Jump to content

13,588 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “ஏ” தர சித்தி : 2 ஆம் இடத்தில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி- கல்வி அமைச்சர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    01 DEC, 2023 | 02:18 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளியிடப்பட்டுள்ள 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்  பிரகாரம்  2இலட்சத்தி 45ஆயிரத்தி 521 மாணவர்கள்  (72.07 வீதமானவர்கள்) உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் உயர்கல்விக்கு நூற்றுக்கு 62.63 வீதமானவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

அத்துடன் கடந்த வருடம் அனைத்து பாடங்களிலும் 11ஆயிரத்தி 53பேர் ஏ சித்தி பெற்றிருந்தனர். அது 3.31 வீதமாகும். இந்த முறை 13ஆயிரத்தி 588பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். அது 3.99 வீதமாகும்.

அதன் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கமை முதலாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி ஒருவர் பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரி மாணவி ஒருவரும் மூன்றாம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மாணவனும் பிடித்துள்ளனர்.

அதேநேரம் 4ஆம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மற்றும் கம்பஹா திருச்சிலுவை மகளிர் வித்தியாலயம் பெற்றுள்ளதுடன் 6ஆம் இடத்தில் 4பேர் இருக்கின்றனர். காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இரண்டுபேர், குருணாகல் மரிய தேவ ஆண்கள் வித்தியாலயம், திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, பத்தாம் இடத்தில் 2பேர் இருக்கின்றனர். அது கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் கண்டி உயர் மகளிர் கல்லூரி ஆகியனவாகும்.

உயர் கல்வி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக  3மாதங்கள் பிற்படுத்தப்பட்டதால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவர தாமதமாகின.

என்றாலும் ஆகஸ்ட் மாதம் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 3மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரம் இறுதியாக வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்புடைய பீடங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான  வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்  வெள்ளிக்கிழமை (01) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரான காலங்களில்  உயர் தர பரீட்சை இடம்பெற்று  நீண்ட காலத்துக்கு பின்னரே வெளியிடப்பட்டிருக்கிறது.

என்றாலும் இந்த முறை 6மாதங்களுக்குள் வெட்டுப்புள்ளி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எந்த பீடங்களுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை  இணையத்தளம் ஊடாக வெட்டுப்புள்ளியுடன்  பார்த்துக்கொள்ள முடியும்.என்றார்.

https://www.virakesari.lk/article/170723

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து எழுபத்து நான்கு, வேம்படி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அனைத்தும் அதிவிசேட சித்தியாம். பாராட்டுக்கள் எல்லோருக்கும். 

என்னைய்யா எங்கட காலத்தில் ஒரு ஐந்து ஆறு பேருக்கு அல்லது ஒரு பத்து பேருக்கு இப்படி பெறுபேறு கிடைக்கும். இது என்ன ஊருக்கே இப்படி சித்திகள் கொட்டிக்கிடக்கிது? இப்போது அதி விசேட சித்தி எடுப்பது இலகோ அல்லது நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக இலகுவாக, வினைத்திறனாக கற்கமுடிகின்றதா? அல்லது வேறு என்னதான் காரணங்கள்?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரஜோசனம்..? ஒரு மண்ணும் இல்லை.. ஓலெவலில் 30 ஏ எடுத்தாலும் ஏலெவலில் கம்பஸ் எடுபடாட்டில் இலங்கையில் வெளிநாட்டு உதவி இல்லாத ஏழை மாணவர்களுக்கு எதிர்காலம் சூனியம்தான்.. எனவே ஓலெவலில் அதிகம் ஏ எடுக்காவிட்டாலும் ஒரு பிரச்சினையும் இல்ல.. இதுவும் கொலசிப் மாதிரி ஒண்டுதான்.. எனவே கவலையை விட்டிட்டு ஏலெவல் படிக்க காணுமான அளவுக்கு பாஸ் ஆனாலே போதும் இனி ஏலெவலுக்கு இறுக்கி பிடிச்சு படிச்சு பாஸ் ஆகி நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்…

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படிக்கு நேரில் சென்ற டக்ளஸ்

adminDecember 1, 2023
IMG_9350.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அதிபருடன் கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், கல்வி பொது தர சாதாரணம் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். அதேவேளை அகில இலங்கை ரீதியில் வேம்படி மாணவி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   கல்லூரி அதிபர் இராஜினி முத்துக்குமாரை சந்தித்து, கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார்.

