Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்த சங்கரியின் இந்தியா மாதிரி அல்வா!

Featured Replies

'அரசு யுத்தத்தை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்". இவ்வாறு ஐ.வி.மு தலைவன் ஆனந்த சங்கரி கேட்டுள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு :-

அரசு, கிழக்கு மாகாணத்தில் வெற்றி கண்ட பின் வடக்கு மாகாணத்திலும் அதே போன்று வெற்றியை நோக்கிச் செல்கிறது. இதுஅனைவருக்கும் தெரிந்த விடயம்.ஆனால், கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெற்றியைப் போல் வடக்கு மாகாணத்தில் அவ்வளவு இலகுவாக அமைதியைக் கொண்டுவர முடியாது.

அரசு இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், யுத்தத்ததை நிறுத்தி புலிகளைப் பேச்சுக்கு அழைக்க வேண்டும்.நான் விடுதலைப்புலிகளுக்கு பணிவாக விடக்கூடிய வேண்டுகோள் இதுதான். இப்போது

நாங்கள் இழந்த இழப்புக்கள் போதும்,இச்சந்தர்ப்பத்தில் பிடிவாதத்தைக் கைவிட்டு ஏனைய சில சம்பந்தப்பட்ட குழுக்களுடன் இணைந்து அரசுடன் பேசி அதற்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். என்றார்.

நன்றி : சுடர் ஒளி

ஐயா சங்கரியே நீர் உங்க இருந்து கொண்டு என்ன கிழிக்கிறீர். உம்முடைய எஜமானர்களுக்கு முதல்ல சொல்லி கூப்பிட்டுப் பாரும் பேச்சு வார்த்தைக்கு. அதன் பின் புலிகளுக்கு அறிவுரை வழங்கலாம்.

நாங்கள் இழந்த இழப்புக்கள் போதும்

இதன் அர்த்தம் சரியாக புரியவில்லௌஇ யாரை இவர் நாங்கள் என்று சொல்லுகிறார்/?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் சொல்லுறது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று-

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி அவர்களின் இந்தியா மாதிரி அல்வா!

ஜ திங்கட்கிழமைஇ 24 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

இந்தியாவிற்கு ஆஸ்பத்திரிக்கு வந்த ஆனந்த சங்கரி அவர்கள். இந்து பத்திரிகையின் நிருபரைப் பிடித்து அனைவருக்கும் ஆலோசனை வழங்கிவிட்டு அன்று இரவே கொழும்புக்குப் புறப்பட்டுவிட்டார். அவர் இந்தியா வரும்போதெல்லாம் ஊர்சுற்றிவிட்டு கொழும்புக்குப் புறப்படும்போது இந்துப்பத்திரிகைக்குப் பேட்டி கொடுப்பார். அவரது செய்தி இந்துப் பத்திரிகையில் வந்தால் அவர் முதல்நாளே கொழும்புக்கோ அல்லது இலண்டனுக்கோ சென்றுவிட்டார் என்று தெரிந்துகொள்ளலாம். இப்படி நீண்டகாலமாக அரியதொரு தந்திரத்தை அவர் கடைப்பிடித்துவருகிறார். இந்துப்பத்திரிகையில் அவரது அபூர்வ கண்டுபிடிப்பை மீண்டும் அவிழ்த்துவிட்டுச் சென்றுள்ளார். கிழக்கில் விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டதும், சிங்கள அரசு இந்தியா வடிவிலான தீர்வுத் திட்டத்துடன் பிரச்சினையைத் தீர்க்க முன்வரவேண்டும். ஏனென்றால், வடக்கில் நிறையக் கண்ணிவெடிகளை விதைத்துள்ளனர் அது சரியான கஸ்டம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சிங்கள அரசாங்கம் வடக்குத் தமிழ் மக்களை வென்றெடுக்க முயற்சிக்க வேண்டும். இந்தியா மாதிரி ஆட்சி அங்கு நல்லது அதுதான் அங்கு வேலைசெய்யும். பெடரல் என்ற சொல் அங்கு இருக்கும் ஒரு பகுதி மக்களுக்கு பிடிக்கவில்லை அதனால் இந்தியா மாதிரி தீர்வுதான் பொருத்தமானது. யூ.என்.பி. யையும். இடது சாரிகளையும் சேர்த்துக்கொண்டு தீர்வு காணவேண்டும் ராஜபக்சே. இரண்டுவாரத்துக்கு முன்கிழக்குக்கு சென்றாராம் சங்கரியார். புலிகள் பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் நின்மதியாக இருக்கின்றனர். அனைவருடனும் கதைத்துவிட்டு அரசாங்கத்துக்குச் சொல்லியுள்ளாராம். அமைதி திரும்ப இன்னும் கொஞ்சநாள் ஆகும், அதுமல்லாமல் அங்கு அமைதி திரும்ப இருக்கும் நேரத்தில் வைகோ, நெடுமாறன் போன்றோர் அதனைக் குழப்பக்கூடாது. இப்படியாக அனைவருக்கும் இலவச ஆலோசனை வழங்கிவிட்டு இரவோடு இரவாக கொழும்பு இராணுவப் பாதுகாப்புக்குச் சென்றுவிட்டார் சங்கரியார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கரியார் ஐரோப்பாவில் உள்ள தமிழ் மக்களுக்கு அல்வா கொடுத்துவந்தார். வந்த இடத்தில் இந்துப் பத்திரிகை மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கும் அதே அல்வாவை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

