Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுயநிர்ணய அடிப்படையில் பேச்சுக்களைத் தொடர அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: விடுதலைப் புலிகள்

Featured Replies

தமிழ் இறைமை அடிப்படையில் சமாதான பேச்சு இடம்பெறவேண்டும்

விடுதலைப்புலிகளின் அரசியல் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையில் 62 ம் கூட்டத்தொடரில் தமிழ் மக்களின் இறைமை அடிப்படையில் தமிழ் மக்களின் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.

விடுதலைப்புலிகள் அவ் அறிக்கையில் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் கிழக்கு தீமோர் மற்றும் கொசோவோ ஆகிய பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்பங்கள் போன்று தமிழ் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என கேட்க்கப்பட்டிருந்தது.

சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசாங்கத்தின் இராணுவ அடக்குமுறை, இனச்சுத்திகரிப்பு, கடுமையான மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு எய்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளத

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்களைத் தொடர்வதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க ஐ.நா. பொதுச் சபையிடம் புலிகள் கோரிக்கை 62ஆவது கூட்டத் தொடரை ஒட்டி அரசியல்துறை அறிக்கை

* ஈழத்தமிழ் மக்களின் இறைமை என்ற கோட்பாட்டை ஏற்று அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைதி முயற்சிகள் இலங்கையில் தொடர ஆதரவளியுங்கள்!

* கிழக்குத் திமோரிலும், கொசோவோவிலும் உள்ள மக்களுக்கு அளித்தமை போல ஈழத்தமிழ் மக்களும் தங்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கான பொருத்தமான வாய்ப்பை அளி யுங்கள்.

இவ்வாறு சர்வதேச சமூகத்தைப் பகி ரங்கமாக அறிக்கை ஒன்றின் மூலம் கோரி யிருக்கின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.

அதேசமயம், இலங்கை அரசு தனது பொய் வேடத்தைக் கலைத்து, தமிழர்களுக்கு எதிரான இராணுவ அடக்குமுறையை நிறுத்தி, இன ஒழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, ஈழத்தமிழ் மக்களின் நீதி யான அபிலாஷைகளை ஏற்று, தமிழ் மக் களின் சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் தீர்வு ஒன்றைக் காண முன்வர வேண்டும். இலங்கை அரசை இந்த வழிமுறைக்கு சர்வதேச சமூகம் கொண்டுவர வேண்டும் என்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு கோரியிருக்கின்றது.

ஐ.நா. பொதுச்சபையின் 62ஆவது கூட் டம் இன்று நியூயோர்க்கில் ஆரம்பமாவதை ஒட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் அர சியல்துறை "தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரியுங்கள்!' என்ற தலைப்பில் நேற்று விடுத்த பகிரங்க அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கி றது.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு

ஐ.நா. பொதுச் சபையின் 62ஆவது கூட் டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் குழு நியூயோர்க்கில் கூடியுள்ளது.

கடந்த முறைகளைப் போலவே இம்முறையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதமாகச் சித்தரித்துக் கொச்சைப்படுத்தவும்

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தவறுகளையும், மனிதநேயப் பணிகளுக்கு எதிரான செயற்பாடுகளையும், அமைதி நடவடிக்கைத் தோல்விகளையும் மூடிமறைத்து சர்வதேசத்தைத் தவறாக வழிநடத்தவும்

இந்தப் பொதுச் சபைக் கூட்டத்தை இந்தப் பிரதிநிதிகள் குழு பயன்படுத்தும்.

சர்வதேச விவகாரங்களைப்பற்றி விவாதிப்பதற்காக 62ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கூடியிருக்கும் இச் சமயத்தில் இலங்கையின் தற்போதைய பிணக்கு நிலை குறித்தும் அமைதி நடவடிக்கை குறித்தும் கவனத்தைச் செலுத்தச் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு விரும்புகின்றது.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை

திட்டமிட்டு பலவீனப்படுத்தியது

நேரடியாக சர்வதேச சமூகத்துடன் தொடர்பாடல் செய்யும் வாய்ப்பு தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் மறுக்கப்பட்டிருப்பதால் இந்த அறிக்கையை நாம் முன்வைக்கிறோம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த காலம் தொடக்கமே, இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சர்வதேச ஆதரவுடன் உருவாக்கப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை திட்டமிட்டுப் பலவீனப்படுத்தி வந்துள்ளார்.

ஜெனீவாப் பேச்சில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அப்பட்டமாக அது (அரசு) புறந்தள்ளி நிராகரித்துவிட்டது.

மேலும், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் ஒரு தரப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச சமூகத்திலிருந்து தனிமைப்படுத்த இலங்கை அரசு எடுத்த முயற்சிகள் மூலம், சர்வதேச சமூகத்துடன் தமிழர்கள் நெருங்கிப் பழகிப் புரிந்துணரும் வாய்ப்பைத் தடுத்து, பிணக்கை நியாயமான முறையில் தீர்க்கும் வகையில் தமது அபிலாஷைகளை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கும் தமிழரின் வாய்ப்பையும் அது குழப்பிவிட்டது.

அத்தோடு "புலிகளை முற்றாக அழித்தல்', "அதன் மூலம் தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்கல்', "பேச்சு மேசைக்குப் புலிகளைக் கொண்டுவருவதற்கு அவர்களைப் பலவந்தப்படுத்தும் விதத்தில் புலிகளைப் பலவீனப்படுத்துதல்' என்றெல்லாம் இலங்கை அரசு பிதற்றல் அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றது.

பிணக்குத் தீர்வாக அரசமைப்புக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டுவரும் பெயரில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டமை இலங்கை அரசின் பொய் வேடத்துக்கு பொருத்தமான மற்றோர் உதாரணமாகும்.

"அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு', "வட்டமேசை' என்று பிரச்சினைத் தீர்வுக்குக் குழுக்களை அமைப்பது தொடர்ந்து வந்த அரசுகளினால் பின்பற்றப்பட்டு வந்த நடிப்புப் பண்புகளே.

அனைத்துக் கட்சிக் குழு

குறித்து தவறான நம்பிக்கை

ஆனால், சர்வதேச சமூகத்தின் சில அங்கத்தவர்கள் தற்போதைய அனைத்துக்கட்சிக் குழு குறித்து நம்பிக்கை வெளியிட்டதோடு அது பிரச்சினைக்குத் தீர்வாக சிறந்ததொரு கட்டமைப்பைக் கொண்டுவரும் என எல்லோரும் உறுதி கூறியும் வருகின்றனர். ஆனால், இந்தத் தவறான நம்பிக்கை இன்று வரை ஆக்கபூர்வமான பெறுபேறு எதனையும் கொண்டுவர வே யில்லை.

ஆனால், மறுபுறத்தில் இலங்கை அரசின் தலைவர்கள் இராணுவ வெற்றிகள் குறித்து நச்சுக் கருத்துக்களை வெளியிட்டு வெற்றி அணி நடைகளை நடத்திக்கொண்டிருக்கின்றார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.