Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையிடம் மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி கோரியுள்ள சீனா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
xiang-yang-hong-03.jpg

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.

இம்முறை சீனா Xiang Yang Hong 03 எனும் கப்பலை அனுப்பவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. Xiang Yang Hong 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது. Xiang Yang Hong 03 கப்பல் 99.06 மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குக் கப்பலாகும்.

இதேவேளை, இந்தியாவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த Shi Yan 6 கப்பல் நேற்று மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தானியங்கி அடையாள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், Shi Yan 6 மீண்டும் நாட்டிற்கு வருகை தருவது குறித்து அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. குறித்த கப்பல் தொடர்ந்தும் இந்து சமுத்திரத்தில் தரித்து நிற்கின்றது.

கடந்த சில வருடங்களில் 17-க்கும் மேற்பட்ட சீன உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்கு வருகை தந்துள்ளன.

இதேவேளை, சீன ஜனாதிபதி Xi Jinping-இன் சிறப்பு தூதுவரும் மாநிலங்களவை உறுப்பினருமான Shen Yiqin எதிர்வரும் 18 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவிற்கு விஜயம் செய்துள்ள சீன ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர், புதிய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் (Mohamed Muizzu) பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளார்.

https://thinakkural.lk/article/281383

  • கருத்துக்கள உறவுகள்

சீனா… அடிக்கடி ஆய்வு செய்கின்ற படியால்,
இந்தியாவுக்கு  விரைவில் பெரிய ஆபத்து காத்திருக்குது போலை இருக்கு.
இதை… இனியும், இந்தியா சாதாரணமாக எடுக்கக் கூடாது.
„வெட்டு ஒண்டு துண்டு இரண்டாய்“ சீனாவை கண்டிக்க திராணி இல்லாவிட்டாலும்,  இலங்கையை கண்டிக்க வேண்டும். 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு ஆய்வுக்கப்பலை அனுப்புவதற்கு சீனா முஸ்தீபு

18 NOV, 2023 | 03:40 PM
image

நமது நிருபர்

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக ஷியான் யாங் ஹொங் 03 என்ற மற்றுமொரு ஆய்வுக் கப்பலை அனுப்புவதற்கு சீனா இலங்கையிடம் அனுமதியை கோரியுள்ளது.

குறித்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

சீனா எதிர்வரும் 2024 ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி முதல் பெப்ரவரி 20ஆம் திகதி வரை ஷியான் யாங் ஹொங் 03 கப்பலை ஆய்வு  செய்வதற்கு தயாராகியுள்ளது.

ஷியான் யாங் ஹொங் 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானதாக உள்ளதோடு, அக்கப்பல் 99.06மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குகளைக் கொண்டதாகும்.

குறித்த கப்பலை இலங்கைக்கு அனுப்புவதற்கான கோரிக்கை சீனாவால் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த கோரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் உறுதிப்படுத்த முடிந்திருக்கவில்லை.

இதேவேளை,  கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த ஷியாங் யாங்-06 கப்பல் அக்கப்பல் இந்து சமுத்திரத்தில் தரித்து நிற்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் குறித்த கப்பல் மீண்டும் நாட்டிற்கு வருகை தருவது குறித்து அமைச்சுக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/169632

  • கருத்துக்கள உறவுகள்

மா புளிக்கிறது அப்பத்துக்கு நல்லது. வெல்கம் சீனா!

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2023 at 13:08, தமிழ் சிறி said:

சீனா… அடிக்கடி ஆய்வு செய்கின்ற படியால்,
இந்தியாவுக்கு  விரைவில் பெரிய ஆபத்து காத்திருக்குது போலை இருக்கு.
இதை… இனியும், இந்தியா சாதாரணமாக எடுக்கக் கூடாது.
„வெட்டு ஒண்டு துண்டு இரண்டாய்“ சீனாவை கண்டிக்க திராணி இல்லாவிட்டாலும்,  இலங்கையை கண்டிக்க வேண்டும். 😁

இலங்கை சீன சார்பு நாடு என்பதை நீங்கள் இன்னும் புரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியாவை சுற்றியுள்ள எந்த நாடுமே அவர்களது சிநேகபூர்வ நாடுகள் இல்லை. தங்கள் வசதிக்காக இந்தியாவை வைத்திருக்கிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை. ஆபத்து வரும்போது இந்தியாவை நாடுவார்கள். சீனாவை காட்டி தங்கள் காரியங்களை முடித்து கொள்ளுவார்கள். இந்தியா பண பலத்தை  கொண்டு ஊழல்வாதி, இனவாதி அரசியல்வாதிகளை மடக்கும் வரிக்கும் இது சிரமம்தான். மற்றப்படி சீன சார்புதான். நிச்சயமாக இந்த சீன கப்பல் விரைவில் இலங்கைக்கு வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2023 at 05:16, ஏராளன் said:

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது.

இந்த நக்கல் தானே வேணாம் என்கிறது தீவின் ஒருபகுதியை கடன் கொடுத்தே சொந்தமாக்கிய பின் அனுமதி கேட்கிறான்களாம் இதை ஒரு செய்தியாய் போட்டு பெருமை படுது மோட்டு சிங்களம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.