உண்மையில் ஆனந்தசங்கரி அவர்களின் இப்போதைய வேலைதான் என்ன?

வடக்கில் நிறையக் கன்னிவெடிகளை விதைத்துள்ளனர் இது சரியான கஸ்டம்! யாருக்கு? சிங்கள இராணுவத்துக்குத்தானே! கடந்த ஓராண்டாக இராணுவப் பாதுகாப்பில் வாழ்வதால் அவர்களது கஸ்டத்தை நன்கு உணர்ந்து அவர்களுக்காகப் பரிந்து பேசுகிறார் சங்கரியார். உண்டு, உறங்கிய நன்றி அவருக்கு!

சங்கரி அவர்கள் வாய்கிளிய வாக்குக் கேட்டு பேசிய தமிழீழக் கொள்கையும் அன்று கிளிநொச்சித் தமிழர்களுக்குக் கொடுத்த அல்வாதான் என்பதை யாரும் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்பது சங்கரியாரின் நினைப்பு.

புலிகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்தால் அரசு பல சலுகைகளையும் தேவையான பணக் கொடுப்பனவுகளையும் செய்யும் என்று மிகவும் பிந்தித்தான் அறிந்து கொண்டார். சங்கரி அவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தால் டக்கிளஸ் அவர்களையும். இலட்சுமன் கதிர்காமர் அவர்களையும் பின்னுக்குத் தள்ளியிருப்பார் சங்கரியார்.

சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வடக்குத் தமிழ்மக்களை வெல்லவேண்டும் என்று ராஜபக்சேவுக்கு இந்தியாவிலிருந்து ஆலோசனை வழங்குகிறார்.

உண்மைதான்! சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித்தான் சங்கரியார் அரசியல் செய்கிறார். லட்சுமன் கதிர்காமர் இறந்ததும் அந்த இடத்தைக் கைப்பற்றி அரசுக்குச் சேவை செய்யும் சந்தர்ப்பம் தற்செயலாகக் கிடைத்ததுதான். கதிர்காமர் உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் சங்கரியாருக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. சந்தர்ப்பவாதி என்பது சங்கரியாருக்கு நன்கு பொருந்தும். அதனையே அவரும் கொள்கையாகக் கொண்டுள்ளார்.

சங்கரியார் இந்தியாவுக்கும் அல்வா கொடுக்கிறார். நான்தான் இதனைக் கண்டுபிடித்துச் சொல்லி வருகிறேன், யாரும் காதில் வாங்கிக்கொள்கிறார்கள் இல்லை என்று அண்மையில் இலண்டனில் புலம்பியுள்ளார். இது இவரது கண்டுபிடிப்பல்ல, ராஜபக்சேயின் கண்டுபிடிப்பு. இப்படிச் சொன்னால் இந்தியா அமைதியாக இருக்கும், நீங்கள் உரக்கக் கத்துங்கள் என்று ராஜபக்சே சொல்ல இவர் அவிழ்த்துவிடுகிறார். இந்தியாவுக்கே தெரியாத ஒன்றை இவர் கண்டுபிடித்துள்ளாராம்!

பெடரல் என்றால் அங்கிருக்கும் ஜே.வி.பி.க்கும், கெல உருமையவுக்கும் பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக சிலருக்குப் பிடிக்கவில்லை என்று அவர்களைப் பாதுகாக்கிறாராம். அவர்களுக்கு தமிழ் என்றாலும் பிடிக்கவில்லை என்றால், தமிழினமும் தங்கள் இனப்பெயரை மாற்றிக்கொள்ளும்படி கூறுவார் இந்த தமிழினத்துரோகி சங்கரியார்!

