Jump to content

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பித்து வைக்கப்படும் - டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 DEC, 2023 | 02:57 PM
image
 

வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் ஜனவரி 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  வடக்கிற்கான விஜயத்தின்போது  ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வடக்கு மக்களின் நீண்டகால குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் பொருட்டு பாலியாற்று நீர் வழங்கல் திட்டத்தை முன்னெடுக்கும் முக்கிய கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் யாழ்/ கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் இன்று  செவ்வாய்க்கிழமை  யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்  என். சுதாகரன் பாலியாற்று குடிநீர்த் திட்டம் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார். இத்திட்டம் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது கைகூடாத நிலையில்  கடந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைச்சரவை இத்திட்டத்திற்கு 250 மில்லயின் ரூபாவை ஒதுக்குவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  அ. சிவபாலசுந்தரன், நீர்ப்பாசன நீர்வழங்கல் முகாமையாளர்கள், யாழ். மாநகர முன்னாள் ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/172068

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வடக்கின் ஸ்ராலின் ஆகிட்டார். வெள்ளத்தைக் கண்டதும் திட்டம் போடுவார். வத்தினதும் திரட்டின காசோடு ஆள் எஸ்கேப்.

முதலில் தீவகத்தின் பிரதான வீதியை போட்டு முடியுங்கப்பா. சனம்.. இந்த மழை காலத்தில் வேலைக்கு பள்ளிக்கூடங்களுக்கு போகப் படும் பாடு. அதுவும் இருந்த ரோட்டை போடுறன் என்று கிண்டிவிட்டு.. அந்த மக்கள் இப்ப 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு உருப்படியான வீதி இன்றித் தவிக்கினம்.

இவர் மட்டுமல்ல.. எந்த அரசியல் கட்சியும்.. ஊடகங்களும்.. இதில் அக்கறை காட்டுவதில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாலியாறு கிளிநொச்சி மாவட்த்தின் கீழ் வருகின்றது. அடுத்தவருடம் முதல் யாழ் மாவட்த்திட்கு கடல் நீரை நண்ணீராக்கும் (RO வாட்டர்) திடத்தின்மூலம் நீர் வழங்கப்படும். அநேகமாக எல்லா இடங்களும் இதன்மூலம் நீரை பெற்றுக்கொள்ளும்.

பாலியாறு திடடமானது அநேக வருடங்களாக பேசப்பட்டு பணம் ஒதுக்கினாலும் செயட்படுத்தப்படவில்லை. இங்கு நீர் தேக்கிவைக்கப்பட்டு வழங்குவதட்கான ஒரு திடடம்.  மழை இல்லாவிட்ட்தால் அது பிரச்சினையாக இருக்கும். யாளிட்கு வருடம் முழுவதும் நீர் வழங்கமுடியாது. இருந்தாலும் ஓரளவிட்கு தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த திடத்தின் மூலம் யாழின் சில பகுதிகளும், பூநகரி, மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளுமே உள்ளடக்கப்படும்.

இந்த திடத்திற்கு எட்கேனவே கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி சில வேலைகள் நடந்தாலும் அது காரணங்களால் தடைபட்டு போயுள்ளது. நிறைவேற்றினால் நல்லதுதான். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிச்ச வடக்கிற்கு தண்ணீர் வழங்கும் பாலியாறு

Published By: DIGITAL DESK 3  20 DEC, 2023 | 11:50 AM

image

மு.தமிழ்ச்செல்வன்

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பின் தகவல்களின் படி உலகில் வாழ்கின்ற சுமார் 8 பில்லியன் மக்களில் 2.2 பில்லியன் மக்கள் சுத்தமான மற்றும் போதுமான குடிநீர் இன்றி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்று பேரில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை.

