Jump to content

ஐ.பி.எல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ச்சிலின் அதிர‌டி ஆட்ட‌த்தால் கே கே ஆர்  வெற்றி.............

Link to comment
Share on other sites

  • Replies 257
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

ர‌ச்சிலின் அதிர‌டி ஆட்ட‌த்தால் கே கே ஆர்  வெற்றி.............

என்ன பையா குழப்பிறீங்க?

கேகேஆரில் ரச்சினா?

நடராஜனுக்காக கேகேஆர் தோற்கணும் என்று நினைத்தேன்.

மாறாக நடந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பையா குழப்பிறீங்க?

கேகேஆரில் ரச்சினா?

நடராஜனுக்காக கேகேஆர் தோற்கணும் என்று நினைத்தேன்.

மாறாக நடந்துவிட்டது.

இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நான்  Ander Russell சொன்னேன்

அவ‌ங்க‌ட‌ பெய‌ர்க‌ளை த‌மிழில் எழுதுவ‌து மிக‌ சிர‌ம‌ம்😁😜........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபை வெற்றி பெறச் செய்த சென்னையின் 'சுட்டிக் குழந்தை' - காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த் என்ன சாதித்தார்?

DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 23 மார்ச் 2024

“கேட்ச் மிஸ் மேட்ச் மிஸ்” என்று கிரிக்கெட்டில் சொல்வதுண்டு. அதுபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் வார்னர் கோட்டை விட்ட கேட்ச் உள்ளிட்ட பல்வேறு தவறுகளால் அந்த அணி வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தாரை வார்த்தது.

முலான்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றது.

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கி 4 பந்துகள் மீதிமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

சி.எஸ்.கே. அணியில் முன்பு விளையாடிய, சென்னை ரசிகர்களால் சுட்டிக்குழந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் சாம் கரண் பஞ்சாப் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

ராக்கெட் வேகத்தில் ரன்ரேட்

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண், பந்துவீ்ச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான ஆட்டத்தை டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் தொடங்கினர்.

சாம் கரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி 10 ரன்களை மார்ஷ் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார். அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரில் வார்னர் சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்களைச் சேர்த்து ரன்ரேட்டை எகிறச்செய்தார். ரபடா வீசிய 3வது ஓவரிலும் மார்ஷ் பவுண்டரி, சிக்ஸர் என 12 ரன்களைச் சேர்க்கவே டெல்லி அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது.

4வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய மார்ஷ் 2வது பந்தில் சஹரிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஷாய் ஹோப் களமிறங்கினார். ரபாடா வீசிய 5-வது ஓவரில் வார்னர் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 11 ரன்களை சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.

 
DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹோப், ரிஷப் பந்த் ஏமாற்றம்

பொறுமையாக பேட் செய்த ஹோப் அதிரடிக்கு மாறினார். சஹர் வீசிய 7-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களை விளாசினார். இதனால் 8-வது ஓவரில் ஹர்சல் படேல் பந்துவீச அழைக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது, ஹர்சல் படேல் ஓவரின் கடைசிப் பந்தில் வார்னர்29 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கார் விபத்துக்குப்பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ரிஷப் பந்த் நீண்ட காலத்துக்குப்பின் களமிறங்கி ஹோப்புடன் சேர்ந்தார். ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்ய, ஹோப் அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக்கொண்டார். 10ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்திருந்தது.

ஹோப் விக்கெட்டை வீழ்த்த ரபாடா அழைக்கப்பட்டார். ரபாடா வீசிய 11வது ஓவரில் சிக்ஸர் விளாசிய ஹோப், அதேஓவரில் ஷார்ட் கவரில் ஹர்பிரித் பிராரிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரிக்கி புயி களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். சஹர் வீசிய 12-வது ஓவரில் ரிஷப் பந்துக்கு ஒரு கேட்ச் வாய்ப்பை ஹர்சல் படேல் தவறவிட்டது மட்டுமின்றி பவுண்டரியும் கோட்டைவிட்டார்.

13-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார். ஹர்சல் ஓவரில் பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய ரிஷப் பந்த், ஸ்லோபவுன்ஸரில் விக்கெட்டை இழந்தார். ஹர்சல் வீசிய ஸ்லோ பவுண்ஸரில் ஸ்குயர் திசையில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரிவில் சிக்கிய டெல்லி

பிரார் வீசிய 14-வது ஓவரில் ரிக்கி புயி 3 ரன்களில் விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 74 ரன்கள் வரை டெல்லி அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்திருந்த நிலையில் அடுத்த 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது.

சஹர் வீசிய 15-வது ஓவரில் ஸ்டப்ஸ் 5 ரன்னில் சசாங் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக பேட் செய்த அக்ஸர் படேல் 21 ரன்னில் ரன்அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்துவந்த சுமித் குமார் 2 ரன்னில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

 
DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆபத்பாந்தவன் போரெல்

ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் அபிஷேக் போரல் வெளுத்து வாங்கிவிட்டார். 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தி 10 பந்துகளில் 33 ரன்கள் என அழகான கேமியோ ஆடி அணியை மீட்டெடுத்தார். குல்தீப் யாதவ் கடைசிப் பந்தில் ஒரு ரன்எடுக்க முற்பட்டு ரன்அவுட்டாகினார். அபிஷேக் போரல் 33 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20வது ஓவர் தொடக்கத்தில் டெல்லி வெற்றி பெற 38 சதவீத வாய்ப்பு இருப்பாத கணினி முடிவுகள் தெரிவித்த நிலையில் 20வது ஓவர் முடிவில் 55 சதவீதமாக உயர்ந்துவிட்டது.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது.

DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

பஞ்சாப் கிங்ஸ் அதிரடித் தொடக்கம்

175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஷிகர் தவண், பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே தவண் 2 பவுண்டரிகள், பேர்ஸ்டோ 2 பவுண்டரிகள் விளாசி 17 ரன்களைக் குவித்தனர். இசாந்த் சர்மா வீசிய 2வது ஓவரில் தவண் பவுண்டரி உள்பட 8 ரன்களைச் சேர்த்து ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார்.

விக்கெட் சரிவு

இசாந்த் சர்மா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவண் 22 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த பிரப்சிம்ரன் சிங் வந்தவேகத்தில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் 2 பவுண்டரிகளை விளாசினார்.

3வது பவுண்டரி அடிக்க ஸ்ட்ரைட் டிரைவ் ஆடியபோது, பந்து இசாந்சர்மா கைகளில் பட்டு ஸ்டெம்பில் பட்டதால் ரன்அவுட் முறையிடப்பட்டது. இதில் 3வது நடுவர் தீர்ப்பில் இசாந்த் சர்மா கைகளில் பட்டு ஸ்டெம்பில் பட்டது உறுதியாகவே, பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட் முறையில் வெளியேறினார். அடுத்து சாம் கரன் களமிறங்கி பிரப்சிம்ரன் சிங்குடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தது.

DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரப்சிம்ரன் அவசரம்

அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரிலும், குல்தீப் யாதவ் வீசிய 8-வது ஓவரிலும் பிரப்சிம்ரன், சாம் கரன் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். அதிலும் குல்தீப் தற்போது சர்வதேச அளவில் நல்லஃபார்மில் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரில் கூக்ளியாக வீசப்பட்ட பந்தை பிரப்சிம்ரன் சிங் லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க முற்பட்ட வார்னரிடம் கேட்சானது. பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் வெளியேறினார். 10ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது.

அடுத்து வந்த ஜிதேஷ் சர்மாவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 9 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து லியாம் லிவிங்ஸ்டோன் களமிறங்கி சாம்கரனுடன் சேர்ந்தார்.

DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக் கூட்டணி

14 ஓவர்கள் வரை ரன்ரேட் மெதுவாகவே சென்றது. மார்ஷ் வீசிய 15-வது ஓவரில் கரன் 2 பவுண்டரிகளும், லிவிங்ஸ்டோன் ஒரு சிக்ஸரும் விளாச 18 ரன்கள் கிடைக்கவே ஆட்டம் பரபரப்படைந்தது.

அதிரடியாக ஆடிய சாம்கரன் 39 பந்துகளில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

கலீல் அகமது வீசிய 17-வது ஓவரை குறிவைத்த லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். 18 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. மார்ஷ் வீசிய 18-வது ஓவரில் சாம்கரன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், லிவிங்ஸ்டோன் ஒருசிக்ஸரும் விளாசி 18 ரன்கள் சேர்த்து ரன்ரேட் நெருக்கடியைக் குறைத்தனர்.

 
DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி 2 ஓவர்களில்...

கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கலீல்அகமது வீசிய 19-வது ஓவரில் சாம் கரன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களமிறங்கிய சசாங்க் சிங் வந்தவேகத்தில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 4 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்டுகளை கலீல் அகமது எடுத்ததால் ஆட்டம் பரபரப்பானது.

கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. லிவிங்ஸ்டோன் களத்தில் இருந்ததால் பஞ்சாப் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. அதற்கு ஏற்றார்போல், கடைசி ஓவரை சுமித்குமார் முதல் இரு பந்துகளை வைடாக வீசினார், 2வது பந்தில் லிவிங்ஸ்டோன் சிக்ஸருக்கு வின்னிங் ஷாட் அடிக்கவே பஞ்சாப் வெற்றி உறுதியானது.

4 பந்துகள் மீதிருக்கையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. லிவிங்ஸ்டோன் 21 பந்துகளில் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

சொத்தையான பந்துவீச்சு

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் பலமாக அமைந்த வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா காயமடைந்தது அந்த அணிக்கு பலவீனமாக அமைந்தது. இதனால், மார்ஷ், கலீல் அகமதுக்கு முழு ஓவர்கள் வழங்க வேண்டியதிருந்தது. மார்ஷ் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களையும், கலீல் அகமது 43 ரன்களையும் வாரி வழங்கினார். இருவர் மட்டுமே சேர்ந்து 95 ரன்களை வழங்கி அணிக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தினர்.

குல்தீப், அக்ஸர் படேல் இருவரும் தங்களுக்குரிய பங்களிப்பை சரியாகச் செய்தனர். இருவரின் பந்துவீச்சால்தான், நடுப்பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரன்ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கலீல், மார்ஷ் பந்துவீச வந்தபின் லிவிங்ஸ்டோன், கரன் இருவரும் குறுகிய பவுண்டரி தொலைவைப் பயன்படுத்தி, குறிவைத்து டெல்லி கேபிடல்ஸ் அணியைத் தகர்த்தனர்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் கிடைத்த தருணத்தை பயன்படுத்தவில்லை. பேர்ஸ்டோ, தவண் ஆட்டமிழந்தவுடன் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தவறவிட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு பீல்டிங் இல்லை, சராசரிக்கும் குறைவாகவே பீல்டிங் தரம் இருந்தது. குறிப்பாக வார்னர் முக்கியமான கட்டத்தில் கேட்சை தவறவிட்டது ஆட்டத்தை தவறவிட்டதாக மாறிவிட்டது.

மார்ஷ், கலீல் அகமது இன்னும் லைன், லென்த்தில் பந்துவீசி இருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர் ரன் ரேட்டை இறுக்கிப் பிடித்தனரே தவிர விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இதுபோன்ற அடுக்கடுக்கான தவறுகளால் வெற்றி வாய்ப்புகளை பஞ்சாபிடம் டெல்லி தாரை வார்த்தது.

 
DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

பதற்றமாக இருந்தது

டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ இசாந்த் சர்மா காயமடைந்தது எங்களுக்கு பெரிய பாதிப்பாக அமைந்தது. அபிஷேக் போரல் கடைசி நேரத்தில் அடித்த கேமியோ ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தது. இசாந்த் சர்மா இல்லாததால் கூடுதல் பந்துவீச்சாளர்இல்லாதநிலையில் விளையாடினோம். நீண்டகாலத்துக்குப்பின் பேட்டிங் செய்த போது எனக்கு பதற்றம் இருந்தது. இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆடுகளம் அருமையாக இருந்ததால், அதிகமாக குறை கூறவிரும்பவில்லை. இந்த தோல்வியில் இருந்து நிச்சயம் பாடம் கற்போம்” எனத் தெரிவித்தார்.

வெற்றி நாயகர்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு சாம் கரன்(63), லிவிங்ஸ்டோன்(33) ஆகியோரின் ஆட்டம்தான் முக்கியக் காரணமாகும். நீண்ட பேட்டிங் வரிசை வைத்திருந்தும் பெரிதாக எந்த பேட்டரும் சோபிக்கவில்லை. ஆனால் 5-வது விக்கெட்டுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 67 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினர்.

