Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - இராணுவ புலனாய்வாளர்கள் தற்கொலை குண்டுதாரியொருவரின் வீட்டிற்கு சென்றனர் - முன்னாள் பொலிஸ் அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று காலை இராணுவ புலனாய்வாளர்கள் தற்கொலை குண்டுதாரியொருவரின் வீட்டிற்கு சென்றனர் - முன்னாள் பொலிஸ் அதிகாரி ரவி செனிவிரட்ண ஏபிசிக்கு பரபரப்பு தகவல்

Published By: RAJEEBAN    16 NOV, 2023 | 02:55 PM

image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் முன்னைய அரசாங்கம் சிதைத்தது என முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் ரவி செனிவிரட்ண ஏபிசிக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏபிசி தெரிவித்துள்ளதாவது,

ravi_senivi.jpg

இலங்கையின் முன்னாள் அரசாங்கம் அரசியல் நோக்கங்களிற்காக பயங்கரவாத குழுவொன்றுடன் இணைந்து செயற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி இதன் காரணமாக அவுஸ்திரேலியர்கள் உட்பட பெருமளவாளவர்களின் மரணம் 2019 இல் இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் இடம்பெற்ற தாக்குதல்கள் இரண்டு அவுஸ்திரேலியர்கள் உட்பட 269 பேரை கொலை செய்தன - 500க்கும் அதிகமானவர்கள் காயமமடைந்தனர்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்த சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என  இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதே வேளை வேண்டுகோளை கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலில் தப்பிய  இலங்கை அவுஸ்திரேலிய பெண்மணியான சதுடில்லா வீரசிங்கவும் விடுத்துள்ளார்.

அன்றைய நாள் பல குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதால் ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு அவை இடம்பெற்றுள்ளதால் -பாரிய திட்டமிடல் இடம்பெற்றிருக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

முக்கிய புலனாய்வு அதிகாரியொருவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பினை சந்தித்தார் என அரசாங்கத்தின் முன்னாள் உதவியாளர் ஆசாத் மௌலானா தெரிவித்ததை சனல்4 செப்டம்பரில் ஒளிபரப்பியது.

தாக்குதல்கள் மூலம் தேசிய பாதுகாப்பு பிரச்சினையை ஏற்படுத்தி அதன் மூலம் அதிகாரத்திற்கு வரும் கோட்டாபய ராஜபக்சவின் திட்டமாக இது இடம்பெற்றது என அவர் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த குண்டுவெடிப்பு விசாரணைகளிற்கு தலைமை தாங்கிய ரவி செனிவிரட்ண முதல்முறையாக இது குறித்து மனம் திறந்துள்ளார்.

அரசியல் தலையீடுகள் விசாரணைகளை குழப்பின, தடம்புரளச்செய்தன என அவர் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு இடம்பெற்று ஆறுமாதங்களின் பின்னர் தனது குழுவை கோட்டாபய ராஜபக்ச விசாரணையிலிருந்து அகற்றினார் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றதும் காரணங்களை குறிப்பிடாமல் எனது குழுவை விசாரணைகளில் இருந்து அகற்றினார்கள் என தெரிவித்துள்ள அவர் அவ்வேளை அமைச்சரவையோ பிரதமரோ கூட நியமிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

அடுத்த சில மாதங்களில் மேலும் 22 விசாரணை உத்தியோகத்தர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் இருந்து நீக்கப்பட்டார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் எனினும் இந்த இடமாற்றங்களிற்கான காரணங்கள் எவற்றையும் அவர்கள் எனக்கு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

செனிவிரட்ணவின் கீழ் பணிபுரிந்த 700 உத்தியோகத்தர்கள் வெளிநாடுகளிற்கு பயணம் மேற்கொள்வதற்கும் புதிதாக பதவியேற்ற கோட்டாபய அரசாங்கம் தடைவிதித்திருந்தது.

 ராஜபக்ச அரசாங்கத்தின் சகாக்களை விசாரணை செய்யமுயலும் பொலிஸாரை அச்சுறுத்தும் நடவடிக்கையாக இது இடம்பெற்றது என செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

இது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 90 பேருக்கு எதிராக இலங்கை பொலிஸார் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

இலங்கை புலனாய்வு பிரிவை சேர்ந்த சில  அதிகாரிகளுக்கு முஸ்லீம் குழுவுடன் தொடர்பு உள்ளதை நாங்கள் கண்டுபிடித்ததும் முட்டுக்கட்டைகளை எதிர்கொண்டோம் என செனிவிரட்ண தெரிவித்துள்ளார்.