இரண்டு வாரத்துக்கு முன் கிழக்குக்குப் போன சங்கரி அவர்களை சுற்றிவளைத்து மக்கள் கேள்விகள் கேட்க, பதில் சொல்லாமல் திரும்பிவிட்டு, புலிகளிடம் இருந்து விடுபட்டு நல்வாழ்வுக்குத் திரும்புகின்றனர் என்று புறுடாவிட்டுள்ளார்.

அங்கு கருணா பணம்பறிப்பதும், படுகொலை செய்வதும் இவருக்கு யாரும் சொல்லவில்லைப் போலும். உண்மையில் கருணா அரசின் பாதுகாப்பில் இருந்து செயற்படுவதால், அவருக்கு எதிரான கருத்தைச் சொல்லமுடியாது இவரால். ஏனென்றால் இவரும் அதே அரசின் பாதுகாப்பில்தான் இருக்கிறார். அரசிடம் அடைக்கலமான இவர் இன்னொரு அடைக்கலத்தைக் காட்டிக்கொடுக்க முடியுமா?

நீங்கள் செய்யும் துரோகம் மறைக்கப்பட்டுவிடாது! கிழக்குப் பிரிக்கப்பட்டபோது அரசின் பணத்தில் உண்டு. உறங்கி. வாழ்ந்துவரும் சங்கரி அவர்கள் தமிழர்களுக்கு அறிவுரை சொல்ல தகுதியிழந்தவர்.

தமிழர்களை அழிக்க ஆள்கிடைக்கவில்லை என்பதால் உங்கள் வாய்ச் சேவையை நன்கு பயன்படுத்துகிறது அரசு. சங்கரியார், தான் ஒரு நியாயவாதி என்று காண்பிக்க முயற்சிக்கிறார். துரோகம் நீண்டநாள் நிலைக்காது. சங்கரியார் இணையாத கட்சி எதுவுமில்லை இலங்கையில். கெல உருமையவுடனும் கைகோர்த்துள்ளார் சங்கரியார் என்பது வெளியில தெரியாத உண்மை.

எனவே, தமிழினத் துரோகி சங்கரியாரின் நரித்தனத்தை ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் ஊக்குவிக்கக் கூடாது. அல்வா மன்னனின் இப்போதைய களமே ஐரோப்பாதான். எங்கள் இனத்துக்குள் துரோகம் செய்யும் நரிகள் பல இருந்தன. இதுவோ, மோசமான குள்ளநரியாக உள்ளது.

பருத்தி வேந்தன்

http://nitharsanam.com/?art=24423

நிராகரிக்கப்பட்டு கோவணமும் மிஞ்சாமல் தேர்தலில்தோற்றது சொல்லுது கேளுங்கோ

தமிழினத் துரோகி சங்கரியாரின் நரித்தனத்தை ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் ஊக்குவிக்கக் கூடாது. அல்வா மன்னனின் இப்போதைய களமே ஐரோப்பாதான். எங்கள் இனத்துக்குள் துரோகம் செய்யும் நரிகள் பல இருந்தன. இதுவோ, மோசமான குள்ளநரியாக உள்ளது.

இந்த அழுக்கை ஐரோப்பாவில் இருந்து அகற்ற ஆவன செய்யப்பட வேண்டும்

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

இங்கே இந்த அழுக்கின் இழுக்கு தெரிந்து புலம்பலை யாரும் கண்டு கொள்வதில்லை. அது தான் போகின்ற இடத்தில் தன்னை தமிழ் அரசியல் வாதியாக நிலை நிறுத்த இப்படி புலம்பிக் கொண்டு திரிகின்றார்; இந்த காவி கட்டாத மொட்டை போடாத கெ(ஹ)ல உரிமைய ஆதரவாளர்.

ஜானா

  • தொடங்கியவர்

சமஷ்டி கோட்பாட்டைக் கைவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளை வலுப்படுத்ததாதீர்! இவ்வாறு ஐ.தே.க.விடம் கோரியிருக்கின்றார் த.வி.கூ தலைவர் வீ.ஆனந்த சங்கரி.

'புலிகளின் கைகளை வலுப்படுத்தாதீர்' என்ற தலைப்பில் அவர் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரியிருக்கன்றார்.

அதில் அவர் மேலும தெரிவித்திருப்பாதாவது:-

மேலும் பலரைப் போல ஐ.தே.கட்சியும் சமஷ்டி கோட்பாட்டைக் கைவிடும் போக்கில் தன்னுடைய நிலைப்படாட்டை மாற்றியமைக்க முடிவு செய்திருப்பது எனக்கு அதிர்ச்சிiயைத் தருகிறது.

இந்த முடிவை ஆட்பேசபிக்கும் அதே நேரம், சமஷ்டிக் கோரிக்கையைக் கைவிட வேண்டாம் என ஐ.தே.க தலைமையை மன்றாட்டமாகக் கோருகிறேன்.