DC vs PBKS

பட மூலாதாரம்,GETTY IMAGES

திருப்புமுனை ஓவர்கள்

குறிப்பாக மார்ஷ், கலீல் அகமது ஓவர்களை குறிவைத்து இருவரும் வெளுத்து வாங்கியதுதான் ஆட்டத்துக்கு உயிரை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியின் பிடியில் இருந்தது. ஆனால், 15 ஓவர்களுக்குப்பின் இருவரின் மிரட்டல் அடியால், ஆட்டத்தின் போக்கு, டெல்லியிடம் இருந்து பஞ்சாப் கிங்ஸ் கரங்களுக்கு மாறியது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் அடித்த சாம் கரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/c2jxrpl750jo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

KKR vs SRH: ஒரே பந்தில் மாறிய ஆட்டம் - கே.கே.ஆர்-க்கு 'மரண பயம்' காட்டிய கிளாசன் செய்த சிறு தவறு

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் 412 ரன்கள், 29 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகள், ரஸலின் ருத்ர தாண்டவம், கிளாசனின் ‘கிளாசிக்கான’ பேட்டிங், 3 ஓவர்களில் திரும்பிய ஆட்டம், கடைசி ஓவரில் எகிறிய இதயத் துடிப்பு என குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளம்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 4 ரன்களில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

முதலில் பேட் செய்த கேகேஆர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் பயணித்து, 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் போராடித் தோற்றது சன்ரைசர்ஸ் ஹைதரபாத்.

உண்மையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா திருடிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கிளாசனின் ஒட்டுமொத்த உழைப்பும் 2 பந்துகளில் வீணாகிவிட்டது.

 

திக்... திக்... கடைசி ஓவர்

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

மூன்று ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிக் காட்டிய ஹென்றிக் கிளாசன், கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது ராணா வீசிய முதல் பந்தில் சிக்ஸர் விளாசி கேகேஆர் அணி வீரர்களின் நம்பிக்கையை உடைத்தார். ஆனால் 2வது பந்தில் மட்டும் கிளாசன் ரன் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை தக்கவைத்து இருந்தால் முடிவு வேறு மாதிரி திரும்பியிருக்கும்.

ஆனால், 2வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஷான்பாஸ் அகமதுவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க 3வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 4வது பந்தில் புதிய பேட்டர் யான்சென் ஒரு ரன் எடுத்தார். 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் களத்தில் இருந்ததால் முடிவு சன்ரைசர்ஸ் பக்கம் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால், ராணா 5வது பந்தை ஸ்லோ பவுன்ஸராக வீச, கிளாசன் அடித்த ஷாட் தேர்டுமேன் திசையில் சூயசிடம் கேட்சாக மாறியதும் ஆட்டம் கை நழுவியது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் சன்ரைசர்ஸ் வெற்றி, பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை ஏற்பட்டது. கேப்டன் கம்மின்ஸ் கடைசிப் பந்தைத் தவறவிடவே, சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்தார் ராணா.

 

ஹீரோ ஆகும் நேரம்

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “17வது ஓவரில் இருந்தே என் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிட்டன. நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் கிளாசன் இருந்தவரை கடைசி ஓவரில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்று நினைத்தேன்.

கடைசி ஓவரை ஹர்சித் வீச வந்தபோது பதற்றத்துடனே இருந்தார். என்னிடம் அந்த நேரத்தில் அனுபவமான பந்துவீச்சாளர் இல்லை. எனக்கு ராணா மீது நம்பிக்கை இருந்தது. ஏதோ நல்லது நடக்கும் என்று தெரிந்தது.

நான் ராணாவிடம், 'தோற்றால்கூடப் பரவாயில்லை. இதுதான் நீ ஹீரோவாக உருவாகச் சரியான நேரம். வாய்ப்பைத் தவறவிடாதே. எது வேண்டுமானாலும் நடக்கட்டும்' என்று உற்சாகப்படுத்தினேன். அவரும் சிறப்பாகப் பந்து வீசினார்.

ரஸல் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அற்புதமாகச் செயல்பட்டார். நரைன் தனது அனுபவமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தொடக்கமே இதுபோன்ற வெற்றியாக அமைந்துவிட்டால், அணிக்கு பெரிய உற்சாகமாக அமையும். சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் அதில் முக்கியமானது ஃபீல்டிங்,” எனத் தெரிவித்தார்.

 

ஆபத்தான பேட்டர் கிளாசன்

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

ஒரு கட்டத்தில் கேகேஆர் அணியே வெற்றி பெற 99 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்த நிலையில் அந்தக் கணிப்பை கடைசி 3 ஓவர்களில் 88 சதவீதமாக கிளாசன் மாற்றிக் காட்டினார்.

கடந்த ஆண்டிலிருந்து டி20 உலகில் ஆகச் சிறந்த பேட்டராக கிளாசன் இருந்து வருகிறார். கிளாசனை முதல் 10 பந்துகளில் ஒரு அணி ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால், எதிரணிக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும் அளவுக்கு அவர் ஆபத்தான பேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் சுழற்பந்துவீச்சை அல்வா சாப்பிடும் வகையிலும், வேகப்பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறியும் வகையிலும் பேட் செய்யும் ‘பேட்டிங் ராட்சதன்’ கிளாசன் என்றுகூடக் கூறலாம்.

 

3 ஓவர்கள் ஆட்டத்தை திருப்பிய கிளாசன்

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

இந்த ஆட்டத்திலும் அதே நிலைதான். கடைசி 5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் அப்துல் சமது, ஷான்பாஸ் 17 ரன்கள் சேர்த்தனர்.

வருண் வீசிய 18வது ஓவரில் 3 சிக்ஸர் உள்ளிட்ட 21 ரன்களை கிளாசன் விளாசினார். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சைப் புரட்டி எடுத்த கிளாசன் 4 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். இந்த 3 ஓவர்கள்தான் ஆட்டத்தை கேகேஆர் அணியிடம் இருந்து சன்ரைசர்ஸ் கைக்கு மாற்றியது.

ரஸலால் முடிந்தது கிளாசனால் முடியாதா

கிளாசன் 29 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் பவுண்டரியே கிடையாது, 8 சிக்ஸர்கள் மட்டும்தான்.

கொல்கத்தா வெற்றி பெறாவிட்டால் ஆட்டநாயகன் விருது கிளாசனுக்கு கிடைத்திருக்கும். ஆனால், கிளாசனின் ஆட்டம் ரஸலுக்கு போட்டியாகவே இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமான ஆன்ட்ரூ ரஸலின் கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்துக்குப் பதிலடியாக கிளாசன் பேட்டிங் அமைந்தது.

ரஸல் 25 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

துணிச்சல் ராணா

கடைசி ஓவரில் 12 ரன்களை வெற்றிகரமாக ஹர்சித் ராணா தனது துணிச்சலான பந்துவீச்சால் டிபெண்ட் செய்து கொடுத்தார். ஏற்கெனவே மதம்கொண்ட யானை போல் ஃபார்மில் கிளாசன் இருந்தபோது, கடைசி ஓவரை வீசுவது எளிதல்ல.

அனுபவமற்ற ராணா முதல் பந்தை வீசியதுமே நினைத்ததுபோல் கிளாசன் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஆனால், அடுத்தடுத்து ராணா பந்துவீச்சில் காட்டிய ‘வேரியேஷன்தான்’ ஷான்பாஸ், கிளாசன் விக்கெட்டுகளை வீழ்த்தியது. இல்லாவிட்டால் கிளாசன் இருந்த ஃபார்முக்கு 2 பந்திலேயே ஆட்டம் முடிந்திருக்கும்.

 

கிளாசன் செய்த தவறு

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட கிளாசன், தொடர்ந்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால், 2வது பந்தில் ஒரு ரன் எடுத்ததுதான் கிளாசன் செய்த பெரிய தவறு.

கிளாசன் இருந்த ஃபார்முக்கு அடுத்த ஒரு பந்தை தவறவிட்டாலும், 3வது பந்தில் நிச்சயம் சிக்ஸர் கிடைத்திருக்கும் ஆட்டம் முடிந்திருக்கும்.

ஆனால், ஷான்பாஸுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தபோது ஷான்பாஸ் விக்கெட்டை இழந்தார், நெருக்கடி அதிகரிக்கவே பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு கிளாசனும் விக்கெட்டை இழந்தார். கிளாசன் ஸ்ட்ரைக்கை தக்க வைக்காமல் இருந்ததுதான் மிகப்பெரிய தவறு.

நெருக்கடி தரும் இலக்கு

வெற்றி இலக்கு 209 ரன்கள் என்றவுடன் எந்த அணிக்கும் இயல்பாகவே பெரிய நெருக்கடி, அழுத்தம் இருக்கும்.

ரன்ரேட் 10 என்ற கணக்கில் பயணித்தால்தான் இலக்கை எட்டமுடியும் என்று சன்ரைசர்ஸ் அணிக்கு தெரிந்துவிட்டது.

மயங்க் அகர்வால்(32), அபிஷேக் ஷர்மா(32) நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணி மயங்க் விக்கெட்டை இழந்து 65 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த ராகுல் திரிபாதி(20), மார்க்ரம்(18) ஸ்கோர் செய்ய முயன்றும் முடியவில்லை.

சுழற்பந்துவீச்சில் நெருக்கடி

கேகேஆர் அணி வலுவான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து நடுப்பகுதி ஓவர்களில் ரன்ரேட்டை கட்டிப்போட்டது. சுனில் நரேன், வருண், சூயஸ் எனத் துல்லியமாக சுழற்பந்து வீசி சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்தனர். ஆனால், கிளாசன் களமிறங்கிய பின்புதான் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது.

 

ஆட்டம் மாறிய 2 ஓவர்கள்

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

கிளாசன் களமிறங்கியபோது சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 8.2 ஓவர்களில் 102 ரன்கள் தேவைப்பட்டது. மெதுவாக ஆடத் தொடங்கிய கிளாசன் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார்.

வருண் பந்துவீச்சுக்கு தொடக்கத்தில் தடுமாறிய கிளாசன் அவரின் 18வது ஓவரை பிழிந்து எடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ஓவரை பங்கம் செய்த கிளாசன், 26 ரன்கள் குவித்தார். ஐபிஎல் வரலாற்றில் வள்ளல் பந்துவீச்சாளராக ஸ்டார்க்கை மாற்றிவிட்டார் கிளாசன்.

இரண்டு ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கிளாசன் திருப்பி ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்தார். அப்துல் சமதுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 44 ரன்கள் சேர்த்த கிளாசன், ஷான்பாஸ் அகமதுடன் சேர்ந்து, 58 ரன்கள் சேர்த்து கிளாசன் ஆட்டத்தை மாற்றினார்.

வலுவான சுழற்பந்துவீச்சு

கொல்கத்தா அணி நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரைன், வருண், சூயஷ் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை திறமையாகப் பயன்படுத்தியது.

கிளாசன் களமிறங்காததை 3 பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகப் பந்துவீசி சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர். அதிலும் நரைன் தான் வீசிய 4 ஓவரில் கொடுத்த 19 ரன்களில் ஒரு பவுண்டரிகூட சன்ரைசர் பேட்டர்களை அடிக்கவிடவில்லை. அதில் 8 டாட் பந்துகள் அடங்கும்.

அதேபோல ‘இம்பாக்ட் ப்ளேயர்’ சூயஷ் சர்மாவும் 2 ஓவர்களையும் கட்டுக்கோப்புடன் வீசினார். கிளாசனிடம் சிக்காதவரை வருண் சக்கரவர்த்தியும் துல்லியமாகவே பந்துவீசியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் நடுப்பகுதி ஓவர்களில் திணறியதற்கு கேகேஆர் சுழற்பந்துவீச்சு முக்கியக் காரணம்.

 

ஃபார்முக்கு வந்த ரஸல்

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

கேகேஆர் அணி ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 208 ரன்கள் சேர்ப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஆன்ட்ரூ ரஸிலின் “மசுல்” பேட்டிங்கும், அறிமுக வீரர் பில் சால்ட், ராமன்தீப் சிங்கின் கேமியோதான்.

அதிலும் பில்சால்ட் 40 பந்துகளில் 54 ரன்களும், ராமன்தீப் 17 பந்துகளில் 35 ரன்களும் சேர்த்து கேகேஆர் ஸ்கோரை உயர்த்தினர். ஃபினிஷிங் ரோலில் வந்த ரஸல் 25 பந்துகளில் 7சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 64 ரன்கள் சேர்த்துப் பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார்.

ரஸல் களமிறங்கும் வரை புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்க்கண்டே சிறப்பாகவே பந்துவீசி இருந்தனர். ஆனால், புவனேஷ்வர் 17வது ஓவரை வீச வந்தபோது ரஸல் 18 ரன்களை வெளுத்தார்.

