Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13,588 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “ஏ” தர சித்தி : 2 ஆம் இடத்தில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி- கல்வி அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    01 DEC, 2023 | 02:18 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளியிடப்பட்டுள்ள 2022 கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்  பிரகாரம்  2இலட்சத்தி 45ஆயிரத்தி 521 மாணவர்கள்  (72.07 வீதமானவர்கள்) உயர்கல்விக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த வருடம் உயர்கல்விக்கு நூற்றுக்கு 62.63 வீதமானவர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

அத்துடன் கடந்த வருடம் அனைத்து பாடங்களிலும் 11ஆயிரத்தி 53பேர் ஏ சித்தி பெற்றிருந்தனர். அது 3.31 வீதமாகும். இந்த முறை 13ஆயிரத்தி 588பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். அது 3.99 வீதமாகும்.

அதன் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளுக்கமை முதலாம் இடத்தை கண்டி மஹாமாயா மகளிர் வித்தியாலய மாணவி ஒருவர் பெற்றுள்ளதுடன் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் கல்லூரி மாணவி ஒருவரும் மூன்றாம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மாணவனும் பிடித்துள்ளனர்.

அதேநேரம் 4ஆம் இடத்தை கொழும்பு ராேயல் கல்லூரி மற்றும் கம்பஹா திருச்சிலுவை மகளிர் வித்தியாலயம் பெற்றுள்ளதுடன் 6ஆம் இடத்தில் 4பேர் இருக்கின்றனர். காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியில் இரண்டுபேர், குருணாகல் மரிய தேவ ஆண்கள் வித்தியாலயம், திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி, பத்தாம் இடத்தில் 2பேர் இருக்கின்றனர். அது கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் கண்டி உயர் மகளிர் கல்லூரி ஆகியனவாகும்.

உயர் கல்வி விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக  3மாதங்கள் பிற்படுத்தப்பட்டதால் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவர தாமதமாகின.

என்றாலும் ஆகஸ்ட் மாதம் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 3மாதங்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேநேரம் இறுதியாக வெளியிடப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்புடைய பீடங்களுக்கு இணைத்துக்கொள்வதற்கான  வெட்டுப்புள்ளி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால்  வெள்ளிக்கிழமை (01) வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரான காலங்களில்  உயர் தர பரீட்சை இடம்பெற்று  நீண்ட காலத்துக்கு பின்னரே வெளியிடப்பட்டிருக்கிறது.

என்றாலும் இந்த முறை 6மாதங்களுக்குள் வெட்டுப்புள்ளி வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரகாரம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் எந்த பீடங்களுக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை  இணையத்தளம் ஊடாக வெட்டுப்புள்ளியுடன்  பார்த்துக்கொள்ள முடியும்.என்றார்.

https://www.virakesari.lk/article/170723

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து எழுபத்து நான்கு, வேம்படி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அனைத்தும் அதிவிசேட சித்தியாம். பாராட்டுக்கள் எல்லோருக்கும். 

என்னைய்யா எங்கட காலத்தில் ஒரு ஐந்து ஆறு பேருக்கு அல்லது ஒரு பத்து பேருக்கு இப்படி பெறுபேறு கிடைக்கும். இது என்ன ஊருக்கே இப்படி சித்திகள் கொட்டிக்கிடக்கிது? இப்போது அதி விசேட சித்தி எடுப்பது இலகோ அல்லது நவீன தொழில்நுட்ப வசதிகள் காரணமாக இலகுவாக, வினைத்திறனாக கற்கமுடிகின்றதா? அல்லது வேறு என்னதான் காரணங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரஜோசனம்..? ஒரு மண்ணும் இல்லை.. ஓலெவலில் 30 ஏ எடுத்தாலும் ஏலெவலில் கம்பஸ் எடுபடாட்டில் இலங்கையில் வெளிநாட்டு உதவி இல்லாத ஏழை மாணவர்களுக்கு எதிர்காலம் சூனியம்தான்.. எனவே ஓலெவலில் அதிகம் ஏ எடுக்காவிட்டாலும் ஒரு பிரச்சினையும் இல்ல.. இதுவும் கொலசிப் மாதிரி ஒண்டுதான்.. எனவே கவலையை விட்டிட்டு ஏலெவல் படிக்க காணுமான அளவுக்கு பாஸ் ஆனாலே போதும் இனி ஏலெவலுக்கு இறுக்கி பிடிச்சு படிச்சு பாஸ் ஆகி நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

வேம்படிக்கு நேரில் சென்ற டக்ளஸ்

adminDecember 1, 2023
IMG_9350.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று அதிபருடன் கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில், நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், கல்வி பொது தர சாதாரணம் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர். அதேவேளை அகில இலங்கை ரீதியில் வேம்படி மாணவி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா   கல்லூரி அதிபர் இராஜினி முத்துக்குமாரை சந்தித்து, கலந்துரையாடியதுடன், பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார்.