இது, ஏற்கனவே இரத்தக்களரியில் சிக்கியுள்ள நாட்டை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடும் என நம்புகிறேன்.

தற்போதைய எதிர்க்கட்சியான ஐ.தே.க ஆட்சியில் இருந்தபோது தான் உடன்பட்ட ஒஸ்லோ ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், இந்த முடிவை எடுப்பது அதன் நம்பகத்தன்மைக்கு சர்வதேச ரீதியில் இழுக்கைகத் தேடித்தந்துவிடும்.

2002 டிசம்பர் 5ல் ஒஸ்லோவில் காணப்பட்ட உடன்பாட்டின்படி சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதற்கு ஐ.தே.க. அரசு இணங்கியிருந்தது.

சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண ஐ.தே.க அரசு எடுத்த முடிவை அடுத்த ஆண்டு ஜூனில் டோக்கியோவில் நடைபெற்ற இலங்கை அபிவிருத்தி மாநாட்டில் பங்குபற்றிய 51 நாடுகளும், 22 சர்வதேச அமைப்புகளும் வரவேற்றுப் பாராட்டியிருந்தன.

ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி கட்டமைப்பின் கீழ் பேச்சு மூலம் தீர்வு காண எடுக்கப்பட்ட முடிவை அந்த நாடுகள் விசேடமாகக் குறிப்பிட்டு பாராட்டியதுடன் அதன் அடிப்படையில் 450 கோடி அமெரிக்க டொலர் உதவிகளையும் வழங்கவும் முன்வந்தன.

தொடர்ந்து 13 ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டி வந்துவிட்டதே என்ற காரணத்திற்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 49.7 வீதம் வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் தன்னுடைய கொள்கை நிலைப்பபாட்டை ஐ.தே.க இப்போது இப்படி மாற்றிக் கொள்ள முயலக்கூடாது.

தீர்வை எட்டும் வாய்ப்பு தென்படும் இச்சமயத்தில் ஐ.தே.கட்சி தனது கொள்கை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது மிகத் தவறு.

ஆளும் தரப்பின் வட்டத்திலேயே கருத்து நிலைப்பாடு மாறி வருவதாகத் தெரிகையில், தீர்வு கிட்டி வருகின்றது என்பதே நிலைமை.

ஐ.தே.கட்சி இந்தச் சமயத்தில் வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது.

1957 ல் மேற்கொள்ளப்பட்ட பிரபலமான கண்டி யாத்திரையின் மூலம் இன்று வரை எவ்வளவு உயிர், உடைமை இழப்புகள் ஏற்பட்டன என்பதையும், இந்த யாத்திரை நடத்தப்பட்டிருக்காவிட்டால் ஐப்பது வருடங்களுக்கு முன்னரே இந்த இனப்பிரச்சனை தீர்க்கப்ட்டிருக்கும் என்பதையும் அவர்கள் மிகக் கவனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

யாரையோ ஒருவரை அதிகாரத்திற்கு அனுப்புவதற்காக அல்லது அதிகாரத்தில் நிறுத்துவதாதற்காக தினமும் நாம் சாவையும், அழிவையும் எதிர் கொள்ளத் தான் வேண்டுமா? என்பதை ஒவ்வோருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

துக்ககரமான பழைய சரித்திரமே மீண்டும் மீண்டும் இடம் பெற வேண்டும் என்ற ஊழ்வினை நமது நாட்டின் மீது திணிக்கப்பட்டுளளதா?

ஒற்றையாட்சி முறையின் கீழான தீர்வு எதுவும் தமிழருக்கு ஏற்புடையதல்ல. ஆக சமஷ்டி முறைக்கு மாற்றாக தமிழர்களால் ஏற்கக் கூடியது இந்திய மாதிரி முறையே. 'சமஷ்டி' என்ற சொல் மீது 'அலர்ஜி" கொண்டவர்களையும் இந்த இந்திய முறை திருப்திப்படுத்தும்.

நான் இந்த இந்திய முறையை தமிழன் என்ற ரீதியில அல்லாமல் :icon_idea: இலங்கை மீது தேசபிமானம் கொண்ட ஓர் பிரஜை என்ற முறையில் பிரேரிக்கிறேன்.

இலங்கை சமூகத்தில் அமைதி நிலவ வேண்ம் என்பதே எனது விருப்பம் என்றுள்ளது,.

நன்றி : சுடர் ஒளி

ஆனந்த சங்கரி என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.

பிரச்சனைக்குத் தீர்வு இந்திய மாதிரி முறையா ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.