Jump to content

மாவீரர் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனம் - சரத் வீரசேகர


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    23 NOV, 2023 | 05:13 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை  ஹஷான்)

உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை அழித்துள்ளோம். இலங்கையிலிருந்து  புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் இன்றும்  துடிப்புடன் உள்ளார்கள் செயற்படுகிறார்கள்.

இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா? என்பதை ஆராய வேண்டும். மாவீரத் தினத்துக்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது  கோழைத்தனம் என  தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற 2024 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத்தலைப்புக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். ஆனால் இன்று அவருக்கு அரசியலமைப்பு பேரவையினால் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் தான் நான் அரசியலமைப்பின் 19  ஆவது திருத்தத்துக்கும், 21 ஆவது திருத்தத்துக்கும் எதிராக வாக்களித்தேன்.

உலகத்தில் மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலை புலிகளை அழித்துள்ளோம். இலங்கையில்  புலிகள் அமைப்பை அழிந்திருந்தாலும். புலிகளின் கொள்கையுடைவர்கள் சர்வதேச மட்டத்தில் துடிப்புடன் உள்ளார்கள், செயற்டுகிறார்கள். இலங்கையில் மீண்டும் யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றால் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவத்தினர் தயாராக உள்ளார்களா ? என்பதை ஆராய வேண்டும்.

யுத்ததை வெற்றிக் கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகள் விசா வழங்குவதில்லை. இராணுவ அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலை தற்போதை இராணுவ அதிகாரிகளுக்கும் சேவை ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜெனிவா விவகாரத்தில் இலங்கை தவறிழைத்துள்ளது. 2009.01.19 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து  2009.05.27 ஆம்  திகதி ஜேர்மனி உட்பட 17 நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டு வந்தன. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய  செயலாளர் நாயகம் பாங்கி மூன்  பல பரிந்துரைகளை முன்வைத்தார்.

அதனை தொடர்ந்து தருஸ்மன் அறிக்கை சமர்ப்பிக்கப்டப்பட்டது. அதில் 40 ஆயிரம்  பேர் கொல்லப்பட்டதாக  பொய்யான தரப்படுத்தல் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு முரணாக  பரணகம குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் 30-1 பிரேரணைக்கு இணையனுசரனை வழங்கியது. யுத்த காலத்தில் இடம்பெற்ற யாதார்த்த உண்மைகள் ஜெனிவாவுக்கு குறிப்பிடப்படவில்லை. ஆகவே இனியாவது இந்த தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.

மாவீரர் தினம் பற்றி தற்போது பேசப்படுகிறது. நாட்டை பிளவுப்படுத்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு அனுமதி வழங்குவது அனுதாபமல்ல அது கோழைத்தனமானது என்பதை பகிரங்கமாக குறிப்பிடுவேன்.

மாவீரர் தினம் என்று குறிப்பிட்டுக் கொண்டு இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், ஏனைய தமிழ் அரசியல் தரப்பினரும் முயற்சிக்கிறார்கள். விடுதலை புலிகள் தமிழர்களை பயணக் கைதிகளாக வைத்திருந்த போது இவர்கள் எங்கு சென்றார்கள். 2இலட்சத்து 95 ஆயிரம் பேரை இராணுவத்தினர் மீள்குடியேற்றம் செய்தார்கள். 8000 தமிழர்களுக்கு இராணுவத்தினர் தமது சொந்த நிதியில் வீடு கட்டிக் கொடுத்தார்கள். அப்போது கூட்டமைப்பினர் தமிழ் தேசியம் பற்றி பேசிக் கொண்டு வரவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகிறது. கூட்டமைப்பினர் பாராளுமன்றத்துக்கு வருகை தந்து பதவி பிரமாணம் செய்வதற்கு முன்னர் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய தவறிழித்துள்ளார். ஹிட்லர், முசோலினி,சதாம் உசேன் ஆகியோர் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் அரசியல் செயற்பாடுகள், அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டன. அதே போல் பிரபாகரனை அழித்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவின் அனுதாபம் இன்று பூமியதிர்ச்சியாக  மாற்றமடைந்துள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/170070

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோகண விஜயவீர நிணைவு கூரலையும் தடுத்து, ஜேவிபியையும் தடை செய்து வந்தா, இத பத்தி பேசலாம் மச்சான் சரத்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ரோகண விஜயவீர நிணைவு கூரலையும் தடுத்து, ஜேவிபியையும் தடை செய்து வந்தா, இத பத்தி பேசலாம் மச்சான் சரத்!!

அப்படி எல்லாம் இல்லை. சிங்கள இனவாதத்தை கக்கும்போது இங்கு ஓட்டுகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே அவரால் சிங்களவருக்கு எதிராக எதுவும் சொல்ல முடியாது. எனவே அப்படி சொல்லவும் மாடடார் செய்யவும் மாடடார். அவர்களுக்கு முக்கியம் பாராளுமன்ற கதிரை மாத்திரமே. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.