நடராஜன் வீசிய 18வது ஓவரில் 15 ரன்கள், புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் என 26 ரன்களை ரஸல் எடுத்தார். 20 பந்துகளில் அரைசதம் அடித்த ரஸல் கேகேஆர் அணிக்கு தன்னுடைய 200வது சிக்ஸரையும் அடித்தார். கட்டுக்கோப்பாகப் பந்தவீசிய சன்ரைசர்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை வாரி வழங்கியது.

மிரட்டலாக வந்த நடராஜன்

சன்ரைசர்ஸ் அணியில் விளையாடும் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனின் பந்துவீச்சு கடந்த சீசன்களில் இல்லாதவகையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது. தொடக்கத்திலே வெங்கடேஷ், கேப்டன் ஸ்ரேயாஸ் இரு பெரிய விக்கெட்டுகளை என நடராஜன் வீழ்த்தி தனது துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

ரஸலிடம் சிக்காதவரை நடராஜன் சராசரி சிறப்பாகவே இருந்தது. கடைசி நேரத்தில் ரிங்கு சிங்கின் விக்கெட்டையும் நடராஜனின் கைப்பற்றினார்.

நான்கு ஓவர்கள் வீசிய நடராஜன் 32 ரன்கள் கொடுத்தார், இதில் ரஸல் விளாசிய 15 ரன்களை கழித்துப் பார்த்தால் நடராஜனின் சராசரியும், 3 விக்கெட்டுகளும் அற்புதமான பந்துவீச்சாக அமையும்.

ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதரபாத்

பட மூலாதாரம்,IPL/TWITTER

சன்ரைசர்ஸ் செய்த தவறுகள்

சன்ரைசர்ஸ் அணியில் கம்மின்ஸ், நடராஜன், யான்சென், புவனேஷ்வர் என 4 திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்தும் கொல்கத்தா ரன்ரேட்டை கட்டுப்படுத்த முடியவில்லை.

கேப்டன் கம்மின்ஸ் போன்ற அனுபவம் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே தனது ஸ்பெல்லை முடிக்காமல், டெத் ஓவர்களில் வீசி இருந்தால் ரன்ரேட்டை குறைத்திருக்கலாம்.

அதேபோல டெத் ஓவர்களில் யான்சென் சிறப்பாக வீசக்கூடியவர். புவனேஷ்வர் ஸ்பெல்லை தொடக்கத்திலேயே முடிக்க வைத்து, யான்செனை கடைசியில் பந்துவீச வைத்திருக்கலாம்.

ஷான்பாஸ் அகமதுவையும் சரியாகப் பயன்படுத்தாமல் கம்மின்ஸ் விட்டுவிட்டார். ஷான்பாஸ் முதல் ஓவரில் 14 ரன்கள் சென்றவுடன் அவருக்கு ஓவர் தருவதை நிறுத்தாமல், கூடுதலாக சில ஓவர்கள் வழங்கியிருக்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cnek0vdln14o

pt24.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
4th Match (D/N), Jaipur, March 24, 2024, Indian Premier League
Rajasthan Royals FlagRajasthan Royals                193/4
Lucknow Super Giants FlagLucknow Super Giants    (20 ov, T:194) 173/6

RR won by 20 runs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தானுக்கு வெற்றி தேடித் தந்த சாம்ஸனின் அபார ஆட்டமும் சிறந்த கேப்டன்சியும் - கடைசிக் கட்டத்தில் திருப்பம் தந்த அஸ்வின்

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 29 நிமிடங்களுக்கு முன்னர்

சாம்ஸனின் பொறுப்பான பேட்டிங், போல்டின் துல்லியமான பந்துவீச்சு, டெத் ஓவர்களில் அஸ்வின், சந்தீப், ஆவேஷ் கானின் பந்துவீச்சு ஆகியவை ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

பட்லருக்கு தொடரும் சோகம்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

கடந்த சீசனில் இருந்து தொடரும் ஓபனிங் சென்டிமென்ட் இந்தமுறையும் பட்லருக்குத் தொடர்ந்தது. பட்லர் 2 பவுண்டரிகளுடன் அதிரடியாகத் தொடங்கினாலும் 11 ரன்கள் சேர்த்த நிலையில் நவீன் உல்ஹக் வீசிய 2வது ஓவரில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜெய்ஸ்வால் ஏமாற்றம்

அடுத்து வந்த சாம்ஸன், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். ஜெய்ஸ்வால் கடந்த சீசனில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பேட்டிங்கால் திரும்பிப் பார்க்க வைத்தார். அதன் தொடர்ச்சியாக, சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக வாய்ப்பு பெற்று இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அபார பார்மில் உள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் களம் கண்ட ஜெய்ஸ்வால், இந்த ஆட்டத்திலும் தனக்கே உரிய ஸ்டைலில் பவுண்டரிகளையும், சிக்ஸரையும் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார்.

ஆனால், மோசின் கான் வீசிய 5-வது ஓவரில் மிட்ஆன் திசையில் குர்னல் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஜெய்ஸ்வால் 24 ரன்களில் வெளியேறி ஏமாற்றினார். பவர் ப்ளே ஓவருக்குள் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு ரியான் பராக், வந்து சாம்ஸனுடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது.

 
RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘ஆங்கர் ரோலில்’ சாம்ஸன்

முதல் போட்டியிலேயே இக்கட்டான நிலைக்கு அணி வந்துவிட்டதால், ஆங்கர் ரோல் எடுத்து விளையாட வேண்டிய நிலைக்கு கேப்டன் சாம்ஸன் தள்ளப்பட்டார்.

3-வது விக்கெட்டுக்கு சாம்ஸன், ரியான் பராக் ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இதுபோன்ற தருணத்தைதான் எதிர்பார்த்திருந்தேன் என்பதைப் போல், சாம்ஸன் தனக்குரிய ஸ்டைலில் ஆட்டத்தை நகர்த்திச் சென்றார். தேவையற்ற ஷாட்களை ஆடாமல், மிகுந்த முதிர்ச்சியுடன் மோசமான பந்துகளில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர்களை விளாசி ரன் ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பெரிய ஷாட்கள் அடிப்பதைக் குறைத்து மிகவும் பொறுமையாக சாம்ஸனும், பராக்கும் பேட் செய்தனர்.

தாக்கூர் வீசிய 9-வது ஓவரை குறிவைத்த சாம்ஸன் 3 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் குவித்தது. பிஸ்னோய் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக், சாம்ஸன் தலா ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் சேர்த்தனர்.

ரவி பிஸ்னோய் வீசிய 13-வது ஓவரில் ரியான் பராக் அடித்த ஷாட்டில் கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை மோசின்கான் தவறவிட்டது பார்ட்னர்ஷிப்பை நீட்டிக்க வைத்தது. அதிரடியாகவும், பொறுமையாகவும் பேட் செய்த சாம்ஸன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரியான் பராக் முதிர்ச்சி

நவீன் உல்ஹக் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். அவர் வீசிய 14-வது ஓவரில் ரியான் பராக் ஒருபவுண்டரியும், சிக்ஸரும் விளாசி, 5வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரியான் பராக் 43 ரன்னில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடந்த சில சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக எந்தப் போட்டியிலும் ஸ்கோர் செய்யவில்லை, வாய்ப்பும் பெரிதாக வழங்கவில்லை. ஆனால், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஃபார்மில் இருந்த பராக் முதல் ஆட்டத்தில் முதிர்ச்சியுடன் பேட் செய்துள்ளார். 3வது விக்கெட்டுக்கு சாம்ஸன்-பராக் கூட்டணி 93 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

4வது விக்கெட்டுக்கு வந்த ஹெட்மெயரும் பெரிதாக நிலைக்கவில்லை. பிஸ்னோய் பந்துவீச்சில் 5 ரன்கள்சேர்த்தநிலையில் கேஎல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு வந்த துருவ் ஜூரெல் சிறிய கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். தாக்கூர் வீசிய 18-வது ஓவரில் சாம்ஸன் ஒரு சிக்ஸர் உள்பட 13 ரன்களும் விளாசினர்.

நவீன் உல்ஹக் 19-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் ஏதும் அடிக்கவிடாமல் கட்டுக்கோப்பாக வீசினார். மோசின் கான் வீசிய கடைசி ஓவரில் சாம்ஸன் சிக்ஸரும், ஜூரெல் பவுண்டரியும் விளாசினர். கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் சேர்த்தது. சாம்ஸன் 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து(6 சிக்ஸர், 3பவுண்டரி) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜூரெல் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

போல்ட், பர்கர் மிரட்டல்

194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ஆட்டத்தைத் தொடங்கியது. குயின்டன் டீகாக், கேஎல் ராகுல் களமிறங்கினர். லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே டிரன்ட் போல்ட் அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அளித்தார். போல்ட் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டீகாக் 4 ரன்னில் பர்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்துவந்த தேவ்தத் படிக்கல் நிலைக்கவில்லை. போல்ட் வீசிய 3வது ஓவரில் க்ளீன்போல்டாகி டக்அவுட்டில் படிக்கல் வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு பதோனி களமிறங்கி, ராகுலுடன் சேர்ந்தார். பந்துவீச்சிலும் மாற்றம் செய்யப்பட்டு பர்கர் அழைக்கப்பட்டார். பர்கர் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தைச் சந்தித்த பதோனி மிட்ஆப் திசையில் லட்டு போல் பந்தை பட்லரிடம் தூக்கிக் கொடுத்து ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

11 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாறியது, கேப்டன் ராகுல் அதிரடியாக தொடங்கலாம் என்று நினைத்த நிலையில் மிகுந்த பொறுமையாக நிலைக்குத் தள்ளப்பட்டார்.

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

சாம்சன் புத்திசாலித்தனமும் லக்னோ தடுமாற்றமும்

4வது விக்கெட்டுக்கு வந்த தீபக் ஹூடோ, ராகுலுடன் சேர்ந்து சிறிய கேமியோ ஆடினார். களத்துக்கு வந்தவுடனே ஹூடா பவுண்டரி, சிக்ஸர் என பர்கர் ஓவரில் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதன்பின ஹூடா, ராகுல் இருவரும் ஓவருக்கு பவுண்டரி, சிக்ஸர் அடித்து ரன்ரேட்டை 10க்கு குறையவிடாமல் கொண்டு சென்றனர். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து பந்துவீச்சில் மாற்றம் செய்த சாம்ஸன், யுஸ்வேந்திர சஹலை அழைத்தார். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. சஹல் வீசிய 8-வது ஓவரின் 3வது பந்தை மிட்விக்கெட் திசையில் ஹூடா தூக்கி அடிக்கவே, ஜூரெலிடம் பந்து தஞ்சமடைந்தது. ஹூடா 26 ரன்களில் சிறிய கேமியோவுடன் வெளியேறினார்.

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

பூரன்-ராகுல் நம்பிக்கை

5வது விக்கெட்டுக்கு நிகிலோஸ் பூரன் களமிறங்கி ராகுலுடன் சேர்ந்தார். 2 ஓவர்கள் வரை பூரன் நிதானத்தை கடைபிடித்து, சஹல் வீசிய 10வது ஓவரில் சிக்ஸர் அடித்து கணக்கைத் தொடங்கினார். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு லக்னோ அணி 76 ரன்கள் சேர்த்தது. 12 ஓவரில் லக்னோ அணி 100 ரன்களை எட்டியது.

பர்கர் வீசிய 11வது ஓவரை ராகுல் கட்டம் கட்டி, கடைசி 3 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் என17 ரன்கள் சேர்த்தார். போல்ட் வீசிய 13-வது ஓவரை பூரன் நொறுக்கி அள்ளினார். பூரன் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 20 ரன்களை பூரன் சேர்த்து ரன்ரேட்டை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய கேஎல் ராகுல் 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

 
RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றியை நோக்கி லக்னோ

பூரனும், ராகுலும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்ததால் ஆட்டம் மெல்ல, லக்னோ பக்கம் சாய்வதுபோல் இருந்தது. அதிலும் நிகோலஸ் பூரன் அடித்த ஷாட் ஒவ்வொன்றும் இடிபோல் இறங்கியது. இதனால் பந்துவீச்சில் மாற்றம் செய்த சாம்ஸன், சந்தீப் ஷர்மாவை அழைத்தார்.