இன்னும் சில வருடங்களில் இந்த 2.2 பில்லியன் மக்களுடன் யாழ்ப்பாணம் மக்களும் இணைந்துகொள்வார்கள் என்ற நிலைமையை தற்போது தடுத்திருக்கிறது பாலியாறு. பாலியாறு குடிநீர்  திட்டமானது வடக்கிற்கு தண்ணீர் வழங்குகின்ற ஒரு பாரிய திட்டமாக காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களுக்கும் பாலியாறு குடிநீர் திட்டம் மூலம் நீர் வழங்கல் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஏனைய நான்கு மாவட்டங்களில் உள்ள சனத் தொகையை விட யாழ்ப்பாணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்கின்றனர். அங்கு சுமார் 6 இலட்சத்து 26 ஆயிரம் மக்கள் உள்ளனர். இங்குள்ள மக்கள் முழுக்க முழுக்க தங்களது நீர் தேவையினை நிலத்தடி நீரின் மூலமே பூர்த்தி செய்து வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரோ பாதுகாப்பற்றதாக மாறிசெல்கிறது. குடாநாடு என்பதனால் நன்னீர் உவராக மாறும் தன்மை அதிகரித்து செல்வது, அதிக சனத்தொகை என்பதனால் அடர்த்தி மிக்க குடியிருப்புகள் காரணமாக நிலத்தடி மாசுப்படுதல் (மலக்கழிவுகள் நிலத்தடி நீரில் அதிகம் கலந்திருப்பது), நிலத்தடி நீர் குறைவடைந்து செல்வது போன்ற நிலைமைகளால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் என்பது இன்னும் சில வருடங்களில் கேள்விக்குள்ளாகும் நிலையிலேயே இருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் ஏனைய  மாவட்டங்களில் குளங்கள், ஆறுகள் என்பன அதிகமான காணப்படுகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் தங்களது நீர்த்தேவையினை நிலத்தடி நீரில்மட்டுமன்றி ஆறுகள்,குளங்களையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் இந்த நிலைமை இல்லை. இதன்காரணமாக யாழ்ப்பாணத்தின் குடிநீர் உள்ளிட்ட நீர்த்தேவை தொடர்பில் பல காலங்களாக அதிகம் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

யாழ்ப்பாணத்தின் நீர்த்தேவையினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ள போதும் அவற்றின் சாதக பாதக காரணிகளை கருத்தில் கொண்டு பாலியாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. அதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அரசு முன்னாய்ந்த நடவடிக்கைகளுக்கு 250 மில்லியன் ரூபாக்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

பாலியாறு

இலங்கையின் வடக்கே வட மாகாணத்திற்குள் காணப்படுகின்ற ஓர் ஆறு. 68.4 கிலோ மீற்றர் நீளமுள்ள பாலியாறு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் ஆரம்பித்து வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை கடந்து கடலுக்குள்  கலக்கிறது.

பாலியாறு குடிநீர் திட்டம்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் பாலியாற்றை வழி மறித்து 4.6 கிலோமீற்றர் நீளமும், 41 அடி உயரமும் கொண்ட மண் அணைக்கட்டு அமைக்கப்பட்டு உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கமாகும். 1 இலட்சத்து 18,363 ஏக்கர் ( 479 சதுர கிலோ மீற்றர்) பரப்பளவு நீரேந்து பிரதேசங்களில் வருடந்தோறும் 1,317 மில்லி மீற்றர் சராசரி   மழைவீழ்ச்சியிருந்து  கிடைக்கப்பெறுகின்ற நீரைக்கொண்டு 2,562 ஏக்கர் பரப்பளவில் இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்படவுள்ளது. தற்போது இவ்வாறு கிடைக்கப்பெறுகின்ற மழை நீரானது வருடத்திற்கு 151 எம்சிஎம் அளவு எந்தவித பயனும் இன்றி வீணாக  கடலில் சேர்கிறது. 

