Jump to content

போலி தமிழக வைத்தியரால் ஏமாத்தபட்டாரா, லண்டன் தமிழ் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அப்படியா?

மீண்டும் தவறு செய்து அங்க போய் நிக்குதே? 🤔

அல்லது, பெண்ணுடனான தனிமை படத்தை வைச்சு காசு பறிக்கிறார்களோ?

யார் கண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வக்கீல்.. சில விடயங்களை மட்டும் திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறார்? தேவையற்றது..சிலருக்கு இந்த விடயங்களை திரும்பத் திரும்ப கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி(sick mentality) .. 

அந்த போலி வைத்தியர் தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை முதல் மனைவிக்கு வீடியோ கோலில் காட்டுவது.. ஒரு psycho .. வக்கிர புத்தி..

இந்த லண்டன் பெண் அந்த போலி வைத்தியர் நம்பரை ஏன் இன்னமும் வைத்திருக்கவேண்டும்..விளங்கவே இல்லை.. 

உண்மையில் சாட்டை துரைமுருகன் ஈழத் தமிழ்பெண்ணின் அக்கறையில் சொல்கிறாரா தெரியவில்லை.. விசியைப் பற்றி விமர்சிக்க இதுவும் ஒரு சான்ஸ்.

போலிகள் ஜாக்கிரதை!!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்படுவதை விடுத்து, சொல்பவர் யார் என்று பார்த்து கருத்து வைப்பது, நமக்கு (ஈழப் பெண்ணுக்கு) மூக்குப் போணாலும், (செய்தி சொல்லும் ) எதிரிக்கு சகுணப் பிழையாகணும் கதை தானே!!

Link to comment
Share on other sites

13 hours ago, P.S.பிரபா said:

வக்கீல்.. சில விடயங்களை மட்டும் திரும்பத்திரும்ப ஏன் சொல்கிறார்? தேவையற்றது..சிலருக்கு இந்த விடயங்களை திரும்பத் திரும்ப கதைப்பதில் ஒரு மனமகிழ்ச்சி(sick mentality) .. 

அந்த போலி வைத்தியர் தனது இரண்டாவது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் நேரங்களை முதல் மனைவிக்கு வீடியோ கோலில் காட்டுவது.. ஒரு psycho .. வக்கிர புத்தி..

இந்த லண்டன் பெண் அந்த போலி வைத்தியர் நம்பரை ஏன் இன்னமும் வைத்திருக்கவேண்டும்..விளங்கவே இல்லை.. 

உண்மையில் சாட்டை துரைமுருகன் ஈழத் தமிழ்பெண்ணின் அக்கறையில் சொல்கிறாரா தெரியவில்லை.. விசியைப் பற்றி விமர்சிக்க இதுவும் ஒரு சான்ஸ்.

போலிகள் ஜாக்கிரதை!!

உங்களுக்கு வெளிநாட்டு சட்டம் தெரியவில்லை போல. இந்தியர்  எத்தனை தாலி  கட்டியும்  வாழலாம் ஆனால் வெளிநாட்டுல் அப்படி வாழ முடியாது ஆகவே சட்டப்படி விவகாரத்தில் கையொபபம் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் அவர் இனி நிம்மதியாக இருக்கமுடியும். இதை புரியாத அதி புத்திசாலித்தனம் உள்ளவர்களுக்கு எப்படி புரியும்.. 

Edited by appan
Link to comment
Share on other sites

1 hour ago, appan said:

உங்களுக்கு வெளிநாட்டு சட்டம் தெரியவில்லை போல. இந்தியர்  எத்தனை தாலி  கட்டியும்  வாழலாம்.

இப்படி எந்த இந்தியச் சட்டம் சொல்கின்றது? 

Link to comment
Share on other sites

7 minutes ago, நிழலி said:

இப்படி எந்த இந்தியச் சட்டம் சொல்கின்றது? 

தாலி கட்ட சட்டம் தேவை இல்லை.(திருமண மண்டபத்தில் கட்டலாம்) சட்டப்படி எழுத்து எழுத சட்டம் தேவைதான். (அதை  உங்கள் விருப்ப படி எழுத முடியாது தானே.) 

Link to comment
Share on other sites

2 minutes ago, appan said:

தாலி கட்ட சட்டம் தேவை இல்லை.(திருமண மண்டபத்தில் கட்டலாம்) சட்டப்படி எழுத்து எழுத சட்டம் தேவைதான். (அதை  உங்கள் விருப்ப படி எழுத முடியாது தானே.) 