தனது முதல் ஓவரை அற்புதமாக வீசிய சந்தீப் சர்மா, 15-வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி 5 ஓவர்களில் லக்னோ வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ராகுல், பூரன் தள்ளப்பட்டனர்.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் சந்தீப்

சஹல் வீசிய 16வது ஓவரில் பூரன் ஒரு சிக்ஸர் உள்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. 17-வது ஓவரை சந்தீப் சர்மா வீசியபோது அவரின் பந்துவீச்சுக்கு பலன் கிடைத்தது. ஆப்சைடில் விலக்கி வீசப்பட்ட அந்தபந்தை ராகுல் தூக்கி அடிக்கவே டீப் பாயின்டில் ஜூரெலிடம் கேட்சானது. ராகுல் 58 ரன்னில் ஆட்டமிழந்து வெறுப்புடன் வெளியேறினார். பூரன்-ராகுல் கூட்டணி 5வது விக்கெட்டுக்கு 51 பந்துகளில் 85 ரன்கள் சேர்த்தனர். பூரன் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அடுத்துவந்த ஸ்டாய்னிஷ் 3 ரன்னில் அஸ்வின் பந்துவீச்சில் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றினார். அடுத்து குர்னல் பாண்டியா களமிறங்கினார்.

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆவேஷ் கான் அற்புதம்

கடைசி 2 ஓவர்களில் லக்னோ வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்களை பூரன் விளாசினார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் கடைசி ஓவரை வீசினார். அற்புதமாக வீசிய ஆவேசன்கான் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் பூரனைக் கட்டுப்படுத்தினார்.

பூரன் களத்தில் இருந்தவரை லக்னோ வெற்றிக்கு சாத்தியங்கள் இருந்தது. ஆனால், 17-வது ஓவரை அஸ்வின் வீசத் தொடங்கியதில் இருந்து, டெத் ஓவர்களை சந்தீப் சர்மாவும், ஆவேஷ் கானும் அற்புதமாக வீசி, லக்னோ பேட்டர்களைக் கட்டிப் போட்டனர். லக்னோ அணி கடைசி 5 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

பூரன் 64 ரன்களிலும், குர்னல் பாண்டியா 3 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

முதல் ஆட்டமும் சாம்ஸனின் அரைசதமும்

சாம்ஸன் குறித்த சுவாரஸ்யமான புள்ளிவிவரம் இருக்கிறது. அதாவது கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனில் இருந்து, தொடரின் முதல் ஆட்டம் அனைத்திலும் சாம்ஸன் அரைசதம் மற்றும் சதம் அடித்துள்ளார். 2020முதல் 2024 வரை ராஜஸ்தான் அணியின் முதல் ஆட்டத்தில் சாம்ஸன் அரைசதம் அடிக்காமல் இருந்தது இல்லை என்பது கூடுதலான தகவல்.

2020-ல் சிஎஸ்கேவுக்கு எதிராக 72 ரன்கள் சேர்த்த சாம்ஸன், 2021ம்ஆண்டு சீசனில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சதம் அடித்து 119 ரன்கள் சேர்த்தார். 2022ம் ஆண்டு சீசனில் சன்ரைசர்ஸுக்கு எதிராக சாம்ஸன் 55 ரன்களும், 2022 சீசனின் முதல் ஆட்டத்திலும் சன்ரைசர்ஸுக்கு எதிராக 55 ரன்களும் சேர்த்தார். 2020 முதல் 2024 வரை அனைத்து சீசன்களின் முதல் ஆட்டத்திலும் சாம்ஸன் அரைசதம் அடித்துள்ளார்.

RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

சரியாக பணியாற்றிய பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சில் டிரன்ட் போல்ட், பர்கர் இருவரும் சேர்ந்து முதல் 4 ஓவர்களில் லக்னோவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போதே, லக்னோவின் ஆணிவேர் ஆட்டம் கண்டுவிட்டது. அந்த அணியை சரிவில் இருந்து மீட்க விடாமல் அடுத்தடுத்து வந்த வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்ஸன் புத்திசாலித்தனமான பந்துவீச்சு மாற்றங்களால் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

நிகோலஸ் பூரன், ராகுல் இருவரும் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றபோது, டெத்ஓவர்களில் சந்தீப் சர்மா, அஸ்வின், ஆவேஷ் கான் பந்துவீச்சு ஒட்டுமொத்தமாக லக்னோ அணியை தோல்விக் குழியில் தள்ளியது. 18-வது ஓவரை அனுபவ சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினுக்கு சாம்ஸன் அளித்தது நல்ல பலனைத் தந்தது.

டெத் ஓவர்களில் அற்புதம்

அதிலும் சந்தீப் சர்மா டெத்ஓவர்களில் தனது முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோ ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். சந்தீப் சர்மா 3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ராகுல் விக்கெட்டை வீழ்த்தி தனது வேலை கச்சிதமாக முடித்தார். கடைசி ஓவரில் ஆவேஷ் கான் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடாமல் பூரனை கட்டிப்போட்டு வெற்றியை அணிக்கு பெற்றுக் கொடுத்தனர்.

இதுதவிர 18வது ஓவரை வீசிய அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோவை கூடுதல் நெருக்கடியில் தள்ளினார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 15 ஓவர்களுக்குப் பின் ஆட்டத்தை கையில் எடுத்து வெற்றியை வசப்படுத்தினர்.

 
RR vs LSG

பட மூலாதாரம்,GETTY IMAGES

"வெற்றிக்கு உரித்தானவர் சந்தீப் சர்மா"

வெற்றிக்குப்பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் கூறுகையில் “ நான் முதல் போட்டியிலேயே வித்தியாசாமாக ஆங்கர் ரோல் செய்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வருகிறேன் என்பதால் அந்த அனுபவம் எனக்கு உதவியது. நல்ல தொடக்கம் எங்களுக்கு கிடைத்தது ஆனால், அதைக் கொண்டு செல்ல முடியவில்லை.

நம்முடைய பலம், பலவீனத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பந்தையும் கவனித்து அதற்கு ஏற்றார்போல் விளையாடினேன், அவசரப்படாமல் ஆடினேன். என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கு உரித்தானவர் சந்தீப் சர்மாதான். அவர் இங்கே இல்லை, அவரின் கடைசி டெத் ஓவர்கள் ஆட்டத்தை மாற்றிக்காட்டியது. எங்கள் திட்டப்படி அனைத்தும் நடந்தது” எனத் தெரிவித்தார்

முதலிடத்தில் ராஜஸ்தான்

இந்த ஆட்டத்தில் லக்னோ அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் ஒரு புள்ளி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறிய நிலையில் சாம்ஸன் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடியவிதம் கேப்டனுக்குரிய பொறுப்பை வெளிப்படுத்தியது. 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகிய சாம்ஸனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/articles/cmmqy2rqr8no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
5th Match (N), Ahmedabad, March 24, 2024, Indian Premier League
Gujarat Titans FlagGujarat Titans          168/6
Mumbai Indians FlagMumbai Indians     (20 ov, T:169) 162/9

GT won by 6 runs

pt25.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் “Home ground”  சொந்த மைதானம் எனும் அனுகூலம் அணிகளை வெற்றி அடையச் செய்ததா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இதுவரை நடந்த 5 போட்டிகளிலும் “Home ground”  சொந்த மைதானம் எனும் அனுகூலம் அணிகளை வெற்றி அடையச் செய்ததா?

 

அப்ப‌டி பார்க்க‌ முடியாது நேற்று கே கே ஆர் போராடி தான் வென்றார்க‌ள் க‌ட‌சி ஓவ‌ரில் இர‌ண்டு விக்கேட் ப‌றி பொன‌து................5ப‌ந்துக்கு 7 ஓட்ட‌ம் எடுத்தால் வெற்றி ............ஏதோ குருட் ல‌க்கில் கே கே ஆர் நேற்று வெற்றி

ஜ‌பிஎல்ல‌ மும்பாய் முத‌லாவ‌து விளையாட்டில் தோர்ப்ப‌து இது முத‌ல் த‌ர‌ம் இல்லை...........ப‌ல‌ ஜ‌பிஎல் ம‌ச்சில் மும்பாய் முத‌ல் ம‌ச்சில் தோப்ப‌து வாடிக்கையா போச்சு ஹா ஹா..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோகித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக், தவறு செய்தது எங்கே?

மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி

24 நிமிடங்களுக்கு முன்னர்

ஐபிஎல் டி20 தொடரில் கடைசி ஓவர், கடைசிப் பந்துவரை இதுதான் முடிவு என்பதை எந்த ரசிகரும் கணிக்க முடியாது. ஒவ்வொரு பந்தும் ஒவ்வொருவிதமான ட்விஸ்ட்களோடு கொண்டு செல்லும். அதுபோலத்தான் நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆட்டமும் அமைந்திருந்தது.

அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 5ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்களில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.

கேப்டன்சி மாற்றத்துக்குப்பின் சுப்மான் கில் தலைமையில் முதல்முறையாக களமாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றது. அதேபோல கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றத்துக்குப்பின், புதிய கேப்டனோடு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, தனது முன்னாள் அணியிடமே தோல்வி அடைந்துள்ளார்.

குஜராத் அணி இக்கட்டான நேரத்தில் 45 ரன்கள் குவித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தில் ஒரேஅணியில் இடம் பெற்ற இரு தமிழக வீரர்களும் அற்புதமாகச் செயல்பட்டனர். பந்துவீச்சில் சாய் கிஷோரும், பேட்டிங்கில் சாய் சுதர்சனும் முத்தாய்ப்பு.

 
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

17-வது ஓவரை வீசிய ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார்

திருப்பங்கள் நிறைந்த 5 ஓவர்கள்

கடைசி 5 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. 16-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 4 ரன்கள் மட்டுமே கொடுத்து பிரிவிஸ் விக்கெட்டை சாய்த்தார். 17-வது ஓவரை வீசிய ரஷித் கான் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை பேட்டர்களை நெருக்கடிக்கு ஆளாக்கினார். கடைசி 3 ஓவர்களில் மும்பை அணி வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.

18-ஆவது ஓவரை வீசிய மோகித் சர்மா 9 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் டிம்டேவிட் விக்கெட்டை கைப்பற்றி மும்பை அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 19-ஆவது ஓவரை வீசிய ஜான்சனின் முதல் பந்தில் திலக் வர்மா சிக்ஸர் விளாசினார். ஆனால், அடுத்த பந்தில் திலக் வர்மா விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். ஓவரின் கடைசிப் பந்தில் கோட்ஸியும் ஆட்டமிழக்க மும்பை அணி தோல்வியின் நெருக்கடியில் திக்குமுக்காடியது.

கடைசி ஒரு ஓவரில் மும்பை வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கேப்டன் ஹர்திக் பாண்டியா, பியூஷ் சாவ்லா களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் முதல் இரு பந்துகளில் பவுண்டரி, சிக்ஸரை விளாசி ஹர்திக் பாண்டியா ஷாக் அளித்தார்.

ஆனால், 3வது பந்தில் ஹர்திக் அடித்த ஷாட் லாங்ஆனில் நின்றிருந்த திவேட்டியா கைகளில் தஞ்சமடைய ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் பியூஷ் சாவ்லாவும் பெரிய ஷாட்டுக்கு முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். முலானி, பும்ராவால் ரன் சேர்க்கமுடியாததால், மும்பை பரிதாபமாக தோற்றது.

 
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"தவறுக்காக காத்திருந்தோம்"

குஜராத் அணியின் கேப்டன் சுப்மான் கில் கூறுகையில் “ எங்கள் பந்துவீச்சாளர்கள் டெத் ஓவர்களில் செயல்பட்டவிதம் அற்புதமாக இருந்தது. பனிப்பொழிவும் இருந்தாலும் சுழற்பந்துவீச்சாளர்கள் கிஷோர், ரஷித் கான் கட்டுக்கோப்பாக பந்துவீசி பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர். மோகித் சர்மா அருமையாகப் பந்தவீசினார் மும்பை பேட்டர்கள் தவறு செய்வதற்காக காத்திருந்தோம் அதைப் பயன்படுத்தி நெருக்கடி அளித்தோம். 170 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றாலும் கூடுதலாக 15 ரன்கள் சேர்த்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த 168 ரன்கள் என்பது சேஸிங் செய்துவிடமுடியாத அளவுக்கு பெரிய ஸ்கோர் அல்ல. ஆனாலும், அந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து, மும்பை அணிக்கு நெருக்கடி வெற்றியை பறித்தவிதம்தான் பாராட்டுக்குரியது. குஜராத் டைட்டன்ஸ் வெற்றிக்கு முழுமையாக உரித்தானவர்கள் அவர்களின் பந்துவீச்சாளர்கள்தான்.

ஒவ்வொரு பந்துவீச்சாளர்களும் தங்களின் பணியை உணர்ந்து சிறப்பாகச் செயல்பட்டனர். குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் ஒரு விக்கெட் என அற்புதமாக பந்துவீசினார். அதிலும் அறிமுகபோட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கி, அதிலும் வலுவான பேட்டர் ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது எளிதானது அல்ல. அதை தமிழக வீரர் சாய் கிஷோர் சிறப்பாகச் செய்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி நடுப்பகுதி ஓவர்களில் மும்பை அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து ரன்ரேட்டை குறைக்க சாய் கிஷோர், ரஷித் கான் பந்துவீச்சு முக்கியக் காரணமாகும்.