பல மில்லியன் ரூபாக்கள் செலவில் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வருடம் ஒன்றுக்கு 41.2 எம்சிஎம் அளவு நீர் குடிநீருக்கு பெறப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ஒரு இலட்சம் மீற்றர் கியூப் நீர் குடிநீருக்காக  பெறப்படும். 

பயன்பெறும் பிரதேசங்கள்

அமைக்கப்படவுள்ள பாலியாறு குடிநீர் திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டமும், கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவும், மன்னாள் மாவட்டத்தின் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலாளர் பிரிவுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளும், இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகிப்படவுள்ளது.

திட்டத்தின் ஏனைய நன்மைகள்

பாலியாறு குடிநீர் திட்டத்தினால் பின்வரும் நன்மைகள் ஏற்படும் திட்டம் தொடர்பான  ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

358 ஹெக்டயருக்கு விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசனம்

வருடம் ஒன்றுக்கு 800,000 மெட்றிக்தொன் மீன் பிடி

சுற்றுலா பயணிகள் வருகையின் மூலமான வருமானம்

மிதக்கும் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி

சுற்றுச்சூழல் நன்மை கருதி செக்கனுக்கு 08 மீற்றர் கியூப் நீர் வெளியேற்றப்படுகின்றமை

நிலம் உவராகி வருகின்றமையினை தடுத்தல்

நீர் தேக்குவதன் மூலம் ஏற்படும் மக்களின் குடிபெயர்ச்சி இன்மை

திட்டத்தின் சவால்கள்

பாலியாறு திட்டம் நடைமுறைக்கு வருகின்ற போது நீர் சேமிக்கப்படுகின்ற 2,562 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகின்ற அடர்த்தியற்ற ஒதுக்கப்பட்ட காடுகள் நீருக்குள் சென்றுவிடுகின்ற நிலைமை ஏற்படும்.

நீர்த்தேக்க பகுதிகள் ஒதுக்கப்பட்ட காடுகள் என்பதனால் வனவளத் திணைக்களத்தின் அனுமதி பெறுவது

இப் பாரிய முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி மூலங்களை கண்டுபிடித்தல்

வடக்கு குடிநீருக்கான பொருத்தமான திட்டம்

மேற்படி இந்த திட்டமானது ஒப்பீட்டு ரீதியில் வடக்கின் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு பொருத்தமான திட்டமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திற்கான குடிநீருக்கு ஆறுமுகம் திட்டம், இரணைமடு திட்டம், கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம், வடமராட்சி நீர்த்தேக்கம் பாலியாறு திட்டம் என பல திட்டங்கள ஆராயப்பட்டன. ஆனால் அந்த திட்டங்களில் எல்லாம் பல்வேறு சவால்கள், பிரச்சினைகள் ஏற்பட்டன. நடைமுறைப்படுத்துவதில் சமூக பொருளாதார நெருக்கடிகள் உருவாகின. 

ஆனால் பாலியாறு திட்டத்தின் மூலம் அவ்வாறான எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை, அனைத்து தரப்பினர்களதும் கருத்துக்களும், உள்வாங்கப்பட்டு அவர்களது ஒப்புதல் இத்திட்டம் தயாரிக்கப்பட்டதே இதன் வெற்றியாகும். பாலியாறு திட்டத்தின் ஊடான நீர் பங்கீட்டில் கூட எவ்வித சவால்களும் உருவாகவில்லை.

ஆகவே பாலியாறு திட்டம் குடிநீருக்கு தவிச்ச வடக்கிற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் வழங்கும் ஒரு பொருத்தமான திட்டமே.

https://www.virakesari.lk/article/172130

  • Like 1
Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்

Published By: VISHNU   16 MAY, 2024 | 01:31 AM

image
 

வடக்கு மாகாண மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் புதன்கிழமை (15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. 

IMG-20240515-WA0013.jpg

வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

IMG-20240515-WA0016.jpg

பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பதாதை வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.