IMG_9351.jpg?resize=800%2C600
 

“மருத்துவராகுவதே எனது இலட்சியம்” யாழ். மாணவி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன், மருத்துவராகுவதே தனது இலட்சியம் என்றார். 

சிறந்த பெறுபேற்றை பெற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன்.

உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம். பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஞ்ஞான பாடத்திற்கும் ஆங்கில இலக்கியம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன்.கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.

சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் - என்றார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன் 9 ஏ பெறுபேறுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும் தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றனர். R

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மருத்துவராகுவதே-எனது-இலட்சியம்-யாழ்-மாணவி/71-329014

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன பிரஜோசனம்..? ஒரு மண்ணும் இல்லை.. ஓலெவலில் 30 ஏ எடுத்தாலும் ஏலெவலில் கம்பஸ் எடுபடாட்டில் இலங்கையில் வெளிநாட்டு உதவி இல்லாத ஏழை மாணவர்களுக்கு எதிர்காலம் சூனியம்தான்.. எனவே ஓலெவலில் அதிகம் ஏ எடுக்காவிட்டாலும் ஒரு பிரச்சினையும் இல்ல.. இதுவும் கொலசிப் மாதிரி ஒண்டுதான்.. எனவே கவலையை விட்டிட்டு ஏலெவல் படிக்க காணுமான அளவுக்கு பாஸ் ஆனாலே போதும் இனி ஏலெவலுக்கு இறுக்கி பிடிச்சு படிச்சு பாஸ் ஆகி நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்…

 

வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் இப்படி யோசிப்பது இல்லை. நல்லதொரு தொழில் உழைப்பு தேவை காசு பண்ணுவதற்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதலாம் இடம் பெற்ற சிங்கள மாணவி, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற வேம்படி மகளிர் தமிழ் மாணவி இருவருமே தங்கள் இலட்சியம் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என கூறுகின்றார்கள். 

இந்த மருத்துவராக வரவேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்  எனும் இலட்சியங்களை  ஒவ்வொரு வருடமும் கேட்டு காது புளித்துவிட்டது. உலகம் எவ்வளவு மாறிவிட்டது. எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், வழிமுறைகள், ஒழுங்குகள் வந்துவிட்டன. எங்கள் ஆட்களுக்கு டொக்டர், என் ஜினியரை விட்டால் வேறு மார்க்கம் இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

இலங்கையில் முதலாம் இடம் பெற்ற சிங்கள மாணவி, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற வேம்படி மகளிர் தமிழ் மாணவி இருவருமே தங்கள் இலட்சியம் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என கூறுகின்றார்கள். 

இந்த மருத்துவராக வரவேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்  எனும் இலட்சியங்களை  ஒவ்வொரு வருடமும் கேட்டு காது புளித்துவிட்டது. உலகம் எவ்வளவு மாறிவிட்டது. எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், வழிமுறைகள், ஒழுங்குகள் வந்துவிட்டன. எங்கள் ஆட்களுக்கு டொக்டர், என் ஜினியரை விட்டால் வேறு மார்க்கம் இல்லை. 