அப்படி என்றால் வெளி நாட்டில் இன்னும் இலகு அல்லவா? வீட்டில் தாலி கட்டி விட்டு Common law partner அல்லது Living together என்று தப்பிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

 சட்டப்படி விவகாரத்தில் கையொபபம் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தான் அவர் இனி நிம்மதியாக இருக்கமுடியும். இதை புரியாத அதி புத்திசாலித்தனம் உள்ளவர்களுக்கு எப்படி புரியும்.. 

அடேங்கப்பா சுப்ரீம் கோர்ட் லாயர் இங்கிலாந்து சட்டத்தை பிச்சு உதறுகிறார்🤣.

உலகின் எங்கு நடந்த திருமணத்தையும் அந்த நாட்டு சட்சத்தின் படி அது valid திருமணம் என்றால் அதை இங்கிலாந்து சட்டம் தனது சட்டதை மீறாத வரையில் ஏற்று கொள்ளும்.

மறுவளமாக எங்கு நடந்த திருமணத்தையும் தகுந்த காரணம் காட்டி (இதில் ஒன்று மண மகனின் அல்லது மணமகளின் domicile அல்லது habitual residence) இங்கிலாந்து நீதிமன்றம் ரத்து செய்யலாம்.

உங்களுக்கே ஒரு அறுப்பும் தெரியவில்லை இதற்குள் இன்னொரு கருத்தாளருக்கு புத்திசாலித்தனம் பற்றி நக்கல் வேற அடிக்கிறியள்🤣.

விவாகரத்தில் கையொப்பம் எல்லாம் வாங்க தேவையில்லை. இந்தியாவில் இருக்கும் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். தேவை என்றால் வக்கீல் வைத்து விவாகரத்து வேண்டாம் என வாதாடலாம். இல்லை என்றால் ஒத்து கொள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

1 minute ago, நிழலி said:

அப்படி என்றால் வெளி நாட்டில் இன்னும் இலகு அல்லவா? வீட்டில் தாலி கட்டி விட்டு Common law partner அல்லது Living together என்று தப்பிக்கலாம்.

பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது. (அதைவிட முக்கியம் தாலி கட்டி வாழ்ந்தால் அரசாங்கம் உதவி  செய்யாது ஆகவே எழுத்து முக்கியம் பாருங்கோ.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, appan said:

இந்தியர்  எத்தனை தாலி  கட்டியும்  வாழலாம் ஆனால் வெளிநாட்டுல் அப்படி வாழ முடியாது

இது உங்களுக்கு இந்திய சட்டம் பற்றிய புரிதலும் இல்லை என்பதை காட்டுகிறது.

1 minute ago, appan said:

பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது. (அதைவிட முக்கியம் தாலி கட்டி வாழ்ந்தால் அரசாங்கம் உதவி  செய்யாது ஆகவே எழுத்து முக்கியம் பாருங்கோ.. 

எழுதாமல் single parent ஆக வாழ்ந்தால் அரச உதவி கூட கிடைக்கும்.

வெளிநாட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது ஏதேனும் அத்திபட்டியில் இருந்து அடிச்சு விடுகிறீர்களா🤣

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

அடேங்கப்பா சுப்ரீம் கோர்ட் லாயர் இங்கிலாந்து சட்டத்தை பிச்சு உதறுகிறார்🤣.

உலகின் எங்கு நடந்த திருமணத்தையும் அந்த நாட்டு சட்சத்தின் படி அது valid திருமணம் என்றால் அதை இங்கிலாந்து சட்டம் தனது சட்டதை மீறாத வரையில் ஏற்று கொள்ளும்.

மறுவளமாக எங்கு நடந்த திருமணத்தையும் தகுந்த காரணம் காட்டி (இதில் ஒன்று மண மகனின் அல்லது மணமகளின் domicile அல்லது habitual residence) இங்கிலாந்து நீதிமன்றம் ரத்து செய்யலாம்.

உங்களுக்கே ஒரு அறுப்பும் தெரியவில்லை இதற்குள் இன்னொரு கருத்தாளருக்கு புத்திசாலித்தனம் பற்றி நக்கல் வேற அடிக்கிறியள்🤣.