IMG-20240515-WA0014.jpg

பாலியாறு நீர்த்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் 127,746 குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

IMG-20240515-WA0011.jpg

IMG-20240515-WA0012.jpg

IMG-20240515-WA0010.jpg

IMG-20240515-WA0008.jpg

https://www.virakesari.lk/article/183650

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கல் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள்  தானே...இப்ப உபதேசம் செய்யிறியள்..
    • கனகமக்கா போராட்டத்தில் இந்த தாய் யார்... கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி விட்டாள் கனகமக்கா. காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் ஊடுருவியது. கனகமக்கா தன் மகனுக்காகவே தான் இன்னும் உயிரோடிருப்பதாகக் கூறுவாள். அவனோ தன்னை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். என்னதான் இருந்தாலும் கனகமக்கா தானும் ஒரு சாதாரண தாயாக இருந்துவிட விரும்பவில்லை. அவன் தன்னை இயக்கத்துடன் இணைத்துக்கொன்டத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள். காடுகளுடன் அண்டிய அவ்வூரில் இந்திய இராணுவத்தின் பெரும் படைப்பிரிவு ஒன்று முகாமிட்டிருந்தது. இப்பிரிவைச் சேர்ந்த இராணுவம், கனகமக்கா தன் பிள்ளைகளைப் போல் நேசிக்கும் இயக்க வீரர்களை தேடி அழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்விராணுவ நடமாட்டங்களை அவ்வப்போது அறிந்து இயக்க வீரர்களின் முகாம்களுக்குச் சென்று தெரிவிப்பதை தனது கடமைபோல் செய்தாள். ஒரு நாள் ஊரின் எல்லையில் வைத்து மேஜர் கஜன் ஒரு அவசரக் கடிதத்தைக் கொடுக்கிறான். மின்வெட்டில் அதை ஒளித்துக் கொள்கிறாள் கனகமக்கா. “ஆமி அங்கால நிக்குதக்கா கவனம்” கஜன் சொல்கிறான். வாயில் கொதப்பிய வெற்றிலையுடன் வெடவெட என்று நடக்கத் தொடங்குகிறாள் கனகமக்கா. இந்திய கூலி இராணுவத்தினன் ஒருவன் கனகமக்காவை வழிமறித்து ‘உந்தப் பக்கம் ஏன் போற’ என்று கேட்கிறான். சற்றும் பதட்டமின்றி ‘விறகு முறிச்சரப் போறான் சாமி’ என்கிறாள் கனகமக்கா. இந்தியச் சிப்பாய் சிறிது ஐயத்துடனே அவளைப் போகச் சம்மதிக்கிறான். காட்டு வழிகளினூடாக நடந்து விடுதலைப் புலிகளின் முகாமைச் சென்றடைகின்றாள். முகாமில் இருந்தவர்களின் இன்முகம் கண்டு முகம் மலர்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளைவிட பாசம் பொங்க பழகுகிறாள். மேஜர் கஜனின் கடிதத்தை கொடுத்துவிட்டு மீண்டும் திரும்புகிறாள். வழியில் “நெரிஞ்சியாக்கும் குத்திப் போட்டுது” என்றவாறு குனிந்தவள் முல்லை எடுக்கும் போதுதான் உணருகிறாள் அம்முள் குத்தியதை விட மீண்டும் எப்படி இந்திய இராணுவத்தினரைக் கடப்பேன் என்று நினைக்கிறாள். கையிலோ, தலையிலோ ஒரு தடி விறகு கூட இல்லை என்று பதட்டமடைகிறாள். காட்டில் பெரியதொரு புளியமரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறாள். பல மணி நேரத்தின் பின் கூலிப்பட்டாளம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அதன் பின்புதான் கனகமக்கா வீடு திரும்புகிறாள். இப்படி பலமுறை ஏமாந்த இராணுவம் கனகமக்கா மேல் சந்தேகிக்க ஆரம்பிக்கிறது. இராணுவத்துடன் ஒட்டிய துரோகக் கும்பலுடன் தேடப்படுகிறாள் கணக்மக்கா. “என்னவாயிருந்தாலும் நீயும் பொம்பிளை