Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“மாடுகளின் வாய்க்குள் வெங்காய வெடி வைத்து வாய் சிதறடிப்பு”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்த பெருமான் போதித்த காருண்யம் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மயிலத்தமடு , மாதவனை பகுதிகளில் மீறப்படுகின்றது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்   வாய் பேச முடியாத மாடுகளுக்கு வாய்க்குள் வெங்காய  வெடியை வைத்து வாயை சிதறடிக்கின்றீர்கள். இதனால் அந்த மாடுகள் உணவுகூட அருந்த முடியாமல் அணு அணுவாக செத்துடுப்போகின்றது என்றார்.

 காலை இழந்த ஒரு இராணுவ வீரர் தான் இவ்வாறான கொடூரத்தை செய்கின்றார். மயிலத்தமடு , மாதவனையில் பெரும்  பாவத்தினை  இந்த நாடு செய்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த அவர்,   இலங்கையில் சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்தின் கதவுகளுக்கு ''சீல்'' வைக்கப்பட்டுள்ளது.பௌத்தத்தை பின்பற்றுகின்ற , புத்தரின் பெயரால் விகாரைகளை அமைக்கின்ற ,அவரின் பெயரினால் இந்த நாட்டில் அநியாயங்களுக்கு எல்லாம் முடி சூட்டுகின்ற பிக்குமாரைக்கொண்டுள்ள இந்த நாட்டில் கருணையும் அஹிம்சையும் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. புத்தபெருமான் சொன்ன பாவங்களை  நீங்கள் எங்கே கழுவப்போகின்றீர்கள், எங்கே கரைக்கபோகின்றீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான  முதல் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மீண்டும் இந்த நாட்டில் துன்பங்கள் துயரங்கள் நடைபெறாது அல்லது இந்த நாட்டில் மீண்டும் தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படமாட்டார்கள்,அவர்கள் மீது நடந்த இனப்படுகொலை மீண்டும் நறைபெறமாட்டாது,அவர்கள் மீது நடந்த போர்க்குற்றங்கள் இனியும் நடக்காது என்று சொல்வதற்கான, மீள நிகழாமை தொடர்பான எந்த உத்தரவாதங்களும் இந்த நாட்டில் இல்லை எனவும் கூறினார்
 
இங்கு நல்லிணக்கத்துக்காக சொல்லப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்ட  வார்த்தை ''வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான  நிவாரணம் வழங்க  அரசு பலகோடி ரூபா ஒதுக்கீடு'' என்பதாகும் இறந்துபோன உயிர்களுக்கு ,காணாமல் போனவர்களுக்கு நீங்கள் காசால் விலை பேசுகின்றீர்களே தவிர அவர்களுக்கு என்ன நடந்தது,இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் ஒப்படைக்கப்பட்டவர்கள்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டுபிடிக்க அல்லது மீண்டும் அது நிகழாமலிருக்க  இந்த நாட்டின் தலைவர்கள் ,நியாயமுள்ள மனிதர்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார்.

Tamilmirror Online || “மாடுகளின் வாய்க்குள் வெங்காய வெடி வைத்து வாய் சிதறடிப்பு”

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்து நாட்டில் மாட்டு மூத்திரம் குடிப்பவர்களுக்கு இந்த செய்தி தெரியுமா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டு மேச்சல்தரை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவர் துப்பாக்கியுடன் கைது

image
 

மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த  மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கால்நடைகளை கொன்று வந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து தாக்குதல் நடாத்தப்பட்டு வந்துள்ளது

இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை (16) மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டு மேச்சல்தரை பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திய சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவர் துப்பாக்கியுடன் கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

Published By: DIGITAL DESK 3  18 NOV, 2023 | 10:42 AM

image

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதியில் அத்துமீறிய பயிர் செய்கையிலீடுபடுவோரால் போடப்பட்ட மின்வேலியில் சிக்கி  பசுமாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

பஞ்சாட்சரம் என்பவருடைய 4 வயது மதிக்கத்தக்க பசுவே இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு உயிரிழந்துள்ளது.

https://www.virakesari.lk/article/169600

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.