பெரிய‌ ப‌டிப்பு ப‌டிக்க‌ அதிக‌ பண‌ம் தேவை அண்ணா............என‌க்கு தெரிஞ்சு டென்மார்க்கில் விமான‌ம் ஓட்ட‌ ப‌டிச்சு ப‌டிப்பு முடித்து இப்போது விமானம் ஓட்டுறவா................. என்ர‌ ந‌ண்ப‌னின் த‌ங்கைச்சி வ‌ங்கியில் வேலை செய்கிறா...........இங்கை பிற‌ந்து வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு ந‌ல்ல‌ நிலையில்............இந்த‌ நாட்டில் ப‌டிச்சாத் தான் அரசாங்க‌ம் காசு கொடுக்கும்............சொறில‌ங்காவில் காசு க‌ட்டித் தான் ப‌டிக்க‌னும்.........திற‌மை இருந்தும் வ‌றுமை போட்டு வாட்டினால் எப்ப‌டி ப‌டிச்சு முன்னுக்கு வ‌ர‌ முடியும் அந்த‌ நாட்டில்.............

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍........... நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் இந்த வகையான நிரலையும் பார்த்திருக்கின்றேன், வசீ. இது ஒரு Power Index போல. என்னுடைய அயலவர் ஒருவர், அவர் இப்போது உயிருடன் இல்லை, முதன்முதலாக தாழப் பறக்கும் பெரிய விமானங்களை உருவாக்கும் பொறியியலாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் ஒரு இந்தியர், பஞ்சாபி. அவருடைய நாட்களில் இந்தியாவில் ஒரே ஒரு ஐஐடி மட்டுமே இருந்தது. கரக்பூரில் என்று நினைக்கின்றேன். அவர் அங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவர் பாடசாலை போனதே இல்லை. வீட்டுக் கல்வியிலிருந்து நேரடியாக ஐஐடி போனார். அங்கு முதலாம் வருடம் மிகவும் சிரமப்பட்டதாகச் சொன்னார். தென்னிந்தியர்களை தன்னால் தாண்டவே முடியாது என்று நினைத்ததாகச் சொன்னார். ஆனால் இறுதியில் அவர் அந்த வகுப்பில் இரண்டாவதாக வந்தார். இறுதிப் பரீட்சை ஒன்றில் வந்த கேள்விகள் என்ன, தான் எழுதிய பதில்கள் என்ன என்ன என்று ஒரு தடவை சொன்னார். இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு மேல்படிப்பிற்கும், வேலைக்கும் போனார். பின்னர் இந்தியா திரும்பினார். இறுதியில் அவரை அமெரிக்கா எடுத்துக்கொண்டது. இங்கு போயிங் நிறுவனத்தில் சேர்ந்தார். B வகை விமான உருவாக்கம் பற்றி நிறையவே சொல்லியிருக்கின்றார். அவர் சொல்லுவதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை, இன்றும் இல்லை. அவர் சொன்ன இன்னொரு விடயம் சில நாடுகளில் ராணுவமும், அதன் ஆராய்ச்சிகளும் ஒரு தலைமுறை முன்னால் போய்க் கொண்டிருக்கும் என்று. பலதும் மிக இரகசியமாகவே இருக்கும் என்றார். அவர் ரஷ்யாவையும், அமெரிக்காவையும் பார்த்தவர். இன்றைய நாளில் அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே.       