தானேடி” என்று கூறும் மாமியாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து மாமியாருடன் அவளின் வீட்டில் தனது இருப்பை அமைத்துக் கொள்கிறாள் கனகமக்கா. ஒருநாள் நடுச்சாமம் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. யாரது இந்த நேரத்தில் என தனக்குள் நினைத்துக் கொண்டு கதவை திறக்கிறாள் கனகமக்காவின் மாமியார். மாமியார் உடலெல்லாம் வெடவெடத்து நடுங்குகிறாள். கனகமக்கா துணிந்து விட்டால். மரணமாயினும் தன்மானத்துடன் ஆகவேண்டும் எண்றெண்ணினாள். கதவைத் திறந்ததும் உள்ளே வந்த இராணுவச் சிப்பாய் ‘யாரடி கனகம்’ என்கிறான். ‘நான்தான் கனகம், என்ன வேணும்’ என்கிறாள் கனகமக்கா. “நீ யாருக்கடி தூது போகிறாய்” என்று சத்தமிட்டவாறே கையிலிருந்த துப்பாக்கியை இயக்குகிறான். பல குண்டுகள் தாக்க நொடிப்பொழுதில் கனகமக்கா தாய் மடியில் சாய்ந்தாள். துயருற்று அழும் குழந்தையைப் போல் கனகத்தின் மாமியார் அழுதாள். அந்த அழுகையிலிருந்து அவள் ஒரு விதி செய்யத் துணிந்தாள். துப்பாக்கி கட்டைகளோடு நிற்கும் இந்தியச் சிப்பாய்களை பழிவாங்கத் துடிக்கும் பார்வையோடு விழித்து “கனகத்தை மட்டுமில்லை நீ யாரைக் கொண்டாலும் நான் உன்னைக் கொல்லாமல் விடமாட்டனடா” என்று கர்ஜிக்கிறாள். கனகம் மடியவில்லை, அவளின் நினைவை எம் தாய்ப் பூமி தன் நெஞ்சில் ஆறாத காயமாக சுமந்து கொண்டெழுகின்றது https://maaveerarkal.blogspot.com/2015/02/blog-post.html   கனகமக்கா
    • Tuesday, June 02, 2020       புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ''புலிகளின் குரல்'' என்று அழைக்கப்பட்டு பின்னர் ''உறுமல்''  என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கிலப் புலமையையும், எழுத்தாற்றலையும், அறிந்த விடுதலைப் புலிகளின் ''படைத்துறைச் செயலகம்'' முக்கியமான தந்திரோபாயங்களை தனது படையணிகளுக்கப் போதிக்கும் பொருட்டு ஆங்கில மொழி நூல்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். பொறுப்பாளர்களான கேணல் ராஜு, காண்டீபன் ஆகியவர்களின் கீழ் கடமையாற்றிய இவர் 1997-2001 ஆண்டு காலப்பகுதியில் இயக்கப் போராளிகளுக்கு மொழி பெயர்க்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார். புதிய தமிழ் மொழிச் சொற்களை உருவாக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தார். பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழாக்கத்திற்கு வழிவகுத்தவர். இவர் ''THE WILD GEESE'' எனும் திரைப்படத்தில் குரல் கொடுத்துமிருந்தார். இறுதியாக சமர்க்கள ஆய்வுப் பணியகத்தில் யோகி என்ற அழைக்கப்படும் யோகரத்தினத்தின் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில் நோய்வாய்பட்டிருந்தார். அவரின் மதுத்துவ வசதி கருதியும், பாதுகாப்புக் கருதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்த அவரது குடும்பத்தினரின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போது, அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இந்தியா சென்று உயிர் போகும் வரை அங்கேயே வசித்து வந்தார்.   https://maaveerarkal.blogspot.com/2020/06/blog-post.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.