IMG_9351.jpg?resize=800%2C600
 

“மருத்துவராகுவதே எனது இலட்சியம்” யாழ். மாணவி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன், மருத்துவராகுவதே தனது இலட்சியம் என்றார். 

சிறந்த பெறுபேற்றை பெற்றமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன்.

உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம். பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஞ்ஞான பாடத்திற்கும் ஆங்கில இலக்கியம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன்.கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.

சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும் - என்றார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்செயா அனந்தசயனன் 9 ஏ பெறுபேறுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும் தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றனர். R

 

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மருத்துவராகுவதே-எனது-இலட்சியம்-யாழ்-மாணவி/71-329014

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன பிரஜோசனம்..? ஒரு மண்ணும் இல்லை.. ஓலெவலில் 30 ஏ எடுத்தாலும் ஏலெவலில் கம்பஸ் எடுபடாட்டில் இலங்கையில் வெளிநாட்டு உதவி இல்லாத ஏழை மாணவர்களுக்கு எதிர்காலம் சூனியம்தான்.. எனவே ஓலெவலில் அதிகம் ஏ எடுக்காவிட்டாலும் ஒரு பிரச்சினையும் இல்ல.. இதுவும் கொலசிப் மாதிரி ஒண்டுதான்.. எனவே கவலையை விட்டிட்டு ஏலெவல் படிக்க காணுமான அளவுக்கு பாஸ் ஆனாலே போதும் இனி ஏலெவலுக்கு இறுக்கி பிடிச்சு படிச்சு பாஸ் ஆகி நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்…

 

வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகள் இப்படி யோசிப்பது இல்லை. நல்லதொரு தொழில் உழைப்பு தேவை காசு பண்ணுவதற்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதலாம் இடம் பெற்ற சிங்கள மாணவி, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற வேம்படி மகளிர் தமிழ் மாணவி இருவருமே தங்கள் இலட்சியம் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என கூறுகின்றார்கள். 

இந்த மருத்துவராக வரவேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்  எனும் இலட்சியங்களை  ஒவ்வொரு வருடமும் கேட்டு காது புளித்துவிட்டது. உலகம் எவ்வளவு மாறிவிட்டது. எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், வழிமுறைகள், ஒழுங்குகள் வந்துவிட்டன. எங்கள் ஆட்களுக்கு டொக்டர், என் ஜினியரை விட்டால் வேறு மார்க்கம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

இலங்கையில் முதலாம் இடம் பெற்ற சிங்கள மாணவி, மற்றும் இரண்டாம் இடம் பெற்ற வேம்படி மகளிர் தமிழ் மாணவி இருவருமே தங்கள் இலட்சியம் மருத்துவராக வந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என கூறுகின்றார்கள். 

இந்த மருத்துவராக வரவேண்டும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்  எனும் இலட்சியங்களை  ஒவ்வொரு வருடமும் கேட்டு காது புளித்துவிட்டது. உலகம் எவ்வளவு மாறிவிட்டது. எத்தனை புதிய தொழில்நுட்பங்கள், வழிமுறைகள், ஒழுங்குகள் வந்துவிட்டன. எங்கள் ஆட்களுக்கு டொக்டர், என் ஜினியரை விட்டால் வேறு மார்க்கம் இல்லை. 

பெரிய‌ ப‌டிப்பு ப‌டிக்க‌ அதிக‌ பண‌ம் தேவை அண்ணா............என‌க்கு தெரிஞ்சு டென்மார்க்கில் விமான‌ம் ஓட்ட‌ ப‌டிச்சு ப‌டிப்பு முடித்து இப்போது விமானம் ஓட்டுறவா................. என்ர‌ ந‌ண்ப‌னின் த‌ங்கைச்சி வ‌ங்கியில் வேலை செய்கிறா...........இங்கை பிற‌ந்து வ‌ள‌ந்த‌ பிள்ளைக‌ள் ப‌டிச்சு ந‌ல்ல‌ நிலையில்............இந்த‌ நாட்டில் ப‌டிச்சாத் தான் அரசாங்க‌ம் காசு கொடுக்கும்............சொறில‌ங்காவில் காசு க‌ட்டித் தான் ப‌டிக்க‌னும்.........திற‌மை இருந்தும் வ‌றுமை போட்டு வாட்டினால் எப்ப‌டி ப‌டிச்சு முன்னுக்கு வ‌ர‌ முடியும் அந்த‌ நாட்டில்.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.