Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாகமே ஏதாவது செய்யுங்கள்

Featured Replies

எரிச்சலைத் தரும் அலட்டல்கள்

மதிப்பிற்குரிய நிர்வாகத்தினருக்கு,

மிகவும் பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்து வந்த யாழ் களத்திலே அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் அர்த்தமற்ற அலட்டல்கள் யாழ் களத்துடனான தொடர்பையே குறைத்துக் கொள்ளும் அளவிற்கு எரிச்சலை ஊட்டியுள்ளது.

பயனுள்ள விடயம் ஒன்று தொடர்பாக இரண்டொரு கருத்தாடல்கள் நடந்ததுமே அந்தப் பகுதிக்குள் நுழைகின்ற ஒரு சிலர் தங்கள் அலட்டல்களின் மூலம் அந்தப் பகுதியை பிரயோசனமற்றதாக்கி அலட்டித் தள்ளுவதை தடுக்க ஏதாவது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?

இதெற்கென ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிக்குள் அலட்டி தங்கள் கருத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும்படி இந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை தர மாட்டீர்களா?

தயவு செய்து இது குறித்து கவனமெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் என் நாமமும் வரும் -_- .இருந்தாலும் சொல்கிறேன் அவர்களின் பெயர்களை நேரடியாக சொல்லுங்கள் B) இது யாழுக்கு ஆரோக்கியமானது :lol: உங்களைப்போன்றவர்கள் பிழைகளை சுட்டிக்காட்டும் போதுதான் மற்றவர்கள் திருந்த அல்லது திருத்த முடியும் :lol:

ஒரு கருத்தாடலில் தேவையில்லாத கருத்துக்கள், தலைப்புடன் சம்மந்தம் இல்லாத கருத்துக்கள் வரும்போது அவற்றை நிருவாகம் அரட்டை பகுதிக்கு அப்புறப்படுத்தி வருகின்றது அல்லது அவற்றை அகற்றுகின்றது. இன்றும் கருத்துக்களில் மாற்றம் பகுதியில் இது பற்றி அறியக்கூடியதாக உள்ளது.

மேலும், நீங்கள் ஏதாவது அரட்டை கருத்தை கண்டால் அதை ரிப்போர்ட் பட்டனை அழுத்தி நிருவாகத்திடம் முறைப்பாடு செய்யலாமே?

கருத்து எழுதும்போது எல்லாருமே தளம்பல் அடைவார்கள். இங்கு ஒருவரும் பேர்பெக்ட் இல்லை. இங்கு அரட்டை அடிக்காதவர்கள், தலைப்பு கருத்துடன் சம்மந்தம் இல்லாமல் கருத்தாடல் செய்யாதவர்கள் என்று ஒருவரும் இல்லை. எல்லாரும் சிறிது ரிலாக்சாக கருத்து எழுதி இருப்பார்கள்.

இந்த பிரச்சனையை ஆரோக்கியமான வழியில் தீர்ப்பதற்கு ஒரே ஒரு வழி, நீங்கள் அரட்டை கருத்துக்களை காணும்போது அவற்றை ரிப்போர்ட் பட்டனை அழுத்துவதன்மூலம் நிருவாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதே.

நன்றி!

  • தொடங்கியவர்

குமாரசாமி அண்ணா இங்கே நான் பெயர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அதிக அளவில் இவ்வாறு எல்லாப் பகுதிகளுக்குள்ளும் தேவையற்ற அரட்டைகளை அடிப்பது யார் என்பது எல்லோருக்குமே தெரியும்.

அடுத்ததாக கலைஞன் அண்ணா சொல்வது போல யாரும் 100 வீதம் சரியானவர்களல்ல. அது மட்டுமன்றி பலரும் அரட்டை அடிப்பதுண்டு. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நான் சொல்ல வருவது எந்த விடயமென்று இல்லாமல் எல்லாத் தலைப்புகளிற்கள்ளும் சம்பந்தமேயில்லாமல் நடக்கும் அரட்டைகள் பற்றியதானது.