ரஷித் கான் விக்கெட் இன்று பந்துவீசினாலும், அவரின் வழக்கமான டிரேட்மார்க், ரன்சிக்கனத்துடன் பந்துவீசி மும்பை பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார். அதிலும் டெத் ஓவர்களில் ரஷித் கான் பந்துவீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து மும்பை அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தினார்.

 
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்ட இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சனும் தனக்குரிய பணியை சிறப்பாகச்செய்து தன்னுடைய விலை தகும் என்பதை நிரூபித்தார். ஜான்சன் 2 ஓவர்களே வீசினாலும் அவர் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் ஒட்டுமொத்த ஓட்டத்தையே மாற்றினார்.

கிரிக்கெட்டில் “அன்சங் ஹீரோ” என்பார்கள். அதில் குறிப்பிடவேண்டியது மோகித் சர்மா. டெத் ஓவர்களை அற்புதமாகக் கையாண்ட மோகித் சர்மா தான் வீசிய கடைசி 2 ஓவர்களிலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியை நிலைகுலையச் செய்தார். அதிலும் தனது 3வது ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே மோகித் சர்மா கொடுத்தது தரமான பந்துவீச்சுக்கு உதாரணம்.

முகமது ஷமி இல்லாத நிலையில் அனுபவ பந்துவீச்சாளராக உமேஷ் யாதவ் பணி செய்ய வேண்டியதிருந்தது. கடந்த காலசீசன்களில் டெத் ஓவர்களை உமேஷ் எவ்வாறு கையாண்டார் என்பதால், அவருக்கு டெத்ஓவர்கள் வழங்கப்படுவதில்லை.

ஆனால், கேப்டன் கில் துணிச்சலாக கடைசி ஓவரை உமேஷ் யாதவுக்கு வழங்கினார். ரசிகர்கள் நினைத்தது போலவே முதல்பந்தை சிக்ஸர், 2வது பந்தில் பவுண்டரி அடிக்கவிட்டார் உமேஷ். ஆனால், 3வது, 4வது பந்தில் அவரின் பந்துவீச்சில் காண்பித்த வேரியேஷன் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓமர்சாயும் தனது பங்கற்கு சிறப்பாக செயல்பட்டு 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார். ஒட்டுமொத்த்தில் குஜராத் அணிக்கு கிடைத்த வெற்றி என்பது பந்துவீச்சாளர்களால் கிடைத்தது.

 
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஃபினிஷர் ரோலில் கையை சுட்டுக்கொண்ட ஹர்திக்

மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனியைப் போன்று ஃபினிஷர் ரோல் எடுக்க முயன்று தோல்விஅடைந்துள்ளார். “ எல்லோரும் தோனியாகிவிட முடியாது, ஃபினிஷர் ரோல் செட் ஆகாது” என்று ஹர்திக் பாண்டியாவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். குஜராத் டை்டன்ஸ் கேப்டனாக ஹர்திக் இருந்தபோது 4வது வரிசையில் களமிறங்கி பலமுறை விளையாடியுள்ளார்.

அதுபோல் இந்த ஆட்டத்திலும் ஹர்திக் பேட் செய்திருந்தால், ஆங்கர் ரோல் எடுத்திருக்கலாம், ஆட்டத்தையும் கட்டுப்படுத்தி வெற்றியை வசப்படுத்தி இருக்கலாம். ஆனால், தான் கேப்டன் செய்த அணி வீரர்களை குறைத்து மதிப்பி்ட்டு கடைசி நேரத்தில் ஃபினிஷர் ரோல் செய்து ஹர்திக் கையைச் சுட்டுக்கொண்டார் என்பதுதான் நிதர்சனம்.

 
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ரோஹித் சர்மாவை பவுண்டரியில் நில்லுங்கள் என்று சைகை செய்து ஹர்திக் பாண்டியா அனுப்பினார்

ரோஹித் சர்மாவை எல்லைக் கோட்டில் நிற்கவைத்த ஹர்திக்

மும்பை அணிக்கு புதிய கேப்டனாக வந்த ஹர்திக் பாண்டியா நேற்று அனைத்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டார். முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள், ஹர்திக்கின் செயல்பாடுகளைப் பார்த்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ரோஹித் சர்மாவை பவுண்டரியில் நில்லுங்கள் என்று சைகை செய்து ஹர்திக் பாண்டியா அனுப்பினார். இந்த காட்சிகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஹர்திக் பாண்டியாவை வறுத்தெடுத்தனர்.

அதேபோல பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை தொடக்கத்திலேயே பயன்படு்தி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்துவிக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். ஆனால் தொடக்கத்தில் ஒரு ஓவர் மட்டுமே பும்ராவுக்கு வழங்கி, கடைசி நேரத்தில் 3 ஓவர்களை ஹர்திக் வழங்கினார். இதுவும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

மும்பை அணியைப் பொறுத்தவரை 3வது விக்கெட்டுக்கு ரோஹித் சர்மா(43) பிராவிஸ்(46) கூட்டணி 77 ரன்கள் சேர்த்ததுதான் நல்ல பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது. அதன்பின் களமிறங்கிய பேட்டர்கள் அனைவரும் வருவதும் போவதுமாக இருந்தனர். 129 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்திருந்த மும்பை அணி அடுத்த 33 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 2 ஓவர்களில் மட்டும் மும்பை அணி 4 விக்கெட்டுகளை பதற்றத்தில் பறிகொடுத்தது.

 
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பையும் முதல் போட்டி தோல்வியும்

மும்பை இந்தியன்ஸ் அணியும், ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் தோல்வியும் கடந்த 12 ஆண்டுகளாக பிரிக்க முடியாததாக இருந்து வருகிறது. கடந்த 12 சீசன்களாக அதாவது 2013ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தான் சந்தித்த அனைத்து முதல் ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. 2013ம் ஆண்டிலிருந்து 2024 சீசன்வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி சென்டிமென்ட் தொடர்ந்து வருகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரை தமிழக வீர் சாய் சுதர்சன் அடித்த 45 ரன்களும், கேப்டன் கில் சேர்த்த 31 ரன்களும்தான் அதிகபட்சமாகும். மற்ற வகையில் எந்த பேட்டரும் பெரிதாக சோபிக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஓமர்சாய்(17), மில்லர்(12) ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ராகுல் திவேட்டியா கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 22 ரன்கள் சேர்த்தார். குஜராத் அணி இன்னும் கூடுதலாக 20 ரன்கள் சேர்த்திருந்தால், பதற்றப்படாமல் வெற்றியை ருசித்திருக்கலாம்.

தோல்வி பற்றி ஹர்திக் கூறியது என்ன?

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “கடைசி 5 ஓவர்களில் 42 ரன்களை சேஸிங் செய்வது செய்யமுடிந்த ஒன்றுதான். ஆனால், அதற்கான தருணங்களை தவறவிட்டோம். அரங்கில் நிறைந்த ரசிகர்களைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. திலக் வர்மா ஒரு ரன் அடித்து டேவிட்டிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்திருக்கலாம். ஆனால் அந்த நேரத்தில் திலக் செய்தது சரி.இன்னும் 13 போட்டிகள் இருக்கின்றன பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c29w1e5r81no

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விறுவிறுப்பான ஐபிஎல் தொடர்: முழு போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

ஐபிஎல் 2024 தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 தொடரானது கடந்த 22 ஆம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் ஆரம்பமாகியது.

ஐ.பி.எல். நடைபெற்று வரும் சமயத்தில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இதனை கருத்தில் கொண்டு 17 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது.

அதில் 21 போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் திகதி வரை நடைபெற உள்ளன. இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

முழு அட்டவணை

அதன்படி 2வது கட்ட போட்டிகள் ஏப்ரல் 8 திகதி முதல் மே 26-ம் திகதி வரை நடைபெற உள்ளன. 2வது கட்டத்தின் முதல் போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே நடைபெற உள்ளது.

2024 ipl full schedule

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. லீக் போட்டிகள் மே 19-ம் திகதியுடன் முடிவடைய உள்ளன. பிளே ஓப் சுற்றில் தகுதிகாண் போட்டிகள் மே 21 திகதியும், தகுதி நீக்க போட்டிகள் 22ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

தகுதிகாண் 2 மே 24ஆம் திகதியும், இறுதிப்போட்டி மே 26ம் திகதியும் நடைபெற உள்ளன.

மேலும் தகுதிகாண் போட்டிகள் 1 மற்றும் தகுதி நீக்க போட்டிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திலும், தகுதிகாண் போட்டிகள் 2 மற்றும் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://ibctamil.com/article/ipl-2024-schedule-csk-dhoni-chennai-chepauk-1711370015

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினேஸ் கார்த்திக் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் இற‌ங்கி அதிர‌டியா ஆடி RCBக்கு வெற்றிய‌ பெற்று கொடுத்தார்.................19வது ஓவ‌ரில் 5ப‌ந்தில் தினேஸ் கார்த்திக் அடிச்ச‌ சிக்ஸ் பார்க்க‌ ந‌ல்லா இருந்திச்சு............எல்லாராலும் அப்ப‌டி அடிக்க‌ முடியாது...........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேலி செய்தவர்களுக்கு பேட்டால் பதிலளித்த கோலி - தனது புகழ், குடும்பம், சாதனைகள் பற்றி கூறியது என்ன?

விராட் கோலி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி.

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கிரிக்கெட்டில் நடக்கமுடியாதது, சாத்தியமில்லாதது நடப்பது டி20 போட்டியில்தான். எந்த நேரத்தில் எந்தப் பந்துவீச்சாளர், பேட்டர் ஆட்டத்தை திருப்புவார் என ஊகிக்க முடியாது. பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டமும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பெரிய ட்விஸ்ட்களுடன் முடிந்தது.

விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங், தினேஷ் கார்த்திக்கின் கடைசி நேர ஃபினிஷர் ரோல் ஆகியவைதான் ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்து.

பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆர்சிபி அணி.

முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

விராட் கோலி(77) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மைனஸ் ரன்ரேட்டில் ஆர்சிபி

இந்த வெற்றி மூலம் ஆர்சிபி அணி புள்ளிக் கணக்கைத் தொடங்கினாலும், நிகர ரன்ரேட் இன்னும் மைனஸில்தான் இருக்கிறது. அதனால், 2 புள்ளிகள் பெற்றாலும் 6-ஆவது இடத்துக்கு ஆர்சிபி தள்ளப்பட்டுள்ளது. அடுத்துவரும் போட்டிகளில் ஆர்சிபி அணிக்கு பெரிய வெற்றி கிடைத்தால் புள்ளிப்பட்டியலில் முன்னேறும்.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ஆங்கர் ரோல் எடுத்து வெற்றிக்கு அருகே வரை கொண்டு சென்ற விராட் கோலி(77) ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோலிக்கு டிராவிட் கூறிய அறிவுரை

ஆட்டநாயகன் விருது வென்ற கோலி கூறுகையில் “ ரசிகர்களே ரொம்பவும் உற்சாகமடையாதீர்கள். 2 போட்டிகள்தான் முடிந்துள்ளது, ஆரஞ்சு தொப்பி யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். விளையாட்டைப் பற்றி அதிகமாகப் பேசுகிறார்கள், கடைசியில், சாதனைகள், புள்ளிவிவரங்கள், எண்ணிக்கைகள், நினைவுகளைப் பற்றி பேசுவதில்லை. நீ இழந்ததை ஒருபோதும் மறக்காதே என்று டிராவிட் என்னிடம் சொல்வார். நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி, என்னால்முடிந்த பங்களிப்பைத் தருகிறேன். விக்கெட்டுகள் சரிந்தவுடன் சூழலைப் புரிந்து கொண்டு பேட் செய்தேன். இதுபோன்ற நேரத்தில் இதுபோன்று விளையாடுவது தவறு இல்லை.சரியான ஷாட்களை அடிக்க வேண்டும், தவறான ஷாட்களைஅடிக்க கூடாது என்று நினைத்தேன். என்னால் பினிஷர் ரோல் செய்ய முடியாதது வருத்தமாக இருக்கிறது. 2 மாதங்களுக்குபின் நான் விளையாடினாலும் மோசமாக பேட் செய்யவில்லையே” எனத் தெரிவித்தார்.

 
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கலக்கும் தமிழ்நாட்டு வீரர்கள்

ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், குஜராத் அணியில் சாய் கிஷோர், சுதர்சன் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். இந்த ஆட்டத்தில் டிகே உண்மையில் ஹூரோவாக ஒளிர்ந்தார்.