    • என்ன பிரச்சனை  இந்தியாவை திட்டி கொட்ட. வேண்டுமா??? என்னால் முடியும்   விருப்பமில்லை  காரணம் எந்தவொரு பிரயோஜனமில்லை தமிழருக்கு   ஆனால் சிங்களவருக்கு நிறைய நன்மை உண்டு    இலங்கை அரசும் இந்தியாவும் ஒருபோதும் சண்டை   போர் செய்யவில்லை ஆனால்  தமிழர்களை இந்தியாவுடன் சண்டை   போர் புரிய  இலங்கை அரசாங்கம்  வைத்து உள்ளது   இதனால்  தனிநாடு கிடைக்கும் முதலே  எங்களுடன் போர் புரிந்தவர்கள். தனிநாடு கிடைத்தால்   என்ன செய்வார்கள்?? என்ற கேள்வி இந்தியாவிடம்  உண்டு”     அந்த கேள்வியை நாங்கள் மீண்டும் மீண்டும்  வழுவாக்கிக் கொண்டு வருகிறோம்   இதற்கு மாறாக  அந்த கேள்வியை ஏன் வலு இழக்க செய்யக்கூடாது  ??  நாடு இல்லாத நாங்கள்   கடலுக்காக ஏன். அடிபட வேண்டும்??    இந்த கடலில் சிங்கள கடப்படை  காவல் காக்கட்டும்.  என்றால்  வடக்கு கிழக்கு இலும்.  இலங்கை இராணுவம் இருக்கட்டும் என்று சொல்வதற்கும் சமன்  
    • உலகத்தின் மிக வேகமான இந்தியன் எனும் ஒரு படம் வெளியாகியிருந்தது, அது ஒரு நியுசிலாந்து நபரின் கதையினை கூறும் படம், அவர் அமெரிக்காவிற்கு கார்? பந்தயத்திற்காக செல்வார், அங்கு ஒரு காரை வாங்கி அதனை தவறான பாதையில் செலுத்துவார் அதனால் ஏற்பட இருந்த விபத்தினை ஒருவாறு தவிர்த்து விடுவார், அவர் தனது தவறுக்கு காரணம் வீதி முறைமை இரு நாடுகளிலும் வேறு வேறாக இருந்தது என கூற (நியுசிலாந்தில் இடது புற வாகன செலுத்தும் முரைமை) பக்கத்திலிருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டிலும் எந்த முறைமையிலும் வாகனம் செலுத்தலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மையத்தில் இருக்கவேண்டும் என கூறுவார். உல்கில் இராணுவத்தினரை வெவ்வேறு தளங்கள் வெவ்வேறு வடிவங்களில் மதிப்பிடலாம்; அளவு, பாதீட்டின் செலவீட்டின் அடிப்படையில், மொத்த சனத்தொகை விகிதாசாரத்தில் என எவ்வாறு வேண்டுமானாலும் மதிப்பிடலாம். அடிப்படையில் பெரிய இராணுவம் என்றால் எண்ணிக்கை அதனோடு இணைந்த ஆயுத தளபாடமே கணிக்கப்படும் உதாரனமாக ஒரு குறிப்பிட்ட தொகை கொண்ட இராணுவத்தில் ஒரு சிறிய அணியில் (பிளட்டூன்) எத்தனை இலகு இயந்திரத்துப்பாக்கி, எறிகணை அல்லது உந்து கணை என்பதனை அந்த சிறிய அணியில் உள்ள சிப்பாய்களின் எண்ணிகை அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என கருதுகிறேன். இந்த நிலை ஒவ்வொரு அடுத்த நிலை உயர்வுக்கும் அதற்கேற்ப அதன் கனரக ஆயுதங்கள் கட்டமைப்பினால் உருவாக்கப்படும் இராணுவம் அதன் பலம் தீர்மானிக்கப்படும். பெரிய இராணுவ அமைப்புக்களை கொண்ட ஒரு இராணுவத்தினை சிறிய இராணுவம் தோற்கடிக்க முடியாதா என்றால் முடியும் அதற்கு உத்தியினை காரணமாக கூறலாம், இஸ்ரேல் பலங்கொண்ட எதிரி நாடுகளை தோற்கடிக்க வான் மேலாதிக்கத்தினை பெற தாழ்வாக பறந்து எதிர்களின் இரடார் சாதனங்கலை அழித்தவுடன் எதிரிப்படையின் விமானப்படையினை அழித்து வான் மேலாதிக்கத்தினை  பெற்று அதன் மூலம் 6 நாள் போரில் வெற்றி பெற்றது அதே உத்தியினை அமெரிக்கா ஈராக்கிற்கு எதிராக பயன்படுத்தியிருந்தது. நீங்கள் இணையத்தில் தேடல் செய்ததிலிருந்து வளமையான பெரும்பான்மையிலிருந்து சற்று வேறுபட்டுள்ளீர்கள், யதார்த்தத்தினை அறிந்து வைத்திருந்தால் பல வழிகளில் உதவியாயிருக்கும்தானே?😁
    • தொடருங்கள், யாழை எட்டிப் பார்த்தேன்..! ஜாலியா போகுது திரி..😀
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.