ஒரு மிகவும் பிரயோசனமான தலைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் சில நல்ல கருத்துப் பகிர்வுகள் நடக்கும் . அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது அந்த விடயம் 2 பக்கங்களைத் தாண்டியிருக்கும். அதில் இவ்வளவு விடயங்கள் பதியப்பட்டுள்ளதே என்ற ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்தால் விடயத்துடன் எந்தவித சம்பந்தமேயில்லாமல் இருவர் மாறி மாறி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இது ஒரு வித சலிப்பை எரிச்சலை எற்படுத்துகிறது அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணா இங்கே நான் பெயர்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அதிக அளவில் இவ்வாறு எல்லாப் பகுதிகளுக்குள்ளும் தேவையற்ற அரட்டைகளை அடிப்பது யார் என்பது எல்லோருக்குமே தெரியும்.

அடுத்ததாக கலைஞன் அண்ணா சொல்வது போல யாரும் 100 வீதம் சரியானவர்களல்ல. அது மட்டுமன்றி பலரும் அரட்டை அடிப்பதுண்டு. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நான் சொல்ல வருவது எந்த விடயமென்று இல்லாமல் எல்லாத் தலைப்புகளிற்கள்ளும் சம்பந்தமேயில்லாமல் நடக்கும் அரட்டைகள் பற்றியதானது.

ஒரு மிகவும் பிரயோசனமான தலைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் சில நல்ல கருத்துப் பகிர்வுகள் நடக்கும் . அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது அந்த விடயம் 2 பக்கங்களைத் தாண்டியிருக்கும். அதில் இவ்வளவு விடயங்கள் பதியப்பட்டுள்ளதே என்ற ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்தால் விடயத்துடன் எந்தவித சம்பந்தமேயில்லாமல் இருவர் மாறி மாறி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். இது ஒரு வித சலிப்பை எரிச்சலை எற்படுத்துகிறது அல்லவா?

இனி இதுக்குமேலை என்னத்தை கதைக்கிறது?எங்கடை பெரிசுகள்தான்(நிர்வாகம்)இதை கவனத்திலை எடுக்கோணும்.எல்லாம் தர்மசங்கடந்தான்.............? :lol:

  • தொடங்கியவர்

குமாரசாமி அண்ணா

இந்த அரட்டைகள் தொடர்பாய் நீங்கள் என்ன கருதுகிறீர்கள். இது ஆரோக்கியமானதா? என்பது தொடர்பான உங்களுடைய கருத்துக்களையும் எழுதினால் நிர்வாகத்தினருக்கு உதவுமல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் முன்னரும் ஒருமுறை தெரிவித்துள்ளேன்.அதாவது நான் இங்கு கருத்து எழுதுவதை விட வாசிப்பதில் அலாதிப்பிரியமுள்ளவன். அந்தவகையில் என் கருத்து என்னவெனில் அரட்டை எல்லா இடங்களிலும் இருப்பது அருவருக்கத்தக்கதாகவும், அசௌகரியமாகவும் உள்ளது.நிர்வாகம் இதை கட்டுப்படுத்த பல முறை முயன்றுள்ளது போல் தெரிகின்றது.எனவே பனைமரத்தில் நோட்டீஸ்(இத்தால் சகலரும் அறிவது) ஒட்டுவது போல் பகிரங்கமாக சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நிர்வாகம் அறிவிக்கலாம்.இதனால் சம்பந்தப்பட்டவர்களும் ஏனையோர்களும் பிழைகளை உணர்வதற்கு நிறையவே சந்தர்ப்பங்கள் உள்ளன.எனக்கும் இது உபயோகப்படும்.சிலவேளைகளில் நான் செய்யும் பிழைகள் கூட எனக்கு சரியாகத்தெரியலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா ஒவியன் அண்ணாவ தான் கருத்தெழுத வந்தவராம் எல்லா பகுதியிலையும் அலட்டல் கூடிட்டுதாம் அதனால கருத்தெழுது முடியலியாம் நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது இத தான் இங்க சீரியஸா கருத்தெழுதியால் அது ஒரு பக்கம் கூட தாண்டாது சோ சுண்டலோட பஞ்

கருத்தும் இருக்கனும் அதனோட சேர்நத அலட்டலும் இருக்கணும்

அப்ப நாட்டான்மை தீர்பு எப்படி...

:):D

Edited by வெண்ணிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.