இந்த ஆட்டத்தில் கோலிக்கு இணையாக ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட வேண்டியவர் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக். கடைசி இரு ஓவர்களில் டிகேவின் ஆட்டம் ஒட்டுமொத்த பஞ்சாப் கிங்ஸ் ரசிகர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது. 10 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 28 ரன்கள் சேர்த்து டிகே தனித்துவமாகத் தெரிந்தார்.

விராட் கோலி களத்தில் இருந்தவரை ஆர்சிபி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், ஹர்சல் படேல் ஓவரில் 2 பவுண்டரி அடித்தநிலையில் கடைசிப்பந்தில் டீப் பேக்வார்டில் பிராரிடம் கேட்ச் கொடுத்து கோலி 77 ரன்னில் வெளியேறியது நம்பிக்கை தகர்ந்தது.

 
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐபிஎல் தொடர் தொடங்கியதிலிருந்தே தமிழக வீரர்கள் கலக்கி வருகிறார்கள்.

திக்திக் கடைசி 4 ஓவர்கள்

அப்போது கடைசி 4 ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்டது. சான்கரன் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் ராவத் கால்காப்பில் வாங்கி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சென்றதும் ஆர்சிபி கதை முடிந்துவிட்டதா என்ற ரசிகர்கள் கவலை கொண்டனர்.

மகிபால் லாம்ரோர், டிகே கூட்டணி ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சாம்கரனின் 17வது ஓவரில் லாம்ரோர், டிகே இருவரும் தலா ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் சேர்த்தனர்.

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லாம்ரோர் அதிரடி

அர்ஷ்தீப் வீசிய 18-ஆவது ஓவரில் ஸ்லாட்டில் வீசப்பட்ட பந்தில் லாம்ரோர் சிக்ஸர்,பவுண்டரியாக பறக்கவிட ரசிகர்கள் உற்சாகத்தில் முழங்கினர். அந்த ஓவரில் ஆர்சிபி 13 ரன்கள் சேர்த்தது. கடைசி 2 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் ஆட்டம் பஞ்சாப் கைகளுக்கு சென்றுவிடும் நிலை இருந்தது.

19-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார். இந்த ஓவரில் டிகே ஒரு பவுண்டரியும், ஃபைன்லெக்கில் ஒரு சிக்ஸரும் விளாசி 13 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது, ரசிகர்களின் இதயத்துடிப்பு எகிறியது.

அர்ஷ்தீப் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் டிகே ஸ்கூப் ஷாட்டில் சிக்ஸர் அடிக்க ரசிகர்களின் சத்தம் காற்றைக் கிழித்தது. அடுத்த பந்தை அர்ஷ்தீப் வைடாக வீசினார். அடுத்த பந்தில் டிகே பவுண்டரி விளாச ஆர்சிபி அணி அபாரமாக வெற்றி பெற்றது.

விராட் கோலி, அனுஜ் ராவத் அடுத்தடுத்து ஆட்டமிழந்து சென்றபின் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் கரங்களுக்கு மாறிவிட்டது என்று ரசிகர்கள் நினைத்த நேரத்தில் ஆட்டத்தை ஆர்சிபி கரங்களுக்கு மாற்றியது லாம்ரோர், டிகே ஆட்டம்தான்.

நீண்ட காலத்துக்குப் பிறகு ஜொலித்த தினேஷ் கார்த்திக்

வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பையில் ஃபினிஷர் ரோல் எடுத்து ஹீரோவான டிகே, நீண்டகாலத்துக்குப்பின் ஜொலித்துள்ளார். அணையும் விளக்கு பிரகாசமாக ஒளிரும் என்பார்கள். இந்த சீசனோடு டிகே ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள நிலையில் அவரின் பேட்டிங் ஃபார்ம் இரு போட்டிகளாக தனித்துவமாக இருந்து வருகிறது.

 
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தினேஷ் கார்த்திக் இந்த சீசனோடு டிகே ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

கேட்சை கோட்டை விட்டதற்கான விலை

சாம்கரன் வீசிய ஓவரில் விராட் கோலி அடித்த ஷாட்டை ஸ்லிப்பில் நின்றிருந்த பேர்ஸ்டோ பிடிக்காமல் கோட்டைவிட்டார். இந்த கேட்சை நழுவவிட்டதற்கான விலையை பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியில் கொடுத்தது. இதை அணியின் கேப்டன் ஷிகர் தவண் ஒப்புக் கொண்டார். கோலிக்கு அந்தக் கேட்சை மட்டும் பிடித்திருந்தால், ஆட்டம் வேறுமாதிரியாகத் திரும்பியிருக்கும்.

ஹர்பிரித் பிரார், ரபாடா அற்புதமான பந்துவீச்சு

ஆர்சிபி அணி நடுப்பகுதி ஓவர்களில் ரன் சேர்க்க முடியாமல் திணறியது. விராட் கோலி, ரஜத் பட்டிதார் களத்தில் இருந்தபோதிலும் கூட பவுண்டரி அடிக்கவும், ஸ்ட்ரைக்கை மாற்றி ஓடவும் கடும் சிரமப்பட்டனர். இதற்கு காரணம் இடதுகை சுழற்ப்பந்துவீச்சாளர் ஹர்பிரித் பிரார்தான்.

பெங்களூரு சின்னசாமி மைதானம் போன்ற சிறிய மைதானத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் பேட்டர்களை கட்டிப்போடுவது எளிதானது அல்ல. அதிலும் டி20 ஆட்டத்தில் நினைத்துப் பார்க்க முடியாத செயல். அதை பிரார் எளிதாகச் செய்தார். 4 ஓவர்கள் வீசிய பிரார் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

அடுத்ததாக ரபாடாவின் பந்துவீச்சும் குறிப்பிடத்தகுந்தது. 4 ஓவர்கள் வீசிய ரபாடா 23 ரன்கள் கொடுத்து 2விக்கெட்டுகளையும் சாய்த்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருவர் மட்டுமே நடுப்பகுதி ஓவர்களில் வெற்றியை தங்கள் அணிக்கு இழுத்துவந்தனர். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்களான சாம்கரன், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல் ஆகியோர் சொதப்பிவிட்டனர். ராகுல் சஹர் ஒரு ஓவரில் 16 ரன்கள் வழங்கியதால் அதன்பின் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

டி20 போட்டிகளில் 50 ரன்களுக்குமேல் 100-வதுமுறைாக சேர்த்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கோலி.

டி20-யில் கோலியின் சாதனை

விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அனைத்து டி20 போட்டிகளிலும் 50 ரன்களுக்குமேல் 100-வதுமுறைாக சேர்த்த 3வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். முதலிடத்தில் கெயில், 2வது இடத்தில் வார்னர் உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் அதிக கேட்சுகளைப் பிடித்த வீரர் என்ற சாதனையை நீண்டகாலமாக சுரேஷ் ரெய்னா(172கேட்ச்) வைத்திருந்தார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பேர்ஸ்டோ, தவண் இருவருக்கும் கோலி பிடித்த கேட்ச் மூலம் ரெய்னா சாதனையை தகர்த்தார். 173 கேட்சுகளுடன் கோலி முதலிடத்தைப் பிடித்தார். ரோஹித் சர்மா 167 கேட்சுகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

கோலியின் ஆங்கர் ரோல் சரியா?

இந்திய அணியோ அல்லது ஆர்சிபி அணியோ இக்கட்டானநிலையில் சிக்கும்போது, ஆங்கர் ரோல் எடுத்து கோலி விளையாடுவது பல நேரங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஏனென்றால், ஆங்கர் ரோல் எடுத்து கோலி பேட் செய்யும்போது, மோசமான பந்துகளில் கூட பெரிய ஷாட்கள் அடிக்க தவறவிடுகிறார், வரவேண்டிய ஸ்கோர் அளவுகூட வருவதில்லை. டி20ஃபார்மெட்டுக்கு உகந்தவகையில் கோலி பேட் செய்வதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு கோலி இந்திய அணியில் கைவிடப்பட்டாலும் அதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், தன்னுடைய ஆங்கர் ரோல் கடைசிவரை வெற்றிக்காகவே இருக்கும் என்பதை கோலி பலமுறை நிரூபித்துள்ளார். ஆங்கர் ரோல் எடுத்தாலும், ஃபினிஷராக இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார், அவரின் வேகம் குறைவாக இருக்கலாமேத் தவிர அவரின் பங்களிப்பு தவறாக இருந்தது இல்லை. இந்த ஆட்டத்தில்கூட கோலி 77 ரன்கள் குவித்தார்.

தொடக்க ஆட்டக்காரர களமிறங்கி 15 ஓவர்கள்வரை நிலைத்திருந்து ஆட்டமிழந்தார். கோலி நேற்றை ஆட்டத்தில்ல 11பவுண்டர்கள் அடித்தார். இ்ந்த 11 பவுண்டரிகளில் 8பவுண்டரிகள் அவரின் 30 ரன்களுக்கு அடித்து நான் மந்தமானபேட்டர் இல்லை என்பதை நிரூபித்தார். அது மட்டுமல்லாமல் 2சிக்ஸர்களையும் கோலி விளாசினார். இதுபோன்ற சிறிய மைதானத்தில் கோலி சிக்ஸர், பவுண்டரி அடிக்கலாம் பெரிய மைதானங்களில் கோலியால் இவை சாத்தியமா என்பது அடுத்துவரும் போட்டிகளில் தனது ஆங்கர் ரோல் சரியா என்பதை நிருபிப்பார் என எதிர்பார்க்கலாம்.

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

‘பேஸ்-பால்’ ஸ்டைல் எங்கே?

பஞ்சாப் கிங்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன், சாம்கரன் இருந்தும், பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. அந்த அணியில் ஒருவர்கூட அரைசதமும் அடிக்கவில்லை. தவண் சேர்த்த 45 ரன்கள்தான் அதிகபட்சம். சாம் கரன்(23), ஜிதேஷ் சர்மா(27) பிரப்சிம்ரன் சிங்(25) ஆகியோர் ஓரளவுக்கு பராவாயில்லை. மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை. பேஸ்பால் ஆட்டத்தை கையாளும் இங்கிலாந்து பேட்டர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன், சாம் கரன் ஏன் டி20 ஆட்டங்களில் ஏன்அதே பாணியை கையாளவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.

ஆர்சிபியிலும் ஜோலிக்காத வெளிநாட்டு வீரர்கள்

ஆர்சிபி அணி 2வது போட்டியில் நேற்று விளையாடியது. சிஎஸ்கேவுடனான முதல் ஆட்டத்திலும் டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் பெரிதாக ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை. இந்த ஆட்டத்திலும் சொதப்பிவிட்டனர். பேட்டிங் வரிசை பலமாக இருப்பதாக வெளியே தெரிந்தாலும் இருவரும் சொதப்புவது யாரேனும் ஒரு பேட்டர் மீது சுமையை அதிகரிக்கிறது. விராட் கோலி ஆங்கர் ரோல் எடுக்காமல் இருந்திரும்தால், ஆர்சிபி தோல்வி எழுதப்பட்டிருக்கும். இந்த 3 பேட்டர்களில் ஒருவர் நிலைத்திருந்தால்கூட நேற்றைய ஆட்டம் இழுபறியாக இருந்திருக்காமல், 2 ஓவர்கள் முன்கூட்டியே ஆட்டம் முடிந்திருக்கும்.

 
ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புகழ், குடும்பம் பற்றி விராட் கோலி கூறியது என்ன?

ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட கோலி, தனது குடும்பம், புகழ் ஆகியவை பற்றிப் பேசினார்.

"இந்த நாட்களில் உலகம் முழுவதும் டி20 விளையாட்டை விளம்பரப்படுத்த எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் அறிவேன். "

"[கடந்த இரண்டு மாதங்கள்] நாங்கள் நாட்டில் இல்லை. மக்கள் எங்களை அடையாளம் காணாத இடத்தில் நாங்கள் இருந்தோம். இரண்டு மாதங்கள் சாதாரண மனிதர்களாக உணர்வது ஒரு அபூர்வ அனுபவமாக இருந்தது. நிச்சயமாக, குடும்பக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கை முற்றிலும் மாறி வருகிறது. மூத்த குழந்தையுடனான தொடர்பும் அற்புதமானது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட எனக்கு கிடைத்த வாய்ப்பிற்காக நான் கடவுளுக்கு என்னால் நன்றி சொல்லிவிட இயலாது. கடந்த இரண்டு மாதங்களாக இல்லாததால் குரல்கள் மிகவும் சத்தமாகிவிட்டன என்று தோழர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். சாலையில் ஒரு சாதாரண இருப்பது ஆச்சரியமாக இருந்தது. நான் தொப்பிகளுக்காக விளையாடவில்லை, இது மற்றொரு வாய்ப்பு. அவ்வளவுதான்!" என்றார் கோலி.

https://www.bbc.com/tamil/articles/c2xv4vy2j4vo

ipl-pt25.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CSK 💪💪💪💪💪💪💪💪💪💪💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

CSK 💪💪💪💪💪💪💪💪💪💪💪

எப்ப வயசாளி bat பிடிக்கப்போறார்?😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எப்ப வயசாளி bat பிடிக்கப்போறார்?😜

https://www.iplt20.com/video/52068/watch-out-flying-ms-dhoni-pulls-off-a-stunning-diving-catch
 

முடியுமா????