easter_sunday__attack22.jpg

இலங்கையின் புலனாய்வு பிரிவினருக்கும் முஸ்லீம் குழுவிற்கும் தொடர்புகள் காணப்பட்டமை அமெரிக்காவின் எவ்பிஐயின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ள அவர் எவ்பிஐ பயங்கரவாதிகளுடனான தொடர்ச்சியாக உரையாடல்களை கண்டுபிடித்தது, இந்த ஐபி முகவரி இரகசிய புலனாய்வு பிரிவின் நபர் ஒருவருடையது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற அன்று காலை இராணுவ புலனாய்வாளர்கள் தற்கொலை குண்டுதாரியொருவரின் வீட்டிற்கு சென்றிருந்தனர் என தெரிவித்துள்ள அவர் எனினும் இந்த விடயத்தை அவர்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் சில நபர்களையும் குழுக்களையும் விசாரணை செய்ய முயன்றவேளை தடைகளை எதிர்கொண்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

59.jpg

தற்கொலை குண்டுதாரியின் சகாக்களை பொலிஸார் விசாரணை செய்ய முயன்றவேளை புலனாய்வு பிரிவினர் இரண்டு தடவை தடுத்து நிறுத்தினர். அவர்கள் தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டனர் என தெரிவித்துள்ள அவர் அந்த அதிகாரிகள் புலனாய்வு தொடர்பான இரகசிய விடயங்களை கையாள்கின்றனர் என தெரிவித்ததால் நாங்கள் பின்னர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/169450

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட அதேநேரம் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார் என அசாத் மௌலானா சனல் 4 க்கு தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தடம் புரண்டமைக்கு அரசியல் தலையீடே காரணம் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன அவுஸ்ரேலியாவின் ABC ஊடகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

குண்டுவெடிப்பு நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ராஜபக்ச பதவியேற்றதும் அவரது தரப்பினர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அந்த நேரத்தில், ஒரு பிரதமரோ அல்லது அமைச்சரவை கூட நியமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து வந்த மாதங்களில், மேலும் 22 அதிகாரிகள் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் தனது கட்டளையின் கீழ் இருந்த 700க்கும் மேற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அரசாங்கம் விதித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியின் சகாக்களை விசாரிக்கும் பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சியாக இதனை தான் பார்த்ததாகவும் இது மிகவும் சட்டவிரோதமானது என்றும் இந்த நடவடிக்கையால், பல அதிகாரிகள் அச்சப்பட்டதாகவும் சிலர் இனி அங்கு பணிபுரிய விரும்பாமால் இடமாற்றம் கோரியதாகவும் கூறியுள்ளார்.

சில உளவுத்துறை அதிகாரிகள் முஸ்லிம் குழுவுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றும் அதனை கண்டுபிடித்த போது அவர்களுக்கு தடை போடப்பட்டது என்றும் இவற்றில் ஒன்று அமெரிக்க பெடரல் பீரோ ஒப் இன்வெஸ்டிகேஷன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த அன்று காலை தற்கொலை குண்டுதாரி ஒருவரின் வீட்டிற்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்றதாகவும் ஆனால் இந்த தகவலை பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தகைய சந்தர்ப்பங்களில், சில தனிநபர்கள் மற்றும் குழுக்களை கேள்வி கேட்க முயன்றபோது, சில தடைகளை தாம் எதிர்கொண்டதாகவும் த்ற்கொலை குண்டுதாரிகளின் சகாக்களை விசாரணை செய்வதற்கு தாம் இரண்டு முறை தடுக்கப்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை தொடர்பான இரகசிய விடயங்கள் என இராணுவ உளவுத்துறை தமக்கு தெரிவித்ததால், அவர்களை தாம் மேலும் விசாரிக்கவில்லை என்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியும் என்று தான் நம்பிய முந்தைய விசாரணையை இராணுவ புலனாய்வு முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், கிழக்கில் இரண்டு கான்ஸ்டபிள்களின் கொலையில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பங்கை மறைத்து, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தனர் என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொலைச் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க முடிந்திருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன என்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1359164

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி.

 

சரி.

இப்ப கொழும்பில் ஒரு தமிழ் தொழிலதிபர் கொலை செய்யப்பட்டாரே அந்த விசாரணை என்னாச்சு?

அடுத்த அரசாங்கம் வரும் போது தான் இந்த கொலையின் விசாரணைகளை யார் தடுத்தது என்ற உண்மை தெரியவருமா சார்?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

சரி.

இப்ப கொழும்பில் ஒரு தமிழ் தொழிலதிபர் கொலை செய்யப்பட்டாரே அந்த விசாரணை என்னாச்சு?

அடுத்த அரசாங்கம் வரும் போது தான் இந்த கொலையின் விசாரணைகளை யார் தடுத்தது என்ற உண்மை தெரியவருமா சார்?

தமிழன் எண்டால் அதை எல்லாம் கணக்கில் எடுக்க மாடடார்கள். எனவே அந்த விசாரணை இன்னோர் அரசு வந்தாலும் அதே நிலைமைதான். ஆனால் ஈஸ்டர் குண்டு வெடிப்பில் ஒரு தமிழனாவது சம்பந்தப்பட்டிருந்தால் முழு தமிழனையும் பூஸ்ஸாவில் அடைந்திருப்பார்கள். சிங்களவர்களும் முஸ்லிம்களும் சம்பந்தப்படடதால்தான் இது அவர்களுக்கு பிரச்சினையாகி விட்ட்து. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.