Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அத்தியாவசிய பொருட்கள் காசாவிற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படவேண்டும் - இலங்கை வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN 17 OCT, 2023 | 10:53 AM

image
 

ஹமாசின் தாக்குதலின் போது பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைவரையும்  உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காசாவில் அதிகரிக்கும் வன்முறைகள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள இலங்கை பணயக்கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹமாஸ் இஸ்ரேலில் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை கடுமையாக கண்டிக்கின்றோம்,  காசாவிற்கு பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்  பிரியங்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உணவு எரிபொருள் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் காசாவிற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படவேண்டும், இரு தரப்பும் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் இலங்கை வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கின்றது. தங்கள் அரசியல் மற்றும் ஏனைய நோக்கங்களை வன்முறைகள் மூலம் அடைவதற்கு முயல்பவர்கள் உட்பட  அனைவரையும் இலங்கை கண்டிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் தீர்மானங்களின் அடிப்படையில் பாலஸ்தீன விவகாரங்களிற்கு முழுமையான பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167056

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உணவு எரிபொருள் மருந்து உட்பட அத்தியாவசிய பொருட்கள் காசாவிற்கு சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படவேண்டும், இரு தரப்பும் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் இலங்கை வேண்டுகோள் விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கின்றது. தங்கள் அரசியல் மற்றும் ஏனைய நோக்கங்களை வன்முறைகள் மூலம் அடைவதற்கு முயல்பவர்கள் உட்பட  அனைவரையும் இலங்கை கண்டிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யார் யார் எதைக்கதைப்பது, யாருக்கு யார் அறிவுரை கூறுவது என்பதற்கு ஒரு  விவஸ்தையே  இல்லாமல் போய்விட்டது என்பதற்கு உதாரணம் தான் இது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஏராளன் said:

முழுமையான பேச்சுவார்த்தை மூலமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹ்ஹா ..... இவர்களால் அதை காண முடிந்ததா, கண்டு விட்டார்களா என்பதையும் அனுபவ ரீதியாக விளக்கினால் சம்பந்தப்பட்டவர்கள் முன்னெடுக்க முடியும். சும்மா உபதேசம் என்பது எல்லோருக்கும் தெரியும். சொந்த நாட்டுக்குள்ள ஆயிரம் பிரச்சனை, அதை தீர்க்க விரும்பவில்லை, சர்வதேசம் அறிவுரை, பொருளாதார உதவி செய்து காத்திருக்கு. இந்த லட்ஷணத்தில போட்டார் பல்ஸதீனத்துக்கு பாடம் எடுக்க.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான் வேதம் ஓதுகின்றது. தமிழர்களை பட்டினி போட்டு குண்டு மழை பொழிந்தவர்கள் ஆலோசனை சொல்லுகிறார்கள். வெளி விவகார அமைச்சரின் பேச்சாளருக்கு தங்கள் செய்த அடடூழியங்கள் எல்லாம் மறந்து விட்ட்து போல. பாவம் இலங்கை. இப்படி சொல்லியாவது அங்கு பிச்சை எடுக்கலாமென்று பாக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.