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மெழுகுவர்த்தி கூட பற்ற வைக்க முடியாது.

இங்கு, மெல்லிய நெருப்பு, அய்யோரோட அல்லக்கை ஒருவர், fire extinguisher உடன் ரெடி என்று கதை விட்டு, அனுமதி வாங்கி விடுகின்றனர். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் நான் சென்ற அத்தனை கொண்டாட்டங்களிலும் மேடையில் நடைபெறும் சடங்குகளைப் பார்க்கவே முடிவதில்லை......மேடையை சுற்றிவர வீடியோ + கமராகாரர் குறைந்தது எட்டு பேர் , கைபேசியுடன் வீடியோ எடுக்க சூழ்ந்திருக்கும் அவர்களது உறவினர்கள் நண்பர்கள் இருபதுபேர் என்று நிற்பார்கள் ....... நாங்கள் அவர்களது முதுகைத்தான் பார்த்துக் கொண்டு இருக்க வேணும்......இந்த லட்சணத்தில் அட்சதையோ பூக்களோ தருவினம்..... அதை படப்பிடிப்பாளர்களின் முதுகில் எறிந்து போட்டு இருக்க வேண்டியதுதான்...... கொடுமை......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Nathamuni said:

இங்கு, மெல்லிய நெருப்பு, அய்யோரோட அல்லக்கை ஒருவர், fire extinguisher உடன் ரெடி என்று கதை விட்டு, அனுமதி வாங்கி விடுகின்றனர். 

இஞ்சையும் அப்பிடித்தான் ஹவுஸ்மாஸ்ரருக்கு பலகாரத்தட்டோடை ஒரு 50 ஈரோவையும் தள்ளி விட்டால் குத்துவிளக்கு அரைமணித்தியாலத்துக்கு எரிய விடலாம்.....🤣

நாங்கள் ஆரெண்டு கேக்கிறன் சுழியன்கள் எல்லோ 😎

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

இஞ்சையும் அப்பிடித்தான் ஹவுஸ்மாஸ்ரருக்கு பலகாரத்தட்டோடை ஒரு 50 ஈரோவையும் தள்ளி விட்டால் குத்துவிளக்கு அரைமணித்தியாலத்துக்கு எரிய விடலாம்.....🤣

நாங்கள் ஆரெண்டு கேக்கிறன் சுழியன்கள் எல்லோ 😎

போன ஆடி மாசம் அமெரிக்காவில ஒரு செத்த வீட்டுக்கு போயிருந்தேன். கடைசீல, கொள்ளி வைக்கிறேன் எண்டு மகன், கற்பூரம் கொண்டு போக, அதெல்லாம் போடஏலாது எண்டு நிக்குது வெள்ளை. அட, அதுக்குள்ள தானே நெருப்பு உடலை எரிக்கப்போகுது எண்டு சொல்ல, அது எலக்ட்ரிக் எண்டு அலம்பினார். ஒரு $100 டாலர் பில்லை ஒருத்தர் கையுக்கை வைத்து அமத்த, ஆள், திகைச்சு போய், நெய் மாதிரி உருகி, கவலைப்பட்டு நின்ற மகனை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அகன்றார். 

 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.