IMG-2011.webp

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எப்ப வயசாளி bat பிடிக்கப்போறார்?😜

வாய்ப்பு கிடைக்க‌ வில்லை இர‌ண்டு ம‌ச்சிலும்............சென்னை வீர‌ர்க‌ள் சும்மா த‌ப்பு க‌ண‌க்கு போட‌க் கூடாது.............ஆனால் ப‌ந்து வீச்சில் சிறு சிக்க‌ல் ம‌ற்ற‌ம் ப‌டி ந‌ல்ல‌ அணி...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாய்ந்து, பறந்த தோனி; சீறிய இளம் வீரர்கள் - இதுதான் உண்மையான சிஎஸ்கே 2.0 அணியா?

தோனி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

42 வயதிலும் கிரிக்கெட் ஆடுவதற்கான முழுத் தகுதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பாய்ந்து சென்று தோனி கேட்ச் பிடிக்கும் காட்சியைப் பார்த்து அவரது ரசிகர்கள் பார்த்துப் பூரித்துப் போயிருக்கின்றனர். அதே நேரத்தில் புதிய அணித்தலைவரின் கீழ் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை சிஎஸ்கே அணி வென்றிருப்பதன் மூலம் தலைமுறை மாற்றத்துக்கு தயாராக இருக்கிறது என்பதையும் நிரூபித்திருக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிஎஸ்கே அணி.

முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில்6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு சிஎஸ்கே அணி முன்னேறியது. நிகர ரன்ரேட்டும் 1.97 புள்ளிகளுடன் வலுவாக சிஎஸ்கே வைத்துள்ளது.

 
சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இளம் சிஎஸ்கே படை

இளம் பேட்டர்கள் ஷிவம் துபே(23பந்துகளில் 51 ரன்கள்), ரச்சின் ரவீந்திரா(20பந்துகளில்46), கெய்க்வாட்(36பந்துகளில் 46), ரிஸ்வி(6 பந்துகளில் 14) ஆகிய 4 பேரும் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

அதிலும் நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களை ஓடவைத்த துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் பேட்டர்களைக் கட்டிப்போட்ட ரஷித் கான், சாய் கிஷோர் இருவராலும் துபே பேட்டிங்கை கட்டிப்படுத்த முடியவில்லை.

இது சேப்பாக்கம் மைதானம்தானா?

சேப்பாக்கம் மைதானம் என்றாலே சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம்தான் கடந்த காலங்களில் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா தவிர வேறு எந்த சுழற்பந்துவீச்சாளர்களும் பந்துவீசவில்லை, சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜாகூட விக்கெட் வீழ்த்தவில்லை. மாறாக, 8 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்களான தேஷ்பாண்டே(2), முஸ்தபிசுர் ரஹ்மான்(2), தீபக் சஹர்(2), டேரல் மிட்ஷெல்(1), பதிரண(1) ஆகியோர் வீழ்த்தினர். சேப்பாக்கம் மைதானத்தில் சுழற்பந்துவீச்சு எடுக்கவில்லை என்பதே வியப்புக்குரிய செய்தாக இருக்கிறது.

 
சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மும்பை வீரர்கள் vs தமிழக வீரர்கள்

சென்னையைச் சேர்ந்த சிஎஸ்கே அணி என்று பெயரளவுக்கு இருந்தாலும், அந்த அணியில் பெரும்பாலும் மும்பை, மகாராஷ்டிரா வீரர்கள் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் 3 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இருவருக்கும் இடையிலான ஆட்டத்தில் மும்பை, மகாராஷ்டிரா வீரர்கள் வென்றனர்.

ரச்சின் ரவீந்திரா அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை, கெய்க்வாட், ரஹானே எடுத்துச்சென்றனர். அதன்பின் ஸ்கோரை உயர்த்தும் பணியை துபே கையில் எடுத்து பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றார். தனது முதல் ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி தனக்குரிய பங்களிப்பாக 2 சிக்ஸர்களை விளாசி ஸ்கோர் உயர்வுக்கு பங்காற்றினார். பீல்டிங்கில் தோனிஎடுத்த அற்புதமான கேட்ச, ரஹானேவின் மிரட்டலான டைவ் கேட்ச், ரவீந்திராவின் 3 கேட்சுகள் என சிறப்பாகச் செயல்பட்டனர்.

பாய்ந்து, பறந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய தோனி

இந்த ஆட்டத்தில் டேரல் மிட்ஷெல் வீசிய ஓவரை விஜய் சங்கர் அடிக்க முற்பட்டபோது, பந்து அவுச் ஸ்விங் ஆகி, பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்புக்கு சென்றது. விக்கெட் கீப்பரான 42 வயது தோனி, ஏறக்குறைய 4 அடிவரை பாய்ந்து சென்று பந்தை லாவகமாகப் பிடித்தார்.

தோனியின் விக்கெட் கீப்பிங்கைப் பார்த்தபோது, தோனிக்கு உண்மையில் 42 வயதாகியதா என்று ரசிகர்கள் நினைத்தனர். தோனி தற்போது இருக்கும் உடற்தகுதியைப் பார்த்தால் இன்னும் பல ஐபிஎல் சீசன்களுக்கு விளையாடுவார் போலத் தெரிகிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிரந்து கருத்துத் தெரிவித்தனர்.

 
சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரச்சின் ஆட்டம் பிரமாதம்

ரச்சின் ரவீந்திரா ஃபேக்புட் பிளேயர். அவரின் டிரைவ்கள் அனைத்தும் ஆட்டத்தின் பகுதியாகவே இருக்குமே தவிர பிராதனமாக இருக்காது. ஆனால்,உலகக் கோப்பையில் பேட் செய்ததைவிட, டி20 ஃபார்மெட்டுக்கு விரைவாக தனது மனதையும், பேட்டிங் ஸ்டைலையும் ரவீந்திரா மாற்றிக்கொண்டுள்ளார்.

இந்த ஆட்டத்தில் அவர் பேட் செய்த ஸ்ட்ரைட் ட்ரைவ், பிரண்ட்ஃபுட் பவுண்டரிகள், ஷார்ட் பந்தை பஞ்ச் செய்தது, விரைவாக பந்தை பிக் செய்து ஷாட்களை அடித்தது ஆகியவை டி20 ஃபார்மெட்டுக்கு விரைவாக மாற்றிக்கொண்டதை காண முடிகிறது.

இளம் வீரர்கள் பலம்

சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் பேசுகையில் “ இன்றைய ஆட்டம் ஆகச்சிறந்த ஆட்டத்துக்கு உதாரணம். பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாகச்செயல்பட்டோம். குஜராத் போன்ற வலிமையான அணிக்கு இதுபோன்ற செயல்பாடு அவசியம். சேப்பாக்கம் விக்கெட் பற்றி முழுமையாகத் தெரியாத நிலையில் 10ஓவர்களி்ல் 100 ரன்களைக் கடந்தோம். “

“கடைசி 10 ஓவர்களுக்கு பேட்டர்களுக்கு விக்கெட் நன்றாக உதவியது. ரச்சின், துபே, ரிஸ்வி சிறப்பாக பேட் செய்தனர். துபே என்ன செய்ய வேண்டும்என்று நிர்வாகமும் தனிப்பட்ட முறையில் செயல்ப்பட்டது,தோனியும் அறிவுரைகளை வழங்கினார். எப்படி பேட் செய்ய வேண்டும், எந்த பந்துவீச்சாளரை குறிவைக்க வேண்டும்என்று துபேவுக்கு தெளிவாகத் தெரியும். பீல்டிங் சிறப்பாக அமைந்தது. அணியில் 3 இளம் வீரர்கள் வந்துள்ளது கூடுதல் பலம்” எனத் தெரிவித்தார்.

ரச்சின் ரவீந்திரா அதிரடியாட்டம்

டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் ஓவரில் மட்டும்தான் சிஎஸ்கே ரன்கள் சேர்க்கவில்லை. அதன்பின், ஓமர்சாய், உமேஷ் குமார் யாதவ் ஓவர்களை ரச்சின் ரவீந்திரா துவம்சம் செய்துவிட்டார். சிக்ஸர், பவுண்டரிகள் என ரவீந்திரா வெளுக்கவே, சிஎஸ்கே ரன்ரேட் எகிறியது.

வேறுவழியின்றி 6-வது ஓவரிலேயே ரஷித்கான் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் வருகைக்கும் நல்ல பலன் கிடைத்தது. ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தநிலையில் சஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 6பவுண்டரிகள் அடங்கும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் சேர்த்தது.

 
சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஹானே-கெய்க்வாட் நிதானம்

2வது விக்கெட்டுக்கு வந்த ரஹானே, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆடாமல் நிதானமாக ரஹானே பேட் செய்தார். கெய்க்வாட்டும், ரஹானேவும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தினர். 9.5 ஓவர்களில் சிஎஸ்கே அணி 100 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடக்காடிய ரஹானே ஒரு பவுண்டரிகூட அடிக்காமல் 12 ரன்கள் சேர்த்தநிலையில் சாய் கிஷோர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 2வது விக்கெட்டுக்கு ரஹானே, கெய்க்வாட் ஜோடி 42 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து ஷிவம் துபே களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். ஷிவம் துபே களமிறங்கி சாய்கிஷோர் ஓவரில் சந்தித்த முதல் பந்திலும், 2வது பந்திலும் அடுத்தடுத்து சிக்ஸரை பறக்கவிட்டார்.

ஒருபுறம் அரைசதத்தை நோக்கி நகர்ந்த கெய்க்வாட் ஏமாற்றம் அளித்தார். ஸ்பென்சர் ஜான்சன் வீசிய 13-வது ஓவரில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து கெய்க்வாட் 46ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த டேரல் மிட்ஷெல் துபேயுடன் சேர்ந்தார்.

துபே விளாசல்

துபே களமிறங்கியதால், ரன்ரேட்டை கட்டுப்படுத்த ரஷித்கான் 14-வது ஓவரை வீச அழைக்கப்பட்டார். ரஷித்கான் ஓவரையும் விட்டு வைக்காத துபே ஒருபவுண்டரி, சிக்ஸர் 13 ரன்கள் சேர்த்தார். ஜான்சன் வீசிய 15வது ஓவரிலும் துபே சிக்ஸர், பவுண்டரி என சேர்த்து சிஎஸ்கே ரன்ரேட்டை எகிறவைத்தார்.

ஒருபுறம் துபே குஜராத் பந்துவீச்சை வெளுத்துவாங்க, மறுபுறம் மிட்ஷெல் பெரிய ஷாட்டுக்கு முயன்றும் பேட்டில் பந்து சிக்கவில்லை. மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 22 பந்துகளில் துபே அரைசதத்தை நிறைவு செய்தார். ஐபிஎல் தொடரில் துபயின் 7-வது அரைசதம் இதுவாகும்.

19-வது ஓவரை வீச ரஷித்கான் அழைக்கப்பட்டார். 2வது பந்தில் துபே தூக்கி அடிக்க எக்ஸ்ட்ரா கவரில் சங்கரிடம் கேட்சானது. துபே 5சிக்ஸர், 2பவுண்டரி) 23 பந்துகளில்(51 ரன்னில் ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு மிட்ஷெல்-துபே கூட்டணி 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப்பிரிந்தனர்.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிரடி அறிமுகம்

அடுத்து ரிஸ்வி களமிறங்கினார். ஐபிஎல் தொடரில் முதல் ஆட்டத்தில் களமிறங்கிய ரிஸ்வி, தான் ஐபிஎல்தொடரில் சந்தித்த முதல்பந்தில், அதிலும் ரஷித்கான் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார், அதே ஓவரின் கடைசிப்பந்தில் மீண்டும் ரிஸ்வி ஒரு சிக்ஸர் விளாசினார். ஐபிஎல் ஏலத்தில் ரிஸ்வியை ரூ.8 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். 2வது பந்தில் ரிஸ்வி தூக்கி அடிக்க முயன்று, லாங்ஆன் திசையில் மில்லரிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்துவந்த ஜடேஜா பவுண்டரி மட்டும்அடிக்க கடைசிப்பந்தில் ரன்அவுட் ஆகினார்.