அவர் இப்போது தான் கலியாண செய்துள்ளார். புகைப்படத்தை வைத்து அப்படி செய்ய முடியுமா தெரியாது. (அவர் லண்டனில் தாலி கட்டி ஆதாரம் இருந்தால் சிலவேளைகளில் சட்டம் சில சமயம் வேலையை செய்யும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

அவர் இப்போது தான் கலியாண செய்துள்ளார். புகைப்படத்தை வைத்து அப்படி செய்ய முடியுமா தெரியாது. (அவர் லண்டனில் தாலி கட்டி ஆதாரம் இருந்தால் சிலவேளைகளில் சட்டம் சில சமயம் வேலையை செய்யும். 

அப்ப வெறும் புகைபடம் மட்டும்தான் இருக்கு?

அப்ப அது இந்திய சட்ட படி கூட valid திருமணம் இல்லை?

பிறகென்னத்துக்கு விவாகரத்து? தூக்கி போட்டு விட்டு போக வேண்டியதுதானே?

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

இது உங்களுக்கு இந்திய சட்டம் பற்றிய புரிதலும் இல்லை என்பதை காட்டுகிறது.

எழுதாமல் single parent ஆக வாழ்ந்தால் அரச உதவி கூட கிடைக்கும்.

வெளிநாட்டில்தான் இருக்கிறீர்களா அல்லது ஏதேனும் அத்திபட்டியில் இருந்து அடிச்சு விடுகிறீர்களா🤣

சிங்கில் பெற்றோர் என்றாலும். அவருக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் அல்லவா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, appan said:

சிங்கில் பெற்றோர் என்றாலும். அவருக்கு குழந்தைகள் இருக்க வேண்டும் அல்லவா. 

 நீங்கள் தானே மேலே தாலி கட்டி வாழ்ந்தால் அரசு உதவாது என்றும். பிள்ளைகள் பிறந்தால் என்ன செய்வது என்று கேட்டீர்கள். அதற்கு பதில்தான் அது

4 hours ago, appan said:

அப்படி செய்ய முடியுமா தெரியாது

ஒரு விசயம் தெரியாமல் இருப்பது பிழை அல்ல.

அப்படி இருந்து கொண்டு இன்னொருவரின் புத்திசாலிதனத்தை பற்றி கதைப்பது ரொம்ப பிழை.

வட்டா.

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Nathamuni said:

இதுக்குத் தான் வீடீயோவ பாருங்கோ எண்டு தல, தலயா அடிச்சுக் கொண்டன்.

IMG-4651.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டணில் வாழும் பெண், போலி மருத்துவரின் வீடீயோவை நம்பி சிக்கி, சீரழிந்திருக்கிறார்.

இவர் அமர்த்திய வக்கீல் தவறான ஆலோசணை வழங்கி, பணம் பறிக்க, அவரது உறவினர் சாட்டை மூலமாக வேறு வழக்கறிஞரை ஏற்பாடு செய்துள்ளார்.

அவர், தனது எல்லைக்குள், சொல்லக் கூடியவற்றை மட்டும் சொல்கிறார். ஒருவர் தத்தி என்கிறார், இன்னொருவர் திருப்பித் திருப்பி சொல்கிறார் என்கிறார்.

சினிமா மோகத்தில் இருக்கும், ரிக்ரொக், இன்ஸ்ரா வில் வரும் எமது அடுத்த தலைமுறையை இலக்கு வைத்து சினிமாவில் நடிக்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அழைத்தவர்கள் மோசடியாளர்கள்.

மருத்துவம், முக்கியமாக IVF treatment செய்வதாக அழைத்து ஏமாத்தி பணத்தைப் பிடுங்கி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாத்திரைக்குப் போன வியாபார தம்பதிகள் கடத்தப்பட்டு கப்பம் கேட்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் பயணவிபரம் கடத்தியவர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

இது உங்கள் குடும்பத்துக்கும் நடக்கலாம்.  அது பற்றிய விழிப்புணர்வு வரவேண்டும் என்று ஒரு ஆதங்கத்தில் பதிந்தால், அவரவர் வந்து தமது வன்மங்களையும், விசமத்தனங்களையும் கொட்டுகின்றனர்.

இதனால், கருத்து வைப்பார்கள் என்று எதிர்பார்கக் கூடியவர்கள் கூட அயர்வுடன் கடந்து செல்கின்றனர்.

