Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh.png?resize=700,375&ssl=1

தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.

பொதுத்தேர்தலில் பின்னர் புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு என ஜனாதிபதி தெரிவித்துள்ளமையானது 2026க்கு பின்னரும் தீர்வு கிடைப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் வெற்றிகொள்ளவும் தமிழ் மக்களை அதற்கு எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளம் என்ற சிந்தனையில் ஈடுபடும் ஜனாதிபதி இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது அவரது முன்னுரிமைப் பட்டியலில் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் யுத்தம் முடிந்து பதினான்கு வருடங்கள் கடந்த பின்னரும்கூட, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிங்கள அரசதரப்பினர் தயாராக இல்லை என்பதை புதிதாக கடமையேற்றுள்ள இந்திய தூதுவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில் சிங்கள அரசியல் தலைமைகளின் அசமந்தப் போக்கைச் சுட்டிக்காட்டக்கூடிய வகையில் தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1363924

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ரணிலை வீழ்த்த இந்தியா இப்பவே வியூகம் வகுக்கிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ரணிலை வீழ்த்த இந்தியா இப்பவே வியூகம் வகுக்கிறதோ?

இல்லை மண்டையன் குழுத்தலைவர் சுரேசர் இப்போ இந்தியாவின் காய் நகர்த்தலுக்கு ஆடுகிறார் அதாவது பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அவ்வேட்பாளருக்கு ஓட்டுப்போடாமல் இருக்கப்பண்ணி தீர்வுக்கு தமிழர்கள் எவருக்குமே விருப்பம் இல்லை சிங்களவருடன் இணைந்து இப்போது இருப்பதுபோல் வாழவே அவர்கள் விரும்புகிறார்கள் என நிரூபிக்க விளையாடினம்.

இவர்கள் தமிழர் பிரச்சனை தீர்ந்து எமக்கான உரிமைகள் கிடைப்பதற்காக ஒன்றாகப்போராடுவதை எப்போதுமே தவிர்த்து அனைத்துத் தமிழ் அரசியல் --------குறுக்குச்சால் ஓடுபவர்கள்

ஆனால் இந்தக் ------ எல்லாம் தமிழர் பகுதியில் இப்போது காணப்படும் போதைவஸ்துக்கலாச்சாரத்துக்கு காரணமான குற்றவாளிகளை முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் அங்கு காணப்படும் வன்முறைகள் அனைத்தையும் சிங்கள அரசு முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் என ஒரு பொதுவான வேண்டுகோளாக ------- ஒன்றுசேர்ந்து இன்னமும் சிங்களத்திடம் இதுவரை கோரிக்கை விடவில்லை அப்படியான --------------------எமக்கு உரிமை எடுத்துத்தர பொதுவான வேட்பாளரை இறக்கி உரிமையைப் பெற்றுத்தரப்போயினமாம்.

----------------------------------------------------------------------------------------------

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதப்பட்ட சொற்கள், வரிகள் நீக்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ரணிலை வீழ்த்த இந்தியா இப்பவே வியூகம் வகுக்கிறதோ?

யாருடைய வியூகமாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை குடியொப்ப தேர்தலாக மாத்தி, எமது விருப்பை உலகுக்கு தெரிவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

யாருடைய வியூகமாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை குடியொப்ப தேர்தலாக மாத்தி, எமது விருப்பை உலகுக்கு தெரிவிக்க வேண்டும்.

இதுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் விட வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் விட வேண்டுமே?

இல்லையே, பேசாமல் போய் நியமனப் பத்திரத்தை கொடூக்கிறார் எங்கண்ட ஏராளன்.

எல்லாதாதையுமா ஏற்றாப்பிறகு, டபுக்கெண்டு அறிவிக்க வேண்டீயது தானே! 🤣😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

யாருடைய வியூகமாக இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை குடியொப்ப தேர்தலாக மாத்தி, எமது விருப்பை உலகுக்கு தெரிவிக்க வேண்டும்.

எதற்கும் முதலில் சம்பந்தர் ஐயாவைக்   கேட்டுப் பார்க்கலாம். அவர் தான் உலகம் அறிந்த மூத்த தமிழ் இனத்தின் தலைவர். கடைசிக் காலத்தில் அவரும் தனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் .🐩

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு அமெரிக்காவும் இந்தியாவும் விட வேண்டுமே?

அமெரிக்காவும் இந்தியாவும் தங்களது நலனைத்தான் முன்னிறுத்தும். இவர்கள் நேர்மையாக இருந்திருந்தால் எப்போதோ இந பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கலாம். இதனை வைத்தே சீனாவை இலங்கையில் இருந்து அப்புறப்படுத்த மறைமுக நகர்வுகளை மேட்கொள்ள முயட்சிக்கின்றன.

எனவே உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன்.

முன்னர் நான் இங்கு குறிப்பிடடதுபோல தமிழ் காட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்ப்பாளரை நிறுத்துவது சிங்கள கட்சிகளுக்கு நிச்சயம் பிரச்சினையை உருவாக்கும். இப்போதைக்கு கிடடதடட ஐந்து பெருக்குமேலே போட்டியிட போவதாக தகவல் கிடைத்திருக்கிறது. ஓட்டுகள் பிரிவதட்கான சந்தர்ப்பம் அதிகம். எவருக்குமே 50 % எடுக்க முடியாதிருக்கும். தமிழ் மக்களின் வலிமையை காண்பிப்பதட்கு நல்ல ஒரு சந்தர்ப்பம். தமிழ் காட்சிகள் இங்கு தயாரா என்பது கேள்விக்குறியே?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.