தோனி கடைசிவரை வரவில்லை

சேப்பாக்கில் அமர்ந்திருந்த அனைத்து ரசிகர்களும் ஜடேஜாவுக்குப் பதிலாக தோனி களமிறங்குவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜடேஜா களமிறங்கியவுடன் அனைத்து ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது.

அடுத்தடுத்து விக்கெட் இழப்பு

207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கோடு குஜராத் அணி களமிறங்கியது. சுப்மான்கில், சாஹா அதிரடியான தொடக்கத்தை அளி்த்தனர். சஹர் வீசய முதல் ஓவரில் கில் சிக்ஸரும், முஸ்தபிசுர் வீசிய 2வது ஓவரில் சஹா 2பவுண்டரிகளையும் விளாசினார். சஹர் வீசிய 3வது ஓவரில் சஹா 2 பவுண்டரிகள் வீசிய நிலையில் அதே ஓவரில் கில் ஸ்லோபாலில் கால்காப்பில் வாங்கி 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

2வது விக்கெட்டு சாய்சுதர்சன் களமிறங்கி சஹாவுடன் சேர்ந்தார். சஹர் வீசிய 5வது ஓவரின் 4வது பந்து பவுன்ஸராக வீசவே, அது சஹாவின் ஹெல்மெட்டில்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்தபந்தை சஹா தூக்கி அடிக்கவே ஸ்குயர் லெக் திசையில் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.

சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

சென்னைக்கு எதிராக களமிறங்கிய தமிழ்நாட்டு ஜோடி

அடுத்து விஜய் சங்கர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். இரு தமிழக வீரர்கள் அதிலும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்தது சிறிது மெய்சிலிர்ப்பாக இருந்தது. அணியை வெற்றி நோக்கி இருவரும் எடுத்துச் செல்ல முயன்றனர். தேஷ்பாண்டே ஓவரில் சங்கர் அற்புதமான சிக்ஸர் விளாசினார். பவர்ப்ளே ஓவரில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் சேர்த்தது.

மித வேகப்பந்துவீச்சுக்காக டேரல் மிட்ஷெல் அழைக்கப்பட்டார். மிட்ஷெல் வீசிய 3வது பந்தை அவுட் ஸ்விங்காக மாற, சங்கர் பேட்டில் பட்டு முதல் ஸ்லிப்பில் சென்றது. விக்கெட் கீப்பிங் பணியில் இருந்த தோனி, பறந்து சென்று அந்தக் கேட்ச்சைப் பிடித்து எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் மிகவும் இயல்பாக பந்தைதூக்கி எறிந்து நடந்து சென்றார்.

ரஹானேவின் அருமையான கேட்ச்

அதன்பின் மில்லர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். மில்லர், சுதர்சன் இருவரும் ஓவருக்கு ஒருபவுண்டரி அடித்து ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். 10ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் சேர்த்தது.

பதிரனா பந்துவீச வந்தபின் குஜராத் ரன்ரேட் வேகம் சற்று குறைந்தது. தேஷ்பாண்டே வீசிய 12-வது ஓவரை மில்லர் எதிர்கொண்டார். யார்கராக வீசப்பட்ட 5வது பந்தை ப்ளிக் செய்து மில்லர் தட்டிவிட,பவுண்டரி லைனில் இருந்த ரஹானே பறந்து சென்று அருமையான கேட்ச் பிடித்தார். இந்த கேட்சை எதிர்பாராத மில்லர் 21 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார். அதன்பின் ஓமர்சாய் களமிறங்கி, சுதர்சனிடம் சேர்ந்தார்.

 
சிஎஸ்கே 2.0 வென்றது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரன்ரேட் நெருக்கடி

அதன்பின் குஜராத் அணிக்கு ஸ்கோர் உயரவில்லை என்பதால் களத்தில் இருந்த சுதர்சன், ஓமர்சாய் மீது ரன்ரேட் அழுத்தம் அதிகரித்தது. இதனால் இருவரும் பெரிய ஷாட்களுக்கு முயன்றனர். பதிரணா வீசிய 15-வது ஓவரின் 2வது பந்தை சுதர்சன் எக்ஸ்ட்ரா கவரில் தூக்கி அடிக்க அந்தப் பந்தை ரச்சின் ரவீந்தரா பிடிக்காமல் கோட்டைவிட்டார். ஆனால், அதே ஓவரி்ன் 5வது பந்தில் ரிஸ்வியிடம் கேட்ச் கொடுத்து சுதர்சன் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.

15 ஓவர்களுக்குப்பின் குஜராத் அணி பேட்டர்கள் பெவிலியனிலிருந்து களத்துக்கு வருவதும், மீண்டும் பெவிலியன் செல்வதுமாக இருந்தனர். ஓமர்சாய் 11 ரன்னில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ரஷித் கான் ஒரு ரன்னில் முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திவேட்டியா 6 ரன்னில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜான்ஸன் 5, உமேஷ் 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில்குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்து 63 ரன்களில் தோல்விஅடைந்தது.

https://www.bbc.com/tamil/articles/c98rdn4y5yeo

ipl-pt26.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

SRH

12 ஓவரில 173.

நம்பமுடியாத ஓட்டங்கள்.

ஓமண்ணை ட்ரவிஸ் ஹெட், அபிசேக் சர்மா ஆகியோர் அகோர அடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

206-03......15.3.....!  😂 ஹைரபாத்  அடி பின்னுறாங்கள்.......!  

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, suvy said:

206-03......15.3.....!  😂 ஹைரபாத்  அடி பின்னுறாங்கள்.......!  

உந்த‌ பாண்டிய‌ ஏன் மும்பை அணி திருப்ப‌ மும்பைக்கு அழைத்தார்க‌ள் தெரிய‌ வில்லை த‌லைவ‌ரே

குஜ‌ராத் அணிய‌ ஜ‌பிஎல்ல‌ இர‌ண்டு முறை பின‌லுக்கு அழைத்து சென்ற‌வ‌ர் ஆனால் அது ம‌ற்ற‌ ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளால்..............மும்பை இந்திய‌ன் அணி க‌ப்ட‌ன் ப‌த‌வியை ரோகித் ச‌ர்மாவிட‌ம் பாண்டியாக்கு கொடுத்த‌து த‌வ‌று...............மும்பை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ந்த‌து போல் இந்த‌ முறையும் வ‌ர‌க் கூடும் 277 பெரிய‌ ஸ்கோர்..........உந்த‌ ர‌ன்ஸ் அடிச்சு வெல்ல‌ முடியாது............ ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் இது தான் அதிக‌ப‌டியான‌ ஸ்கோர் என்று நினைக்கிறேன்..............

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
INNINGS BREAK
8th Match (N), Hyderabad, March 27, 2024, Indian Premier League
Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad    (20 ov) 277/3

MI chose to field.

 

Current RR: 13.85   • Last 5 ov (RR): 75/0 (15.00)
Win Probability:SRH 99.01%  MI 0.99%
 
SRH end up 277 for 3 - the highest total ever in the IPL, going past RCB's 263 for 5. Mumbai's plan was to save Bumrah for Klaasen. But Head and Abhishek did the early damage. Head got to his fifty off just 18 balls, the fastest for SRH. But the record was broken soon after when Abhishek brought up his off 16 balls. By comparison, Klaasen's was pedestrian, off 23 balls, but he finished on 80 off 34. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உந்த‌ பாண்டிய‌ ஏன் மும்பை அணி திருப்ப‌ மும்பைக்கு அழைத்தார்க‌ள் தெரிய‌ வில்லை த‌லைவ‌ரே

குஜ‌ராத் அணிய‌ ஜ‌பிஎல்ல‌ இர‌ண்டு முறை பின‌லுக்கு அழைத்து சென்ற‌வ‌ர் ஆனால் அது ம‌ற்ற‌ ப‌ல‌ திற‌மையான‌ வீர‌ர்க‌ளால்..............மும்பை இந்திய‌ன் அணி க‌ப்ட‌ன் ப‌த‌வியை ரோகித் ச‌ர்மாவிட‌ம் பாண்டியாக்கு கொடுத்த‌து த‌வ‌று...............மும்பை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ந்த‌து போல் இந்த‌ முறையும் வ‌ர‌க் கூடும் 277 பெரிய‌ ஸ்கோர்..........உந்த‌ ர‌ன்ஸ் அடிச்சு வெல்ல‌ முடியாது............ ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் இது தான் அதிக‌ப‌டியான‌ ஸ்கோர் என்று நினைக்கிறேன்..............

பையா மும்பையும் ஸ்ராடிங் நல்லா இருக்கு இனி போகப் போகத்தான் தெரியும்......!   😂

ஆனால் நல்ல விளையாட்டு........ இந்த சீசன் இதுதான் நான் பார்க்கும் முதல் விளையாட்டு........!  

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் லாண்டவுக்கு ஜூலி என்ற மனைவி, ஜேமி, ஜோடி என்ற மகன்கள் உள்ளனர். டைட்டானிக், அவதார் தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் காலமானார் | Jon Landau: Titanic and Avatar producer dies aged 63 - hindutamil.in
    • Mayu   / 2024 ஜூலை 08 , மு.ப. 11:10 - 0      - 73 ஏ எம் கீத்  கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இந்திய தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் கே.அண்ணாமலை இலங்கை தமிழரசுக்கட்சி யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் திருகோணமலை தமிழரசு கட்சி நகரசபை பிரதேசசபை தலைவர் உறுப்பினர்களுக்கிடையை  கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (07) திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில்  நடைபெற்றது.         இதன்போது, எதிர்கால அரசியல் களநிலவரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  கலந்துரையாடப்பட்டன.   Tamilmirror Online || அண்ணாமலையுடன் ஆளுநர் சந்திப்பு
    • வ.சக்தி  ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இன்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.   இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன.  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன். இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய ஜனாதிபதி. அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன. ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் அவர்களையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். சம்மந்தன் ஐயாவை நாம் என்றும் மறக்க முடியாது தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தள்ளாடும் வயதிலும் நின்று குரல் கொடுத்த ஓர் மாமனிதன் அவர். அவருக்கு எமது கட்சி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருடைய இறப்பு மாபெரும் இழப்பாகும். பாராளுமன்றத்திலே நபன் இருக்கும்போது என்னுடன் மிகவும் அன்பாக கதைப்பார். தற்போது தமிழர்களின்  எதிர்கால உரிமையை காப்பாற்றுவதற்காக உருவாகிய கட்சிதான்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே பதவிக்கு போட்டி நடக்கின்றது. சுமந்திரன் ஒருப்பக்கம் சிறிதரன் மறுபக்கம் என பதவிக்காக வழக்கும் வைத்திருக்கின்றார்கள். இதுவைரகாலமும் ஒரு தூணிலேதான் அந்த கட்சி நின்றது அதுதான் சம்மந்தன் ஐயா. அந்த தூண் சாய்ந்து விட்டது. ஆகவே அக்கட்சி சிதறுவதற்கு வாய்பிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார். R Tamilmirror Online || ரணிலை ஆதரிக்க தீர்மானம்; கருணா
    • யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!  08 JUL, 2024 | 05:46 PM   யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றார். வைத்தியசாலையில் பதில் மருத்துவ அத்தியட்சகராகத் கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார். அதேவேளை வைத்தியரை இடமாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியசாலை முன்பாக நேற்றைய தினம் இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் நண்பகல் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக சாவகச்சேரி நகர்ப்பகுதிகளில் கடைகள், பொதுச்சந்தை மூடப்பட்டது. இதேவேளை வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா ,பொதுமக்கள் வெளியே போக சொல்லாமல் நான் வெளியேற மாட்டேன் என தெரிவித்து வைத்தியசாலையில் தொடர்ந்து இன்றைய தினம் நண்பகல் வரையில் தங்கியிருந்த நிலையில் , நீண்ட இழுபறியில் பின்னர் நண்பகலுடன் வைத்தியசாலையில் இருந்து வெளியேறி சென்றுள்ளார்.  வைத்தியர் வெளியேறி சென்றதுடன் மக்கள் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. அதேவேளை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகரை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.      யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் வைத்தியர் அர்ச்சுனா!  | Virakesari.lk
    • அந்த தட்டுக்கதை சிறு வயதில் எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  எமக்கும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பிள்ளைகளை படிபடி என்று படிப்பித்த பின்பு வேலை அவர்கள் குடும்பம் இவைகளையே பார்க்கவே கஸ்டப்படுகிறார்கள். நியூயோர்க்கில் எமது குடும்ப நண்பர்கள் நாம் பிள்ளைகளுடன் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லி எமது எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகுது என்பதை ஆவலாக எதிர்பார்த்திருக்கிறார்கள்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.