கடைசீல கவீ: நீங்களுமா??

இங்கே சொல்லப்படும் தீர்க்கமான செய்தி: தமிழகத்தில் வாழ்பவருக்கு யார் என்றே தெரியாத போலி வைத்தியர்கள், போலி சினிமா டைரக்டர்கள், போலி வியாபாரிகள், முக்கியமாக போலி யோசியர்கள்,  புலம் பெயர் தமிழர்களை யூரீயூப் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இலக்கு வைக்கின்றனர். இது குறித்து அவதானமாக இருங்கள். அடுத்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

நாளை உங்கள் உறவுக்கும் நடக்கலாம்!!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் சுண்டல், வாங்கோ, மீண்டும் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி👍
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • "திருந்தாத உள்ளம்"     "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!"   எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர்.   நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்!   அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை.   பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்?   ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார்.   நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது!   'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார்.   தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார்.   'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார்.   'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர்,   'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார்.   'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார்.   'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன்.   அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான்.   யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார்.   இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை.     "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?"   நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • வடக்கு, கிழக்கிலுள்ள இந்து ஆலயங்களில் சைவமக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்வதை உறுதிப்படுத்துங்கள் - அமைச்சர் விதுரவிடம் நல்லை ஆதீனம் கோரிக்கை Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 04:01 PM (எம்.நியூட்டன்) நல்லை ஆதீனத்துக்கு வருகை தந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்காவிடம் சைவமக்கள் சுதந்திரமாக குருந்தூர்மலை மற்றும் வெடுக்குநாறி சிவன் ஆலயங்களில் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் என வேண்டுதல் விடப்பட்டதுடன், திருக்கோணேமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பாதை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்தி புனித தலத்தின் மேன்மையைப் பேண வழிசெய்ய வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. காங்கேசன்துறையில் தல்செவன ஹோட்டல் அமைந்துள்ள பகுதியானது சைவமக்களின் பாவனையில் உள்ள சத்திரம் இருந்த நிலம். அது இதுவரை ஒப்படைக்கப்படவில்லை. அதனை உடன் வழங்க ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இவற்றுக்கு பதில் கூறிய அமைச்சர் குருந்தூர்மலை வெடுக்கு நாறி பகுதியில் சுதந்திரமாக வழிபாடு செய்யலாம் என்றும் அப்பகுதி தொல்லியல் திணைகளத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது என்றும் திருக்கோணேஸ்வர பெட்டிக்கடை அகற்றுவது தொடர்பாக மாற்று ஏற்பாடு விரைவில் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் காணி விடயமாக நடவடிக்கை எடுப்பதாக  தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை (24) நடைபெற்ற இந்த  சந்திப்பில் ஆதீன சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள், இந்துகலாசார திணக்களப் பணிப்பாளர் அநுருத்தன்  கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/186825
    • கல்முனை பகுதியில் பதற்ற நிலை; போக்குவரத்து பாதிப்பு; 7 மணித்தியாலங்களாக போராட்டகாரர் வசமான நகரம் Published By: DIGITAL DESK 3 24 JUN, 2024 | 03:54 PM   கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (24) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பதற்ற நிலை தொடர்ந்தது. அத்துடன், பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில்  அதிகாரிகளை உள்நுழைய விடாமல் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும்  அதற்கான உரிய தீர்வு கோரியும்  தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்  இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால்  வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார்  நடவடிக்கை எடுத்திருந்தனர். இதே வேளை 7 மணித்தியாலங்களாக  கல்முனை நகர் போராட்டக்காரர் வசம் இருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன், நகரில் இருந்து அனைத்து பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தது. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டிருந்தன. அத்துடன், தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன?  என பல  கோஷத்துடன் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர். பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் பொலிஸாரின் மத்தியஸ்த்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எட்டுப் பேர் மாவட்ட செயலகத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர்.  அதுவரை வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் வழமை போன்று கல்முனை வடக்கு பிரதேச   செயலகம் முன்பாக சுழச்சிமுறை போராட்டம் தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை வழமைக்கு மாறாக இன்று பாரிய விமானம் ஒன்று பெரும் இரைச்சலுடன் ஆகாயத்தில் வட்டமடித்த வண்ணம் இருந்ததையும் காண முடிந்தது. https://www.virakesari.lk/article/186845
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.